search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Municipal"

    • அங்காளம்மன் கோவில் முன்புறம் குப்பைகள் அள்ளப்படாமல் கிடந்தது.
    • துப்புரவு மேற்பார்வையாளர் சிவக்குமார் குடி அமர்த்தியுள்ளார்.

    குன்னத்தூர் :

    குன்னத்தூரில் கடந்த 6-ந் தேதி ரூ.3 கோடியே 75 லட்சம் செலவில் கட்டப்பட்ட வேளாண்மை விற்பனை கூடத்தை திறந்து வைக்க செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், கலெக்டர் வினீத் ஆகியோர் வந்திருந்தனர். அப்போது குன்னத்தூர் பஸ் நிலையம் அங்காளம்மன் கோவில் முன்புறமும் குப்பைகள் அள்ளப்படாமல் கிடந்தது. மதியம் 2 மணிக்கு மேல் தான் குப்பை அகற்றப்பட்டுள்ளது. மேலும் திடக்கழிவு வளாகத்தில் தன்னிச்சையாக தனி நபரை துப்புரவு மேற்பார்வையாளர் சிவக்குமார் குடி அமர்த்தியுள்ளார்.

    இந்தநிலையில் குன்னத்தூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட துப்புரவு மேற்பார்வையாளர் சிவக்குமாரை தற்காலிகபணியிடை நீக்கம் செய்து செயல் அலுவலர் ராஜா உத்தரவிட்டுள்ளார்.

    • சிவகங்கை அருகே நெற்குப்பை பேரூராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • இளநிலை உதவியாளர் சேரலாதன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி கூட்டம் சேர்மன் புசலான் தலைமையில் நடந்தது.

    செயல் அலுவலர் கணேசன், துணை சேர்மன் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிளாமடம் கிராம பகுதியில் பொது கழிப்பிட கட்டிடம் கட்டப்படுவது குறித்தும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுவது குறித்தும், 2021-22 மானிய தவணையில் சுகாதார மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், மழைநீர் சேகரிப்பு பகுதிகளை மறுசுழற்சி செய்தல், சின்டெக்ஸ் டேங்க் பராமரிப்பு பணி மேற்கொள்ளுதல், ஆழ்குழாய் கிணறு அமைத்தல் போன்றவை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பருவமழை தொடங்க இருப்பதால் கொசு உற்பத்தியை கட்டுப்ப டுத்தவும், நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் உபகரணங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தபுள்ளி கோருவது குறித்தும், பேரூராட்சி பயன்பாட்டிற்கு பேட்டரி வாகனங்கள் வாங்குவது குறித்தும், விவாதிக்கப்பட்டது.

    இளநிலை உதவியாளர் சேரலாதன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

    • நகராட்சி பகுதிகளில் ரூ.858 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • அடிக்கல் நாட்டு விழா நகர் மன்ற தலைவர் ஹபிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சி பகுதியில் ரூ.858 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதில் ஒரு பணியாக ரூ.61 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் படி நீர் நிலைகளை புறனமைப்பு செய்யும் வளர்ச்சிப் பணி கடையநல்லூர் 25-வது வார்டு அட்டக்குளம்தெரு பெண்கள்தொழுகைபள்ளி அருகில் உள்ள ஊருணியை தூர்வாரிபராமரிக்கும்பணி, சுற்றுச்சுவர் கட்டும் பணி மற்றும் குளத்தைசுற்றி நடைபயிற்ச்சிக்காக நடைபாதைவசதி அமைக்கும் பணியினை ரூ.61 லட்சம் செலவில் மேற்கொள்ள அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் ஹபிபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

    நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் கூட்டுறவு சங்க தலைவருமான செல்லத்துரை சிறப்பு விருந்தினராக பங்கேற்று பூமி பூஜையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இளநிலை உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் தி.மு.க. நகர செயலாளர் அப்பாஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் செய்யது மசூது, தி.மு.க. வார்டு செயலாளர் காஜா முகையதீன், கிளை பிரதிநிதி அகமது அலி, நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் மூவண்ண மசூது, கவுன்சிலர்கள் முகைதீன் கனி, முருகன், திவான் மைதீன், அமைப்புச் செயலாளர் கருப்பன், மாணவரணி மணிகண்டன், மாவட்டதொண்டர்அணி அமைப்பாளர் இசக்கிபாண்டியன், மற்றும் காவா அறக்கட்டளை நிர்வாகிகள் ஹெவன்ஸ்டார், உடன்பிறப்புகள் தி.மு.க. மற்றும் முஸ்லீம் லீக் நிர்வாகிகள் தகவல் தொழில்நுட்ப அணி ஜாகிர் உசேன், வேலுச்சாமி, பாப்பா, அரசு ஒப்பந்ததாரர் அருணாசலம் செட்டியார், செல்வம், வார்டு பெரியவர்கள், ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

    • தொழில் நுட்ப எந்திரத்துடன் கூடிய வாகனத்தை நகராட்சி நிர்வாகம் புதியதாக வாங்கியுள்ளது.
    • வேறுவாகனத்தில் கொட்டிவிட்டு, இந்த வாகனத்தை தொடர்ந்து இயக்கலாம்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சி 7.41 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம்பிரிக்கப்பட்டு நகராட்சி தூய்மை பணியாளர்களால் சேகரித்து செல்லப்படுகிறது. அத்துடன் தூய்மை பணியாளர்கள் தார்சாலைகள் மற்றும் பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ள சாலைகளை சீமாறு மூலமாக கூட்டி சுத்தம் செய்து வருகின்றனர்.

    சாலைகள் மிகவும் தூய்மையாக இருக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப எந்திரத்துடன் கூடிய வாகனத்தை நகராட்சி நிர்வாகம் புதியதாக வாங்கியுள்ளது. இதன் விலை ரூ.24 லட்சம் ஆகும். இந்த வாகனம் சாலையில் செல்லும் போது அதில் உள்ள எந்திரத்தை இயக்கினால் எந்திரத்தின் முன்பகுதியில் உள்ள சீமாறு போன்ற எந்திரம், சாலைப்பகுதியில் உள்ள குப்பை தூசிகளை சேகரித்து கொடுக்கும். இதை வாகனத்தில் உள்ள எந்திரம் உள் இழுத்து கொள்ளும். சாலைகளின் நடுவில் மையத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில், மையத்தடுப்புகளை ஒட்டி கீழ்பகுதியில் மண் சேர்ந்திருக்கும். அந்த மண், தூசியையும் இந்த எந்திரம் இழுத்து வந்து விடும்.

    இந்த எந்திரத்தில் உள்ள டேங்கில் மண், தூசி போன்றவை சேர்ந்ததும், அதை வேறுவாகனத்தில் கொட்டிவிட்டு, இந்த வாகனத்தை தொடர்ந்து இயக்கலாம். இந்த நவீன எந்திரத்துடன் கூடிய வாகனத்தை நகராட்சி தலைவர் மு.மத்தீன், ஆணையாளர் பி.சத்தியநாதன், நகராட்சி பொறியாளர் மோகன், உதவிப்பொறியாளர் மாலா ஆகியோர் பார்வையிட்டனர்.இந்த வாகனத்தை இயக்குவது எப்படி என்பது குறித்து, வாகனத்தை விற்பனை செய்துள்ள நிறுவனத்தினர், நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். அதன் பிறகு இந்த வாகனம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது. 

    • சேலம் மாநகராட்சி பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • சேலம் மாநகராட்சியில் மொத்தம் 96 பள்ளிகள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் கல்வி நிலைக்குழு மேற்கொள்ளப்பட வேண்டிய கல்வி மேம்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.

