search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உற்பத்தியாளர்கள்"

    • இத்தொழில் மூலம் 30 ஆயிரம் போ் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா்.
    • விசைத்தறி தொழில் பயிற்சி அளிப்பது போல காகித அட்டைப்பெட்டி தொழில் பயிற்சி அளித்து வேலைக்கு ஆட்களை தயாா் செய்ய வேண்டும்.

    திருப்பூர்:

    கோவை மண்டல தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தலைவா் சிவகுமாா் நிருபர்களிடம் கூறியதாவது:- கோவை மண்டலத்தில் திருப்பூா், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், கரூா், சேலம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இதில் 700 அட்டைப்பெட்டி தயாரிப்பு உற்பத்திக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இத்தொழில் மூலம் 30 ஆயிரம் போ் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா். தினசரி ரூ. 3.5 கோடி மதிப்பிலான அட்டைப்பெட்டி உற்பத்தி செய்யப்படுகிறது. மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். காகிதத்துக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி உள்ளது. ஆனால் காகித அட்டைப்பெட்டிக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி உள்ளது. இதனை 12 சதவீதமாக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விசைத்தறி தொழில் பயிற்சி அளிப்பது போல காகித அட்டைப்பெட்டி தொழில் பயிற்சி அளித்து வேலைக்கு ஆட்களை தயாா் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஏற்றுமதி வரி சலுகை அளிப்பதோடு வெளிநாட்டில் இருந்து ஆா்டா்கள் கிடைக்க மத்திய அரசின் தொழில் துறை உதவ வேண்டும். காகித அட்டைப்பெட்டி தொழில் மேம்பாடு அடைய சா்வதேச அளவிலான கண்காட்சிகளை மத்திய அரசு நடத்த வேண்டும். காகித அட்டைப்பெட்டி தயாரித்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் பொருளாதாரம் மேம்பாடும் வகையில் மத்திய, மாநில அமைச்சா்கள், அரசு உயா் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிக்கவுள்ளேன் என்றாா்.

    • தரிசு நிலங்களிலும், வரப்புகளிலும், ரோட்டோரங்களிலும் புளியமரங்கள் அதிக அளவு பராமரிக்கப்படுகிறது.
    • புளி கிலோ 70 ரூபாய்க்கே கொள்முதல் செய்கின்றனர்.

    உடுமலை :

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் தரிசு நிலங்களிலும், வரப்புகளிலும், ரோட்டோரங்களிலும் புளியமரங்கள் அதிக அளவு பராமரிக்கப்படுகிறது. கோடை காலம் துவங்கியதும் புளியம் பழங்கள் அறுவடையை மேற்கொள்கின்றனர். ரோட்டோரத்திலுள்ள மரங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பிலும் தரிசு நிலங்களிலுள்ள மரங்களில் புளியம்பழம் பறிக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினரும் ஏலம் விடுகின்றனர்.

    இவ்வாறு பறிக்கப்படும் புளியம்பழங்களில் இருந்த ஓடு மற்றும் விதைகளை பிரித்து சுத்தியலில் தட்டி மதிப்பு கூட்டி விற்பனை செய்கின்றனர்.தளி பகுதியில் இப்பணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஈடுபடுகின்றனர். இந்தாண்டு அறுவடை முடிந்துள்ள நிலையில் புளியின் விலை சரிந்துள்ளது.

    இது குறித்து உற்பத்தியாளர்கள் கூறுகையில், வழக்கமாக, புளி கிலோவுக்கு 100 ரூபாய் வரை விலை கிடைக்கும். தற்போது 70 ரூபாய்க்கே கொள்முதல் செய்கின்றனர். பிற மாநில வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலை குறைந்துள்ளது என்றனர்.

    • தமிழகத்தில் 8,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர்.
    • தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு 2,000 கோடிக்கு அன்னிய செலவாணி ஈட்டப்படுகிறது.

