search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "S.V.Ganesan"

    • சுரண்டை எஸ்.வேலாயுத நாடார் கோமதியம்மாள் அறக்கட்டளை சார்பில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • நற்பணி மன்ற தலைவர் எஸ். வி.கணேசன் தலைமை தாங்கி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார்.

    சுரண்டை:

    தென்காசி மாவட்ட டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம், சுரண்டை எஸ்.வேலாயுத நாடார் கோமதியம்மாள் (எஸ்.வி.ஜி) அறக்கட்டளை சார்பில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் எஸ். வி.கணேசன் தலைமை தாங்கி அலங்கரிக்கப்பட்ட டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.

    சுரண்டை நாடார் வாலிபர் சங்க செயலாளர் ஆர்.வி.ராமர், பொருளாளர் ஜி.எஸ்.எஸ். அண்ணாமலைகனி, துணை செயலாளர் எஸ்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் கே.டி.பாலன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சுரண்டை நகராட்சி தலைவர் எஸ். பி.வள்ளி முருகன் கலந்துகொண்டார்.

    நிகழ்ச்சியில் கவுரவ ஆலோசகர் அனிதாசெல்வன், இந்திய நாடார் பேரமைப்பு தென்காசி மாவட்ட தலைவர் எஸ். ஆனந்த் காசிராஜன், சி.எம்.சங்கர், சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் கை.சேர்மன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முருகன் நன்றி கூறினார்.


    ×