என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "melapalayam"
- நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
- குடிநீர் காலதாமதம் ஏற்பட்டு ஒருநாள் விட்டு ஒருநாள் என்பது மாறி 4 நாட்களுக்கு ஒரு முறை என வருகிறது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் சரவணன், துணை மேயர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.
கூட்டத்தில் மாநகர செயற்பொறியாளர் பாஸ்கரன், வாசுதேவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 53 மற்றும் 54-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் 53-வது வார்டு கவுன்சிலர் அம்பிகா தலைமையில் இன்று மாநகராட்சி குறை தீர்ப்பு கூட்டத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
ஆசிரியர் காலனி, மகிழ்ச்சி நகரில் உள்ள தரைதள நீர் தேக்க தொட்டிக்கு சுத்தமல்லி தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து பம்பிங் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதில் அடிக்கடி உடைப்பு, அதே போன்று தரை தள நீரேற்று தொட்டியில் இருந்து மேல்நிலை தொட்டிக்கு செல்லும் குழாய்களிலும் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் காலதாமதம் ஏற்பட்டு ஒருநாள் விட்டு ஒருநாள் என்பது மாறி 4 நாட்களுக்கு ஒரு முறை என வருகிறது.
இது தொடர்பாக மண்டல அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும், போனை எடுப்பதில்லை. எனவே மேயர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
பா.ஜ.க.வை சேர்ந்த நிர்வாகி அருள்ராஜ் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் அளித்த மனுவில், வருகிற 18-ந் தேதி வ.உ.சி குருபூஜை விழா நடைபெற உள்ளது. எனவே மணி மண்டபத்தை தூய்மைப்படுத்த வேண்டும். அங்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
- மேலப்பாளையம் மில்லத் நடுத்தெருவை சேர்ந்தவர் நஜிமுனிஷா (வயது52).
- மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்னுல் ரபிக்கை கைது செய்தனர்.
நெல்லை:
மேலப்பாளையம் மில்லத் நடுத்தெருவை சேர்ந்தவர் நஜிமுனிஷா (வயது52). இவரது மகன் ஜெய்னுல் ரபிக் (27). இவர் தினமும் குடித்துவிட்டு குடிபோதையில் வந்து வீட்டில் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல ஜெய்னுல் ரபிக் மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். அதனை அவரது சகோதரர் அன்சர் அலி பாதுஷா (29) என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜெய்னுல் ரபிக், அன்சர் அலி பாதுஷாவை அங்கிருந்த கிரைண்டர் கல்லால் தாக்கினார். இதில் அவர் பலத்த காய மடைந்தார். உடனடியாக அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மேலப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் எபினேசர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்னுல் ரபிக்கை கைது செய்தனர்.
- மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி கவரிங் செயின் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
- சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது
நெல்லை:
மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அப்பகுதியில் உள்ள கவரிங் செயின் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது மேலப்பளையம் பீடி காலனி பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 19) என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் பாளை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி விசாரணை நடத்தி சூர்யா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
- கவச உடை அணிந்த அதிரடிப்படை போலீசார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வஜ்ரா வாகனங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது.
நெல்லை:
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
100 போலீசார்
நெல்லை மாவட்டத்திலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நெல்லை மேலப்பாளையத்தில் மாநகர கிழக்கு பகுதி துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கவச உடை அணிந்த அதிரடிப் படை போலீசார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வஜ்ரா வாகனங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதேபோல் பத்தமடை, ஏர்வாடி உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் ரோந்து சென்றும், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுதொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், பாப்புலர் பிரண்ட் அமைப்பு தடை செய்யப்பட்டது குறித்து யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார்.
- மேலப்பாளையம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆவுடையப்பன் (வயது 51).
- நேற்று காலை திடீரென ஆவுடையப்பன் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.
நெல்லை:
மேலப்பாளையம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆவுடையப்பன் (வயது 51). இவர் புதிய பஸ் நிலையம் அருகே சேவியர் காலனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், திருமணமான மகளும், மகனும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை திடீரென ஆவுடையப்பன் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆவுடையப்பன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மேலப் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜெயபால் சந்தை முடிந்த பிறகு அவர் நெல்லை புதிய பஸ்நிலையத்திற்கு சென்றார்.
- ஜெயபால் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 41). மாட்டு வியாபாரி.
மாயம்
இவர் கடந்த 5-ந் தேதி நெல்லை மேலப்பாளையம் சந்தைக்கு வந்தார். சந்தை முடிந்த பிறகு அவர் நெல்லை புதிய பஸ்நிலையத்திற்கு சென்றார்.
அங்கிருந்து அவரது மனைவி ராமக்கனி செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நான் வீட்டிற்கு வர நேரமாகும் என்று கூறியுள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் வீட்டிற்கு செல்லவில்லை.
