என் மலர்
நீங்கள் தேடியது "Surandai"
சுரண்டை நகராட்சி கூட்டம் தலைவர் வள்ளி முருகன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சங்கராதேவி முருகேசன், நகராட்சி ஆணையாளர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சுரண்டை நகராட்சி பகுதியில் 10 இடங்களில் குடிநீர் தொட்டி அமைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை த்தொடர்ந்து சொத்துவரி குறித்த தீர்மானம் நிறைவேற்ற முன்மொழியப்பட்டது.
அப்போது 8-வது வார்டு கவுன்சிலரும், அ.தி.மு.க. நகர செயலாளருமான சக்திவேல் தலைமையில் துணை தலைவர் சங்கராதேவி முருகேசன், கவுன்சிலர்கள் வசந்தன், பொன் ராணி, மாரியப்பன், ராஜேஷ் மற்றும் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த 25-வது வார்டு கவுன்சிலர் வினோத்குமார் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
அ.தி.மு.க.வினர் வெளிநடப்பை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் முன்னிலையில் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் வருகை பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்காததால் தமிழ்நாடு முழுவதும் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் நேற்று மாலை 3 மணிக்கு தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கம் சார்பில் மண்டல செயலாளர் சித்திரைக்கனி தலைமையில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட கோரி வாயில் முழக்கப் போராட்டம் நடந்தது.
இதில் கவுரவ விரிவுரையாளர்கள் ஹரிஹரசுதன், முருகன், அண்ணாமலை, ரமேஷ், சந்தனதேவி, மாரிச்செல்வி, கார்த்திக், குமாரவேல், குழல்வாய்மொழி, ஷீபாஞானமலர், முத்துலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சுரண்டையில் பஸ் டெப்போ அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர்
- தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுமதியுடன் விரைவில் 10 திட்டங்களும் தென்காசி சட்டமன்ற தொகுதியில் தொடங்கப்படும் என பழனி நாடார் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
சுரண்டை:
சுரண்டையில் பஸ் டெப்போ அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் முதல்-அமைச்சர், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் முன்னுரிமை கொடுத்து நிறைவேற்ற வேண்டிய 10 திட்டங்கள் என்னென்ன என ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரிடமும் கேட்டிருந்தார். தென்காசி பழனி நாடார் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் எதிர்பார்க்கும் 10 அடிப்படை திட்டங்கள் குறித்து கடிதம் வழங்கியிருந்தார்.
இந்த நிலையில் சுரண்டையில் பஸ் டெப்போ அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய பழனி நாடார் எம்.எல்.ஏ., சுரண்டை நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன், அரசு போக்குவரத்து துறை அதிகாரிகளின் வணிக மேலாளர் சாலமோன், மண்டல வணிக மேலாளர் சசி, உதவி மேலாளர் இயக்கம் சண்முகம், ஏடி அழகிரி மற்றும் கவுன்சிலர்கள் வேல் முத்து, அமுதா சந்திரன்,காங்கிரஸ் நிர்வாகிகள் சவுந்தர், அரவிந்த், பிரபாகர், தர்மர் ஆகியோர் சுரண்டை பங்களாச்சுரண்டை பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தையும், ஆணைகுளம் ரோட்டில் உள்ள புறம்போக்கு இடங்களையும் ஆய்வு செய்தனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுமதியுடன் விரைவில் 10 திட்டங்களும் தென்காசி சட்டமன்ற தொகுதியில் தொடங்கப்படும் என பழனி நாடார் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
- அழகுதுரை,முத்து துரைச்சி ஆகியோர் மதுவை பதுக்கி வைத்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
- 300 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் தம்பதியை கைது செய்தனர்.
நெல்லை:
சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள நடுவக்குறிச்சியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் சேர்ந்தமரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது நடுவக்குறிச்சியை சேர்ந்த அழகுதுரை(வயது 42), அவரது மனைவி முத்து துரைச்சி(37) ஆகியோர் மதுவை பதுக்கி வைத்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த 300 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் தம்பதியை கைது செய்தனர். இவர்கள் மீது ஏற்கனவே மது விற்பனையில் ஈடுபட்டதாக 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
- சுரண்டை எஸ்.வேலாயுத நாடார் கோமதியம்மாள் அறக்கட்டளை சார்பில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- நற்பணி மன்ற தலைவர் எஸ். வி.கணேசன் தலைமை தாங்கி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார்.
சுரண்டை:
தென்காசி மாவட்ட டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம், சுரண்டை எஸ்.வேலாயுத நாடார் கோமதியம்மாள் (எஸ்.வி.ஜி) அறக்கட்டளை சார்பில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் எஸ். வி.கணேசன் தலைமை தாங்கி அலங்கரிக்கப்பட்ட டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.
