search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ரூ.58½ லட்சம் உண்டியல் வசூல்
    X

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ரூ.58½ லட்சம் உண்டியல் வசூல்

    • தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
    • கடந்த 3 மாதத்திற்கு பிறகு கோவிலில் இருந்த உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    இந்நிலையில் காமாட்சி அம்மன் கோவிலில் கடந்த 3 மாதத்திற்கு பிறகு கோவிலில் இருந்த உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் முன்னிலையில் அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா, கோவில் செயல் அலுவலர்கள் பா. முத்துலட்சுமி, அமுதா, மற்றும் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் நிர்வாகிகள் கீர்த்திவாசன், ஜெயராமன், மற்றும் காமாட்சி அம்மன் கோவில் மணியக்காரர் சூரிய நாராயணன் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியினை பார்வையிட்டனர். இதில் ரொக்கமாக ரூ.58 லட்சத்து 51 ஆயிரத்து 470, தங்கம் 190 கிராம், வெள்ளி 460 கிராம் பக்தர்கள் காணிக்கையாக கிடைத்து இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×