பல இடங்களில் தேடிப்பார்த்தும் ஜெயபால் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் மேலப்பாளையம் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை யாரேனும் கடத்திசென்றார்களா? என விசாரணை நடந்து வருகிறது. மேலும் ஜெயபாலின் செல்போன் எண் மூலமும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- அம்பை-மேலப்பாளையம் சாலையில் உள்ள வி.எஸ்.டி பள்ளி வாசல் அருகே அமைந்துள்ள பிரதான நீர் நிலையான கன்னிமார் குளம் கரை ஓரத்தில் பேவர் பிளாக் நடைபாதை மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளது.
- மாநகராட்சி 48- வது வார்டுக்கு உட்பட்ட இந்த நடைபாதையில் அதிகாலை மற்றும் மாலை வேலைகளில் கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், இளைஞர்கள் தினமும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை:
அம்பை-மேலப்பாளையம் சாலையில் உள்ள வி.எஸ்.டி பள்ளி வாசல் அருகே அமைந்துள்ள பிரதான நீர் நிலையான கன்னிமார் குளம் கரை ஓரத்தில் பேவர் பிளாக் நடைபாதை மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி 48- வது வார்டுக்கு உட்பட்ட இந்த நடைபாதையில் அதிகாலை மற்றும் மாலை வேலைகளில் கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், இளைஞர்கள் தினமும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு சில இளைஞர்களின் தவறான செயல்களால் இப்பாதையில் மது பாட்டில்களும், மாட்டு சாணங்களும் கிடக்கின்றது. தினமும்் இரவு சிலர்் மது குடித்துவிட்டு மது பாட்டில்களை வீசி சொல்கின்றனர்.
இதனால் நடைபயிற்சிக்காக தினமும் வரும் மக்களுக்கு சிரமங்கள் ஏற்படுகிறது.
மாநகராட்சி நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு நடைபயிற்சி பாதையை தூய்மை பணியாளர்கள் மூலம் தினமும் சுத்தம் செய்து பாதுகாத்திட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கலெக்டர் அலுவலகத்திற்கு பூசாரி போல மாலை அணிந்தும், மணி அடித்தவாறும், சாமி ஆடியபடியும் ஒருவர் வந்து மனு அளித்தார்.
- பாதுகாப்பு கருதி கோவில் அருகே டாஸ்மாக் கடை அமைக்க கூடாது.
நெல்லை:
மேலப்பாளையம் மேல கருங்குளத்தை சேர்ந்தவர் முருகன் என்ற முருகையா. இவர் அப்பகுதியில் உள்ள இசக்கி அம்மன் கோவிலின் தர்மகர்த்தாவாக உள்ளார்.
இவர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு பூசாரி போல மாலை அணிந்தும், மணி அடித்தவாறும், சாமி ஆடியபடியும் வந்து ஒரு மனு அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை கோவிலின் அருகே இடமாற்றம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவிலுக்கு தினமும் காலையிலும், மாலையிலும் ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். எனவே அவர்களின் பாதுகாப்பு கருதி கோவில் அருகே டாஸ்மாக் கடை அமைக்க கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த கோரிக்கைக்கு ஆதரவாக அப்பகுதியை சேர்ந்த தமிழர் விடுதலை களம் பகுதி செயலாளர் கணேசன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் தர்மகர்த்தாவுடன் வந்திருந்தனர்.
மகளிர் மட்டும் பஸ்
மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா பகுதியில் இருந்து ரெட்டியார்பட்டி செல்லும் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவிகள் கல்லூரிக்கு வந்து செல்வதால் காலை மற்றும் மாலை நேரங்களில் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் இருந்து கல்லூரிக்கு மகளிர் மட்டும் பஸ் இயக்க வேண்டும் எனவும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
- மயக்கவியல் டாக்டர் இல்லாததால் கர்ப்பிணிகளுக்கு ஆபரேஷன் தேதியை அடிக்கடி தள்ளிக் கொண்டே சென்றதாகவும் கூறப்படுகிறது.
- மேலப்பாளையம் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளை யத்தில் அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இங்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
டாக்டர் பற்றாக்குறை
இந்நிலையில் இங்கு பிரசவத்திற்காக சிகிச்சை பெற்று வரும் 7 கர்ப்பிணி களுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் எனக்கூறி குறிப்பிட்ட தேதியையும் ஒதுக்கிய தாக கூறப்படுகிறது. ஆனால் மயக்கவியல் டாக்டர் இல்லாததால் கர்ப்பிணி களுக்கு ஆப ரேஷன் தேதியை அடிக்கடி தள்ளிக் கொண்டே சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் இன்று அரசு ஆஸ்பத்திரியில் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்துக்கு மேலப்பாளையம் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள் வந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- நெல்லை மாநகராட்சியில் சாலைகள் மற்றும் தெருக்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது.
- சாலை அமைக்கும் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாநக ராட்சியில் பெரும்பாலான இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாதாள சாக்கடை மற்றும் கேபிள்கள் பதிக்கும் பணிக்காக சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு சாலைகள் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டது. இதனிடையே பாதாள சாக்கடை பணிகள் முடிவடையாத காரணத்தி னால் சாலைகள் அமைப்பது தாமதமாகி வந்தது.
