search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கறவை மாடு"

    • ஆவின் ஆய்வு கூட்டத்தில் கலக்டர் ஸ்ரீதர் பேச்சு
    • குமரியில் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு கடன்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட ரங்கில் பால்வளத்துறை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி பூதப்பாண்டி கிளை சார்பாக கறவை மாடு கடனுதவியாக தெரிசனங்கோப்பு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த நாகம்மாளுக்கு ரூ.2 லட்சமும், ஜெப ராணிக்கு ரூ.10 லட்சமும், எச்.டி.எப்.சி. வங்கி தக்கலை கிளை சார்பாக முளகுமூடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சார்ந்த விக்டர் ஜெபராஜிக்கு ரூ.3.90 லட்சமும், ஆல்வின் வினோவுக்கு ரூ.2.88 லட்சத்திற்கான காசோலைகளையும் கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்.

    கூட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை, மாவட்ட மகளிர் திட்ட இயக்கம், கால்நடை பரா மரிப்புத் துறை, பறக்கை கால்நடை மருத்துவ பல்கலை கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகிய துறைகள் சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்தும், முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் பேசிய கலெக்டர் ஸ்ரீதர், குமரி மாவட்டத்தில் அனைத்து வருவாய் கிராமங்களிலும் பால் கூட்டுறவு சங்கம் அமைக்க அனைத்து பால் உற்பத்தியா ளர் கூட்டுறவு சங்கங்களும் முயற்சிக்க வேண்டும்.

    ஆவின் கால்நடை தீவனம் மற்றும் தாது உப்பு கலவை ஒன்றியம் மூலம் கொள்முதல் செய்து அனைத்து உறுப்பினர்களின் கறவை மாடுகளுக்கும் வழங்க வேண்டும்.

    தீவனப்புல் வளர்ப்பினை ஊக்குவிக்கு பொருட்டு தேவையான புல் விதைகள் மற்றும் கரணை கள் வாங்கி உறுப்பினர்க ளுக்கு வழங்கப்பட வேண்டும். சங்கங்களில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பிட வேண்டும். உறுப்பி னர்களின் நிலங்கள் மற்றும் கால்நடைத்துறைக்கு சொந்தமான மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து தீவனப்புல் பயிரிட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். சங்க உறுப்பினர்களுக்கு தேவையான கறவை மாட்டுக்கடன்கள் வங்கிகள் மூலம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    கறவை மாடு பராமரிப்பு கடன்களை அதிக அளவில் வழங்க வேண்டும். பிரதம சங்கங்களிலிருந்து உறுப்பி னர்களுக்கு வழங்கப்ப டவேண்டிய போனஸ் மற்றும் ஊக்கத்தொகை களை உடனடியாக வழங்க வேண்டும்.

    கூட்டுறவு சங்கங்களில் பால் கொள்முதலை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான முயற்சிகளில் அதிகாரிகள் தீவிரமாக இறங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் துணைப்பதி வாளர் (பால்வளம் திருநெல்வேலி) ஜி.சைமன் சார்லஸ், ஆவின் பொது மேலாளர் அருணகிரி நாதன், மகளிர் திட்ட இயக்குநர் பீபீ ஜாண், கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் மகா லிங்கம், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில் குமார், பறக்கை கால்நடை மருத்துவ பல்கலைகழகம் மற்றும் ஆராய்ச்சி நிலைய தலைவர் டாக்டர் ஜெனிஸியஸ் இனிகோ, சங்க செயலாளர்கள், அலுவலர்கள், முதுநிலை ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்ட னர்.

    • விவசாயத்தை மட்டும் நம்பி உள்ளோர் நிலையான வருமானம் இல்லாமல் தவிக்கின்றனர்.
    • கால்நடை தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் பலர் கறவை மாடுகளை வளர்த்து வருகின்றனர். பால் கொள்முதல் விலை கட்டுபடியாகாததால் பால் உற்பத்தியாளர்கள் சிரமப்படுகின்றனர்.விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைப்பதில்லை. பூச்சி மருந்து, உரம் விலையும், தொழிலாளர்களுக்கான கூலியும் உயர்ந்து விட்டது.நிலத்தடி நீர்மட்டமும் பாதாளத்திற்கு சென்றுவிட்டது.

    விவசாயத்தை மட்டும் நம்பி உள்ளோர் நிலையான வருமானம் இல்லாமல் தவிக்கின்றனர்.கூடுதல் வருமானத்திற்காக பெரும்பாலான தோட்டங்களில் கறவை மாடுகள் வளர்த்து வருகின்றனர். தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், பால் உற்பத்தி கட்டுப்படியாவதில்லை என்கின்றனர் விவசாயிகள்.

    தமிழக அரசு 4.3 சதவீத கொழுப்பு சத்தும், 8.2 சதவீத புரதச் சத்தும் கொண்ட பாலுக்கு ஒரு லிட்டருக்கு 32 ரூபாய் அறிவித்துள்ளது. ஆனால், விவசாயிகளுக்கு ஒரு லிட்டருக்கு 29 முதல் 30 ரூபாய் தான் கிடைக்கிறது.கலப்பு தீவனம் கிலோ 24 ரூபாயாக உயர்ந்துள்ளது. பருத்தி, புண்ணாக்கு கிலோ 50 ரூபாயாகவும், சோளத்தட்டு, வைக்கோல், மக்காச்சோளம் ஆகியவற்றின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

    இத்துடன் தொழிலாளர்களுக்கான கூலி, பராமரிப்பு செலவு பல மடங்கு உயர்ந்துள்ளது. எனினும் அரசு ஆவின் கொள்முதல் விலையை பல ஆண்டுகளாக உயர்த்தவில்லை. விளை பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை இல்லாததால் சிரமமான நிலையில் பால் உற்பத்தி மட்டுமே வாழ்வாதாரத்திற்கு உதவியாக உள்ளது.தற்போது தீவன விலை உயர்வால் பால் உற்பத்தியும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. அரசு மாட்டுப்பால் ஒரு லிட்டருக்கு 45 ரூபாய் வழங்க வேண்டும். கால்நடை தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும்.விவசாயிகளின் தோட்டங்களுக்கே வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லா விட்டால் பலரும் கறவை மாடுகளை விற்கும் நிலை ஏற்பட்டு விடும் என்கின்றனர் விவசாயிகள்.

    ×