அருணாசலேஸ்வரர் கோவிலில் 1¼ கோடி உண்டியல் வசூல்

235 கிராம் தங்கம் இருந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் 1¼ கோடி உண்டியல் வசூல்
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

மேலும் மலையை சுற்றி கிரிவலமும் சென்று அஷ்டலிங்க சாமிகளையும் தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் நேற்று அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் உள்ள உண்டியல்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

இதில் 1 கோடியே 37 லட்சத்து 97 ஆயிரத்து 683 ரூபாயும், 235 கிராம் தங்கமும், ஒரு கிலோ 79 கிராம் வெள்ளியும் உண்டியலில் காணிக்கையாக கிடைத்ததாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com