search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pathirakaliamman Temple"

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பத்திரகாளியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை மம்சாபுரம் சிவந்திபட்டி இந்து நாடார் உறவின்முறையினர் செய்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் சிவந்திப்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திரு விழா கடந்த 1-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் புரட்டாசி திரு விழாவில் தினசரி இரவு பத்திரகாளியம்மன் பல் வேறு சிறப்பு அலங்காரங் களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ் வான காலை பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதன்பின் சர்வ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய பத்திரகாளி யம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு, வடம் பிடித்து தேரை இழுத்தனர். மஞ்சள் தீர்த்த வாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை மம்சாபுரம் சிவந்திபட்டி இந்து நாடார் உறவின்முறையினர் செய்து வருகின்றனர்.

    • திருமங்கலம் காட்டு பத்திரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • கடந்த 15 ஆண்டுகளுக்கு பின்பு கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் வேங்கடசமுத்திரத்தில் அமைந்துள்ளது காட்டுபத்திரகாளியம்மன் கோவில். இந்த கோவிலில் இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கிவருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு பின்பு கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.

    கடந்த ஆகஸ்ட் 30-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேகபணிகள் தொடங்கின. இதனை யொட்டி புதியதாக சிவபெருமான் சன்னதி, கருமாரியம்மன் சன்னதி மற்றும் மடப்பள்ளி அமைக்கப்பட்டது. 31-ந்தேதி கணபதி ஹோமம் நடைபெற்றது.

    செப்டம்பர் 1-ந்தேதி முதல் தொடங்கி யாகசாலை பூஜைகள் நடந்தது. இன்று திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவில் சிவாச்சாரியார் சங்கர நாராயணபட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய கலசங்களை தலையில் சுமந்து கோவிலை சுற்றி வந்தனர். காலை 6.20 மணிக்கு காட்டுபத்திர காளியம்மன் கோவில் கோபுரவிமானத்தில் சிவாச்சாரியார்கள் வேத மத்திரங்கள், மேளதாளங்கள் முழங்க புனிதநீர் ஊற்றி கும்பா பிஷேகம் நடத்தின.

    இந்து சமய அறநிலையத்துறையின் மதுரை மண்டல இணை ஆணையாளர் செல்லத்துரை, காட்டுபத்திர காளியம்மன் கோவில் நிர்வாக அதிகாரி அங்கையர் கன்னி, தர்க்கார் சர்க்கரை அம்மாள், ஆய்வாளர் சாந்தி கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    கும்பாபிஷேகத்தில் திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், முன்னாள் நகராட்சி தலைவர் உமாவிஜயன், நகராட்சி கவுன்சிலர்கள் திருக்குமார், விரக்குமார், திருக்குமார், அமுதா சரவணன், போதுராஜன், திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழாவையொட்டி கடந்த 8-ந்தேதி காலை கணபதி ஹோமத்துடன் கால்நாட்டு விழா நடைபெற்றது.
    • நேற்று இரவு மழை வளம் தொழில்வளம் பெருகவேண்டும் ஆகியவற்றிற்காக சிறப்பு பஜனையுடன் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பிரையண்டநகர் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி யம்மன் கோவில் கொடை விழாவையொட்டி கடந்த 8-ந்தேதி காலை கணபதி ஹோமத்துடன் கால்நாட்டு விழா நடைபெற்றது.

    நேற்று இரவு மழை வளம், நாட்டின் ஓற்றுமை, மனித நேயம், அமைதி, தொழில்வளம் பெருகவேண்டும், கொரோனா கொடிய நோயிலிருந்து விடுபட்டு அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வேண்டும் ஆகியவற்றிற்காக சிறப்பு பஜனையுடன் 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா முத்துராஜன், பொருளாளர் ஐகோர்ட் துரை, கொடைவிழா தலைவர் முருகேசன், திருப்பணி குழு தலைவர் பசுபதி, துணை தர்ம கர்த்தாக்கள் துரைராஜ், பாக்கியநாதன், மாடசாமி, வன்னிராஜ், ராஜவேல், ராமசந்திரன், துணைச்செயலாளர்கள் பொன்ராஜ், மணிராஜ், வேம்படி துரை, ஆத்திமுத்து குமார், ஜெயபால், சிவலிங்க ராஜா, ஜெயபால், ஜெயக்குமார், கோவில் நிர்வாக கமிட்டியாளர்கள், மகளிர் அணியினர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி பேராசிரியை ஸ்ரீமதி தியாக ராஜன் பக்தி சொற்பொழிவு ஆற்றினார்.
    • 2-ம் நாள் காலையிலும், மாலையிலும் சிறப்பு பூஜையும், வில்லிசையை தொடர்ந்து இரவில் மாகாப்பு அலங்கார பூஜையும் நடந்தன.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி மெயின் பஜாரில் உள்ள பத்திர காளியம்மன் கோவில் கொடை விழா 3 நாட்கள் நடைபெற்றது.

