search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kerala flood"

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. #KeralaFloodRelief
    தூத்துக்குடி:

    கேரள மாநிலத்தில் கடந்த வாரங்களில் பெய்த கனமழைக்கு சுமார் 380 பேர் பலியானார்கள். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் சார்பில் கேரளா மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக காய்கறிகள், எண்ணை, தேங்காய், அரிசி மற்றும் உணவு பொருட்கள், பிஸ்கட்கள், பழங்கள், சுத்தம் செய்வதற்கு பயன்படும் பொருட்கள், மீட்புக்கருவிகள், மருந்து பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இவை அனைத்தும் தனித்தனியாக பேக்கிங் செய்யப்பட்டு ஒரு கண்டெய்னர் லாரியில் நிரப்பப்பட்டு கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வாகனத்தை ஸ்டெர்லைட் நிறுவன பொது மேலாளர் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இவை கேரளா பத்தனம் திட்டா பகுதி தாசில்தாரிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறது. #KeralaFloodRelief
    தொடர் கனமழையால் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ள கேரளா மாநிலத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடி நிதி வழங்க முடிவு செய்துள்ளார். #KeralaRain #KeralaFlood #Lawrence
    கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அம்மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

    கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி நிதியுதவியாக வழங்க முடிவு செய்துள்ளார். இதை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் வரும் 25ம் தேதி நேரில் சென்று வழங்க இருக்கிறார்.

    முன்னதாக நடிகர்கள் கமல், ரஜினி, சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, பிரபு, நடிகைகள் ரோஹினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், இயக்குனர்கள் சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட நிதியுதவி வழங்கியுள்ளார்கள். 



    நடிகர் விக்ரம் ரூ.35 லட்சமும், நடிகர் விஜய் ரூ.70 லட்சமும் நிதியுதவி வழங்கியுள்ளார். #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief 
    கேரள மழை வெள்ளத்தில் சபரிமலையில் ரூ.100 கோடி மதிப்புள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார். #keralaflood #sabarimala
    திருவனந்தபுரம் :

    கேரளாவில் மழை வெள்ளத்தினால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

    பம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் 2 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன., சபரிமலையில் உள்ள அன்னதான மண்டபம், ராமமூர்த்தி மண்டபம், நடைபயண மண்டபம் மற்றும் சர்வீஸ் ரோடு உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளன.

    இதனை ஆய்வு செய்த திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார், சபரிமலையில் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவித்தார். #keralaflood #sabarimala
    தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கை 2016-ன் படி வெளிநாட்டில் இருந்து வரும் நிதியுதவியை ஏற்க வேண்டும் என மத்திய அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார். #KeralaFlood #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    கேரள மழை வெள்ளத்துக்கு நிவாரணமாக ஐக்கிய அமீரக அரசு ரூ.700 கோடி தருவதாக கூறியது. ஆனால், பேரிடர் சமையத்தில் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதில்லை என மத்திய அரசு கொள்கை முடிவு வைத்துள்ளதாக கூறப்பட்டு ஐக்கிய அமீரகத்தின் நிதியுதவியை ஏற்க மறுப்பதாக தகவல்கள் வெளியானது.

    இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், கேரளாவில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்ட வீரர்களுக்காக ஆகஸ்ட் 26-ம் தேதி நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். மற்றொரு நாடு நல்லெண்ண அடிப்படையில் நிதியுதவி வழங்கினால் மத்திய அரசு ஏற்க வேண்டும்.

