search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலப்பாளையத்தில் பஸ் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
    X

    மேலப்பாளையத்தில் பஸ் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

    • மேலப்பாளையம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆவுடையப்பன் (வயது 51).
    • நேற்று காலை திடீரென ஆவுடையப்பன் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.

    நெல்லை:

    மேலப்பாளையம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆவுடையப்பன் (வயது 51). இவர் புதிய பஸ் நிலையம் அருகே சேவியர் காலனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், திருமணமான மகளும், மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று காலை திடீரென ஆவுடையப்பன் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆவுடையப்பன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மேலப் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×