     உடுமலை :

    இந்தியாவில் 14 மாநிலங்களில் 23 ஆயிரத்து க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. தமிழகத்தில் 8,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் 10 லட்சத்துக்கும் அதிகமா னோர் பணிபுரிகின்றனர். தமிழகத்தில் இருந்து 125 நாடுகளுக்கு 250க்கும் மேற்பட்ட தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு 2,000 கோடிக்கு அன்னிய செலவாணி ஈட்டப்படுகிறது. தவிர நாட்டில் 30 மாநிலங்களுக்கு உள்நாட்டு தேவைக்காக இப்பொருட்கள் விற்கப்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக உலகப்பொ ருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்சினைகளால் இத்தொழில்மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளை வகைப்பாட்டிலில் இருந்து ஆரஞ்சு பிரிவுக்கு மாற்ற ப்பட்டதால் தொழில் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து உடுமலை தென்னை நார் உற்பத்தி யாளர்கள் கூறியதாவது:- தென்னை நார் தொழிலால் மாசு ஏற்ப டுவதாக டில்லி பசுமை தீர்ப்பாயத்தில் சிலர் மனு தாக்கல் செய்தனர். அதன் பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டது. அதில் வெள்ளை வகைப்பாட்டில் இருந்த தொழில் ஆரஞ்சுக்கு மாற்றப்பட்டது. இதற்கான நோட்டீஸ்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வாயிலாக வழங்கப்பட்டது.

    பழைய முறைப்படியே வெள்ளை வகைப்பா ட்டுக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும்பாதிப்புகள் குறித்து அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளோம். அவர்களும் முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்றுநடவடிக்கை எடுப்பதாக உறுதியளி த்துள்ளனர். இந்நிலையில் உண்மைக்குமாறான தகவல்களை யாரும் பரப்பவேண்டாம்.இவ்வாறுஅவர்கள் தெரிவித்தனர்.'டான் காயர்' ஆலோசனைக்குழு உறுப்பினர் கவுதமன் கூறுகையில், ''உண்மைக்கு மாறான தகவல்கள் பரவி வருகின்றன. வெள்ளை வகைப்பாட்டுக்கு மாற்ற வேண்டுமென அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. தென்னை நார் இயற்கையாக உண்டாகக்கூடிய பொருள். எவ்வித கெமிக்கலும் சேர்ப்பதில்லை. இதனால் எந்த பாதிப்பும் இல்லை. மின் கட்டணத்தை ஒரே நேரத்தில் உயர்த்துவதால் தொழில் பாதிக்கப்படுகிறது. இது குறித்து அரசு ஆலோசித்து தொழில் மேம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • ஓவர் டைம் நேரத்தை 115 மணி நேரமாக அனுமதிக்க வேண்டும்.
    • பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு 55 சதவீதம் இருக்கிறது

    திருப்பூர் :

    ஜவுளித்தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக்கொள்கை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக மாநில அளவில் இயங்கும் தொழில் அமைப்பு பிரதிநிதிகளை அழைத்து சென்னையில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஒட்டுமொத்த பின்னலாடை தொழிலில் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்கும் வகையில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் இக்கூட்டத்தில் பல்வேறு கோரி க்கைகள் முன்வைக்கப்பட்டன.

    பின்னலாடை நிறுவனத் தொழிலாளர்கள் ஓவர் டைம் வேலை பார்த்து, கூடுதல் வருவாய் ஈட்டுவதை பெரிதும் விரும்புகின்றனர். தொழிலாளர் தயாராக இருந்தும், தொழிற்சாலைகள் உரிய ஏற்பாடுகளை செய்தாலும், சட்ட விதிமுறைகள் முட்டுக்கட்டையாக இருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி ஒரு காலாண்டில் 75 மணி நேரம் ஓவர் டைம் வேலை பார்க்க அனுமதிக்கப்படுகிறது.உற்பத்தியை குறித்த நேரத்தில் முடிக்கவும், தொழிலாளர் கூடுதல் வருவாய் பெறவும் வசதியாக ஓவர் டைம் நேரத்தை 115 மணி நேரமாக அனுமதிக்க வேண்டும். மகாராஷ்டிராவில் இத்தகைய நடைமுறை 2015 முதல் அமலில் உள்ளதால் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