    2016 தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கைப்படி வெளிநாட்டு நிதியை ஏற்றுக் கொள்ளலாம். எனினும், இது தொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வருகிறது. முடிவெடுக்கும் போது பார்க்கலாம் என கூறினார்.
    கன மழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநில மக்களின் பெருந்துயர் களைய நிவாரண பொருட்கள் வழங்க பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கன மழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநில மக்களின் பெருந்துயர் களைய இயன்ற உதவி செய்திட பெரம்பலூர் மாவட்ட மக்கள் பெரும் பங்காற்றிட வேண்டுகிறேன். அவர்களுக்கு உதவிட தாங்கள் தங்களால் இயன்றவரை நிவாரண பொருட்களை மாவட்ட கலெக்டர் அலு வலக வளாகத்தில் இயங்கும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலக தாசில்தாரிடம் வழங்கிட கேட்டுக்கொள் கிறேன். கேரள மக்களுக்கு உதவிட நமது மாவட்ட நிர்வாகமே நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நிவாரண பொருட்களை பெற தனி நபருக்கோ, நிறுவனத்திற்கோ அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை. எனவே அதுபோன்று அணுகுவோரை தவிர்த்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் பேரிடர் வேலாண்மை அலுவலகத்தை நேரில் தொடர்புகொண்டு வேட்டி, சேலை, நைட்டி, துண்டு மற்றும் ஆண், பெண், குழந்தைகள் பயன் படுத்தும் வகையிலான துணி வகைகள், அரிசி, பருப்பு வகைகள், பிஸ்கட், தண்ணீர் பாட்டில்கள், ரொட்டி வகைகள், டீ, காபி, மசாலா பொருட்கள், சர்க்கரை, உப்பு, தேங்காய் எண்ணெய், மெழுகுவர்த்தி, டார்ச், பேட்டரிகள், தீப்பெட்டி, வாளிகள், குவளைகள், பேஸ்ட், பிரஸ், மருந்து வகைகள், பால் பவுடர், ஸ்டவ் அடுப்பு போன்ற நிவாரணப் பொருட்களை வழங்கிடவும். பயன்படுத்திய பழைய பொருட்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும் கூடுதல் தகவல்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை துறையின் இலவச தொலைபேசி எண்ணான 1077 மற்றும் 04328-224455 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள மனையாரங்காடு கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து கேரள மக்களுக்காக 8000 சப்பாத்திகளை தயாரித்து அனுப்பி வைத்தனர். #KeralaFloodRelief
    சேலம்:

    கனமழையால் பெரும் பாதிப்புக்குள்ளான கேரள மாநிலத்திற்கு தமிழகத்திலிருந்து ஏராளமானோர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள மனையாரங்காடு கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து கேரள மக்களுக்காக 8000 சப்பாத்திகளை தயாரித்தனர்.

    நேற்று பிற்பகல் முதல் நள்ளிரவு வரை சப்பாத்தி தயாரிக்கும் பணியில் ஊர்மக்கள் மற்றும் சிறுவர்-சிறுமியர் மிகுந்த ஆர்வத்தோடு பங்கேற்றனர். தயாரிக்கப்பட்ட 8000 சப்பாத்திகள் ஒரு பொட்டலத்திற்கு நான்கு என்ற கணக்கில் தனித்தனியே கட்டப்பட்டன. 8000 சப்பாத்திகள் மட்டுமின்றி, பொதுமக்கள் பங்களிப்போடு 2000 பிஸ்கட் பாக்கெட்டுகள், 1000 துண்டுகள், 50 பட்டு சேலைகள், 100 போர்வைகள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் ஆகியவற்றை லாரி மூலம் கேரளாவிற்கு அனுப்பி வைத்தனர். #KeralaFloodRelief

    திருவண்ணாமலையை சேர்ந்த கை, கால் இழந்த பிச்சைக்காரரும், தொழு நோயாளிகளும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரணம் வழங்கினர். #KeralaFloods #KeralaFloodRelief
    திருவண்ணாமலை:

    கேரளா பலத்த மழையால் வெள்ளக்காடாக மாறியதால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து உணவு, உடைகளின்றி தவிக்கின்றனர். அம்மாநில மக்களின் துயர் துடைக்க, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில், கேரள மக்கள் படும்பாட்டை அறிந்த திருவண்ணாமலையை சேர்ந்த தொழுநோயாளிகள் சிலரும் மற்றும் பிச்சைக்காரர் ஒருவரும் நிவாரண தொகை அனுப்பியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருவண்ணாமலை மல்லவாடியில் தொழுநோய் இல்லம் உள்ளது. இங்கு 70 முதல் 80 வயதுடையவர்கள் 36 பேரும், 15 வயது மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்களும் உள்ளனர்.

