search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Popular Front of India"

    • சட்ட விரோத செயல்பாடுகள் காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
    • சில மாதங்களுக்கு முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.

    சட்ட விரோத செயல்பாடுகள் காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது இணைந்த அமைப்புகள் நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாத செயலில் ஈடுபடுதல் அதற்கு நிதியளித்தல் உள்பட தொடர் குற்றங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டு உள்ளது.

    இதையடுத்து இந்த அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தது.

    இந்த நிலையில் மத்திய அரசு விதித்த தடையை எதிர்த்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு மீது விசாரணை இன்று நடக்கிறது.

    சில மாதங்களுக்கு முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தொடர்புடைய 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • பேக்கர்ஸ் ரோடு பகுதியில் ஒரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னை வேப்பேரி, புரசைவாக்கத்தில் இன்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தொடர்புடைய 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அந்த அமைப்பின் முன்னாள் நிர்வாகி ஒருவர் புரசைவாக்கம் தாக்கர் தெருவில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் இன்று காலை 9 மணி அளவில் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

    வேப்பேரி ஜோதி ராமலிங்கம் தெருவில் ஒருவர் வீட்டிலும் பேக்கர்ஸ் ரோடு பகுதியில் ஒரு வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    • மலப்புரம் பகுதியில் உள்ள பாப்புலர் பிரண்ட் அமைப்பினர் வீடுகளிலும், அலுவலகத்திலும் இன்று என்.ஐ.ஏ. அமைப்பினர் திடீர் சோதனை நடத்தினர்.
    • ஆவணங்களை பரிசோதித்த அதிகாரிகள், வளைகுடா நாடுகளில் இருந்து பெறப்பட்ட பணம் மற்றும் பண பரிமாற்றம் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.

    திருவனந்தபுரம்:

    மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் அமைப்புடன் தொடர்புடைய அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் நடவடிக்கைகளை தேசிய புலனாய்வு அமைப்பினர் கண்காணித்து வருகிறார்கள்.

    அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இந்த அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் திடீர் சோதனை நடத்தினர்.

    இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் நாடு முழுவதும் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று கர்நாடகாவில் பாப்புலர் பிரண்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்த அமைப்புகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 16 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

    குறிப்பாக தென்கன்னட பகுதியில் மங்களூரு மற்றும் புதூர், பெல்டங்காடி, உப்பினங்காடி, வெனுர், பன்டேவால் பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்றது. பாப்புலர் பிரண்ட் அமைப்பின் நிர்வாகிகள், அலுவலகங்கள் ஆகியவற்றிலும், இவர்களுடன் தொடர்பில் இருந்த ஆஸ்பத்திரிகளிலும் இந்த சோதனை நடைபெற்றது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபோல கேரளா மாநிலத்தில் மலப்புரம் பகுதியில் உள்ள பாப்புலர் பிரண்ட் அமைப்பினர் வீடுகளிலும், அலுவலகத்திலும் இன்று என்.ஐ.ஏ. அமைப்பினர் திடீர் சோதனை நடத்தினர். அங்குள்ள ஆவணங்களை பரிசோதித்த அதிகாரிகள், வளைகுடா நாடுகளில் இருந்து பெறப்பட்ட பணம் மற்றும் பண பரிமாற்றம் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.

    இதுபோல பீகார் மாநிலத்திலும் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பீகார், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடந்த இச்சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மதுரையில் 4 குழுக்களாக பிரிந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி 12 பேர் மீது வழக்கு போட்டுள்ளனர்.

    சென்னை:

    தழிழகத்தில் தேசிய புலனாய்வு முகமை என்று அழைக்கப்படும் என்.ஐ.ஏ. குழுவின் அதிகாரிகள் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    குறிப்பாக கோவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்ற பின்னர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அடிக்கடி சோதனை நடத்தப்படுகிறது. சென்னையில் இது தொடர்பாக பலமுறை சோதனை நடைபெற்றுள்ளது.

    தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் அதன் நிர்வாகிகளின் வீடுகளில் பலத்த பாதுகாப்புடன் சோதனை நடைபெற்றது. இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருக்கிறார்களா? என்கிற கோணத்தில் இந்த விசாரணை நடைபெற்று வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னையில் திருவொற்றியூர், ஓட்டேரி, மண்ணடி ஆகிய 3 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின்போது சென்னையில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவொற்றியூர் தாங்கல் புதிய காலனியில் வசித்து வருபவர் அப்துல் ரசாக் (வயது 55). இவர் கடந்த 8 மாதங்களாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் வட சென்னை மாவட்ட செயலாளரான இவர் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு ஜவுளி கடையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணியில் இருந்து அப்துல் ரசாக் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இன்ஸ்பெக்டர் ரஞ்சித் சிங் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

    புது வண்ணாரப்பேட்டை செரியன் நகர் பகுதியில் வசித்து வந்த இவர் பின்னர் அங்கிருந்து இடம் மாறி திருவொற்றியூர் தாங்கல் பகுதிக்கு வந்து குடியேறி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    திண்டுக்கல் மாவட்டம் பழனி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் முகமது கைசர் (வயது 50). பழனியில் டீக்கடை நடத்தி வரும் இவர் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் முகமது கைசர் வீட்டிற்கு சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள் அங்கு சோதனை மேற்கொண்டனர். ஏற்கனவே இவரது வீட்டில் 2 முறை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.

    பின்னர் முகமது கைசரை கைது செய்து ஜீப்பில் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டனர்.

    தேனி மாவட்டம் கம்பம் மெட்டு காலனியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் சாதிக் அலி என்பவரது வீட்டில் இன்று அதிகாலை 4 மணி முதல் சோதனை நடைபெற்றது. மதுரையில் இருந்து வந்த 3 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

    இதையொட்டி வீட்டு முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். சோதனையில் அவரது செல்போன், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் முக்கிய தடயங்கள் கிடைத்ததை தொடர்ந்து விசாரணைக்காக சாதிக் அலியை போலீசார் அழைத்துச் சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அவரது வீட்டு முன்பு எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் குவிந்தனர். அவர்கள் சாதிக் அலி கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கம்பம் நகரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை மண்டல தலைவர் யாசர் அராபத் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று காலை 6.40 மணிக்கு திருச்சி வந்தது.

    விமானத்தில் இருந்து இறங்கிய தஞ்சையை சேர்ந்த முகம்மது அசாப் என்பவரை தேசிய பாதுகாப்பு முகமையை சேர்ந்த அதிகாரிகள் சோதனைக்காக அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவரிடம் விமான நிலைய வளாகத்திலேயே தனி அறையில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பும் இதே போன்று வெளிநாட்டில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    மதுரையில் 4 குழுக்களாக பிரிந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். நெல்பேட்டை, வில்லாபுரம், தெப்பக்குளம் ஆகிய 3 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    நெல்பேட்டையில் மட்டும் 2 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மதுரை நெல்பேட்டையில் அப்பாஸ் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியபோது ஆவணங்கள், செல்போன், லேப்-டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அப்பாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அதற்கு அவர்கள் முழுமையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அப்பாசை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

    இந்தியா முழுவதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக விரோத கும்பல்களுக்கு உடந்தையாக இருந்த பல்வேறு அமைப்புகள் தடை செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நாடு முழுவதிலும் அந்த அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்றைய சோதனையின்போது சென்னையில் 3 பேரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், பழனியில் முகமது கைசர் என்பவரை கைது செய்திருக்கிறார்கள். தேனி, திருச்சி, மதுரையில் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதன்மூலம் 6 பேர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி 12 பேர் மீது வழக்கு போட்டுள்ளனர்.

    இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கூறியதாவது:-

    மதுரையில் ஏற்கனவே கைதான 7 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்களிடம் தீவிரவாத இயக்கத்துக்கு பணம் திரட்டியது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இதில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் தான் மதுரை நெல்பேட்டை, வில்லாபுரம், தெப்பக்குளம் ஆகிய 3 இடங்களில் உள்ள 4 வீடுகளில் இன்று சோதனை நடத்தினோம்.