இந்நிலையில் மாநகர பகுதி சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நீண்ட காலமாக மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் சாலை பணிகள் எதுவும் நடைபெறாததால் மக்கள் அவதி அடைந்து வந்தனர்.
தற்போது ஒரு சில இடங்களை தவிர பெரும்பாலான பகுதிகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் நிரப்பப்பட்டு சாலைகள் அமைப்பதற்காக சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் 2019-ம் ஆண்டு டெண்டர் விடப்பட்ட சாலை பணிகளை மீண்டும் தொடங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
அதனைத் தொடர்ந்து மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள சொக்கநாதர் கோவில் தெரு, அரசு மருத்துவமனை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் டெண்டர் எடுத்தவர்களை சாலை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்க மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணியை நேற்று ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த மண்டல சேர்மன் சில காரணங்களை கூறி சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஒப்பந்ததாரர் பணியை நிறுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். இதனால் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தங்களது பகுதியில் சாலை அமைய உள்ளது என்று மகிழ்ச்சியில் இருந்த அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
நெல்லை மாநகரில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் சமீப காலமாக கடும் முயற்சி எடுத்து நிறைவேற்றி வருகிறது.
இந்நிலையில் மேலப்பாளையம் மண்டலத்தில் தார் சாலை அமைக்கும் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மாநகராட்சி கமிஷனர் மற்றும் மேயர் ஆகியோர் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து மீண்டும் சாலை பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
- நகர் பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டு சுகாதார சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
- மேலப்பாளையம் மாநகராட்சி பகுதியில் உள்ள பொது மக்கள் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி இந்த சிறப்பு மருத்துவ சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
நெல்லை:
நெல்லை மாநக ராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
தேசிய நகர்புற சுகாதார இயக்கத்தின் கீழ் நகர்புறங்களில் வசிக்கும் மக்களின், எளிதாக நோய் தாக்குதலுக்கு உள்ளாக கூடிய இடங்கில் வசித்துவருபவர்கள், குடிசை வாசிகள், சாலையோரம் வசிப்போர், சுகாதாரமற்ற, பாதுகாப்பற்ற தொழில் செய்பவர்கள் மற்றும் ஏழை எளிய மக்களின் சுகாதாரத்தினை மேம்ப டுத்து வற்காக நகர் பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டு சுகாதார சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சேவைகளை வழுபடுத்தும் விதமாக நகர்புற மக்களுக்கு சிறப்பு மருத்துவ சேவைகளை உகந்த நேரத்தில் வழங்கிடவும், நோய் பாதிப்புகை கண்டறியவும், தலைமை மருத்துவமனையில் காத்தி ருப்பு நேரத்தை தவிர்க்கும் நோக்கில் 2017ம் ஆண்டு முதல் பாலி கிளினிக் என்ற மாலை நேர சிறப்பு திட்டம் பேட்டை, பாட்டப்பத்து ஆகிய பகுதிகளில் நகர்புற சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
பாலி கிளினிக் சிறப்பு திட்டத்தில் பொது மருத்துவம், மகப்பேறு, குழந்தை நலம், கண்/ பிசியோ தெரபி மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், மனநல மருத்துவம் ஆகியவவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை தினமும் மாலை 4.30 முதல் 8.30 வரை குறிப்பிட்ட சிறப்பு மருத்துவர்களால் மருத்துவ சேவை வழங்கப்பட இருக்கிறது.
அதன் படி திங்கட்கிழமை களில் பொது மருத்துவம், செவ்வாய் மகப்பேறு மருத்துவம், புதன் கிழமைகளில் குழந்தைகள் நல மருத்துவம், வியாழன் தோறும் கண் மருத்துவம், பிசியோதெரபி மருத்துவம், வெள்ளிக்கிழமைகளில் தோல் நோய் மருத்துவம், பல் மருத்துவமும், சனிக்கிழமை தோறும் மன நல மருத்துவ சேவைகளும் அளிக்கப்பட இருக்கிறது.
மேலப்பாளையம் மாநகராட்சி பகுதியில் உள்ள பொது மக்கள் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி இந்த சிறப்பு மருத்துவ சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- மேலப்பாளையம் ஞானியாரப்பா 7-ம் தெருவை சேர்ந்தவர் ராஜ் (வயது 47). இவர் வீட்டுடன் சேர்த்து டெய்லர் கடை நடத்தி வருகிறார்.
- சம்பவத்தன்று இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
நெல்லை:
மேலப்பாளையம் ஞானியாரப்பா 7-ம் தெருவை சேர்ந்தவர் ராஜ் (வயது 47). இவர் வீட்டுடன் சேர்த்து டெய்லர் கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்றுள்ளார்.
இது குறித்து சிறுமியிடம் அவரது பெற்றோர் கேட்டுள்ளனர். உடனே சிறுமி நடந்த விபரத்தை கூறியுள்ளார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பாளை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன் பேரில் போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்து டெய்லர் ராஜை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்