search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரமத்தி வேலூர்"

    • இந்த பயங்கர சத்தம் வேலூர், பாண்டமங்கலம், பொத்தனூர், வெங்கரை, கபிலர்மலை, பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதி முழுவதும், அதிக சத்தமும், அதிர்வும் உணரப்பட்டன.
    • ஜன்னல்கள், கண்ணாடிகள் அதிர்ந்து, கட்டடங்களில் அதிர்வு ஏற்பட்டதை மக்கள் உணர்ந்தனர். ஆனால், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.


    பரமத்திவேலூர்:


    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி சத்தம் ஏற்பட்டதால் பரமத்திவேலூர் பகுதிகளில் கட்டடங்கள் அதிர்ந்தன. இதனால் நிலநடுக்கம் ஏற்பட்டதோ என்ற அச்சத்தில், மக்கள் அலறி அடித்து வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


    இந்த பயங்கர சத்தம் வேலூர், பாண்டமங்கலம், பொத்தனூர், வெங்கரை, கபிலர்மலை, பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதி முழுவதும், அதிக சத்தமும், அதிர்வும் உணரப்பட்டன. மேலும் ஜன்னல்கள், கண்ணாடிகள் அதிர்ந்து, கட்டடங்களில் அதிர்வு ஏற்பட்டதை மக்கள் உணர்ந்தனர். ஆனால், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.


    இதுகுறித்து வருவாய்த் துறையினரிடம் கேட்ட போது அதிவேக ஜெட் விமானம் தாழ்வாக பறந்து செல்லும் போது வழக்கமாக, இதுபோன்ற வெடி சத்தம் அடிக்கடி கேட்பதாக தெரிவித்தனர். இதனால் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


    • வல்லவ விநாயகர் கோவில் மண்டலாபிஷேகம் நடைபெற்றது.
    • மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர் மற்றும் நாக தேவதைகளுக்கு உள்பட சாமிகளுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் 450 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வல்லவ விநாயகர் ஆலயத்தில் மண்டலாபிஷேகம் நடைபெற்றது.

    மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர் வல்லப விநாயகர், பானலிங்க விஸ்வேஸ்வரர் சமேத விசாலட்சி அம்மன், வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியர், ஸ்ரீ மகா காலபைரவர், நவகிரகங்கள் மற்றும் நாக தேவதைகளுக்கு பால் தயிர் பன்னீர் இளநீர் சந்தனம் மஞ்சள் திருமஞ்சனம் பஞ்சாமிர்தம் தேன் விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா முடிவில் அனைவருக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாட்டினை வல்லப விநாயகர் கோவில் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    ×