search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அழகப்பபுரம் கிராமத்தில் முத்தாரம்மன்,  உச்சினி மாகாளியம்மன்  கோவில் கொடை விழா
    X

    முத்தாரம்மன், ஸ்ரீ உச்சினி மாகாளியம்மன் கோவில் கொடை விழாவில் யாகசாலை பூஜை நடைபெற்ற காட்சி.

    அழகப்பபுரம் கிராமத்தில் முத்தாரம்மன், உச்சினி மாகாளியம்மன் கோவில் கொடை விழா

    • இன்று காலை 8 மணிக்கு மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பொது மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    தென்திருப்பேரை:

    குரும்பூர் அருகே உள்ள அழகப்பபுரத்தில் ஸ்ரீ முத்தாரம்மன், ஸ்ரீ உச்சினி மாகாளியம்மன் கோவில் கொடை விழா கடந்த 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை நடைபெற்றது.

    கிருஷ்ண ஜெயந்தி

    கொடைவிழாவிற்கு முந்தைய நாளான 2-ந் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாலை 7 மணிக்கு குரும்பூர் ஸ்ரீ ஆதிநாராயண பெருமாள் கோவிலில் இருந்து சிறுவர்- சிறுமியரின் ராதாகிருஷ்ணர் கோபியர் சூழ ஸ்ரீ கிருஷ்ண பகவான் சப்பரம் புறப்பட்டு வீதி உலாவாக அழகப்பபுரம் கிருஷ்ணர் கோவில் வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து அன்று இரவு உறியடி திருவிழா, வழுக்கு மரம் ஏறுதல், தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது.

    3-ந் தேதி மாலை 6.15 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு இன்னிசை கச்சேரி நடைபெற்றது. 4-ந் தேதி இரவு 7 மணிக்கு குரும்பூர் ஶ்ரீ ஆதிநாராயண பெருமாள் கோவிலில் இருந்து கும்பம் ஏற்றுதல், குடி அழைப்பு, இரவு 11 மணிக்கு மாகாப்பு, மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    கொடை விழா

    கொடை விழாவை முன்னிட்டு குரும்பூர் ஸ்ரீ தர்மசுந்தர விநாயகர் கோவிலில் இருந்து நேற்று காலை 8 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல், நேமிசம் எடுத்து வருதல், காலை 10 மணிக்கு யாகசாலை பூஜை, கும்ப பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பகல் 12 மணிக்கு மதியக்கொடை, தீபாராதனை இரவு 8.30 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதல், இரவு 11 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 12 மணிக்கு படைப்பு சாமக்கொடை, தீபாராதனை நடைபெற்றது.

    இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு பொங்கலிடுதல், 8 மணிக்கு மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடை விழாவில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பொது மக்கள் அனைவருக்கும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை அன்னதானம் வழங்கப்பட்டது. கொடை விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் அழகப்பபுரம் ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    Next Story
    ×