    சேலம் மாநகராட்சியில் 51 துவக்கப்பள்ளிகள், 29 நடுநிலைப்பள்ளிகள், 9 உயர்நிலைப்பள்ளிகள், 7 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 96 பள்ளிகள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இப்பள்ளிகளுக்கு புதிதாக கட்டிடங்கள் கட்டுதல், கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல், கணினி உபகரணங்கள் வாங்குதல், ஆய்வகங்கள் வசதி ஏற்படுத்துதல், தளவாட சாமான்கள் வாங்குதல், பள்ளிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்துதல், கழிப்பிட வசதி, நூலகங்கள் ஏற்படுத்துதல், விளையாட்டு மைதானங்கள், சுற்றுசுவர் போன்ற கல்வி மேம்பாட்டு பணிகளை எவ்வாறு மேற்கொள்ளுவது என்பது குறித்து ஆலோசிக்கபப்ட்டது,

    மேலும் மேற்குறிப்பிட்ட மேம்பாட்டு பணிகளை மாநகராட்சி நிதி, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு, சமூக பொறுப்பு நிதி, நமக்கு நாமே திட்டம் மற்றும் அரசின் சிறப்பு நிதி ஆகியவற்றில் இருந்து மேற்கொள்ளுவது குறித்தும், தனியார் கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் மாநகராட்சி பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர கோருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் பேசியதாவது:

    மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்வது மிகவும் அவசியமாக கருதப்படுகிறது.

    அனைத்து பள்ளிகளிலும் மாணவமாணவியர்களுக்கு கழிப்பிட வசதியும், நூலக வசதியும் சுற்றுசுவர் அமைத்தலும் மிக முக்கியமானதாகும். மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிறப்பான முறையில் மாணவமாணவியர்களுக்கு கல்வியை கற்று தருகிறார்கள்.

    அந்த பள்ளிகளுக்கு மிக முக்கிய தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதை நோக்கமாக கொண்டு புது பொலிவுடன் கூடிய மாநகராட்சி பள்ளியாக மாற்றி அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    கல்வி நிலைக்குழு உறுப்பினர்கள் மாநகராட்சி பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து எடுத்து கூறியுள்ளிர்கள். இது குறித்து ஆய்வு மேற்கொண்டு அனைத்து பணிகளையும் நிறைவேற்றி தரப்படும்.

    • திருவேங்கடம் சாலையில் உள்ள நகராட்சி இடத்திற்கு சுமார் 26 பேர் தலா ரூ.10 லட்சம் முன் பணம் கட்டி ஏலத்தில் பங்கேற்றனர்.
    • மாத வாடகை ரூ.9500-க்கு முடித்த கடையை மற்றொருவர் அந்த கடையை தான் ரூ.10,500 வாடகைக்கு எடுத்துக் கொள்வதாக கூறி நகராட்சி அதிகாரிகளிடம் அன்று மாலை மனு அளித்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள 16 கடைகள் மற்றும் ஆடிதபசு திருநாளை முன்னிட்டு நகர் குத்தகை ஆகிய தொடர்பான டெண்டர்கள் விடப்பட்டன. கடைகளுக்கு டெபாசிட் தொகையாக ரூ.10 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆடித்தபசு திருவிழா குத்தகைக்காக ரூபாய் 1 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டது.

    இந்நிலையில் கடைகளுக்கு ரூ.10 லட்சம் அறிவித்த நிலையில் மிக குறைந்த நபர்களே டெபாசிட் கட்டி ஏலத்தில் பங்கேற்பார்கள் என்ற நிலையில் கடை எடுக்க விருப்பம் இல்லாமல் டெபாசிட் கட்டினால் கடை எடுப்பவர்களிடம் கமிஷன் வாங்கிக் கொள்ளலாம் என்ற பெயரில் 100-க்கும் மேற்பட்டவர்கள் டெபாசிட் செய்தனர்.

    அதில் திருவேங்கடம் சாலையில் உள்ள நகராட்சி இடத்திற்கு சுமார் 26 பேர் தலா ரூ.10 லட்சம் முன் பணம் கட்டி ஏலத்தில் பங்கேற்றனர். இதில் ஒரு சிலர் இரண்டு, மூன்று டி.டி.க்கள் வேறு வேறு பெயர்களில் செலுத்தியதாக கூறப்படுகிறது.

