பத்திரகாளியம்மன் கோவில் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பத்திரகாளியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.விழா ஏற்பாடுகளை மம்சாபுரம் சிவந்திபட்டி இந்து நாடார் உறவின்முறையினர் செய்து வருகின்றனர்.
பத்திரகாளியம்மன் கோவில் தேரோட்டம்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் சிவந்திப்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திரு விழா கடந்த 1-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் புரட்டாசி திரு விழாவில் தினசரி இரவு பத்திரகாளியம்மன் பல் வேறு சிறப்பு அலங்காரங் களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ் வான காலை பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதன்பின் சர்வ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய பத்திரகாளி யம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு, வடம் பிடித்து தேரை இழுத்தனர். மஞ்சள் தீர்த்த வாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை மம்சாபுரம் சிவந்திபட்டி இந்து நாடார் உறவின்முறையினர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com