    பின்னலாடை தொழிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தொழிலாளர் வருகின்றனர். திறன் பயிற்சி பெற்ற தொழிலாளரால் உற்பத்தியை நேர்த்தியாக முடிக்க முடியும். அரசு திட்டங்கள் வாயிலாக, தொழிலாளர், தொழில் முனைவோர் திறன் பயிற்சி திட்டங்களை விரிவாக்கம் செய்ய வேண்டும். தேவையான தங்குமிட வசதியை உருவாக்க வேண்டும். ஏற்றுமதி நிறுவனங்கள் 60 கி.மீ., தொலைவு வரையில், பஸ் இயக்கி தொழிலாளர்களை அழைத்து வருகின்றன. இதனால் ஒட்டுமொத்த உற்பத்தி செலவு எகிறிவிடுகிறது. தமிழக அரசின் போக்குவரத்துக்கழகம், தொழிலாளர் வந்து செல்லும் வழித்தடங்களை கணக்கிட்டு காலை மற்றும் மாலை நேரத்துக்கு மட்டும் பதிவு செய்த தொழிலாளருக்காக சிறப்பு பஸ் இயக்கினால் போக்குவரத்து கழகத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். தொழில்துறையினரின் செலவுகளும் கட்டுக்குள் வரும். அதாவது வாடகை வாகனங்கள் போல் போக்குவரத்து கழகமே இயக்க திட்டமிடலாம்.

    பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கான தொழில்நுட்பங்களை அமல்படுத்த வசதியாக திருப்பூரில் ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும். செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி, உப்பு குறைவாக பயன்படுத்தி சாயமிடுவது,உப்பு இல்லாமல் சாயமிடுவது, குறைந்த தண்ணீரை பயன்படுத்தி சாயமிடுவது போன்ற தொழில்நுட்பங்களை கண்டறிய வேண்டும். சென்னையில் தோல் பொருட்களுக்கான ஆய்வுக்கூடம் இருப்பது போல் திருப்பூரில் பின்னலாடைக்கான ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும்.

    மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகை திட்டங்களை செயல்படுத்துகின்றன. தமிழகத்தில் மத்திய அரசு சலுகை பெறுவோருக்கு மாநில அரசு சலுகை கிடைப்பதில்லை. ஒடிசா, குஜராத், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநில அரசுகள் மத்திய அரசு சலுகை பெறுவோருக்கு மாநில அரசின் திட்டங்களிலும் சலுகை வழங்குகிறது. தொழில்துறை மேம்பட எவ்வித நிபந்தனையும் இல்லாமல் மத்திய, மாநில அரசு சலுகை திட்டங்களால் பயன்பெறும் வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

    சாயக்கழிவை சுத்திகரிக்கும் ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்துக்கு சாய ஆலைகள் அதிகப்படியாக செலவளிக்கின்றன. பொது சுத்திகரிப்பு நிலையம், தனியார் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அதிக செலவு ஏற்படுகிறது. மின் கட்டண உயர்வால் உற்பத்தி செலவில் பெரும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. அடுத்தகட்டத்துக்கு நகர வட்டியில்லா கடன் உதவி அவசியம். மின்கட்டணம் கழுத்தை நெரிப்பதாக இருப்பதால் 75 சதவீத கட்டண சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு 55 சதவீதம், பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய ஊன்று கோளாக இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் தொழில் பூங்காக்களை உருவாக்கி கூடுதல் உற்பத்தி திறனை பெற வழிவகை செய்கின்றன. சர்வதேச கண்காட்சிகளில் திருப்பூர் நிறுவனங்கள் பங்கேற்றால் மட்டுமே புதிய வர்த்தக வாய்ப்புகளை வசப்படுத்த முடியும். எனவே அதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஜவுளித்தொழிலை மேம்படுத்த புதிய ரகங்களை கொண்டு வர பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் நடந்தது. இதன் ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறியதாவது:- திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள், 30 ஆயிரத்துக்கும் அதிகமான தானியங்கி தறிகள் உள்ளன.தினமும் ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தியாகின்றன. இந்தியாவில் 70 சதவீத காட்டன் துணி உற்பத்தி திருப்பூர், கோவை மாவட்டங்களில் நடந்து வருகிறது. 60 சதவீத ஸ்பின்னிங் மில்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன. ரேயான், பாலி காட்டன், பாலி விஸ்கோஸ் உள்ளிட்டவை உற்பத்தியாகின்றன.

    புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய ரகங்களை அறிமுகப்படுத்தி தொழிலை மேம்படுத்த திட்டம் உள்ளது. இதற்காக விரைவில் தனியாக அலுவலகம் அமைத்து, அதற்கான பணியாளர்கள் நியமிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் தொழில்நுட்பம் சார்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன் உற்பத்தியும் பெருகும்.இங்கு உற்பத்தியாகும் துணிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமன்றி ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தை பயன்படுத்தி தொழிலை மேலும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்று வருகிறோம்.

    ஆர்டர்களை அதிகப்படுத்தவும், வாடிக்கையாளர்களை கவரவும் ஜவுளி தொழில் சார்ந்த குறும்படம் ஒன்றையும் தயாரித்து வெளியிட்டுள்ளோம். தொழில்நுட்ப பயிற்சி பெற்ற இளைஞர்கள் மற்றும் கல்வித்திறன் கொண்ட தொழிலாளர்கள் இத்தொழிலில் அதிகரித்தால் தொழில் மேலும் வளர்ச்சி அடையும்.இவ்வாறு சக்திவேல் கூறினார்.

    • நெல் விதைக்கு பாதுகாப்பான ஈரப்பதம் என்பது 13 சதவீதமாகும்.
    • மதியம் 12 மணி முதல் மாலை 3 மணிவரை, விதையை உலர வைக்க கூடாது.

    உடுமலை :

    நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் விதையை உலர வைப்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என கோவை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் தெரிவித்தார். இது குறித்து கோவை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் அறிக்கை வருமாறு:- ஆனைமலை தாலுகாவில் நெல் ரகங்களான கோ 51, ஏடிடீ -37, ஏடிடீ - 39, ஏடிடீ (ஆர்) 45, ஆர்.என்.ஆர்., 15048 போன்றவை விதைக்காக அதிகளவில் பயிரிடப்பட்டது. தற்போது, அறுவடை முடியும் நிலையில் உள்ளது. அறுவடை சமயத்தில் விதைகளின் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும். அறுவடை செய்த விதைகளை சரியான முறையில் உலர வைப்பது அவசியம்.

    விதை ஒரு உயிருள்ள இடுபொருளாகும். விதையின் ஈரப்பதத்தை, பாதுகாப்பான ஈரப்பதம் வரும் வரை உலர வைப்பதாகும். நெல் விதைக்கு பாதுகாப்பான ஈரப்பதம் என்பது 13 சதவீதமாகும். விதையை உலர வைப்பது, விதை உயிருடனும், நல்ல வீரியத்துடணும் சேமிக்க உதவும்.இல்லையேல், பூஞ்சாணங்களினாலும், நுண்ணுயிர் தாக்குதலினாலும் விதைகள் பாதிக்கப்பட்டு, முளைப்பு த்திறன் பெருமளவில் பாதிக்கப்படும். அறுவடை முடிந்தவுடன் விதையை உலர வைத்து பாதுகாப்பான ஈரப்பதத்தில் சேமிக்க வேண்டும். ஓரிரு மாதம் கழித்து உலர வைக்கும் போது அறுவடை சூட்டுடன் சேமித்து வைக்கும் போது விதைகள் வெட்டியாகி அடைகளாக மாறியிருக்கும். மேலும் நிறம் மங்கி முளைப்புத்திறனும் குறைந்து விடும்.

