search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுரண்டை சிவகுருநாதபுரம் இந்தியன் இளைஞர் சுய உதவி குழு சார்பில்  மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
    X

    இந்தியன் இளைஞர் சுய உதவி குழுவின்  ஆண்டு விழா நடைபெற்ற போது எடுத்தபடம்.

    சுரண்டை சிவகுருநாதபுரம் இந்தியன் இளைஞர் சுய உதவி குழு சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

    • சுரண்டை சிவகுருநாதபுரம் இந்தியன் இளைஞர் சுய உதவி குழுவின் 16-வது ஆண்டு விழா மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் காசோலை, இனிப்பு வழங்கும் விழா நடைபெற்றது
    • இந்து நாடார் மகிமை கமிட்டி ஊர் நாட்டாமை தங்கையா நாடார் தலைமை தாங்கினார்.

    சுரண்டை:

    சுரண்டை சிவகுருநாதபுரம் இந்தியன் இளைஞர் சுய உதவி குழுவின் 16-வது ஆண்டு விழா மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் காசோலை, இனிப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இந்து நாடார் மகிமை கமிட்டி ஊர் நாட்டாமை தங்கையா நாடார் தலைமை தாங்கினார்.

    காமராஜர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் பீர்கான், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருள்ஜோதி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கனகராஜ், உதவி தலைமை ஆசிரியர், சுய உதவி குழு தலைவர் கனகராஜ், ஏ.எம்.சமுத்திரம் இந்தியன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக ராஜேஷ்குமார், சங்கர நாராயணன், கண்ணன், ராதாகிருஷ்ணன் வி.ஏ.ஓ., தமிழ்நாடு கிராம வங்கி கிளை மேலாளர் விஷாந்த், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் ரக் ஷித் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திய இளைஞர் சுய உதவி குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏ.எம். சமுத்திரம், மாரியப்பன், ஆறுமுகசாமி, குமரேசன், அய்யப்பன், வேல்முருகன், ஜெயராஜ் ,நாகராஜ் வேலாயுதம், மாரியப்பன், காளிமுத்து, மாடசாமி முருகன், மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஆசிரியர் நாகரத்தினம் நன்றி கூறினார்.

    Next Story
    ×