search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "under"

    • கோபியில் இருந்து ஒரு கார் வந்து கொண்டு இருந்தது. அந்த கார்போலீசார் சோதனை செய்து கொண்டு இருந்த இடத்தில் வந்து நின்றது.
    • இதையடுத்து போலீசார் மது போதையில் காரை ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் தவிட்டுப்பாளை யம் மார்க்கெட் அருகே போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது கோபியில் இருந்து ஒரு கார் வந்து கொண்டு இருந்தது. அந்த கார்போலீசார் சோதனை செய்து கொண்டு இருந்த இடத்தில் வந்து நின்றது.

    காருக்குள் 2 பேர் இருந்தனர். அதில் ஒரு வாலிபர் கார் கண்ணாடியை இறக்கி போலீசாரை முறைத்து பார்த்தார். அதன்பின் அந்த காரை அவர் ஓட்டி சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த போக்குவரத்துக் போலீசார் இருசக்கர வாகனத்தில் காரை விரட்டினர்.

    அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரே சென்ற காரை போக்குவரத்து போலீசார் மடக்கி படித்தனர். காரை ஓட்டி வந்த வாலிபர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் தடுமாறியபடி காரை விட்டு கீழே இறங்கினார்.

    அப்போது போக்கு வரத்து சப்-இனஸ்பெக்டர் விஜயகுமார் அவரிடம் விசாரித்தார். அப்போது அவர் விசாரணைக்கு ஒத்து ழைக்க மறுத்து ரகளையில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் காரை ஓடடி வந்தது கோபியை சேர்ந்த அருண் (21) என்பதும், மது போதையில் காரை ஓட்டி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் மது போதையில் காரை ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் அந்த வாலிபரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு கார் பறிமுதல் செய்யப்பட்டு அந்தியூர் போலீஸ் நிலையத்தில் கொண்டு வரப்பட்டது.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.

    • பிளஸ்-1 படிக்கும் பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்ளவதாக தொல்லை கொடுத்து வந்தார்.
    • சிவகிரி போலீசில் புகார் செய்ததையத்து போலீசார் போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துசிறையில் அடைத்தனர்.

    ஈரோடு:

    சிவகிரி ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (28). இவர் தனியார் பஸ் டிரைவராக உள்ளார்.

    அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்ளவதாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து பள்ளி மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார்.

    மாணவியின் பெற்றோர் சிவகிரி போலீசில் புகார் செய்ததையத்து போலீசார் போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துசிறையில் அடைத்தனர்.

    • ஈரோடு மரப்பாலம் ஆலமரத்து வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் . இவர் திருட்டு வழக்கில் சூரம்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • தொடர்ந்து திருட்டு, அடிதடியில் ஈடுபட்டு வருவதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் கலெக்டரிடம் பரிந்துரை செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மரப்பாலம் ஆலமரத்து வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவர் திருட்டு வழக்கில் சூரம்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    தொடர்ந்து திருட்டு, அடிதடியில் ஈடுபட்டு வருவதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் கலெக்டரிடம் பரிந்துரை செய்தனர். இதனை ஏற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதனையடுத்து மணிகண்டன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

    தஞ்சை மாவட்டத்தில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் இலவச மற்றும் கட்டாய கலவி உரிமை சட்டத்தின்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட எஸ்.சி, எஸ்.டி, பிசி, எம்பிசி மற்றும் டிஎன்சி 
    பிரிவைச் சேர்ந்தவர்கள்  மற்றும் நலிவடைந்த பிரிவினரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ 2 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்களின் குழந்தைகளுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு சேர்க்கை செய்யப்படுகிறது.

    இந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 3,790 இடங்கள் ஒதுக்கீட்டுக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 258 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில், 213 பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு மேல் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
      
    எனவே நாளை (30-ம்தேதி) முதன்மை கல்வி அலுவலரால் நியமிக்கப்படும் துறை பிரதிநிதி மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் முன்னிலையில் 25 விழுக்காடு ஒதுக்கீட்டிற்கு குலுக்கல் முறையில் சேர்க்கை நடைபெற உள்ளது. 
    குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் விவரங்கள், காத்திருப்பு பட்டியல் விபரங்கள் வரும் 31-ம் தேதி அன்று பள்ளியின் தகவல் பலகை மற்றும் இணையதளத்தில் வெளியிடப்படும்.
      
    எனவே, 2022-23 ஆம் கல்வியாண்டில் 25 விழுக்காடு ஒதுக்கீட்டில், சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு வகுப்பான எல்கேஜியில், சேர்க்கை செய்வதற்கு, இணையதளம் வழியாக விண்ணப்பித்த அனைத்து பெற்றோர்களும் நாளை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் காலையில் நடைபெறும் குலுக்கலில் குறிப்பிட்ட நேரத்தில் கலந்து கொள்ளவேண்டும்.

    பொதுத்தேர்வு மையமாக செயல்படும் பள்ளிகளில் அன்றைய தினம் பிற்பகல் குலுக்கல் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×