    அதில் அந்த கடையை ஒருவர் முடிவாக எடுப்பதாக கூறியதன் பேரில் கடை வாடகை ரூ.9,500 நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் கடை எடுத்த நபர் டெபாசிட் கட்டிய அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் வழங்குவதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் டெபாசிட் செய்தவர்கள் ரூ.50 ஆயிரம் வருமானம் அவர்கள் நினைத்தது போல் வந்து விட்டதால் அவர்கள் யாரும் ஏலத்தில் பங்கேற்கவில்லை.

    இந்நிலையில் மாத வாடகை ரூ.9500-க்கு முடித்த கடையை மற்றொருவர் அந்த கடையை தான் ரூ.10,500 வாடகைக்கு எடுத்துக் கொள்வதாக கூறி நகராட்சி அதிகாரிகளிடம் அன்று மாலை மனு அளித்தார். இதனால் மறு ஏலம் 15 நாட்கள் கழித்து நடக்கப்படும் என உத்தரவிடப்பட்டது.

    அனைத்து அரசு துறைகளிலும் டெண்டர் விடும் நிலையில் பகடிக்காக, கமிஷனுக்காக டெபாசிட் கட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாகவும், ஒரு சிலர் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து இதனை சங்கரன்கோவிலில் தொழிலாக செய்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் கடை ஏலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் ரூ.10 லட்சம் டி.டி. எடுத்து கொடுத்தவர்கள் திகைத்து போய் உள்ளனர்.

    • முதுகுளத்தூர் பேருராட்சி மன்றக்கூட்டம் நடந்தது.
    • கழிவுநீரை சுத்திகரிக்க ரூ.5 கோடி நிதிஉதவி கேட்கப்பட்டுள்ளது.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் பேரு ராட்சி மன்றக்கூட்டம் பேரூராட்சி தலைவர் ஏ.ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி நிர்வாக அதிகாரி மாலதி முன்னிலை வகித்தார். ராஜேஷ் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கவுன்சிலர் மோகன்தாஸ்:-

    தி.மு.க. 7-வது வார்டு வீடு கட்டுபவர்கள் சன்சைடு மற்றும் வாசல்படிகளை ரோட்டில் கட்டுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால் பேரூராட்சி சார்பில் சர்வேயர் நியமிக்க வேண்டும்.

    தலைவர் ஷாஜகான்:- சர்வேயர் நியமிக்க நடவடிக்கை நிலையில் தற்போது கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் கூடுதல் துப்புரவு பணியாளர்களை நியமித்து சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உம்முகர்தா (தி.மு.க.):-

    கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தவுடன் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லையேல் மீண்டும் கால்வாயிலே கோழிகளால் கொத்தி தள்ளிவிடப்படுகிறது.

    தலைவர் ஷாஜகான்:-

    4 கூடுதல் துப்புரவுப் பணியாளர்களை நியமித்து கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சுந்தரம்பாள் (தி.மு.க.):- கழிவுநீர் தேங்குவதை தடுக்க ஜே.சி.பி. மூலம் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.

    தலைவர் ஷாஜகான்:-

    15-வது வார்டில்தான் ஜே.சி.பி. எந்திரம் மூலம் வேலை நடந்து வருகிறது. அதனை நேரில் பார்வையிட்டு வேலை சிறப்பாக நடக்க ஆலோசனை வழங்க வேண்டும்.

    அமைச்சர் ராஜகண்ணப்பன் மூலம் கழிவுநீரை சுத்திகரிக்க ரூ.5 கோடி நிதிஉதவி கேட்கப்பட்டுள்ளது.

