search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kodai vizha"

    • இன்று காலை 8 மணிக்கு மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பொது மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    தென்திருப்பேரை:

    குரும்பூர் அருகே உள்ள அழகப்பபுரத்தில் ஸ்ரீ முத்தாரம்மன், ஸ்ரீ உச்சினி மாகாளியம்மன் கோவில் கொடை விழா கடந்த 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை நடைபெற்றது.

    கிருஷ்ண ஜெயந்தி

    கொடைவிழாவிற்கு முந்தைய நாளான 2-ந் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாலை 7 மணிக்கு குரும்பூர் ஸ்ரீ ஆதிநாராயண பெருமாள் கோவிலில் இருந்து சிறுவர்- சிறுமியரின் ராதாகிருஷ்ணர் கோபியர் சூழ ஸ்ரீ கிருஷ்ண பகவான் சப்பரம் புறப்பட்டு வீதி உலாவாக அழகப்பபுரம் கிருஷ்ணர் கோவில் வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து அன்று இரவு உறியடி திருவிழா, வழுக்கு மரம் ஏறுதல், தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது.

    3-ந் தேதி மாலை 6.15 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு இன்னிசை கச்சேரி நடைபெற்றது. 4-ந் தேதி இரவு 7 மணிக்கு குரும்பூர் ஶ்ரீ ஆதிநாராயண பெருமாள் கோவிலில் இருந்து கும்பம் ஏற்றுதல், குடி அழைப்பு, இரவு 11 மணிக்கு மாகாப்பு, மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    கொடை விழா

    கொடை விழாவை முன்னிட்டு குரும்பூர் ஸ்ரீ தர்மசுந்தர விநாயகர் கோவிலில் இருந்து நேற்று காலை 8 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல், நேமிசம் எடுத்து வருதல், காலை 10 மணிக்கு யாகசாலை பூஜை, கும்ப பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பகல் 12 மணிக்கு மதியக்கொடை, தீபாராதனை இரவு 8.30 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதல், இரவு 11 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 12 மணிக்கு படைப்பு சாமக்கொடை, தீபாராதனை நடைபெற்றது.

    இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு பொங்கலிடுதல், 8 மணிக்கு மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடை விழாவில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பொது மக்கள் அனைவருக்கும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை அன்னதானம் வழங்கப்பட்டது. கொடை விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் அழகப்பபுரம் ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • கொடை விழாவில் அழகியநம்பி, கோபி ஆகியோர் விசில் அடித்ததாக கூறப்படுகிறது.
    • அவதூறாக பேசியதை பார்த்த ரமேஷ்ராம் அதனை தட்டிக் கேட்டார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூரில் கோவில் கொடை விழா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது அதே ஊரை சேர்ந்த அழகியநம்பி, கோபி ஆகியோர் விசில் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோவில் தர்மகர்த்தா முருகன், அவரது மனைவி சீதாலெட்சுமி ஆகியோர் இருவரையும் சத்தம் போட்டனர்.

    இதையடுத்து அழகிய நம்பியும், கோபியும், முருகனையும், அவரது மனைவியையும் அவதூறாக பேசினர். இதைப்பார்த்த சங்கரசுப்பிரமணியன் மகன் ரமேஷ்ராம் (27) தட்டிக் கேட்டார்.

    இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அழகியநம்பி, கோபி, சந்தனசெல்வம், சுடலைமுத்து, நம்பிராஜன், மாயாண்டி, சூர்யா ஆகிய 7 பேரும் சேர்ந்து ரமேஷ்ராம், மகாலிங்கம், முத்துபாண்டி, முருகன் ஆகிய 4 பேரையும் கம்பியால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது தொடர்பாக வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி அழகியநம்பி உள்பட 7 பேரையும் தேடி வருகின்றனர்.

    • விழா நாட்களில் சமையல் போட்டி, மெகந்தி போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
    • அற்புத வினாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு கோவிலை அடைந்தது.

    திசையன்விளை:

    திசையன்விளை வடக்குத் தெரு சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா 20-ந் தேதி தொடங்கியது.

    விழா நாட்களில் விளையாட்டு போட்டிகள், கோல ப்போட்டி, சமய சொற்பொழிவு, இன்னி சை கச்சேரி, நாடகம், 1008 மாங்கல்ய பூஜை, திருவிளக்கு பூஜை, கம்ப்யூட்டர் போட்டி, சமையல் போட்டி, மெகந்தி போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    நேற்று இரவு பள்ளி மாணவ -மாணவிகளின் பரத நாட்டியம், சுடலை ஆண்டவர் இந்து புது எழுச்சி மன்றம் சார்பில் இன்னிசை கச்சேரி, கரகாட்டம் மற்றும் கலைநிகழ்ச்சி கள், வில்லிசை நாதஸ்வர கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது.