    இவர்கள், கேரள மக்கள் வெள்ளப்பாதிப்பால் தவிப்பதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தனர். மேலும், அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதையும் கேள்விப்பட்டனர்.

    இதையடுத்து, தொழு நோயாளிகள் 38 பேரும் சேமித்து வைத்திருந்த 1035 ரூபாயை, கேரள நிவாரண உதவியாக கொடுத்தனர்.

    அதேபோல், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் செங்கம் ரோட்டில் 2 கைகள், ஒரு காலை இழந்து பிச்சை எடுக்கும் ஏழுமலை (45) என்பவரும் தன்னுடைய ஒருநாள் வசூல் தொகையான 100 ரூபாயை கேரள நிவாரணத்திற்காக கொடுத்துள்ளார்.

    திருவண்ணாமலையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கேரளாவுக்கு நிவாரண தொகை வழங்கிய காட்சி.

    தொழுநோயாளிகள் மற்றும் ஒரு பிச்சைக்காரர் கொடுத்த மொத்த தொகை ரூ.1135-ஐ திருவண்ணாமலை சமூக சேவகர் மணிமாறன் பெற்று, கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார்.

    அத்தோடு, சமூக சேவகர் மணிமாறன் தனது பைக்கை அடகு வைத்து ரூ.10 ஆயிரம் தொகையை நிவாரணமாக கொடுத்துள்ளார். இதுப்பற்றி அந்த சமூக சேவகர் கூறியதாவது:-

    பிச்சைக்காரர் ஏழுமலை ஆரம்பத்தில் கட்டுமான வேலை செய்தார். சென்டரிங் பணியின்போது மின்சாரம் தாக்கியதில் ஏழுமலைக்கு 2 கைககள் மற்றும் ஒரு கால் முழுவதும் துண்டானது.

    கை, கால் இல்லாமல் அவதிப்படும் அவர், வாழ வேறு வழியின்றி பிச்சை எடுத்து வருகிறார். அவருக்கு மனைவியும் உள்ளார். ஒரு நாள் பிச்சை எடுத்தால் 100 ரூபாய் கிடைப்பதே அரிது.

    அந்த சிறு தொகையில் தான் அவரும், அவருடைய மனைவியும் சாப்பிட வேண்டும். இந்த ஒரு சூழ்நிலையில் கேரள மக்கள் படும்பாட்டை எண்ணி வருத்தமடைந்தார். தன் பங்களிப்பாக ஒரு நாள் பிச்சையெடுத்ததில் வசூலான 100 ரூபாயை கொடுத்துள்ளார் என்றார்.

    சமூக சேவகர் மணிமாறன், கடந்த 16 ஆண்டுகளாக சுயமாக இயங்க முடியாத கை, கால்களை இழந்தவர்கள், தொழு நோயாளிகளுக்கு உதவி செய்து வருகிறார். இதுவரை 700-க்கும் மேற்பட்ட அனாதை உடல்களை அடக்கம் செய்துள்ளார்.

    இதற்காக மத்திய-மாநில அரசுகளிடம் இருந்தும் அவர் விருது பெற்றுள்ளார். கை, கால்களை இழந்த பிச்சைக்காரரும், தொழு நோயாளிகளும் கேரள நிவாரணம் வழங்கியிருப்பது உதவியே செய்யும் குணமே இல்லாத கல் நெஞ்சம் படைத்தவர்களையும் கரைய செய்துள்ளது.  #KeralaRain #KeralaFloods
    வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வந்த நிவாரண பொருட்கள் மீது சுங்க வரி மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யை ரத்து செய்வது என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. #KeralaFlood #GST #CustomsDuty
    புதுடெல்லி:

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ரூ.500 கோடியும், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ரூ.100 கோடியும் நிதி உதவி அறிவித்தனர். இந்த ரூ.600 கோடி நிதியை கேரள அரசுக்கு நேற்று மத்திய அரசு விடுவித்தது. இத்தகவலை மத்திய அரசின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.



