search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bill collection"

    • பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர்.
    • மலை கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களில் பணம், நகை, பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.

    திருத்தணி:

    முருகனின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக திகழும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா என பல்வேறு மாநி லங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர்.

    பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற காணிக்கையாக மலை கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களில் பணம், நகை, பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த பகுதியில் பாதுகாப்புடன் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட திருக்கோவில் ஊழியர்கள் பங்கேற்று, துணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 28 நாட்களில் பக்தர்கள் ரூ.1 கோடியே 31 லட்சத்து 82 ஆயிரத்து 988 ரூபாய் பணம், 711 கிராம் தங்கம், 8 ஆயிரத்து 880 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர்.
    • கோவிலில் உள்ள உண்டியல்கள் ஒரு மாதத்துக்கு பின்னர் தேவர் மண்டபத்தில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவில் 5-ம் படை வீடாக உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா என பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர். பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.

    இந்நிலையில் கோவிலில் உள்ள உண்டியல்கள் ஒரு மாதத்துக்கு பின்னர் தேவர் மண்டபத்தில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மொத்தம் ரூ.1கோடியே 55லட்சத்து 56 ஆயிரத்து 4 ரொக்கம், தங்கம் 960 கிராம், வெள்ளி 11 கிலோ, காணிக்கையாக கிடைத்து இருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • சதுரகிரி கோவிலில் ரூ.44 லட்சம் உண்டியல் வசூலானது.
    • ரூ.44 லட்சத்து 80 ஆயிரத்து 539 ரொக்கமும், 12 கிராம் 200 மில்லி தங்கம், 240 கிராம் 460 மில்லி வெள்ளியும் கிடைத்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு மாதத்தில் அமாவாசை மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த மாதம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் உதவி ஆணையர் சுரேஷ், பரம்பரை அறங்காவலர் ராஜா (எ) பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், பேரையூர் சரக ஆய்வர் சடவர்ம பூபதி முன்னிலையில் சதுரகிரி மலை கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. அதில் ரூ.44 லட்சத்து 80 ஆயிரத்து 539 ரொக்கமும், 12 கிராம் 200 மில்லி தங்கம், 240 கிராம் 460 மில்லி வெள்ளியும் கிடைத்தது.

    உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
    • கடந்த 3 மாதத்திற்கு பிறகு கோவிலில் இருந்த உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    இந்நிலையில் காமாட்சி அம்மன் கோவிலில் கடந்த 3 மாதத்திற்கு பிறகு கோவிலில் இருந்த உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் முன்னிலையில் அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா, கோவில் செயல் அலுவலர்கள் பா. முத்துலட்சுமி, அமுதா, மற்றும் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் நிர்வாகிகள் கீர்த்திவாசன், ஜெயராமன், மற்றும் காமாட்சி அம்மன் கோவில் மணியக்காரர் சூரிய நாராயணன் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியினை பார்வையிட்டனர். இதில் ரொக்கமாக ரூ.58 லட்சத்து 51 ஆயிரத்து 470, தங்கம் 190 கிராம், வெள்ளி 460 கிராம் பக்தர்கள் காணிக்கையாக கிடைத்து இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசிமகத்தன்று தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
    • பக்தர்கள் கலந்து கொண்டு அரங்கனை தரிசனம் செய்து அருளாசி பெற்றுச்சென்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாத சுவாமி கோவில் இருந்து வருகிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசிமகத்தன்று தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

    கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக கட்டுப்பாடுகளுடன் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நடப்பாண்டின் தேர்த்திருவிழாவானது கடந்த பிப்ரவரி 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனைத்தொடர்ந்து எம்பெருமான் தினந்தோறும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டமானது வெகு விமரிசையாக நடந்தது. தேரோட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு,நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரங்கனை தரிசனம் செய்து அருளாசி பெற்றுச்சென்றனர்.