    நெல்பேட்டை அப்பாசிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் ஒரு அமைப்பில் முக்கிய நிர்வாகியாக உள்ளார். அவரிடம் கூட்டு விசாரணை நடத்திய பிறகு தான் அவர் தவறு செய்தாரா, இல்லையா? என்பது பற்றிய விவரம் தெரிய வரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மதுரையில் 4 இடங்களில் அதிரடி சோதனை நடத்த வேண்டியது தொடர்பான தகவல் போலீஸ் கமிஷனரிடம் நள்ளிரவு நேரத்தில் தான் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து தெப்பக்குளம், மதிச்சியம், கீரைத்துறை ஆகிய பகுதிகளில் உள்ள போலீஸ் அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். மதுரை மாநகரில் தெப்பக்குளம், வில்லாபுரம், நெல்பேட்டை ஆகிய 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்த வந்தபோது, உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் மட்டுமின்றி மத்திய போலீஸ் உளவு அமைப்பு அதிகாரிகளும் சம்பவ இடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    • முகமது கைசர் வீட்டிற்கு வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் பழனியில் விசாரணை நடத்திய நிலையில் முகமது கைசரை கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் முகமது கைசர் (வயது 50). பழனியில் டீக்கடை நடத்தி வரும் இவர் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவராக இருந்துள்ளார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளயில் முகமது கைசர் வீட்டிற்கு வந்த என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஏற்கனவே இவரது வீட்டில் 2 முறை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்திச் சென்றனர்.

    பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கட்சியின் உறுப்பினர்கள் சதாம், ஜியாவுல்ஹக் மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த ஹபீப் ரகுமான் ஆகிய 4 பேர்களிடம் கடந்த ஜனவரி மாதம் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது திருப்புவனம் ராமலிங்கம் படுகொலை, கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்துவதாக தகவல் வெளிவந்துள்ளது.

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் பழனியில் விசாரணை நடத்திய நிலையில் அவரை கைது செய்து ஜீப்பில் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். இச்சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கேரள மாநிலத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.
    • பாப்புலர் பிரண்ட் அமைப்பு, உடற்கல்வி, யோகா என்ற போர்வையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்ததாகவும் அதில் தெரிவித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் நாடு முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாப்புலர் பிரண்ட் அமைப்பின் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிரடி சோதனை நடத்தியது.

    இந்த சோதனையில் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டனர். அந்த அமைப்பின் செயல்பாட்டுக்கு தடையும் விதிக்கப்பட்டது.

    கேரள மாநிலத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது. மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து என்.ஐ.ஏ. தீவிர விசாரணை நடத்தி வந்தது. இதன் முடிவில் கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், சுமார் 50 பேர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பாப்புலர் பிரண்ட் அமைப்பு, உடற்கல்வி, யோகா என்ற போர்வையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்ததாகவும் அதில் தெரிவித்துள்ளது.

    அதோடு இந்தியா முழுவதும், ஐ.எஸ். பயங்கரவாதத்தை பரப்ப பாப்புலர் பிரண்ட் அமைப்பு முயற்சித்ததாகவும் குற்றப்பத்திரிகையில் என்.ஐ.ஏ தெரிவித்து உள்ளது.

    • கேரள மக்கள் வன்முறையை விரும்பாதவர்கள்.
    • தேசிய பாதுகாப்பை மனதில் வைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூரில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:

    கேரள மக்கள் வன்முறையை விரும்பாதவர்கள். கம்யூனிஸ்டுகளின் வன்முறை அரசியலையும் அவர்கள் ஏற்கவில்லை. இது எனக்கு நன்றாக தெரியும்.

    கேரள மாநில மக்களை பாதுகாக்கவே மத்தியில் ஆளும் மோடி அரசு பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு தடை விதித்தது. இது தேசிய பாதுகாப்பை மனதில் வைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை.

    ஆனால் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் வாக்கு வங்கி அரசியல் நடத்துவதால் இதனை விரும்பவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் நடிகர் சுரேஷ் கோபியும் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:

    திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் நான் போட்டியிட தயாராக இருக்கிறேன். இல்லையேல் கம்யூனிஸ்டுகள் பலம் வாய்ந்ததாக கருதும் கண்ணூர் தொகுதியிலும் போட்டியிட நான் தயார் என்றார்.

    திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபி ஏற்கனவே போட்டியிட்டு தோல்வியை தழுவி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்தது.
    • விருதுநகரில் பாவாளி ரோட்டில் உள்ள கட்டிடத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வந்தது.

    விருதுநகர்:

    நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து அந்த அமைப்பின் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் முக்கிய நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    விருதுநகரில் பாவாளி ரோட்டில் உள்ள கட்டிடத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடை காரணமாக நிர்வாகிகள் காலி செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாணகுமார், இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, ராஜ சுலோச்சனா ஆகியோர் அந்த அலுவலகத்தில் ஆய்வு நடத்தி சீல் வைத்தனர்.