சுரண்டை நாடார் வாலிபர் சங்க செயலாளர் ஆர்.வி.ராமர், பொருளாளர் ஜி.எஸ்.எஸ். அண்ணாமலைகனி, துணை செயலாளர் எஸ்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் கே.டி.பாலன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சுரண்டை நகராட்சி தலைவர் எஸ். பி.வள்ளி முருகன் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் கவுரவ ஆலோசகர் அனிதாசெல்வன், இந்திய நாடார் பேரமைப்பு தென்காசி மாவட்ட தலைவர் எஸ். ஆனந்த் காசிராஜன், சி.எம்.சங்கர், சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் கை.சேர்மன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முருகன் நன்றி கூறினார்.
- அம்மையாபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சொரிமுத்து தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
- காளைசாமி, மாடசாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தென்காசி:
சுரண்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மையாபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சொரிமுத்து தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த காளைசாமி (வயது 58), சேந்தமரம் பகுதியை சேர்ந்த மாடசாமி (25) ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து சோதனை நடத்தினர். அதில் அவர்களிடம் ரூ. 3,700 மதிப்பிலான சுமார் 9 கிலோ புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் காளைசாமி, மாடசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
- சுரண்டை சிவகுருநாதபுரம் இந்தியன் இளைஞர் சுய உதவி குழுவின் 16-வது ஆண்டு விழா மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் காசோலை, இனிப்பு வழங்கும் விழா நடைபெற்றது
- இந்து நாடார் மகிமை கமிட்டி ஊர் நாட்டாமை தங்கையா நாடார் தலைமை தாங்கினார்.
சுரண்டை:
சுரண்டை சிவகுருநாதபுரம் இந்தியன் இளைஞர் சுய உதவி குழுவின் 16-வது ஆண்டு விழா மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் காசோலை, இனிப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இந்து நாடார் மகிமை கமிட்டி ஊர் நாட்டாமை தங்கையா நாடார் தலைமை தாங்கினார்.
காமராஜர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் பீர்கான், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருள்ஜோதி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கனகராஜ், உதவி தலைமை ஆசிரியர், சுய உதவி குழு தலைவர் கனகராஜ், ஏ.எம்.சமுத்திரம் இந்தியன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக ராஜேஷ்குமார், சங்கர நாராயணன், கண்ணன், ராதாகிருஷ்ணன் வி.ஏ.ஓ., தமிழ்நாடு கிராம வங்கி கிளை மேலாளர் விஷாந்த், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் ரக் ஷித் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திய இளைஞர் சுய உதவி குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏ.எம். சமுத்திரம், மாரியப்பன், ஆறுமுகசாமி, குமரேசன், அய்யப்பன், வேல்முருகன், ஜெயராஜ் ,நாகராஜ் வேலாயுதம், மாரியப்பன், காளிமுத்து, மாடசாமி முருகன், மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஆசிரியர் நாகரத்தினம் நன்றி கூறினார்.
- நாங்கள் குலையநேரி கிராமத்தில் வசித்து வருகிறோம். ஊருக்கு வெளிப்புறமாக சுரண்டை -சங்கரனகோவில் மெயின் ரோட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது
- ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு பஸ் நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரண்டை:
தென்காசி மாவட்ட கலெக்டருக்கு, சுரண்டை அருகே உள்ள குலையநேரி ஊர் பொதுமக்கள் சார்பில் சக்திவேல்ராஜ் என்பவர் ஒரு மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் குலையநேரி கிராமத்தில் வசித்து வருகிறோம். ஊருக்கு வெளிப்புறமாக சுரண்டை -சங்கரனகோவில் மெயின் ரோட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.இங்கு நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு பஸ் நிறுத்தம் இல்லாததால் மக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் இங்கு பிரசித்தி பெற்ற பரும்படி மாடன் கோவிலும். தொழிற்சாலைகளும் அருகில் இருக்கின்றன. அங்கு வரும் பக்தர்கள், தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களும் வெகுதூரம் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இந்த ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு பஸ் நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சுரண்டை நகராட்சி பகுதியில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாமை சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தொடங்கி வைத்தார்.
- ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்தனர்.
சுரண்டை:
சுரண்டை நகராட்சி பகுதியில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாமை சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தொடங்கி வைத்தார்.
சுரண்டை நகராட்சிக்குட்பட்ட சிவகுருநாதபுரம் முப்புடாதி அம்மன் கோவில் வளாகத்திலும், சுரண்டை நகராட்சி அலுவலகத்திலும், சுரண்டை ராஜம் தொடக்கப்பள்ளி வளாகத்திலும், கீழ சுரண்டை இந்து நாடார் திருமண மண்டபத்திலும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்தனர்.
