search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The textile market of"

    • இன்று கூடிய ஜவுளி சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் ஓரளவு வந்திருந்தனர்.
    • மொத்த வியாபாரம் 40 சதவீதம் நடைபெற்றது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே தினசரி ஜவுளி சந்தை வார ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை வாரச்சந்தை விடிய விடிய நடைபெற்று வருகிறது.

    வார ஜவுளி சந்தை தென்னிந்திய அளவில் புகழ்பெற்றது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து மொத்த துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை பரவலாக பெய்து வருவதால் ஜவுளி சந்தை வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்று வந்தது.

    கடந்த வாரம் வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டது.

    ஆனால் இன்று கூடிய ஜவுளி சந்தையில் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா வியாபாரிகள் ஓரளவு வந்திருந்தனர். இதனால் மொத்த வியாபாரம் 40 சதவீதம் நடைபெற்றது.

    தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் இன்று வியாபாரிகள் வரவில்லை. இதனால் வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்றது.

    உள்ளூர் வியாபாரிகளும் வராததால் ஜவுளி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. எனினும் நாளாக நாளாக வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

    இதேபோல் சென்ட்ரல் தியேட்டர் பகுதியிலும், பி.பி. அக்ரஹாரம் பகுதியிலும் ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது.

    • ஆடி மாதத்தையொட்டி வியாபாரம் ஓரளவு நடை பெற்றது.
    • இன்று ஜவுளி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஜவுளி வார சந்தை நடைபெறுவது வழக்கம். ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் வருவார்கள்.

    சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆடி மாதத்தையொட்டி வியாபாரம் ஓரளவு நடை பெற்றது. தற்போது ஆடி 18 முடிவடைந்ததை ஒட்டி வியாபாரம் மீண்டும் மந்த நிலையில் நடைபெறுகிறது.

    இன்று கூடிய வார சந்தையில் வெளி மாநிலத்தில் இருந்து கேரளா வியாபாரிகள் மட்டுமே வந்திருந்தனர். தெலுங்கா னா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வரவில்லை. இதனால் இன்று ஜவுளி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

    இதனால் மொத்த விற்பனை 10 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. சில்லரை விற்பனை 15 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. வியாபாரம் மந்தமாக இருந்தது. ஆவணி மாதம் வரை வியாபாரம் சுமாராக இருக்கும் என்றும் அதன் பிறகு வியாபாரம் ஓரளவு விறுவிறுப்பாக இருக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். 

    • இன்று கூடிய ஜவுளி சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
    • கடந்த வாரம் 40 சதவீதத்திற்கு நடந்த மொத்த வியாபாரம் இந்த வாரம் 10 சதவீதம் கூட நடைபெறவில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஜவுளி சந்தை யானது கனி மார்கெட், பன்னீர்செல்வம் பார்க், திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது.

    வாரந்தோறும் நடைபெறும் இந்த ஜவுளி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக வந்து ஜவுளிகளை மொத்த விலையில் வாங்கி செல்வார்கள்.

    இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரம் ஜவுளி சந்தையில் வியாபாரம் சுமாராக நடந்தது. இந்நிலையில் இன்று கூடிய ஜவுளி சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    நாளை மறுநாள் ஓணம் பண்டிகை என்பதால் இன்று கூடிய ஜவுளி சந்தையில் கேரளா வியாபாரிகள் வரவில்லை. இதேபோல் கர்நாடகா, ஆந்திராவில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் அங்கிருந்தும் வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை.

    கடந்த வாரம் 40 சதவீதத்திற்கு நடந்த மொத்த வியாபாரம் இந்த வாரம் 10 சதவீதம் கூட நடைபெறவில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

    இதேப்போல் உள்ளூர் வியாபாரிகளும் அதிக அளவில் வராததால் ஜவுளி சந்தை வெறிச்சோடியது. இன்று நடந்த ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனை 30 சதவீதம் நடைபெற்றதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    ×