    விதையை உலர வைக்கும் போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம். ஈரமான சுகாதாரமற்ற களத்தில் விதையை உலர வைக்க கூடாது. களத்தில் ஒரே வயலில் இருந்து பெறப்பட்ட ஒரே பயிர், ஒரே ரகத்தைத்தான் ஒரே நேரத்தில் கையாள வேண்டும்.அதாவது மதியம் 12 மணி முதல் மாலை 3 மணிவரை, விதையை உலர வைக்க கூடாது. உச்சி வெயிலில் புற ஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். அது விதைகளின் முளைப்பு த்திறனை பாதிக்கும். விதையை அதிகமாகவும் உலர வைக்க கூடாது.ஏனெனில் அதிகமாக உலரும்போது விதை மண்ணில் வெடிப்பு ஏற்பட்டு கருச்சிதைவு ஏற்பட்டு முளைப்புத்திறன் பாதிக்கும்.

    உளுந்து, பாசிப்பயிறு போன்ற பயறு வகை பயிர்களின் விதையை 9 சதவீத ஈரப்பதத்திற்கும், சோளம், கம்பு போன்ற பயிர்களின் விதையை 12 சதவீத ஈரப்பதத்திற்கும் உலர வைக்க வேண்டும்.எனவே விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் விதையை உலர வைப்பதில் தனி அக்கறை செலுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

    • தமிழக அரசு மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரித்தல் போன்ற தொழில்களை தொடங்க மானியம் அளிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    பிரதான்மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் தமிழகத்தில் தொழில் வளத்தை பெருக்க தமிழக அரசு மத்திய அரசின் 60 சதவீதம் நிதி பங்களிப்புடன் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    மரசெக்கு எண்ணெய், அரிசி மாவு மற்றும் மிளகாய் அரவை மில், பேக்கரி, இட்லி, தோசை மாவு மற்றும் பொடி, அப்பளம், ஊறுகாய், வடாகம், வத்தல் தயாரிப்பு, காரவகைகள் தயாரிப்பு, சிறுதானிய உணவுகள், அரிசிபொரி/சோளபொரி தயாரிப்பு, வறுகடலை, சத்துமாவு, பால் பதப்படுத்துதல், உண்ணத்தக்க நிலையிலுள்ள பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரித்தல் போன்ற தொழில்களை தொடங்க மானியம் அளிக்கப்படும்.

    உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர், குறு நிறுவனங்கள், சுய உதவிக் குழுவினர், உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள், ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்க ஆர்வம் உள்ளோர் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

    ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கவும் மற்றும் தொழில் நுட்பத்தை மேம்படுத்தவும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். திட்ட தொகையில் 10 சதவீதம் முதலீட்டாளர் தங்களின் பங்களிப்பை செலுத்த வேண்டும். 90 சதவீதம் வங்கிகளின் மூலம் கடனாக வழங்கப்படும். அரசு திட்ட மதிப்பில் 35 சதவீதம் மானியம், அதிகபட்சம் 10 இலட்சம் வரை வழங்கப்படும்.

    இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற pmfmd.mofpi gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். கூடுதல் விபரங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல் பெற பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பட்டுக்கூடு கிலோ 720 ரூபாய்க்கு விற்பனையானது.
    • பட்டு நூல் விலை கிலோ 4,900 முதல் 5,000 ரூபாய் வரை விற்பனையாகிறது.

    திருப்பூர் :

    கோவை பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளாகவே பட்டுக்கூடுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இதனால் பட்டுக்கூடு உற்பத்தியாளர்கள் அதிகரித்துள்ளனர். தரமான பட்டுக்கூடு கிலோ 720 ரூபாய்க்கு விற்பனையானது. சுமாரான தரம் உள்ள கூடு கிலோ 350 ரூபாய்க்கு விற்பனையானது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்தாண்டு துவக்கத்தில் இருந்தே பட்டுக்கூடுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இப்போது வரை விலை குறையவில்லை.மார்க்கெட்டில் பட்டு நூல் விலை கிலோ 4,900 முதல் 5,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. அதனால் பட்டு நூலுக்கான தேவை அதிகரித்துள்ளது. பட்டுக்கூடு உற்பத்தியாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.சூலூர்,சுல்தான்பேட்டை, ஜல்லிப்பட்டி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக பலர் பட்டுக்கூடு உற்பத்தியை துவக்கியுள்ளனர் என்றனர்.

