search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பெண்கள் மாவிளக்கு ஊர்வலம்
    X

    சித்திரை திருவிழாவில் பெண்கள் மாவிளக்கு ஊர்வலம் சென்ற போது எடுத்த படம்.

    கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பெண்கள் மாவிளக்கு ஊர்வலம்

    • விழா நாட்களில் தினமும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
    • 10-ம் திருநாளான இன்று அதிகாலையில் கோவில் முன்பு பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.

    விழாவை முன்னிட்டு தினமும் இரவு 7மணிக்கு அம்மன் பக்தர்களுக்கு கட்சி கொடுத்தல், கோவில் முன்பு உள்ள மண்டபத்தில் பக்தி சொற்பொழிவு, இரவு 8 மணிக்கு பெருந்தவைர் காமராஜார் சிலை அருகே கலை நிகழ்ச்சிகள் மற்றும் பட்டிமன்றம் நடைபெற்றது.

    9-ம் திருநாளான நேற்று காலை 9 மணிக்கு பக்தர்கள் தெற்கு நந்தவனத்திலிருந்து பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து அம்பாளுக்கு பாலாபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

    மாலையில் பெண்கள் மாவிளக்கு கையில் ஏந்தி மற்றும் 51 அக்னி சட்டி ஊர்வலம் சென்றனர்.

    பின்னர் அம்பாள் வெள்ளி சிம்ம வாகனத்தில் வெள்ளிக்குடையின் கீழ் வீற்றிருந்து தங்கக்குடம், வாளி ஏந்தி தீர்த்தம் எடுக்கும் திருக்கோலத்துடன் திருவீதியுலா நடைபெற்றது.

    10-ம் திருநாளான இன்று அதிகாலையில் கோவில் முன்பு பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடந்து மாலை 3 மணிக்கு மேல் மஞ்சள் நீராட்டு விழா மற்றும் முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் பல்லக்கில் கோவிலை சுற்றி வரும் நிகழ்ச்சி ஆகியன நடைபெறுகின்றன.

    நாளை (வியாழக்கிழமை) இரவு வில்லிசை நிகழ்ச்சியும், நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனி செல்வம், உபதலைவர் செல்வராஜ், செயலாளர் ஜெயபாலன். பொருளாளர் சுரேஷ்குமார், உறுப்பினர்கள் ராஜேந்திரபிரசாத், மாடசாமி, மகேந்திரன், பத்திரகாளியம்மன் கோவில் குழுவினர் தர்ம கர்த்தா மாரியப்பன், செயலாளர் மாணிக்கம், உறுப்பினர் ரஜேந்தின், பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×