search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Milk"

    • ஒரு வயதுக்குப் பிறகு குழந்தைக்கு பதப்படுத்தப்பட்ட பால் கொடுக்கலாம்.
    • குழந்தைக்கு செயற்கை பால் கொடுக்க வேண்டாம்.

    குழந்தைகள் பிறந்தது முதல் ஆறு மாத காலத்துக்கு வெறும் தாய்ப்பால் மட்டுமே போதுமானது. 6 முதல் 12 மாதக் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து பிற உணவுகளையும் பழக்க ஆரம்பிக்கலாம்.

    தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டிய பருவத்தில், ஒருவேளை தாய்க்கு போதிய அளவு பால் சுரப்பு இல்லாவிட்டால் மருத்துவரை ஆலோசித்தே முடிவு செய்ய வேண்டும். நீங்களாக குழந்தைக்கு செயற்கை பால் கொடுக்க ஆரம்பிக்க வேண்டாம்.

    ஒரு வயதுக்குப் பிறகு குழந்தைக்கு பதப்படுத்தப்பட்ட பால் கொடுக்க ஆரம்பிக்கலாம். 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு முழு கொழுப்புச்சத்துள்ள பால் கொடுக்கலாம்.

    பசும்பால் கொடுப்பதாக இருந்தால் குழந்தைக்கு ஒரு வயது முடிந்த பிறகுதான் தொடங்க வேண்டும். ஆவின் பால் கொடுப்பதாக இருந்தால் அதில் ஆரஞ்சு நிற பாக்கெட்டில் வரும் பால் குழந்தைகளுக்கு ஏற்றது. அதில் ஃபுல் க்ரீம் இருக்கும். அதில் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. அப்படியே காய்ச்சி ஆறவைத்துக் கொடுக்கலாம்.

    குழந்தைக்கு ஒரு நாளைக்கு 400 மில்லி அளவு வரை பால் கொடுக்கலாம். அந்த அளவைத் தாண்டும்போது குழந்தைக்கு மலச்சிக்கல் வர வாய்ப்புண்டு. இது 5 வயது வரையிலான குழந்தைகளுக்குப் பொருந்தும். அந்த வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு ஆவினின் பச்சை நிற பாக்கெட் பால், அதன் பிறகு, நீல நிற பாக்கெட் என மாற்றலாம்.

    • கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
    • சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை வகித்தாா்.

    திருப்பூர் :

    திருப்பூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை வகித்தாா். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.ஆா்.மதுசூதனன், செயலாளா் ஆா்.குமாா் ஆகியோா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    கால்நடை தீவனங்களான பருத்திக் கொட்டை, தவிடு, பிண்ணாக்கு உள்ளிட்டவற்றின் விலை அண்மையில் கடுமையாக உயா்ந்துள்ளது. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலுக்கான கொள்முதல் விலையை ஆவின் நிறுவனம் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு உயா்த்தியது. இந்த நிலையில், ஆவின் நிறுவனத்துக்கு பால் ஊற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலுக்கான கொள்முதல் விலையை உயா்த்திக் கொடுக்கக் கோரி ஆங்காங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பசும்பால் லிட்டருக்கு ரூ.42, எறுமைப்பால் லிட்டருக்கு ரூ.51 கொள்முதல் விலையாக நிா்ணயித்து ஆவின் நிறுவனம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கூட்டத்தில் வட்டாட்சியா்கள் ராஜேஷ், கனகராஜ், கோவிந்தராஜ், சைலஜா உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

    • துலாம் மாத தேய்பிறையில் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிக சிறப்பானது.
    • மற்ற சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்தை விட மும்மடங்கு பலன்களை தரும் என்பது ஐதீகம்.

    தஞ்சாவூர்:

    ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்பதால் துலாம் மாத தேய்பிறையில் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிக சிறப்பானது.

    மற்ற சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்தை விட மும்மடங்கு பலன்களை தரும் என்பது ஐதீகம்.

    அதன்படி நேற்று ஐப்பசி மாத சனி பிரதோ ஷம் என்பதால் தஞ்சை பெரிய கோவிலில்உள்ள மகா நந்திக்கு மஞ்சள், பால், சந்தனம், தயிர், விபூதி உள்ளிட்ட மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெ ற்றது.

    தொடர்ந்துநந்தி, பெருவுடையார், பெரி யநாயகி அம்மன் ஆகியோ ருக்கு தீபாராதனைகாண்பி க்கப்பட்டது. இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சேலம் மாவட்டத்திற்கு ஒரு ஆதிதிராவிடர் மகளிர் மற்றும் ஒரு பழங்குடியின மகளிருக்கு தலா ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • இதில் சேலம் மாவட்டத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தலா ஒரு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு மானியம் ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது.

    சேலம்:

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 50 உறுப்பினர்களைக் கொண்ட மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்க சேலம் மாவட்டத்திற்கு ஒரு ஆதிதிராவிடர் மகளிர் மற்றும் ஒரு பழங்குடியின மகளிருக்கு தலா ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரின் அறிவிப்பில், 36 ஆதி திராவிடர்களுக்கும், 4 பழங்குடியினருக்கும் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத்தி ட்டத்தின் கீழ் 50 உறுப்பினர் களைக் கொண்ட மகளிர் கூட்டு றவு பால் உற்பத்தி யாளர் கூட்டுறவுச் சங்கங்கள் அமைத்திட ஆணையிடப் பட்டுள்ளது.

    இதில் சேலம் மாவட்டத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தலா ஒரு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு மானியம் ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கறவை மாடு வைத்துள்ள மற்றும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினராக உள்ள மகளிர் இத்திட்டத்தில் பயன் பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் பயனாளிகள் https://application.tahdco.com என்ற இணையதளத்திலும், பழங்குடியினர் பயனாளிகள் https://fast.tahdco.com, https://fast.tahdco.com, ://fast.tahdco.com, https://fast.tahdco.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • காங்கயம் இன காளைகள் ஜல்லிக்கட்டிகளில் பிடிபடாத வீரத்திற்கு பெயர் பெற்றவை.
    • பாலுக்கு தனி கிராக்கி ஏற்பட்டுள்ளது, ஒரு லிட்டர் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    காங்கயம் :

    காங்கயம் என்றாலே நம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது காங்கயம் இன பசு மாடுகளும், காளைகளும் தான். காங்கயம் பகுதியை பூர்வீகமாக கொண்டு தோன்றியதால் ஊரின் பெயரிலேயே இந்த இன மாடுகள் அழைக்கப் படுகின்றன.கரிய நிறம், கூரான கொம்புகள், கம்பீரமான உடலமைப்பு, மலை போன்ற திமில்களுடன் காட்சியளிக்கும் காங்கயம் இன காளைகள் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டிகளில் பிடிபடாத வீரத்திற்கு பெயர் பெற்றவை. எருதுகள் சுமார் நான்கு டன் அளவிலான பாரத்தை சாதாரணமாக இழுக்கும் ஆற்றலுடையவை. அதே போல குறைவான தீவனத்தை உண்டு சத்தான பாலைத்தரும் காங்கயம் இன பசுக்களை கொங்கு மண்டல பகுதிகளில் திருமணம் முடித்து செல்லும் பெண்களுக்கு தாய்வீட்டு சீதனமாக தருவது பாரம்பரியமான மரபாக உள்ளது.

    பாலில் இருந்து ஏராளமான உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இதனால் அன்றாடம் நாம் பயன்படுத்தப்படும் உணவில் பால் ஒரு பகுதியாக உள்ளது. சுத்தமான பால் கிடைப்பதில்லை என சிலர் மாடுகளில் இருந்து பால் கறக்கும் இடத்திற்கே சென்று பால் வாங்கி கொண்டு செல்கின்றனர். காங்கயம் இன மாட்டு பால் உடலுக்கு கேடு விளைவிக்காத ஏ2 ரகத்தை சேர்ந்தது. இதனால் இந்த பாலுக்கு தனி கிராக்கி ஏற்பட்டுள்ளது, ஒரு லிட்டர் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    ஐரோப்பா ,அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் சாதரண பாலுக்கும், ஏ2 ரக பாலுக்கும் அதிக விலை வித்தியாசம் உள்ளது. அங்குள்ள பல்பொருள் அங்காடிகளில் ஏ2 ரக பாலுக்கு கிராக்கி உள்ளது. இதன் காரணமாக அந்நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பிரேசில், அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏ2 ரக பாலை இறக்குமதி செய்கின்றன. திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் காங்கயம் இன மாடுகள் தற்போது அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது மேற்கண்ட மாவட்டங்களில் கொரங்காடுகள் என அழைக்கப்படும் மானாவாரி நிலங்களில் வளரும் கொழுக்கட்டை புல் வகையாகும்.

    இந்த புல் கோடை காலங்களில் முழுவதும் காய்ந்து விடும். பின் மழை பெய்யும்போது நன்கு வளர்ந்து வரும். இதை உணவாக உட்கொள்ளும் மாடுகள், அதிக திடகாத்திரமாக உள்ளது. காரணம் இந்த புற்களில் இருந்து கால்சியம், மக்னீசியம், உள்ளிட்ட பல நுண் சத்துக்கள் இப்புல்லில் இருப்பதால் இதிலிருந்து கிடைக்கும் பால் அதிக சத்தானதாக உள்ளது. இதனால் தான் நாட்டு மாட்டு பாலுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. தற்போது மக்கள் இயற்கை சார்ந்து பொருட்கள் வாங்கி பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனால் காங்கயம் இன நாட்டு மாட்டு பால் தேவையும் அதிகரித்து வருகிறது.

    அருகாமை மாவட்டமான ஈரோடு மாவட்டத்தில் பர்கூர் நாட்டு மாட்டின பால் சேகரிப்பு மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையம் அமைத்துள்ளது. இதன் மூலம் நாட்டு மாட்டு பால் சேகரிக்கப்பட்டு பதப்படுத்தி கண்ணாடி குடுவைகளில் அடைக்கப்பட்டு ஈரோடு, கோவை, மைசூர் போன்ற நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இது போல், திருப்பூர் மாவட்ட, ஆவின் நிர்வாகத்தின் சார்பில் காங்கயம் மாடுகள் அதிக செரிவுள்ள பகுதியாக விளங்கும் காங்கயம், வெள்ளகோவில் முத்தூர்,தாராபுரம்,ஊத்துக்குளி பகுதிகளில் மேற்கண்ட ஏதேனும் ஒரு பகுதியில் காங்கயம் நாட்டு மாட்டு பால் சேகரிப்பு மற்றும் விற்பனை மையத்தினை துவங்கினால் அது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெரும் என்பதில் ஐயம் இல்லை. ஏனெனில் தற்போது குழங்தைகளுக்கு நாட்டு மாட்டு பால் தரும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதற்காக பால் கிடைக்கும் இடங்களுக்கு சென்று வாங்கி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இது குறித்து பாப்பினி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில்:- தற்போது இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறி உள்ளிட்ட பொருட்களை மக்கள் அதிகம் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இது போல் நகர பகுதிகளில் நாட்டு மாட்டு பால் கிடைப்பது அரிதான ஒன்றாகும். எனவே காங்கயம் நாட்டு மாட்டு பால் தேவை உள்ளோருக்கு வழங்கும் வகையிலும், விவசாயிகளிடையே இவ்வின மாடுகளை அதிக அளவில் வளர்க்கும் நோக்கில் விற்பனை மையத்தை அமைத்து கண்ணாடி குடுவைகளில் அடைத்து திருப்பூர் போன்ற நகரங்களுக்கு அனுப்பினால் நல்ல விலை கிடைக்கும்.

    விவசாயிகளிடம் இருந்து நாட்டு மாட்டு பால் உற்பத்தியும் பெருகும். மக்களுக்கு தரமான பால் கிடைக்கும். நாட்டு மாட்டு பால் தேவைப்படுவோர் மையத்தில் சென்று தரமான பாலை வாங்கி பயன்படுத்த முடியும். அதே நேரத்தில் கூட்டுறவு சங்கத்திற்கும் வருவாய் கிடைக்கும். கூட்டுறவு சங்கம் தோற்றுவித்ததற்கான நோக்கத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் திருப்பூர் ஆவின் நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர் பார்க்கின்றனர்.

    வறட்சியான பகுதியில் மட்டுமே வளர்க்கப்பட்டு வரும் காங்கயம் இன பசுமாடுகள் மற்றும் காளைகள் அப்பகுதியில் கிடைக்கும் தீவினங்களை உண்டு வருவதால் இந்த பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப காங்கயம் கால்நடைகள் தங்களை தகவமைத்து கொள்வதால், காங்கயம் நாட்டுமாட்டு பால் எந்த காலநிலையிலும் எந்த வயதினரும் அருந்தும் வகையில் உள்ளது. இதன் தேவையை கருதி கால்நடைதுறையும் முன்முயற்சி எடுத்து பால் கொள்முதல் நிலையம் அமைக்க ஊக்குவிப்பு செய்ய வேண்டும் என்கின்றனர் அப்பகுதி விவசாயிகள். 

    • கலெக்டர் மற்றும் பிற துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
    • பள்ளியை தரம் உயா்த்தும் வழிமுறைகள் குறித்து கலந்துரையாடினாா்.

    ஊட்டி

    ஊட்டி அருகே உள்ள பாகல்கோடுமந்து பழங்குடியின கிராமத்தில் கட்டப்படும் பழங்குடியினருக்கான பால் பதனிடும் நிலையத்தை தமிழக பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் அண்ணாதுரை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

    முன்னதாக தேவாலா அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட உயா்நிலைப் பள்ளியை ஆய்வு செய்து, அங்குள்ள பெற்றோா்ஆ சிரியா் கழக உறுப்பினா்களை சந்தித்து அப்பள்ளியை மேலும் தரம் உயா்த்தும் வழிமுறைகள் குறித்து கலந்துரையாடினாா்.

    இதனையடுத்து பந்தலூா் வட்டத்தில் புதிய வீடுகள் கோரிய பழங்குடியின கிராமங்களான 10-ம் நம்பா் காலனி, ஏலமன்னா ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.

    பின்னா் மாவட்ட கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மற்றும் பிற துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பழங்குடியின மக்களுக்கு வன உரிமை வழங்குவது, அவா்களுக்கு வீடு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது தொடா்பாக ஆலோசனைகளை வழங்கினாா்.

    இதற்கு முன்னதாக வழங்கப்பட்ட பழங்குடியின வீடுகளுக்கு வழங்கப்பட்ட தொகையைவிட தற்போது வழங்கப்படும் வீடுகளுக்கு கூடுதலாக தொகை வழங்கப்படும் எனவும், அத்துடன் பணி முடிக்காமல் நிலுவையில் உள்ள வீடுகளுக்குத் தேவையான முன்மொழிவுகள் அனுப்பும் பட்சத்தில் கூடுதலாக தொகைப் பெற்றுத் தருவதாகவும் உறுதி அளித்தாா்.

    கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் அம்ரித், மாவட்ட வன அலுவலா் சச்சின் போஸ்லே துக்காரம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயராமன், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் அருண்குமாா், கூடலூா் வருவாய் கோட்டாட்சியா் சரவண கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். 

    • இயற்கை உணவு வகைகள் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
    • உடுமலை பகுதியில் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கும் உதவி செய்து வருகிறார்.

    உடுமலை :

    உடுமலை வ. உ. சி. வீதியில் செயல்பட்டு வருகிறது ஆராதனா கபே. இங்கு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நாள்தோறும் இயற்கை உணவு வகைகள் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்த கடையின் உரிமையாளர் செல்வகுமார் அவரது மனைவி ஸ்ரீ சத்யா இருவரும் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர்.

    ஸ்ரீ சத்யா அனாதை பிணங்களை அடக்கம் செய்வதற்கு தொண்டு நிறுவனங்களுக்கு உதவி வருகிறார். மேலும் அனாதை பிணங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் வருகிறார். மேலும் உடுமலை பகுதியில் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கும் உதவி செய்து வருகிறார். கொரோனா காலங்களில் இலவச முக கவசம், சானிடைசர் போன்றவற்றை தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வழங்கி சேவை புரிந்துள்ளார்.

    வாடிக்கையாளர்களின் உடல் நலனை பேணிக்காக்கும் வகையில் இவர்கள் நடத்தி வரும் மினி ரெஸ்டாரண்டில் மாட்டுப்பால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கிருமி நாசினி மூலம் கைகள் சுத்தப்படுத்தபட்ட பின்னரே கடைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு ஒத்துக்கொள்ளாத உணவு வகைகளை விற்பனை செய்வதில்லை என்ற குறிக்கோளுடன் தன்னலம் பாராமல் செய்துவருகின்றனர். இவர்களின் சேவையில் மற்றொரு மைல் கல்லாக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆண்டு முழுவதும் இலவசமாக பால் வழங்கும் திட்டத்தை துவக்கி இன்றுவரை செயல்படுத்தி வருகிறார்கள். ஸ்ரீசத்யாவின் சேவையை தாய்மார்கள் பாராட்டி வருகின்றனர்.  

    • விவசாயத்தை மட்டும் நம்பி உள்ளோர் நிலையான வருமானம் இல்லாமல் தவிக்கின்றனர்.
    • கால்நடை தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் பலர் கறவை மாடுகளை வளர்த்து வருகின்றனர். பால் கொள்முதல் விலை கட்டுபடியாகாததால் பால் உற்பத்தியாளர்கள் சிரமப்படுகின்றனர்.விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைப்பதில்லை. பூச்சி மருந்து, உரம் விலையும், தொழிலாளர்களுக்கான கூலியும் உயர்ந்து விட்டது.நிலத்தடி நீர்மட்டமும் பாதாளத்திற்கு சென்றுவிட்டது.

    விவசாயத்தை மட்டும் நம்பி உள்ளோர் நிலையான வருமானம் இல்லாமல் தவிக்கின்றனர்.கூடுதல் வருமானத்திற்காக பெரும்பாலான தோட்டங்களில் கறவை மாடுகள் வளர்த்து வருகின்றனர். தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், பால் உற்பத்தி கட்டுப்படியாவதில்லை என்கின்றனர் விவசாயிகள்.

    தமிழக அரசு 4.3 சதவீத கொழுப்பு சத்தும், 8.2 சதவீத புரதச் சத்தும் கொண்ட பாலுக்கு ஒரு லிட்டருக்கு 32 ரூபாய் அறிவித்துள்ளது. ஆனால், விவசாயிகளுக்கு ஒரு லிட்டருக்கு 29 முதல் 30 ரூபாய் தான் கிடைக்கிறது.கலப்பு தீவனம் கிலோ 24 ரூபாயாக உயர்ந்துள்ளது. பருத்தி, புண்ணாக்கு கிலோ 50 ரூபாயாகவும், சோளத்தட்டு, வைக்கோல், மக்காச்சோளம் ஆகியவற்றின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

    இத்துடன் தொழிலாளர்களுக்கான கூலி, பராமரிப்பு செலவு பல மடங்கு உயர்ந்துள்ளது. எனினும் அரசு ஆவின் கொள்முதல் விலையை பல ஆண்டுகளாக உயர்த்தவில்லை. விளை பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை இல்லாததால் சிரமமான நிலையில் பால் உற்பத்தி மட்டுமே வாழ்வாதாரத்திற்கு உதவியாக உள்ளது.தற்போது தீவன விலை உயர்வால் பால் உற்பத்தியும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. அரசு மாட்டுப்பால் ஒரு லிட்டருக்கு 45 ரூபாய் வழங்க வேண்டும். கால்நடை தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும்.விவசாயிகளின் தோட்டங்களுக்கே வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லா விட்டால் பலரும் கறவை மாடுகளை விற்கும் நிலை ஏற்பட்டு விடும் என்கின்றனர் விவசாயிகள்.

    • வல்லவ விநாயகர் கோவில் மண்டலாபிஷேகம் நடைபெற்றது.
    • மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர் மற்றும் நாக தேவதைகளுக்கு உள்பட சாமிகளுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் 450 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வல்லவ விநாயகர் ஆலயத்தில் மண்டலாபிஷேகம் நடைபெற்றது.

    மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர் வல்லப விநாயகர், பானலிங்க விஸ்வேஸ்வரர் சமேத விசாலட்சி அம்மன், வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியர், ஸ்ரீ மகா காலபைரவர், நவகிரகங்கள் மற்றும் நாக தேவதைகளுக்கு பால் தயிர் பன்னீர் இளநீர் சந்தனம் மஞ்சள் திருமஞ்சனம் பஞ்சாமிர்தம் தேன் விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா முடிவில் அனைவருக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாட்டினை வல்லப விநாயகர் கோவில் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • சித்தோடு ஆவின் பால் பண்ணை முன்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட பவானி, சித்தோடு, கவுந்தப்பாடி உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    சித்தோடு:

    சித்தோடு ஆவின் பால் பண்ணை முன்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் சார்பில் ஈரோடு மாவட்டம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் ராஜு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒரு லிட்டர் பசும் பாலுக்கு விலை ரூ. 42 ஆகவும், எருமைப் பாலுக்கு ரூ. 51 ஆகவும் ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்வு வழங்கிட வேண்டும்.

    சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி சங்கங்களில் பரிசோதிக்கப்பட்ட பாலின் தரம் மற்றும் அளவுகள் அடிப்படையில் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் கலந்து கொண்ட மாநில தலைவர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:

    2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பால் விலை உயர்த்தி வழங்கப்பட்டது.கொரோனா காலத்தில் போராட்டம் நடத்த எங்களால் முடியவில்லை.

    எங்களின் கோரிக்கைகளை புதிய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம்.அதன் அடிப்படையில் பசும்பால் மற்றும் எருமைப்பால் ஆகியவற்றின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.

    பால் கொள்முதல் செய்யும் இடத்தில் சங்கங்களின் சங்க பணியாளர்கள் ஒப்புகை சீட்டு வழங்கி தான் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

    பால் கொள்முதல் செய்யும் பொழுது பாலின் தரம் அளவு ஆகியவை அளவீடு செய்யப்படுகிறது. ஆனால் பாலின் அளவு மற்றும் தரம் குறைவதாக காரணம் கூறி பால் பணம் குறைத்து தருகின்றனர்.

    2016 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு படி சங்கங்களில் பரிசோதிக்கப்பட்ட பாலின் தரம் மற்றும் அளவுகள் அடிப்படையில் பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் கவனர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட பவானி, சித்தோடு, கவுந்தப்பாடி உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு சத்துணவுடன் பால் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
    சென்னை:

    கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கூடங்களில் மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. காலப்போக்கில் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது.

    தற்போது பள்ளியில் சத்துணவில் 13 வகையான உணவுகள் வழங்கப்படுகிறது. முட்டையும் வழங்கப்படுகிறது.

    1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு தினமும் காலையில ஒரு கப் பால் வழங்கலாமா என்று அரசு பரிசீலித்து வருகிறது.

    பாலில் கால்சியம் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவைகள் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு நல்லது. எனவே சத்துணவில் காய்கறிகள் முட்டை இவற்றுடன் தினமும் காலையில் ஒரு கப் பால் வழங்குவது பற்றி யோசித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இதே திட்டம் பரிசீலிக்கப்பட்டு நடைமுறை சிக்கல்களை காரணம் காட்டி கைவிடப்பட்டது.

    இப்போது மீண்டும் பால் வழங்கும் திட்டம் பரிசீலிக்கப்படுகிறது. நடைமுறையில் பாலை கெடாமல் பாதுகாப்பது சிரமமாக இருக்கும்.



    எனவே பால் பவுடரை வாங்கி கலந்து கொடுக்கலாமா என்று ஆலோசிக்கிறார்கள். இதிலும் கொள்முதல், முறையாக வழங்கப்படுகிறதா என்ற கண்காணிப்பு அவசியம்.

    எனவே பால் வழங்குவதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களையும் அதை களைந்து இந்த திட்டத்தை நிறைவேற்றுவது பற்றியும் பரிசீலித்து வருகிறார்கள்.
    ×