    • அரசு பால் கொள்முதல் விலையை 4ஆண்டுக்கு முன் குறைந்தளவு மட்டுமே உயர்த்தியது.
    • அதிக சிரமங்களை கால்நடை வளர்ப்போர் எதிர்கொள்கின்றனர்.

    மடத்துக்குளம்:

    திருப்பூர் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்த படியாக பால் உற்பத்தி தொழில் உள்ளது. மாவட்டத்தில், நாள் ஒன்றுக்கு 8 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு ஆவின் நிறுவனத்திற்கும், தனியார் பால் நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகிறது.தமிழக அரசு கடந்த 2019 ஆகஸ்டு 19ல் பால் விலையை உயர்த்தியது. அதற்கு பின் 4 ஆண்டாக பால் விலை உயர்த்தாத நிலையில் உற்பத்தி செலவினம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

    இது குறித்து பால் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    அரசு பால் கொள்முதல் விலையை 4ஆண்டுக்கு முன் குறைந்தளவு மட்டுமே உயர்த்தியது. அப்போது, கொழுப்புச்சத்து 4.3, புரதச்சத்து 8.2 உள்ள பால் கொள்முதல் விலை ரூ.32 ஆக விலை அறிவிக்கப்பட்டது. ஆனால் விவசாயிகளுக்கு லிட்டருக்கு 27 முதல் 29 ரூபாய் வரை மட்டுமே கிடைத்து வருகிறது.4 ஆண்டுக்கு முன் மாட்டுக்கு வழங்கப்படும் கலப்புத்தீவனம் விலை கிலோ ரூ. 12 ஆக இருந்தது. தற்போது 24 ரூபாயாக உயர்ந்துள்ளது.பருத்தி ஒரு கிலோ 20 ரூபாயிலிருந்து 45 ரூபாயாகவும், மக்காச்சோளம் மாவு 15 ரூபாயாக இருந்தது 30 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

    புண்ணாக்கு ஒரு கிலோ 30 ரூபாயாக இருந்தது தற்போது 50 ஆக உயர்ந்துள்ளது.அதே போல் ஒரு ஏக்கர் சோளத்தட்டு 5 ஆயிரமாக இருந்தது 15 ஆயிரமாகவும், வைக்கோல் ஒரு கட்டு 30 ரூபாயாக இருந்தது, தற்போது 100 ரூபாயாக அதிகரித்துள்ளது.ஆட்கள் கூலி, மருந்து, பராமரிப்பு, தீவனம் என உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் கொள்முதல் விலை 4 ஆண்டாக உயர்த்தப்படவில்லை.

    அரசு ஆவின் கொள்முதல் விலையை உயர்த்தினால் மட்டுமே தனியார் நிறுவனங்களும் விலை உயர்த்தும்.எனவே அரசு பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும். மாட்டு பால் லிட்டர் 42 ரூபாய்க்கும், எருமை பால் 51 ரூபாய்க்கும் கொள்முதல் செய்ய வேண்டும்.கொள்முதல் செய்யப்படும் பாலுக்குரிய தொகையை உடனடியாக வழங்கவும், கால்நடை தீவனம் 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும்.

    ஆவின் நிறுவனம் தினசரி பால் கொள்முதலை ஒரு கோடி லிட்டராக உயர்த்தும் வகையில் கட்டுமானம் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.ஆவின் நிறுவனம் கால்நடை டாக்டர்களை நியமிக்கவும் உற்பத்தியாளர்களுக்கு உதவ வேண்டும்.இவ்வாறு பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    பருவமழை சீசனின் போது, கால்நடைகள் பராமரிப்பில், அதிக சிரமங்களை கால்நடை வளர்ப்போர் எதிர்கொள்கின்றனர்.குறிப்பாக போதிய விழிப்புணர்வு இல்லாததால் பல்வேறு நோய்த்தாக்குதல் இந்த சீசனில் கால்நடைகளுக்கு ஏற்படுகிறது.இதனால் பால் உற்பத்தி குறைவதுடன் சில நேரங்களில் கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெறுகிறது. எனவே, இத்தகைய சீசனில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கால்நடைத்துறை சார்பில் கிராமந்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.கால்நடை மருந்தகங்களில், மானியத்தில் உலர் தீவனம் வினியோகிக்கும் திட்டத்தையும் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    • கொள்முதல் விலை, 2019ம் ஆண்டுக்கு பின்பு உயர்த்தப்படவில்லை.
    • பால் கூட்டுறவு சங்கங்களுக்கு காலமுறைப்படி கால்நடை மருத்துவர்கள் வருவதில்லை.