    நள்ளிரவில் அற்புத வினாயகர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க பால்குட ஊர்வலம் புறப்பட்டு கோவிலை அடைந்தது. தொடர்ந்து சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்ய ப்பட்டு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை முதல் அதிகாலை வரை கோவில் வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சேம்பர் செல்வராஜ் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

    • முதல் நாள் காலை சுடலைமாடசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு  வருஷாபிஷேகம்,சிறப்பு பூஜை    நடந்தது.     
    • 3-ம் நாள் கோவிலில்  பொங்கல் இடுதல், கலை நிகழ்ச்சி, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குதல்  நடந்தது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம்    தச்சமொழி    சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழா   10-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை 3 நாள்கள் நடந்தது. முதல் நாள் காலை உவரி ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், சுடலைமாடசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு  வருஷாபிஷேகம், அதனைத் தொடர்ந்து அபிஷேக அலங்கார தீபாராதனை, இரவு மாகாப்பு, அலங்கார தீபாராதனை, வில்லிசை, சிறப்பு பூஜை    நடந்தது.     

    2-ம் நாள் சிறப்பு அபிஷேகம், வில்லிசை, பொங்கல் இடுதல், சுவாமி மஞ்சள் நீராடுதல், சிறப்பு அலங்கார பூஜை, மாலை திருவிளக்கு பூஜை, இரவு வில்லிசை, சாமக் கொடை நடந்தது. 3-ம் நாள் கோவிலில்  பொங்கல் இடுதல், கிடா வெட்டி சாமிக்கு உணவு படைத்தல், மாலை சிறுவர்- சிறுமியர் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சி, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குதல்  நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர், கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • விவசாயம் செழிக்க வேண்டி பாடல்கள் பாடி பெண்கள் கலந்து கொண்ட 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • விழாவில் அம்பாள் பூ ஆலங்கார சப்பரத்தில் பவனி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    உடன்குடி:

    உடன்குடி வைத்தி லிங்கபுரம் உச்சினி மாகாளி அம்பாள், பட்டரை அம்பாள் கோவில் வருடாந்திர கொடை விழா 7-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் நாட்டின் நல்ல கனமழை பொழிந்து பூமி செழிக்க வேண்டியும், உடன்குடி பகுதியில் உள்ள குளம், குட்டைகள் முழுமையாக நிரம்பி நிலத்தடி நீரை பாதுகாத்து விவசாயம் செழிக்க வேண்டி பாடல்கள் பாடி பெண்கள் கலந்து கொண்ட 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    தொடர்ந்து மோகனசுந்தரம் சமயச் சொற்பொழிவு, அம்பாளுக்கு மாக்காப்பு அலங்காரத்துடன் தீபாராதனை, அம்பாள் திருக்கும்பத்தில் பவனி, உடன்குடி கீழ பஜார் கண்டுகொண்ட விநாயகர் ஆலயத்தில் இருந்து மேளதாளம், வாண வேடிக்கையுடன் பஜார் வழியாக பால்குட பவனி, அம்பாளுக்கு வெள்ளி அங்கி அணிதல், அலங்காரத்துடன் மகாதீபாராதனை, பெண்கள் காணிக்கை, நியமனங்கள் செலுத்துதல், அம்பாள் பூ ஆலங்கார சப்பரத்தில் பவனி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நேற்று முன்தினம் காலையில் பொங்கல் வைத்தல், அம்பாள் திருக்கு ம்பத்தில் மஞ்சள் நீராடுதல், வரிபிரசாதம் வழங்கல் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஊர்மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி 3-ம் வெள்ளி கொடை விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • இரவு 7 மணிக்கு அம்பாளுக்கும், சந்தன கருப்பசாமிக்கும் சந்தனகாப்பு அலங்காரம் செய்து சைவ படைப்பு போட்டு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி கதிரேசன் ரோட்டில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி 3-ம் வெள்ளி கொடை விழாவை முன்னிட்டு சிறப்புப் பூஜை நடைப்பெற்றது. இதனையொட்டி காலை 8 மணிக்கு மஞ்சள், பால், குங்குமம், பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு அம்பாளுக்கும், சந்தன கருப்பசாமிக்கும் சந்தனகாப்பு அலங்காரம் செய்து சைவ படைப்பு போட்டு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது. பூஜைகளை அர்ச்சகர் சுப்பிரமணி அய்யர் செய்தார்.

    விழாவில் கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி பேராசிரியை ஸ்ரீமதி தியாக ராஜன் பக்தி சொற்பொழிவு ஆற்றினார்.
    • 2-ம் நாள் காலையிலும், மாலையிலும் சிறப்பு பூஜையும், வில்லிசையை தொடர்ந்து இரவில் மாகாப்பு அலங்கார பூஜையும் நடந்தன.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி மெயின் பஜாரில் உள்ள பத்திர காளியம்மன் கோவில் கொடை விழா 3 நாட்கள் நடைபெற்றது.

    முதல் நாள் காலையில் மகா கணபதி ஹோமமும், தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து கோவிலின் முகப்பு மண்டபம் திறப்பு விழா நடந்தது. மாலையில் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி பேராசிரியை ஸ்ரீமதி தியாக ராஜன் பக்தி சொற்பொழிவு ஆற்றினார். பின்னர் திரு விளக்கு பூஜையும், அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும் நடந்தன.

    2-ம் நாள் காலையிலும், மாலையிலும் சிறப்பு பூஜையும், வில்லிசையை தொடர்ந்து இரவில் மாகாப்பு அலங்கார பூஜையும் நடந்தன. நிறைவு நாளன்று மதியம் உச்சிகால பூஜையும்,அன்னதானமும் நடந்தது. இரவில் பிரம்மசக்தி அம்மன் கோவிலில் இருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து கும்மி அடித்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அம்மனுக்கு நடுசாம பூஜையில் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நிறைவாக இன்று (புதன் கிழமை) காலையில் தீர்த்தவாரி அபிஷேகம் நடந்தது.

    நிகழ்ச்சிகளில் மேலாத்தூர் ராகவன், மாரிபாலன் ராஜா ராம், விஜயகுமார், பேரூராட்சி கவுன்சிலர் ரவிச்சந்திரன், சீனிவாசகன், முருகேசன் நாடார், சுந்தரலிங்கம், பாலசுப்பிர மணியன், ராமசாமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன்ராஜ், பொன் சின்னதுரை, கோட்டாளம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் கிழக்கத்திமுத்து, ஆதிசேஷன், அமிர்தராஜ், மூக்காண்டி, பார்வதி குமார், தூசிமுத்து, விஜயன், பாலகணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அம்மனுக்கு ஊட்டுபடைத்தல் நடைபெற்றது.
    • இன்று பொங்கல் வழிபாடு, திருஷ்டி பூஜை நடக்கிறது.

    முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவிலில் பூக்குழி கொடைவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் இருந்து ஆலமூடு அம்மன் ஜோதி புறப்பட்டு ஆலங்கோட்டை வந்தது. அங்கு சிவசுடலைமாடசாமி கோவிலில் அன்னதானம் நடந்தது. பின்னர் பல ஊர்கள் வழியாக ஊர்வலமாக சென்று ஆலமூடு அம்மன் கோவிலை வந்தடைந்தது.

    விழாவில் நேற்று முன்தினம் மாலையில் அம்மன் சிங்க வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் தொடர்ந்து திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

    விழாவில் நேற்று காலையில் ஆரல்வாய்மொழி வடக்கூர் அகலிகை ஊற்று அருகே உள்ள குட்டிகுளத்து இசக்கியம்மன் கோவில் பிள்ளையார் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு ஆலமூடு அம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். பக்தர்கள் சேவா சங்க தலைவர் சத்தியசீலன் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் தொடங்கி வைத்தார்.

    இதில் நிர்வாகிகள் மகாலிங்கம், சதீஷ், ராஜேந்திரன், ரவிச்சந்திரன், அருணா ஸ்டாலின், ராஜேஷ், அருள்ராஜ், மாரியப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஊர்வலத்தில் பக்தர்கள் பூங்கரகம், முளைப்பாரி, பால்குடங்கள் சுமந்தும், சில பக்தர்கள் அலகு குத்தியும் வந்தனர்.

    ஊர்வலம் வடக்கூர், சந்திப்பு, எம்.ஜி.ஆர் நகர், மருத்துவர் நகர், மூவேந்தர் நகர் வழியாக ஆலமுடு அம்மன் கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார தீபாராதனை, அக்னிசட்டி எடுத்தல், அம்மன் தேரில் பவனி வருதல் நடந்தது.

    இரவு பூப்படைப்பும், தொடர்ந்து பூக்குழி பூஜையும் நடைபெற்றது. இதில் காசி ஆத்ம சைதன்னியா பீடம் குருமகாசன்னிதானம் ஜெகத்குரு கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் 41 நாட்கள் மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இதில் திரளானோர் கலந்துகொண்டனர். அதிகாலையில் அம்மனுக்கு ஊட்டுபடைத்தல் நடைபெற்றது.

    விழாவில் இன்று (புதன்கிழமை) பொங்கல் வழிபாடு, மஞ்சள் நீராடுதல், அன்னதானம் மற்றும் திருஷ்டி பூஜை ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் இ. அருணாசலம் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் சேவா சங்கத்தினர், விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • 1-ந்தேதி இரவு 12 மணிக்கு சாம கொடை விழா நடக்கிறது.
    • 2-ந்தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்து மறுபூஜை நடக்கிறது.

