search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamakshi Amman Temple"

    • மேளதாளங்கள் முழங்க உபயதாரர்கள், பக்தர்கள், தங்கத் தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
    • “ஓம் சக்தி,பராசக்தி” கோஷமிட்டு காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் வெள்ளிக் கிழமையையொட்டி நேற்று இரவு தங்கத்தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தங்கத்தேர் உற்சவத்தையொட்டி காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. மஞ்சள் நிற பட்டு உடுத்தி சாமந்தி பூ மலர் மாலைகள் அணிவித்து, லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் சிறப்பு அலங்காரத்தில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் காமாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பின்னர் மேளதாளங்கள் முழங்க உபயதாரர்கள், பக்தர்கள், தங்கத் தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர். காஞ்சி காமாட்சி அம்மன், கோவில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இந்த தங்கத்தேர் உற்சவத்தில் உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டம்,வெளி மாநிலம் என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு "ஓம் சக்தி,பராசக்தி" கோஷமிட்டு காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்.

    • தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
    • கடந்த 3 மாதத்திற்கு பிறகு கோவிலில் இருந்த உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    இந்நிலையில் காமாட்சி அம்மன் கோவிலில் கடந்த 3 மாதத்திற்கு பிறகு கோவிலில் இருந்த உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் முன்னிலையில் அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா, கோவில் செயல் அலுவலர்கள் பா. முத்துலட்சுமி, அமுதா, மற்றும் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் நிர்வாகிகள் கீர்த்திவாசன், ஜெயராமன், மற்றும் காமாட்சி அம்மன் கோவில் மணியக்காரர் சூரிய நாராயணன் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியினை பார்வையிட்டனர். இதில் ரொக்கமாக ரூ.58 லட்சத்து 51 ஆயிரத்து 470, தங்கம் 190 கிராம், வெள்ளி 460 கிராம் பக்தர்கள் காணிக்கையாக கிடைத்து இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ×