search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு ஜவுளி சந்தை வெறிச்சோடியது
    X

    ஈரோடு ஜவுளி சந்தை வெறிச்சோடியது

    • இன்று கூடிய ஜவுளி சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
    • கடந்த வாரம் 40 சதவீதத்திற்கு நடந்த மொத்த வியாபாரம் இந்த வாரம் 10 சதவீதம் கூட நடைபெறவில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஜவுளி சந்தை யானது கனி மார்கெட், பன்னீர்செல்வம் பார்க், திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது.

    வாரந்தோறும் நடைபெறும் இந்த ஜவுளி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக வந்து ஜவுளிகளை மொத்த விலையில் வாங்கி செல்வார்கள்.

    இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரம் ஜவுளி சந்தையில் வியாபாரம் சுமாராக நடந்தது. இந்நிலையில் இன்று கூடிய ஜவுளி சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    நாளை மறுநாள் ஓணம் பண்டிகை என்பதால் இன்று கூடிய ஜவுளி சந்தையில் கேரளா வியாபாரிகள் வரவில்லை. இதேபோல் கர்நாடகா, ஆந்திராவில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் அங்கிருந்தும் வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை.

    கடந்த வாரம் 40 சதவீதத்திற்கு நடந்த மொத்த வியாபாரம் இந்த வாரம் 10 சதவீதம் கூட நடைபெறவில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

    இதேப்போல் உள்ளூர் வியாபாரிகளும் அதிக அளவில் வராததால் ஜவுளி சந்தை வெறிச்சோடியது. இன்று நடந்த ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனை 30 சதவீதம் நடைபெற்றதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×