என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கயத்தாறு அருகே சவலாப்பேரி கொம்பு மாடசாமி கோவில் கொடை விழா
- நேற்று நடந்த மதிய பூஜையில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
- இரவு 7 மணிக்கு பூலுடையார் சாஸ்தா சப்பர வீதிஉலா நடைபெற்றது.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி கிராமத்தில் பூலுடையார் சாஸ்தா, கொம்பு மாடசாமி கோவில் கொடைவிழா நடைபெற்றது. இதனையொட்டி நேற்று நடந்த மதிய பூஜையில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
அவருடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வக்குமார், மாவட்ட மாணவரணி நவநீதகிருஷ்ணன், கிளை செயலாளர் முருகன், ஆசூர் காளிப்பாண்டியன், இலக்கிய அணி பாலகணேசன், முன்னாள் வார்டு கவுன்சிலர் இருளப்ப பாண்டியன், கடம்பூர் துரை உட்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளரும், கயத்தாறு ஒன்றிய சேர்மனுமான எஸ்.பி.எஸ்.பி. மாணிக்கராஜா சாமி தரிசனம் செய்தார். அவருடன் கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் கணபதி பாண்டியன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் உடையார் பாண்டியன், சவலாப்பேரி பஞ்சாயத்து தலைவர் பூல்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவிழாவில் கிடாவெட்டு, பால்குடம், முடிகாணிக்கை, அன்னதான நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு பூலுடையார் சாஸ்தா சப்பர வீதிஉலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்