    கோவை சங்கனூர்-நல்லம்பாளையம் ரோட்டில் ஞானமூர்த்தீஸ் வரர் சமேத முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கொடை விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 20-ம் ஆண்டு கொடை விழா நேற்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முகூர்த்தகால் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவிலை சுற்றி கொண்டு வரப்பட்டது. பின்னர் பக்தர்கள் சூழ முகூர்த்த கால் கோவில் வளாகத்தில் நடப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    வருகிற 30-ந் தேதி மாலை 6 மணிக்கு 501 திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு பட்டி மன்றம் நடக்கிறது. 31-ந் தேதி இரவு வில்லிசை நிகழ்ச்சி, நள்ளிரவில் அம்மனுக்கு குடியழைப்பு பூஜை மற்றும் மாக்காப்பு தீபாராதனை நடக்கிறது.

    அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந் தேதி காலை 10 மணிக்கு வில்லிசை, மதிய கொடை விழா மற்றும் அம்மன் திருவீதி உலா, மாலை 6 மணிக்கு மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் அழைப்பு நடக்கும். அன்று இரவு 12 மணிக்கு சாம கொடை விழா மற்றும் வான வேடிக்கை நடக்கிறது. 2-ந் தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்து மறுபூஜை நடக்கிறது.

    • 1-ந்தேதி கும்பம் திருவீதி எழுந்தருளல் நடக்கிறது.
    • 2-ந்தேதி சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடக்கிறது.

    தமிழகத்தில் தசரா திருவிழாவில் முதலிடம் வகிக்கும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடி கொடை விழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு கொடை விழா வரும் வருகிற 31-ந் தேதி இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து 10 மணிக்கு வில்லிசை நடக்கிறது.

    ஆகஸ்டு 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணி, 8.30 மணி, மாலை 5 மணி, இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடக்கிறது. காலை 10 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல், 11.15 மணிக்கு வில்லிசை, மதியம் 12 மணி, இரவு 7 மணிக்கு அன்னதானம், இரவு 8 மணிக்கு வில்லிசை, இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, இரவு 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல் நடக்கிறது.

    2-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு சிறப்பு மகுடம், 10 மணிக்கு சிற்றுண்டி அன்னதானம், 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல், 11.30 மணிக்கு வில்லிசை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராட்டு விழா, இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடக்கிறது.

    ஏற்பாடுகளை தூத்துக்குடி இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர், கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • நேற்று நடந்த மதிய பூஜையில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
    • இரவு 7 மணிக்கு பூலுடையார் சாஸ்தா சப்பர வீதிஉலா நடைபெற்றது.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி கிராமத்தில் பூலுடையார் சாஸ்தா, கொம்பு மாடசாமி கோவில் கொடைவிழா நடைபெற்றது. இதனையொட்டி நேற்று நடந்த மதிய பூஜையில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    அவருடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வக்குமார், மாவட்ட மாணவரணி நவநீதகிருஷ்ணன், கிளை செயலாளர் முருகன், ஆசூர் காளிப்பாண்டியன், இலக்கிய அணி பாலகணேசன், முன்னாள் வார்டு கவுன்சிலர் இருளப்ப பாண்டியன், கடம்பூர் துரை உட்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளரும், கயத்தாறு ஒன்றிய சேர்மனுமான எஸ்.பி.எஸ்.பி. மாணிக்கராஜா சாமி தரிசனம் செய்தார். அவருடன் கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் கணபதி பாண்டியன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் உடையார் பாண்டியன், சவலாப்பேரி பஞ்சாயத்து தலைவர் பூல்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருவிழாவில் கிடாவெட்டு, பால்குடம், முடிகாணிக்கை, அன்னதான நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு பூலுடையார் சாஸ்தா சப்பர வீதிஉலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • 28-ந்தேதி இரவு 12 மணிக்கு நள்ளிரவு பூஜை நடைபெறும்.
    • 29-ந்தேதி முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது.

    கழுகுமலை மருத்துவ சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன், சப்பாணி மாடசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து விநாயகர், சப்பாணி மாடசாமி, கருப்பசாமி, பேச்சியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணிக்கு கோவில் வளாகத்தில் கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெறும். வருகிற 27-ந் தேதி மாலை 6 மணியளவில் பெண்கள் பங்கேற்கும் 501 திருவிளக்கு பூஜை நடக்கிறது.

    28-ந்தேதி மதியம் 12 மணியளவில் உச்சிகால பூஜையும், இரவு 12 மணிக்கு நள்ளிரவு பூஜையும் நடைபெறும். 29-ந்தேதி காலை 10 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. மதியம் 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, மாலை 6 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் மற்றும் அக்கினி சட்டி எடுத்து ஊர்வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது

    ×