search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழாவில் பால்குட ஊர்வலம்- திரளானவர்கள் கலந்து கொண்டனர்
    X

    கொடைவிழாவிற்கு வந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

    திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழாவில் பால்குட ஊர்வலம்- திரளானவர்கள் கலந்து கொண்டனர்

    • விழா நாட்களில் சமையல் போட்டி, மெகந்தி போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
    • அற்புத வினாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு கோவிலை அடைந்தது.

    திசையன்விளை:

    திசையன்விளை வடக்குத் தெரு சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா 20-ந் தேதி தொடங்கியது.

    விழா நாட்களில் விளையாட்டு போட்டிகள், கோல ப்போட்டி, சமய சொற்பொழிவு, இன்னி சை கச்சேரி, நாடகம், 1008 மாங்கல்ய பூஜை, திருவிளக்கு பூஜை, கம்ப்யூட்டர் போட்டி, சமையல் போட்டி, மெகந்தி போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    நேற்று இரவு பள்ளி மாணவ -மாணவிகளின் பரத நாட்டியம், சுடலை ஆண்டவர் இந்து புது எழுச்சி மன்றம் சார்பில் இன்னிசை கச்சேரி, கரகாட்டம் மற்றும் கலைநிகழ்ச்சி கள், வில்லிசை நாதஸ்வர கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது.

    நள்ளிரவில் அற்புத வினாயகர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க பால்குட ஊர்வலம் புறப்பட்டு கோவிலை அடைந்தது. தொடர்ந்து சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்ய ப்பட்டு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை முதல் அதிகாலை வரை கோவில் வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சேம்பர் செல்வராஜ் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

    Next Story
    ×