    மோகன்தாஸ் (தி.மு.க.):-

    தினசரி மார்க்கெட்டில் ஏலம் விடாமல் நிறுத்தப் பட்டால் பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.தலைவர் ஷாஜகான்:-

    இது தொடர்பாக டி.எஸ்.பி. மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவகம் மூலம் மனுக்கள் வந்துள்ளன. தினசரி சந்தை ஏலம் விடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மீன் மார்க்கெட் கழிப்பறை ஏலம் விடுவதும் நிறுத்தப்பட உள்ளன.

    தமிழகம் முழுவதும் கழிப்பறைகளில் ரூ.5 கட்டணமாக வாங்கும் நிலை இருந்தும், முதுகுளத்தூரில் ரூ.16 வசூலிக்கப்படுகிறது.

    எனவே கட்டணம் நிர்ணயம் செய்தபின் ஏலம் விடப்படும்.

    இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

    முடிவில் முனியசாமி நன்று கூறினார்.

    • சுரண்டை பகுதி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகும் உரிய அதிகாரிகள் நியமிக்கப்படாததால் பொதுமக்கள் பாதிப்புகுள்ளாகி வருகின்றனர்.
    • பல பணியிடங்களுக்கு இதுவரை அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை.

    சுரண்டை:

    தென்காசி மாவட்டத்தில் வளர்ந்து வரும் வணிக நகரமான சுரண்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதுகுறித்து நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தென்காசி எம்.எல்.ஏ. பழனி நாடார், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் சமூக ஆர்வலர்களும்

    வலியுறுத்தியதின் அதனடிப்படையில் சுரண்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு நகர் மன்றத் தேர்தலும் நடத்தப்பட்டு நகராட்சி சேர்மன் மற்றும் கவுன்சிலர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

    ஆனால் சுரண்டை நகராட்சியில் முன்பிருந்த பேரூராட்சி நிர்வாக அதிகாரி பணியிடம் ஆணையாளர் என்ற பெயரில் நிரப்பப்பட்டது தவிர வேறு எந்த அதிகாரிகளும் இதுவரை நியமிக்கப்படவில்லை.

    குறிப்பாக நகராட்சியின் மேலாளர் மற்றும் நகராட்சி பொறியாளர், சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர், நகர அமைப்பு அலுவலர் (டவுன் பிளானிங் ஆபிசர்), பணி மேற்பார்வையாளர், வருவாய் ஆய்வாளர், கேரியர் வரி வசூலிப்பவர்கள், பதிவரை எழுத்தர் கூடுதல் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பல பணியிடங்களுக்கு இதுவரை அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை.

    இதில் குறிப்பிட்ட சில பணியிடங்களுக்கு பிற நகராட்சியை சேர்ந்த அதிகாரிகள் கூடுதல் பொறுப்புடன் நியமிக்கப்பட்டாலும் அவர்களுக்கு இருக்கும் பணிச்சுமையில் சுரண்டை நகராட்சிக்கு வருகை தர முடியவில்லை.

    இதனால் நகராட்சியின் அன்றாட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதிலும், பொதுமக்களுக்கு தேவையான சான்றிதழ் அளிப்பது, கட்டிட வரைபட அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறவில்லை.

    சுமார் ஆயிரம் கட்டிட வரைபட அனுமதி கேட்டு விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் பரீசீலனையே கூட செய்யப்படவில்லை. எனவே கட்டிடங்களைக் கட்டுவதில் பொது மக்கள் சிரமங்களை அடைகின்றனர்.

    இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பும் ஏறுபட்டுள்ளது‌. மேலும் நகராட்சியின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஏற்கனவே கட்டிட வரைபட அனுமதி வழங்குவதற்கு காலதாமதம் ஆவதை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.

    எனவே தமிழக அரசும், சம்பந்தப்பட்ட நிர்வாகிகளும் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுரண்டையில் நகராட்சிக்குரிய அனைத்து அதிகாரிகளையும் நியமித்து மக்கள் பணியில் கூடுதலாக செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரக்கோணம் நகரில் குண்டும் குழியுமான சாலைகளை நகராட்சி நிர்வாகம் சீரமைக்காததால் சலூன் தொழிலாளி ஒருவர் உண்டியல் மூலம் பணம் திரட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். #ArakkonamRoad

    அரக்கோணம்:

    அரக்கோணம் நகராட்சியில் உள்ள 36 வார்டு பகுதிகளிலும் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் நடப்பதற்காக தெருக்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள், பணிகள் முடிந்தபின்னர் சரிவர மூடப்படவில்லை.

