search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thondi"

    தொண்டி அருகே மனைவி மீது மண் எண்ணை ஊற்றி கொல்ல முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

    தொண்டி:

    தொண்டி அருகே உள்ள குருமிலாங்குடியை அடுத்த பழங்குளத்தைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது42). இவரது மனைவி பிரியா (32). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    கோவையில் இருந்து திரும்பிய மாதேஸ்வரன் வேலைக்கு செல்லாமல் மனைவியிடம், உன் வீட்டில் பணம் வாங்கி வா என அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று பணம் வாங்கி வர மறுத்த மனைவி பிரியா மீது மாதேஸ்வரன் ஆத்திரம் அடைந்தார்.

    மது குடித்து விட்டு வந்து பிரியா உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துள்ளார்.அலறி துடித்த பிரியாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    தீக்காயத்துடன் பிரியா கொடுத்த புகாரின்பேரில் தொண்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் காமாட்சி நாதன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மாதேஸ்வரனை தேடி வந்தார்.

    இந்த நிலையில் அவர் ஊருக்கு அருகில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாதேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.

    தொண்டி சோதனைச் சாவடியில் கேரள மீன் வியாபாரியிடம் ரூ. 2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். #LSPolls

    தொண்டி:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளதால் பணம் கொண்டு செல்வதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

    50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக பணம் கொண்டு செல்பவர்கள் அதற்குரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சோதனைச்சாவடியில் நள்ளிரவில் தேர்தல் பறக்கும் படையினர் தாசில்தார் ராமசாமி தலைமையில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் பயணம் செய்தவரிடம் ரூ. 2 லட்சம் ரொக்கம் இருந்தது. அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. எனவே ரூ. 2 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். காரில் பயணம் செய்தவர் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மீன் வியாபாரி ஆண்டோ (45) என்பது தெரியவந்துள்ளது. #LSPolls

    தொண்டிபேரூராட்சி பகுதி கடைகளில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை தடுக்க பணியாளர்கள் திடீர் ஆய்வு மேற் கொண்டனர்.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சி பகுதியானது கடற்கரை பகுதி.இங்குள்ள வணிக நிறுவனங்களில் பேரூராட்சி மூலம் அடிக்கடி பிளாஸ்டிக்கை ஒழிக்க நோட்டீசுகள் மற்றும் வாகனங்களில் பொது மக்களுக்கு அறிவுறுத்தியும் பிளாஸ்டிக்கை ஒழிப்பது சவாலான காரியமாக உள்ளது.

    ஒருகடையில் ஆய்வு செய்யும் செய்தி கேட்டு மற்ற கடைக்காரர்கள் தாங்கள் வைத்துள்ள பிளாஸ்டிக் பைகளை மறைத்து விடுகின்றனர்.

    அதனால் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடை உள்ளே சென்று பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தும், உடனடியா அபராதம் விதித்தனர். இதில் சுகாதார மேஸ்திரி கோவிந்தன், அலுவலக பணியாளர் கண்ணன் உட்பட பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    பெரும்பாலான கடைக்காரர்கள் துணிப்பைகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்து துணிப்பைகளை எடுத்து வராததால், வாடிக்கையாளரிடம் பொருட்கள் வாங்கும் போதே துணிப் பைக்கான தொகையையும் கடைக்காரர்கள் வசூலித்து விடுகின்றனர்.

    பொது மக்களும் பிளாஸ்டிக் பைகளை பயன் படுத்த மாட்டோம், கடைகளில் கொடுத்தாலும் வாங்க மறுக்கும் நிலை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    தொண்டி, நம்புதாளை மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களை சேர்த்து நகர சபையாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளரும், மாவட்ட செயற்குழு உறுப்பினருமான குருசாமி முதல் அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    தொண்டியானது முன்பு துறைமுக நகரமாக விளங்கியுள்ளது. இப்போதும் முதல் நிலை பேரூராட்சியாகவும் மக்கள் தொகை அதிகம் கொண்டதாகவும், தொழிற்துறையில் வளர்ந்து வரும் நகரமாகவும் விளங்குகிறது.

    கிராமமான நம்புதாளையானது, திருவாடானை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட 47 கிராம பஞ்சாயத்துக்களில் அதிக மக்கள் தொகை கொண்ட கிராமமாக உள்ளது.

    இந்த 2 பகுதிகளையும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களையும் ஒன்றிணைத்து தொண்டியை நகரசபையாக மாற்றினால் பெரிய நகரமாக மாறவும், தொழிற்சாலைகள் உருவாகவும் வாய்ப்பாக அமையும்.

    எனவே தொண்டி, நம்புதாளை பகுதிகளை இணைத்து நகரசபையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தொண்டி அருகே கூட்டுறவு சங்க தேர்தல் முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். #LocalBodyElections ##CooperativeUnionElection

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள முள்ளிமுனை மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேது. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பட்டாணி என்பவருக்கும் கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக விரோதம் இருந்தது.

    இந்த முன்விரோதத்தில் அடிக்கடி மோதலும் நடந்துள்ளது. நேற்று பட்டாணி தரப்பை சேர்ந்த ஜெயக்குமார் (வயது32) அங்குள்ள கடற்கரை பகுதியில் படுத்து இருந்தார்.

    இன்று அதிகாலை அங்கு 10 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த ஜெயக்குமாரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு ஜெயக்குமாரின் தம்பி வசீகரன் (27), உறவினர் விஜயராஜன் (27) ஆகியோர் அங்கு வந்தனர். அவர்களையும் மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது.

    இதில் பலத்த காயம் அடைந்த ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நளாயினி, ஏட்டு மாரி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று ஜெயக்குமாரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை சம்பவத்தில் சேது தரப்பினர் தான் ஈடுபட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அந்த தரப்பை சேர்ந்த 2 பேர் காயங்களுடன் திருவாடானை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #LocalBodyElections ##CooperativeUnionElection

    தொண்டி அருகே பராமரிப்பு இல்லாத வனத்துறை அறிவிப்பு பலகைகளை முறைப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கடற்கரையோர கிராமமான காரங்காடு கடல் பகுதி மாங்குரோவ் காடுகளால் சூழ்ந்துள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு காரங்காடு கடல் பகுதியை நீந்திப்பார்த்தல் மற்றும்

    சூழல் சுற்றுலாவாக அறிவித்துள்ளது. தற்போது கோடை விடுமுறையில் ஏராளமானோர் இப்பகுதியை பார்வையிட்டு செல்கின்றனர்.

    மேலும் சுற்றுலாத் துறையின் சார்பாக கடலில் வளர்ந்துள்ள மாங்குரோவ் காடுகளின் அழகை ரசிக்கும் வகையில் படகுசவாரி ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. கடலில் பாதுகாப்பு உடைகளுடன் நீந்திப்பார்க்கவும் கட்டணம் தனியாக வசூலிக்கப்படுகிறது.

    இந்நிலையில் தமிழ் நாடு வனத்துறையின் சார்பாக காடுகளை பாதுகாப்போம், வன விலங்குகளை பாதுகாப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை கிழக்கு கடற்கரை சாலையில் ஊன்றிய இடத்திலிருந்து பெயர்ந்து பராமரிப்பு இன்றி உள்ளது. சுற்றுலாத் துறையாக அறிவித்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் அதற்கான அறிவிப்பு பலகைகளை முறைப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×