என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளம் அருகே சுடலைமாடசுவாமி கோவில்  கொடை விழா
    X

    சாத்தான்குளம் அருகே சுடலைமாடசுவாமி கோவில்  கொடை விழா

    • முதல் நாள் காலை சுடலைமாடசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு  வருஷாபிஷேகம்,சிறப்பு பூஜை    நடந்தது.     
    • 3-ம் நாள் கோவிலில்  பொங்கல் இடுதல், கலை நிகழ்ச்சி, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குதல்  நடந்தது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம்    தச்சமொழி    சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழா   10-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை 3 நாள்கள் நடந்தது. முதல் நாள் காலை உவரி ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், சுடலைமாடசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு  வருஷாபிஷேகம், அதனைத் தொடர்ந்து அபிஷேக அலங்கார தீபாராதனை, இரவு மாகாப்பு, அலங்கார தீபாராதனை, வில்லிசை, சிறப்பு பூஜை    நடந்தது.     

    2-ம் நாள் சிறப்பு அபிஷேகம், வில்லிசை, பொங்கல் இடுதல், சுவாமி மஞ்சள் நீராடுதல், சிறப்பு அலங்கார பூஜை, மாலை திருவிளக்கு பூஜை, இரவு வில்லிசை, சாமக் கொடை நடந்தது. 3-ம் நாள் கோவிலில்  பொங்கல் இடுதல், கிடா வெட்டி சாமிக்கு உணவு படைத்தல், மாலை சிறுவர்- சிறுமியர் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சி, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குதல்  நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர், கமிட்டியினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×