    அரக்கோணம், பழனிப்பேட்டை, வி.பி.கோவில் தெரு மிகவும் மோசமடைந்த நிலையில் காணப்பட்டது. கடந்த 2 தினங்களுக்கு முன்புஅந்த வழியாக நடந்து சென்ற கர்ப்பிணி ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்து உள்ளார். அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு அனுப்பி வைத்தனர்.

    இதுபோன்ற நிலை தொடராமல் இருக்க குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி உள்பட பல்வேறு துறையினருக்கு பொதுமக்கள் தரப்பில் மனுக்கள் அனுப்பப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் நகராட்சியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அரக்கோணம் வி.பி.கோவில் தெருவை சேர்ந்த ஆர்.மோகன் (வயது 40) என்பவர் தனது சலூன் கடை முன்பாக நேற்று தெருவில் உண்டியல் வைத்து தெருவை நகராட்சி நிர்வாகம் சீரமைத்து தர வலியுறுத்தி ஒவ்வொரிடமும் ஒரு ரூபாய் வீதம் உண்டியலில் வசூலித்து நூதன போராட்டம் நடத்தினார். இதில் ஏராளமானோர் அவருக்கு ஆதரவு தெரிவித்து உண்டியலில் ஒரு ரூபாயை செலுத்தினர்.

    இது குறித்து ஆர்.மோகன் கூறுகையில், ‘‘நான் வசிக்கும் தெரு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அந்த வழியாக சென்ற கர்ப்பிணி ஒருவர் கீழே விழுந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்து விட்டது. தெருக்களை சீரமைக்க நகராட்சியின் கவனத்தை ஈர்ப்பதற்காக எனது கடை முன்பாக உண்டியல் வைத்து ஒரு நபரிடம் ஒரு ரூபாய் வசூலித்து போராட்டம் நடத்துகிறேன். உண்டியலில் வசூலிக்கப்படும் பணத்தை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளேன்’’ என்றார்.

    நகராட்சி ஆணையாளர் சண்முகம் (பொறுப்பு) கூறுகையில், ‘‘அரக்கோணம் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடியும் நிலையில் உள்ளது. பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிந்த தெருக்களில் சாலைகள் சரிசெய்யப்பட்டு உள்ளது. பணிகள் முடியாத தெருக்களில் பணிகள் முடிக்கப்படும். மிக விரைவில் ரூ.5 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டு சாலைகள் சீரமைக்கப்படும்’’ என்றார்.  #ArakkonamRoad

    தொண்டி, நம்புதாளை மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களை சேர்த்து நகர சபையாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளரும், மாவட்ட செயற்குழு உறுப்பினருமான குருசாமி முதல் அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    தொண்டியானது முன்பு துறைமுக நகரமாக விளங்கியுள்ளது. இப்போதும் முதல் நிலை பேரூராட்சியாகவும் மக்கள் தொகை அதிகம் கொண்டதாகவும், தொழிற்துறையில் வளர்ந்து வரும் நகரமாகவும் விளங்குகிறது.

    கிராமமான நம்புதாளையானது, திருவாடானை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட 47 கிராம பஞ்சாயத்துக்களில் அதிக மக்கள் தொகை கொண்ட கிராமமாக உள்ளது.

    இந்த 2 பகுதிகளையும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களையும் ஒன்றிணைத்து தொண்டியை நகரசபையாக மாற்றினால் பெரிய நகரமாக மாறவும், தொழிற்சாலைகள் உருவாகவும் வாய்ப்பாக அமையும்.

    எனவே தொண்டி, நம்புதாளை பகுதிகளை இணைத்து நகரசபையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×