    அவிநாசி:

    தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட பேரவை கூட்டம் அவிநாசியில் நடந்தது.தமிழ்நாடு விவசாயிகள் சங்க அவிநாசி ஒன்றிய தலைவர் முத்துரத்தினம் வரவேற்றார். வேலுச்சாமி தலைமை வகித்தார். இதில் மாவட்ட தலைவராக கொளந்தசாமி, செயலாளராக வேலுச்சாமி, பொருளாளராக பரமசிவம், துணை தலைவராக குமாரசாமி, துணை செயலாளராக சுப்பிரமணி உட்பட, 11 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.

    கூட்டத்தில்பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை, 2019ம் ஆண்டுக்கு பின்பு உயர்த்தப்படவில்லை. தற்போது தவிடு, புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, கலப்புத் தீவனம் உள்ளிட்ட இடுபொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.சோளத்தட்டை, பசுந்தீவன உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளதால் பசும் பாலுக்கு லிட்டருக்கு 42 ரூபாய், எருமைப் பாலுக்கு 51 ரூபாய் கொள்முதல் விலையாக அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.

    ஆவின் நிர்வாகம் போதியளவு மருத்துவர்களை நியமிக்காததால் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு காலமுறைப்படி கால்நடை மருத்துவர்கள் வருவதில்லை. கால்நடைகளுக்கு நோய் தாக்கும் போது, தனியார் மருத்துவர்களை நாடி, அதிக தொகை செலவழிக்க வேண்டியுள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.திருப்பூர் மாவட்ட ஆவின் ஒன்றியத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதி செய்து தர வேண்டும் எனதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • சித்தோடு ஆவின் பால் பண்ணை முன்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட பவானி, சித்தோடு, கவுந்தப்பாடி உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    சித்தோடு:

    சித்தோடு ஆவின் பால் பண்ணை முன்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் சார்பில் ஈரோடு மாவட்டம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் ராஜு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒரு லிட்டர் பசும் பாலுக்கு விலை ரூ. 42 ஆகவும், எருமைப் பாலுக்கு ரூ. 51 ஆகவும் ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்வு வழங்கிட வேண்டும்.

    சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி சங்கங்களில் பரிசோதிக்கப்பட்ட பாலின் தரம் மற்றும் அளவுகள் அடிப்படையில் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் கலந்து கொண்ட மாநில தலைவர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:

    2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பால் விலை உயர்த்தி வழங்கப்பட்டது.கொரோனா காலத்தில் போராட்டம் நடத்த எங்களால் முடியவில்லை.

    எங்களின் கோரிக்கைகளை புதிய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம்.அதன் அடிப்படையில் பசும்பால் மற்றும் எருமைப்பால் ஆகியவற்றின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.

    பால் கொள்முதல் செய்யும் இடத்தில் சங்கங்களின் சங்க பணியாளர்கள் ஒப்புகை சீட்டு வழங்கி தான் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

    பால் கொள்முதல் செய்யும் பொழுது பாலின் தரம் அளவு ஆகியவை அளவீடு செய்யப்படுகிறது. ஆனால் பாலின் அளவு மற்றும் தரம் குறைவதாக காரணம் கூறி பால் பணம் குறைத்து தருகின்றனர்.

    2016 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு படி சங்கங்களில் பரிசோதிக்கப்பட்ட பாலின் தரம் மற்றும் அளவுகள் அடிப்படையில் பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் கவனர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட பவானி, சித்தோடு, கவுந்தப்பாடி உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×