மேலும் தொடர்ந்து சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நகராட்சி தலைவர் வள்ளி முருகனிடம் பொதுமக்கள் வைத்துள்ளனர். நிகழ்ச்சியில் சுரண்டை வருவாய் ஆய்வாளர் கண்ணன், சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், நகர் மன்ற உறுப்பினர்கள் அமுதா சந்திரன், ராஜ்குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் பாலகணேஷ் சங்கர் மற்றும் சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- சுரண்டையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தில் தினமும் நிகழ்ச்சி நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
- சிறந்த போட்டியாளர்களாக 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சுரண்டை:
சுரண்டையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தில் தினமும் நிகழ்ச்சி நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மாணவர்களுக்கான செஸ் போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார்.
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் செஸ் போட்டியை தொடங்கி வைத்தனர்.மொத்தம் 48 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சிறந்த போட்டியாளர்களாக 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அன்பழகன்,நகர நிர்வாகிகள் ஆறுமுகசாமி, சுப்பிரமணியன், பூல் பாண்டியன் சங்கர நயினார், குறுங் காவனம் வெள்ளத்துரை பாண்டியன், வைகை கணேசன்,சசிகுமார், கோமதிநாயகம், டான் கணேசன், கூட்டுறவு கணேசன்,ராஜன்,எழில், சுதன்,மாரிச்செல்வி, ஜோதிடர் இசக்கி மோகன்மகேந்திரன்மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. ஆட்சி தான் இனி தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும்.
- கட்சி பெயரில் உள்ள அண்ணாவை மறந்து விட்டு மோடியிடம் சரணாகதி அடைந்து கிடக்கின்றனர் அ.தி.மு.க.வினர்.
சுரண்டை:
சுரண்டையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார்.வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை, சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் வரவேற்றார்.
கலைஞர் படிப்பகம்
தமிழகத்தில் முதல் முறையாக சோலார் மின்விளக்கு கொடி கம்பத்தில் கலைஞர் படிப்பகம் அமைக்கப் பட்டது.அதை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பொதுக் கூட்டத்தில் பேசிய தாவது:-
தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது
தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்ததாக இதுவரை வரலாறு உள்ளது. தி.மு.க. எமர்ஜென்சியை சந்தித்த இயக்கம்.எந்த காலத்திலும் தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது.இன்று மாவட்ட செயலாளர்களுக்கு பணம் கொடுத்து அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்கள் அவரை ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டார்கள். கட்சி பெயரில் உள்ள அண்ணாவை மறந்து விட்டு மோடியிடம் சரணாகதி அடைந்து கிடக்கின்றனர் அ.தி.மு.க.வினர்.
தி.மு.க. ஆட்சி தான் இனி தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும். உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற உயரிய கொள்கையுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
இலவச பஸ் பயணம்
பெண் குழந்தை களுக்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, மகளிர் சுய உதவி குழுக்களை தோற்றுவித்து கடன் வழங்கியது. உலகமே போற்றும் பொன்னான திட்டமான மகளிருக்கு இலவச பஸ் பயணம் என பெண்களின் வளர்ச்சிக்காக தற்போதைய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த திட்டம் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
தி.மு.க. அரசு பெண் குழந்தைகள் கல்விக்கு பல நல்ல திட்டங்களை செய்து வருகிறது. தி.மு.க. அனைத்து சமுதாய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இயக்கம். திருப்பதி கோவிலுக்கு நிகராக திருச்செந்தூர் கோவில் தரம் உயர்த்தப்படும்
இவ்வாறு அவர் பேசினார்.
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கால்நடை துறை சம்பந்தமாக பல்வேறு கோரிக்கைகளை கொடுத் துள்ளார். கால்நடைத்துறை தொடர்பான அனைத்து கோரிக்கைகளும் தமிழக முதல்-அமைச்சரின் அனுமதி பெற்று விரைவில் செய்து கொடுக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் தலைமைக் கழக பேச்சாளர் சரத் பாலா, கடையநல்லூர் இஸ்மாயில், ஒன்றிய செயலாளர்கள் எம்.பி.எம்.அன்பழகன், சீனித்துரை, வெற்றி விஜயன், பெரியதுரை,அழகு சுந்தரம், செல்லதுரை,ஒன்றிய கவுன்சிலர் வீராணம் சேக் முகம்மது,திமுக நிர்வாகிகள் என்.எஸ். சுப்பிர மணியன்,பூல் பாண்டியன், நகர் மன்ற உறுப்பினர் பரமசிவன், வெள்ளத்துரை பாண்டியன்,வடகரை ராமர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள்,நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானவர் கலந்து கொண்டனர்.