    விருதுநகர் பாவாளி ரோட்டில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    • தமிழகத்தில் சென்னை, ராமநாதபுரம், கோவை மாவட்டங்களில் செயல்பட்டு வந்த அலுவலகங்களுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.
    • வடக்கு சூரங்குடியில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கிளை அலுவலகத்திற்கும் இன்று அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

    நாகர்கோவில்:

    நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை ஆகியவற்றை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகங்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு பிரிவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதன் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது. தொடர்ந்து நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மை ஆகியவற்றை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

    இதனை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை, ராமநாதபுரம், கோவை மாவட்டங்களில் செயல்பட்டு வந்த அலுவலகங்களுக்கும் 'சீல்' வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை குமரி மாவட்டத்திலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான நடவடிக்கை தொடங்கியது. இளங்கடை பகுதியில் உள்ள பி.எப்.ஐ. தலைமை அலுவலகத்தில் இன்று காலை போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன் குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் திருமுருகன், ஜெயலட்சுமி மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து அகஸ்தீசுவரம் தாசில்தார் சேகர் மற்றும் வருவாய்த் துறையினர் அங்கு வந்தனர். அதன்பிறகு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகத்திற்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். அந்த அலுவலகத்தின் கதவில் நோட்டீசும் ஒட்டப்பட்டது.

    இதேபோல் வடக்கு சூரங்குடியில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கிளை அலுவலகத்திற்கும் இன்று அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். இந்த சம்பவங்களால் மாவட்டத்தில் பதட்டம் நிலவுவதால் போலீசார் பாதுகாப்பாக முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக தமிழகத்தில் பி.எப்.ஐ அமைப்புக்கு தடைவிதித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.
    • ஏற்கனவே சென்னை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பி.எப்.ஐ அலுவலகங்ளுக்கு சீல் வைக்கப்பட்டது.

    கோவை:

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இந்த அமைப்புகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்து உத்தரவை பிறப்பித்தது.

    மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக தமிழகத்தில் பி.எப்.ஐ அமைப்புக்கு தடைவிதித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த பி.எப்.ஐ அலுவலகங்களுக்கு அதிகாரிகள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே சென்னை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பி.எப்.ஐ அலுவலகங்ளுக்கு சீல் வைக்கப்பட்டது.

    இன்று கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள பி.எப்.ஐ தலைமை அலுவலகம் மற்றும் வின்சென்ட் ரோட்டில் உள்ள அலுவலகத்துக்கு தெற்கு தாசில்தார் சரண்யா தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்டு அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • பாப்புலர் பிரண்டு அமைப்பின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

    திருவனந்தபுரம்:

    இந்தியாவில் செயல்பட்டு வந்த பாப்புலர் பிரண்டு அமைப்புக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது.

    இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்டு அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தியது.

    இதில் பல முக்கிய தஸ்தாவேஜூகளை அதிகாரிகள் கைப்பற்றினர். அதன் அடிப்படையில் பாப்புலர் பிரண்டு அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது.

    என்.ஐ.ஏ. அதிகாரிகளின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் கடந்த 23-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது பல இடங்களில் வன்முறையும் மூண்டது.

    இதில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் பாப்புலர் பிரண்டு அமைப்பின் நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர். நேற்று கோழிக்கோட்டில் உள்ள பாப்புலர் பிரண்டு அமைப்பின் தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.

    இதற்கிடையே தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பாப்புலர் பிரண்டு அமைப்பு நிர்வாகிகளின் காவல் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    அவர்களுக்கு வருகிற 20-ந் தேதி வரை 21 நாட்கள் காவலை நீட்டித்து என்.ஐ.ஏ. கோர்ட்டு உத்தரவிட்டது.

    • தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    • புதுவையிலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகள் சட்ட விரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு அதிரடியாக தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து தமிழகத்திலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புதுவையிலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகள் சட்ட விரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து புதுவை அரசின் தலைமை செயலர் ராஜூவர்மா நேற்று இரவு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்திலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) அமைப்பு மற்றும் தொடர்புடைய ரீஹேப் இந்தியா பவுண்டேசன், கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா, அனைத்திந்திய இமாம்கள் கவுன்சில், மனித உரிமைகள் அமைப்பின் தேசிய கூட்டமைப்பு, நேஷனல் உமன்ஸ் பிரண்ட், ஜூனியர்பிரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேசன் மற்றும் ரீஹேப் பவுண்டேசன் கேரளா ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனை அமல்படுத்த மாவட்ட கலெக்டர்கள், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×