search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையநல்லூர் நகராட்சி பகுதியில்  ரூ.61 லட்சத்தில் வளர்ச்சிப் பணி
    X

    அடிக்கல் நாட்டுவிழாவிற்கு பூஜைகள் நடைபெற்ற காட்சி.


    கடையநல்லூர் நகராட்சி பகுதியில் ரூ.61 லட்சத்தில் வளர்ச்சிப் பணி

    • நகராட்சி பகுதிகளில் ரூ.858 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • அடிக்கல் நாட்டு விழா நகர் மன்ற தலைவர் ஹபிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சி பகுதியில் ரூ.858 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதில் ஒரு பணியாக ரூ.61 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் படி நீர் நிலைகளை புறனமைப்பு செய்யும் வளர்ச்சிப் பணி கடையநல்லூர் 25-வது வார்டு அட்டக்குளம்தெரு பெண்கள்தொழுகைபள்ளி அருகில் உள்ள ஊருணியை தூர்வாரிபராமரிக்கும்பணி, சுற்றுச்சுவர் கட்டும் பணி மற்றும் குளத்தைசுற்றி நடைபயிற்ச்சிக்காக நடைபாதைவசதி அமைக்கும் பணியினை ரூ.61 லட்சம் செலவில் மேற்கொள்ள அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் ஹபிபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

    நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் கூட்டுறவு சங்க தலைவருமான செல்லத்துரை சிறப்பு விருந்தினராக பங்கேற்று பூமி பூஜையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இளநிலை உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் தி.மு.க. நகர செயலாளர் அப்பாஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் செய்யது மசூது, தி.மு.க. வார்டு செயலாளர் காஜா முகையதீன், கிளை பிரதிநிதி அகமது அலி, நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் மூவண்ண மசூது, கவுன்சிலர்கள் முகைதீன் கனி, முருகன், திவான் மைதீன், அமைப்புச் செயலாளர் கருப்பன், மாணவரணி மணிகண்டன், மாவட்டதொண்டர்அணி அமைப்பாளர் இசக்கிபாண்டியன், மற்றும் காவா அறக்கட்டளை நிர்வாகிகள் ஹெவன்ஸ்டார், உடன்பிறப்புகள் தி.மு.க. மற்றும் முஸ்லீம் லீக் நிர்வாகிகள் தகவல் தொழில்நுட்ப அணி ஜாகிர் உசேன், வேலுச்சாமி, பாப்பா, அரசு ஒப்பந்ததாரர் அருணாசலம் செட்டியார், செல்வம், வார்டு பெரியவர்கள், ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×