என் மலர்
உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே கோவில் கொடை விழாவில் விசில் அடித்ததை தட்டிக் கேட்டதில் தகராறு- 4 பேர் மீது தாக்குதல்
- கொடை விழாவில் அழகியநம்பி, கோபி ஆகியோர் விசில் அடித்ததாக கூறப்படுகிறது.
- அவதூறாக பேசியதை பார்த்த ரமேஷ்ராம் அதனை தட்டிக் கேட்டார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூரில் கோவில் கொடை விழா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அதே ஊரை சேர்ந்த அழகியநம்பி, கோபி ஆகியோர் விசில் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோவில் தர்மகர்த்தா முருகன், அவரது மனைவி சீதாலெட்சுமி ஆகியோர் இருவரையும் சத்தம் போட்டனர்.
இதையடுத்து அழகிய நம்பியும், கோபியும், முருகனையும், அவரது மனைவியையும் அவதூறாக பேசினர். இதைப்பார்த்த சங்கரசுப்பிரமணியன் மகன் ரமேஷ்ராம் (27) தட்டிக் கேட்டார்.
இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அழகியநம்பி, கோபி, சந்தனசெல்வம், சுடலைமுத்து, நம்பிராஜன், மாயாண்டி, சூர்யா ஆகிய 7 பேரும் சேர்ந்து ரமேஷ்ராம், மகாலிங்கம், முத்துபாண்டி, முருகன் ஆகிய 4 பேரையும் கம்பியால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது தொடர்பாக வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி அழகியநம்பி உள்பட 7 பேரையும் தேடி வருகின்றனர்.