    மேலும், வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வந்த நிவாரண பொருட்கள் மீது சுங்க வரி மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யை ரத்து செய்வது என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுபோல், திருச்சூர், பாலக்காடு, கொச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள 3 சுங்கச்சாவடிகளில் 26-ந் தேதி வரை, கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.  #KeralaFlood #GST #CustomsDuty  #tamilnews
    கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள் கொடுத்த ரூ.17.51 கோடி மதிப்புள்ள பொருட்கள் அனுப்பப்பட்டன என்று தமிழக அரசு கூறியுள்ளது. #KeralaFlood #Tamilnadu
    சென்னை:

    கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள் கொடுத்த ரூ.17.51 கோடி மதிப்புள்ள பொருட்கள் அனுப்பப்பட்டன என்று தமிழக அரசு கூறியுள்ளது.

    இதுகுறித்து நிருபர்களுக்கு, தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்தியகோபால் அளித்த பேட்டி வருமாறு:-

    கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கான நிவாரணத்துக்காக 10-ந் தேதியன்று ரூ.5 கோடியையும், 18-ந் தேதியன்று மேலும் ரூ.5 கோடியையும் முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதியில் இருந்து வழங்குவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.



    அதோடு, 500 டன் அரிசி, 300 டன் பால் பவுடர், 15 ஆயிரம் லிட்டர் பதப்படுத்தப்பட்ட பால், வேட்டி, லுங்கி, போர்வை ஆகியவை தலா 10 ஆயிரம் ஆகியவற்றையும் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த பணிகளை ஒருங்கிணைந்து நடத்துவதற்காக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சந்தோஷ்பாபு, தரேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 306 டன் அரிசி, 270 டன் பால் பவுடர் மற்றும் பால் அனுப்பப்பட்டுள்ளது.

    கேரளாவுக்கு மருந்து, சுகாதாரம் ரீதியிலான உதவிகளை தமிழக அரசுதான் முதன் முதலாக செய்தது. ரூ.2.11 கோடி மதிப்புள்ள மருந்துகள், கிருமி நாசினிகள், திரவ குளோரின் உள்பட பல பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.



    கேரளாவில் உள்ள வயநாடு உள்பட சில மாவட்டங்களுக்கு நிவாரண பணிகளுக்காக நமது அதிகாரிகள் குழு சென்றுள்ளது. 200 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 2 டேங்கர் லாரிகளில் திரவ ஆக்சிஜன் ஆகியவற்றையும் அனுப்பியுள்ளோம்.

    கேரளாவில் மொத்தம் 226 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் அதன் மூலம் பயனடைந்துள்ளனர். குறிப்பாக, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், மஞ்சள் காமாலை ஆகிய நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதோடு, அந்த நோயின் தாக்கம் குறித்து ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.

    அனைத்து மாவட்டங்களிலும் இருந்து மக்களும், தொண்டு நிறுவனங்களும் கேரளாவுக்கு உதவ முன்வந்தனர். எனவே அவர்கள் அளித்த உதவிப் பொருட்களை வாங்கி 241 லாரிகளில் ஏற்றி அனுப்பிவைத்தோம். அவற்றின் மதிப்பு ரூ.17.51 கோடியாகும். அதிக அளவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 47 லாரிகள் சென்றன. தேனி மாவட்டத்தில் இருந்து 30 லாரிகள் சென்றன.

    அன்புடன் தமிழகம் என்ற ஒரு இணையதளத்தை இதற்காக தொடங்கியிருக்கிறோம். உதவி செய்ய விரும்புகிறவர்கள் இதில் உள்ள தகவல்களின்படி உதவிகளை வழங்க முடியும்.

    கேரளாவில் உள்ள நிவாரண ஆணையர் குரியனிடம் பேசும்போது, உணவு அனுப்புவதைவிட போர்வைகள், உடைகள், உள்ளாடைகள், டைபர்கள், டார்ச்லைட், செருப்புகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி ஆகியவை தேவை என்று தெரிவித்தார். சிவகாசியில் இருந்து தீப்பெட்டி அனுப்பப்பட்டது.