    அதனை தொடர்ந்து நேற்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பக்தர்கள் தண்ணீர் சேவை,பந்த சேவை எடுத்து வந்து திருக்கோவிலின் 4 ரத வீதிகளின் வழியாக ஊர்வலமாகச்சென்று இறுதியில் காரமடை அரங்கநாதர் கோவிலில் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். மேலும் சில பக்தர்கள் அருள் வந்து ஆட்டம் ஆடிய படியே சவுக்கால் அடித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    தேரோட்ட நிகழ்வின் போது அன்று காலை முதல் நேற்று காலை வரை ஒரு நாளில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணியானது கோவில் செயல் அலுவலர் லோகநாதன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதில் கோவில் அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    உண்டியலில் பக்தர்கள் ரொக்கமாக ரூ.4,52,798 பணத்தினை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இதனால் கோவிலுக்கு சுமார் ரூ.4.5 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.81 லட்சம் உண்டியல் வசூலானது.
    • உண்டியல் என்னும் பணியில் சாத்தூர், துலுக்கப்பட்டி.ஆகிய ஊர்களை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு மற்றும் மதுரை ஐயப்ப சேவா சங்கம், கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதம் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அதன்படி 10 நிரந்தர உண்டியல், 4 தற்காலிக உண்டியல்கள் உள்பட 14 உண்டியல்கள் திறக்கப்பட்டது. அதில் ரூ. 81 லட்சத்து ஆயிரத்து 488-ம். தங்கம்- 309 கிராம்.வெள்ளி- 1014 கிராம் கிடைத்தது. உண்டியல் என்னும் பணியில் சாத்தூர், துலுக்கப்பட்டி.ஆகிய ஊர்களை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு மற்றும் மதுரை ஐயப்ப சேவா சங்கம், கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    இந்து அறநிலைய துறை விருதுநகர் கோவில்களின் உதவி ஆணையர் வளர்மதி, இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன், தலைமையில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, சவுந்திர ராஜன், ஹரிராம், மகாராஜன், நவரத்தினம், மற்றும் அறங்காவலர் குழுவினர் ஆய்வாளர்கள், உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    • தங்க நகை, வெள்ளி பொருட்கள் கணக்கிடப்படுகிறது
    • ஆடிவெள்ளிக்கிழமைகளையொட்டி அதிகளவிலான பக்தர்கள் தரிசனம்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ஆடிவெள்ளி விழா 5 வாரங்கள் நிறைவு பெற்றது.

    இதையடுத்து கோவிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை உண்டியல்கள் நேற்று காலை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி முன்னிலையில் திறக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டது.

    படவேடு இந்தியன் வங்கி அலுவலர்கள் மற்றும் 100க்கும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

    தற்போது வரை உண்டியல் எண்ணும் பணி நடந்து வருகிறது. சுமார் 40 லட்சம் மதிப்பில் பணமும், காணிக்கை தங்க நகைகள், வெள்ளி ஆகியவற்றின் மதிப்பு நகைமதிப்பீட்டாளர் மூலம் தெரியவரும் என செயல் அலுவலர் சிவஞானம் தெரிவித்தார்.

    உண்டியல் பணம் எண்ணும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர்கள் நடராஜன், சாந்தி, கோயில் மேலாளர் மகாதேவன், கணக்கர் சீனிவாசன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.

    • மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ரூ.50.98 லட்சம் உண்டியல் வசூல் வந்துள்ளது.
    • ரூ.50 லட்சத்து 98 ஆயிரத்து 126 ரொக்கமும், 325 கிராம் தங்க நகைகளும், 660 கிராம் வெள்ளிப் பொருட்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்

    மேல்மலையனூர்:

    மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்கள் உண்டியல்களில் செலுத்தும் காணிக்கைகளை மாதந் தோறும் எண்ணுவது வழக்கம். அதன்படி நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் மேல்ம லையனூர் ஜீவானந்தம், விழுப்புரம் விஜயராணி, துணை ஆணையர் சிவலிங்கம், ஆய்வாளர் சங்கீதா, செயல் அலுவலர் திருவக்கரை சிவக்குமார், கோலியனூர் சிவக்குமார், அறங்காவலர் குழு தலைவர் வடிவேல் பூசாரி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் ரூ.50 லட்சத்து 98 ஆயிரத்து 126 ரொக்கமும், 325 கிராம் தங்க நகைகளும், 660 கிராம் வெள்ளிப் பொருட்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் இந்தியன் வங்கி ஊழியர்கள், கோவில் பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர். வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • 235 கிராம் தங்கம் இருந்தது.
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    மேலும் மலையை சுற்றி கிரிவலமும் சென்று அஷ்டலிங்க சாமிகளையும் தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் நேற்று அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் உள்ள உண்டியல்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

    இதில் 1 கோடியே 37 லட்சத்து 97 ஆயிரத்து 683 ரூபாயும், 235 கிராம் தங்கமும், ஒரு கிலோ 79 கிராம் வெள்ளியும் உண்டியலில் காணிக்கையாக கிடைத்ததாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    அரக்கோணம் நகரில் குண்டும் குழியுமான சாலைகளை நகராட்சி நிர்வாகம் சீரமைக்காததால் சலூன் தொழிலாளி ஒருவர் உண்டியல் மூலம் பணம் திரட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். #ArakkonamRoad

    அரக்கோணம்:

    அரக்கோணம் நகராட்சியில் உள்ள 36 வார்டு பகுதிகளிலும் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் நடப்பதற்காக தெருக்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள், பணிகள் முடிந்தபின்னர் சரிவர மூடப்படவில்லை.

    அரக்கோணம், பழனிப்பேட்டை, வி.பி.கோவில் தெரு மிகவும் மோசமடைந்த நிலையில் காணப்பட்டது. கடந்த 2 தினங்களுக்கு முன்புஅந்த வழியாக நடந்து சென்ற கர்ப்பிணி ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்து உள்ளார். அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு அனுப்பி வைத்தனர்.

    இதுபோன்ற நிலை தொடராமல் இருக்க குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி உள்பட பல்வேறு துறையினருக்கு பொதுமக்கள் தரப்பில் மனுக்கள் அனுப்பப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் நகராட்சியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அரக்கோணம் வி.பி.கோவில் தெருவை சேர்ந்த ஆர்.மோகன் (வயது 40) என்பவர் தனது சலூன் கடை முன்பாக நேற்று தெருவில் உண்டியல் வைத்து தெருவை நகராட்சி நிர்வாகம் சீரமைத்து தர வலியுறுத்தி ஒவ்வொரிடமும் ஒரு ரூபாய் வீதம் உண்டியலில் வசூலித்து நூதன போராட்டம் நடத்தினார். இதில் ஏராளமானோர் அவருக்கு ஆதரவு தெரிவித்து உண்டியலில் ஒரு ரூபாயை செலுத்தினர்.

    இது குறித்து ஆர்.மோகன் கூறுகையில், ‘‘நான் வசிக்கும் தெரு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அந்த வழியாக சென்ற கர்ப்பிணி ஒருவர் கீழே விழுந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்து விட்டது. தெருக்களை சீரமைக்க நகராட்சியின் கவனத்தை ஈர்ப்பதற்காக எனது கடை முன்பாக உண்டியல் வைத்து ஒரு நபரிடம் ஒரு ரூபாய் வசூலித்து போராட்டம் நடத்துகிறேன். உண்டியலில் வசூலிக்கப்படும் பணத்தை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளேன்’’ என்றார்.

    நகராட்சி ஆணையாளர் சண்முகம் (பொறுப்பு) கூறுகையில், ‘‘அரக்கோணம் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடியும் நிலையில் உள்ளது. பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிந்த தெருக்களில் சாலைகள் சரிசெய்யப்பட்டு உள்ளது. பணிகள் முடியாத தெருக்களில் பணிகள் முடிக்கப்படும். மிக விரைவில் ரூ.5 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டு சாலைகள் சீரமைக்கப்படும்’’ என்றார்.  #ArakkonamRoad

    ×