search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "influence"

    • பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.
    • வெளி மாநில வியாபாரிகள் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணத்தை எடுத்து வந்து மொத்த விலைக்கு துணிகளை வாங்கி செல்வார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம் பகுதிகளில் வாரம் தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் ஜவுளி வாரச்சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமானது.

    இந்த வாரச்சந்தைக்கு கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.

    சாதாரண நாட்களில் நடைபெறும் வாரச்சந்தையில் ரூ.2 கோடி ரூபாய்க்கும், பண்டிகை காலங்களில் நடைபெறும் ரூ.5 கோடி ரூபாய் வரையிலும் வர்த்தகம் நடைபெறும். வெளி மாநில வியாபாரிகள் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணத்தை எடுத்து வந்து மொத்த விலைக்கு துணிகளை வாங்கி செல்வார்கள்.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 16-ந் தேதி முதல் அமலுக்கு வந்ததால் ரூ.50 ஆயிரம் மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இதற்காக நிலை கண்காணிப்பு குழுவினர், பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நேற்று இரவு கூடிய வார ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:-

    தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வெளி மாநில வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர். இன்று வார ஜவுளி சந்தை நடைபெறும் நாளில் வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இதற்கு அஞ்சி வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. குறிப்பாக சிறு குறு வியாபாரிகள் ரொக்க பணத்திற்கு உரிய ஆவணங்கள் எடுத்து வருவதில் சிரமம் உள்ளதால், இரவு நடைபெற்ற ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைந்தது.

    இதனால் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்ட நிலையில், சில்லரை வர்த்தகம் மட்டும் வழக்கம் போல் நடைபெற்றது. வழக்கமான விற்பனையில் 50 சதவீதம் மட்டுமே இருந்ததாக தெரிவித்த வியாபாரிகள். இனி தேர்தல் முடியும் வரை இதே நிலைமைதான் நீடிக்கும் என்றும், வியாபாரிகளுக்கு தேர்தல் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கூரைவீடு பகுதி 917 வீடுகளும், முதுமையான பாதிப்பு 2,364 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
    • மூன்று வேளைகள் உணவு நாள் ஒன்றுக்கு 14,620 நபர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுக்காக்களில் கனமழையால் பாதித்த பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு மறுசீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தபின் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கனமழை பெய்த காரணத்தினால் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு பணிகள் குறித்து அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் 50செ.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    இது வரலாறு காணாத மழை அளவு ஆகும். கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டு மொத்த மின் இணைப்புகள் பாதிக்கப்பட்டது முதலமைச்சர் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள 2,06,521 துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளுக்கு 36 மணி நேரத்திற்குள் மீண்டும் சீரான மின் விநியோகம் தரப்பட்டுள்ளது.

    கனமழை காரணமாக வடிகால் வாரி என்று சொல்லக்கூடிய வெள்ள உப்பனாரு, கல்மனையாறு 2,700 கன அளவு கொள்ளளவு கொண்டது. ஆனால் கனமழையின் பொழுது 25,000 கனஅடி தண்ணீர் சென்றது. இதனால் அதிக பாதிப்பு ஏற்பட்டது. இந்த இடங்களில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    கனமழையால் மாவட்டத்தில் 33,340 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

    வருவாய்துறை அமைச்சர் அறிவித்தப்படி கூரை வீடு பகுதி பாதிப்பு, முழுமையான பாதிப்பு அடைந்த வீடுகளுக்கு மாவட்ட ஆட்சியர் நிதி வழங்குவார்கள் கூரைவீடு பகுதி பாதிப்பு 917 வீடுகளும், முதுமையான பாதிப்பு 2,364 வீடுகளும், ஓட்டு வீடு பாதிப்பு 586 வீடுகளும் இது வரை சேதமடைந்து உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து சேதமடைந்த வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடுமையான மழையின் காரணமாக 246 மாடுகளும், 162 கன்றுகளும், 856 ஆடுகளும் இறந்துள்ளன.

    மாவட்ட முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்ட 5,824 குடும்பங்களுக்கு மூன்று வேளைகள் உணவு நாள் ஒன்றுக்கு 14,620 நபர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது, இது தொடர்ந்து உணவு வழங்கப்படும். கனமழையால் பாதிக்கப்பட்ட, சேதமடைந்த அனைத்து வீடுகளுக்கும் நிவராணம் அறிவிக்கப்பட்டுள்ளது. கூரைவீடு பாதி பாதிப்புக்கு ரூ.4,100, முழுமையான பாதிப்பிற்கு ரூ.5,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சில இடங்களில் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது. புத்தகங்கள் மிக குறுகிய காலத்தில் அதுவும் குறிப்பாக இரண்டொரு தினங்களில் புத்தகம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட கலெக்டர் லலிதா, .ராமலிங்கம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா எம்.முருகன், பன்னீர் செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ்,

    சீர்காழி வருவாய் கோட்டாட்சியர்அர்ச்சனா, ஊரகவளர்ச்சி துறை இணை இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • கோபியில் இருந்து ஒரு கார் வந்து கொண்டு இருந்தது. அந்த கார்போலீசார் சோதனை செய்து கொண்டு இருந்த இடத்தில் வந்து நின்றது.
    • இதையடுத்து போலீசார் மது போதையில் காரை ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் தவிட்டுப்பாளை யம் மார்க்கெட் அருகே போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது கோபியில் இருந்து ஒரு கார் வந்து கொண்டு இருந்தது. அந்த கார்போலீசார் சோதனை செய்து கொண்டு இருந்த இடத்தில் வந்து நின்றது.

    காருக்குள் 2 பேர் இருந்தனர். அதில் ஒரு வாலிபர் கார் கண்ணாடியை இறக்கி போலீசாரை முறைத்து பார்த்தார். அதன்பின் அந்த காரை அவர் ஓட்டி சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த போக்குவரத்துக் போலீசார் இருசக்கர வாகனத்தில் காரை விரட்டினர்.

    அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரே சென்ற காரை போக்குவரத்து போலீசார் மடக்கி படித்தனர். காரை ஓட்டி வந்த வாலிபர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் தடுமாறியபடி காரை விட்டு கீழே இறங்கினார்.

    அப்போது போக்கு வரத்து சப்-இனஸ்பெக்டர் விஜயகுமார் அவரிடம் விசாரித்தார். அப்போது அவர் விசாரணைக்கு ஒத்து ழைக்க மறுத்து ரகளையில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் காரை ஓடடி வந்தது கோபியை சேர்ந்த அருண் (21) என்பதும், மது போதையில் காரை ஓட்டி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் மது போதையில் காரை ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் அந்த வாலிபரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு கார் பறிமுதல் செய்யப்பட்டு அந்தியூர் போலீஸ் நிலையத்தில் கொண்டு வரப்பட்டது.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.

    ×