    முதல்-அமைச்சர் அறிவித்த பொருட்களை அனுப்புவதோடு, தமிழக மக்கள் தரும் நிவாரண பொருட்களையும் அனுப்பி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு 89 ஆயிரத்து 540 டன் உணவு தானியங்களும், 100 டன் பருப்புவகைகளும் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளதாக மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார். #KeralaFlood #RamVilasPaswan
    புதுடெல்லி:

    மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம், 1 லட்சத்து 18 ஆயிரம் டன் உணவு தானியங்கள் வழங்குமாறு கேட்டுக்கொண்டது. மத்திய அரசு, 89 ஆயிரத்து 540 டன் உணவு தானியங்களும், 100 டன் பருப்புவகைகளும் கேரளாவுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. கேரளாவில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வராத மக்களுக்கு இப்பொருட்களை வினியோகம் செய்ய கேரள அரசு பயன்படுத்திக்கொள்ளலாம். இவை முதல் கட்ட உதவிதான். தேவைப்பட்டால், இன்னும் உதவ தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #KeralaFlood #RamVilasPaswan 
    கேரளா மழை வெள்ளத்திற்கு ஐக்கிய அமீரகம் 700 கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ள நிலையில், குஜராத் பூகம்பத்துக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் உதவியுள்ளது நினைவு கூறத்தக்கது. #keralaFlood
    புதுடெல்லி:

    கேரளாவில் கடந்த 10 நாட்களாக பெய்த கனமழை மாநிலத்தையே புரட்டிப்போட்டது. 300-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். பல ஆயிரம் கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. பிற மாநிலங்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், பொதுமக்கள் என பல தரப்பில் இருந்தும் கேரளாவுக்கு நிதியுதவி குவிந்து வருகிறது.

    இந்நிலையில், கேரளாவுக்கு ரூ.700 கோடி நிதியுதவி வழங்கப்படும் என ஐக்கிய அமீரக அரசு அறிவித்துள்ளது. கேரளாவை சேர்ந்தவர்களின் பங்கு ஐக்கிய அமீரத்தின் வளர்ச்சியில் இருப்பதால் அவர்களின் துக்கத்தில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கிறோம் என அமீரக இளவரசர் குறிப்பிட்டிருந்தார்.

    எனினும், சர்வதேச உதவியை எதிர்நோக்கக்கூடாது அது இந்தியா மீதான மதிப்பை சீர் குலைக்கும் என பல வலதுசாரி ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், இதற்கு முன்னதாக கடந்த 2001-ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் இந்தியா சர்வதேச உதவிகளை பெற்றுள்ளது. 

    மத்திய வெளியுறவு அமைச்சக இணையதளத்தில் உள்ள தகவலின் படி குஜராதில் பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து, சுமார் 109 நாடுகள் நேரடியாக உதவி செய்துள்ளன. நிதியுதவி, நிவாரணப்பொருட்கள், உணவுப்பொருட்கள், கூடாரம், அடிப்படை தளவாடங்கள் ஆகியவை வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டுள்ளது.

    அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா உள்ளிட்ட வல்லரசுகள் முதல் ஷிசெல்ஸ், நேபாள் ஆகிய குட்டி நாடுகள் வரை குஜராத்துக்கு உதவிக்கரம் கொடுத்துள்ளது. வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அமீரகம், ஏமன், சிரியா ஆகிய நாடுகளும் கனிசமான உதவியை அளித்துள்ளன.

    109 நாடுகள் போக, சர்வதேச அமைப்புகள், சர்வதேச தொண்டு நிறுவனங்களும் குஜராத்துக்கு நிவாரணம் அனுப்பியுள்ளது. குஜராத் பூகம்பம் ஏற்பட்ட போது அங்கு முதல்வராக இருந்தவர் தற்போதைய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
    தொடர் கனமழையால் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ள கேரளா மாநிலத்திற்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதி வழங்கியுள்ளார். #KeralaRain #KeralaFlood #Vijay #ThalapathyVijay
    கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அம்மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

    கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர்.  தமிழில் நடிகர்கள் கமல், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விக்ரம், ஜெயம் ரவி, பிரபு, நடிகைகள் ரோஹினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், இயக்குனர்கள் சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட நிதியுதவி வழங்கியுள்ளார்கள். 



    இந்நிலையில், நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief 
    ×