    முதல் நாள் காலையில் மகா கணபதி ஹோமமும், தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து கோவிலின் முகப்பு மண்டபம் திறப்பு விழா நடந்தது. மாலையில் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி பேராசிரியை ஸ்ரீமதி தியாக ராஜன் பக்தி சொற்பொழிவு ஆற்றினார். பின்னர் திரு விளக்கு பூஜையும், அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும் நடந்தன.

    2-ம் நாள் காலையிலும், மாலையிலும் சிறப்பு பூஜையும், வில்லிசையை தொடர்ந்து இரவில் மாகாப்பு அலங்கார பூஜையும் நடந்தன. நிறைவு நாளன்று மதியம் உச்சிகால பூஜையும்,அன்னதானமும் நடந்தது. இரவில் பிரம்மசக்தி அம்மன் கோவிலில் இருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து கும்மி அடித்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அம்மனுக்கு நடுசாம பூஜையில் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நிறைவாக இன்று (புதன் கிழமை) காலையில் தீர்த்தவாரி அபிஷேகம் நடந்தது.

    நிகழ்ச்சிகளில் மேலாத்தூர் ராகவன், மாரிபாலன் ராஜா ராம், விஜயகுமார், பேரூராட்சி கவுன்சிலர் ரவிச்சந்திரன், சீனிவாசகன், முருகேசன் நாடார், சுந்தரலிங்கம், பாலசுப்பிர மணியன், ராமசாமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன்ராஜ், பொன் சின்னதுரை, கோட்டாளம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் கிழக்கத்திமுத்து, ஆதிசேஷன், அமிர்தராஜ், மூக்காண்டி, பார்வதி குமார், தூசிமுத்து, விஜயன், பாலகணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • விழா நாட்களில் தினமும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
    • 10-ம் திருநாளான இன்று அதிகாலையில் கோவில் முன்பு பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.

    விழாவை முன்னிட்டு தினமும் இரவு 7மணிக்கு அம்மன் பக்தர்களுக்கு கட்சி கொடுத்தல், கோவில் முன்பு உள்ள மண்டபத்தில் பக்தி சொற்பொழிவு, இரவு 8 மணிக்கு பெருந்தவைர் காமராஜார் சிலை அருகே கலை நிகழ்ச்சிகள் மற்றும் பட்டிமன்றம் நடைபெற்றது.

    9-ம் திருநாளான நேற்று காலை 9 மணிக்கு பக்தர்கள் தெற்கு நந்தவனத்திலிருந்து பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து அம்பாளுக்கு பாலாபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

    மாலையில் பெண்கள் மாவிளக்கு கையில் ஏந்தி மற்றும் 51 அக்னி சட்டி ஊர்வலம் சென்றனர்.

    பின்னர் அம்பாள் வெள்ளி சிம்ம வாகனத்தில் வெள்ளிக்குடையின் கீழ் வீற்றிருந்து தங்கக்குடம், வாளி ஏந்தி தீர்த்தம் எடுக்கும் திருக்கோலத்துடன் திருவீதியுலா நடைபெற்றது.

    10-ம் திருநாளான இன்று அதிகாலையில் கோவில் முன்பு பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடந்து மாலை 3 மணிக்கு மேல் மஞ்சள் நீராட்டு விழா மற்றும் முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் பல்லக்கில் கோவிலை சுற்றி வரும் நிகழ்ச்சி ஆகியன நடைபெறுகின்றன.

    நாளை (வியாழக்கிழமை) இரவு வில்லிசை நிகழ்ச்சியும், நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனி செல்வம், உபதலைவர் செல்வராஜ், செயலாளர் ஜெயபாலன். பொருளாளர் சுரேஷ்குமார், உறுப்பினர்கள் ராஜேந்திரபிரசாத், மாடசாமி, மகேந்திரன், பத்திரகாளியம்மன் கோவில் குழுவினர் தர்ம கர்த்தா மாரியப்பன், செயலாளர் மாணிக்கம், உறுப்பினர் ரஜேந்தின், பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டு, கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இன்று அதிகாலை குண்டம் இறங்கும் விழா நடைபெற்றது.

    ஈரோடு:

    ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி (மாசி 9) பூச்சாட்டு, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனைத்தொடர்ந்து கடந்த 5-ந் தேதி அம்மனுக்கு பால் அபிஷேகமும், 6-ந் தேதி அக்னி கபாலமும் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று குண்டம் பற்ற வைத்தல் நிகழ்ச்சி நடந்தது.

    இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. பின்னர் பூ மிதித்தல் எனப்படும் குண்டம் இறங்கும் விழா காலை 5 மணிக்கு நடைபெற்றது. முதலில் தலைமை பூசாரி பிரதீப் குண்டம் இறங்கினர்.

    தொடர்ந்து கங்கணம் கட்டி விரதமிருந்த ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், சிறுவர், சிறுமியர்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.

    இதில் கோவை, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல் உள்பட ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் 4 நாட்களாக வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    இதனைத்தொடர்ந்து இரவு பத்திரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் நகர் வலமும், நாளை மறு பூஜையும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் தங்காயம்மள் செய்திருந்தார்.

    குண்டம் விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    ×