search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "leprosy"

    • கலெக்டர் தகவல்
    • அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுக அறிவுரை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்களை பரிசோதிக்கும் வகையில் வீடு வீடாகச் சென்று தொழுநோய் கண்டறியும் பணியானது கடந்த 17-ந் தேதி தொடங்கி வருகிற ஆகஸ்ட் 2-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த பணியில் ஆண், பெண் தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இதுவரை 1 லட்சத்து 14 ஆயிரத்து 157 பேருக்கு பரிசோதனை செய்துள்ளனர்.

    இதில் ஒருவருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    தொழு நோயின் ஆரம்ப அறிகுறிகளான உணர்ச்சியற்ற, வெளிர்ந்த, சிவந்த நிறத்தேமல், நரம்புகள் தடித்திருத்தல் போன்ற அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்து வமனையையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • பேராவூரணி அரசு கல்லூரியில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • வினாடி வினாவில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஸ்பர்ஷ் 2023 இரு வார திருவிழாவை முன்னிட்டு துணை இயக்குனர் சுகாதார நலப் பணிகள்,

    துணை இயக்குனர் தொழு நோய் அலுவலர் மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கம் அறிவுரைப்படி அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழுநோய் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் நலக்கல்வி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அரசு கலைக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார்.

    வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் இளந்திரையன், சுகாதார ஆய்வாளர்கள் முருகானந்தம், அவினாஷ் முகுந்தன் ஆகியோர் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை செய்தனர்.

    கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் பழனிவேலு, முனைவர் ராஜ்மோகன், பேராசிரியர் வினோத்குமார் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தொழுநோய் விழிப்புணர்வு குறித்த வினாடி வினாவில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    அரசு மருத்துவ மனைகளில் வெள்ளிக்கி ழமை தோறும் தொழுநோய் பாதிக்கப்–பட்டவர்க ளுக்கு இலவச மருத்துவம் பார்க்கப்படும் என தெரிவித்தனர்.

    • பள்ளிகளில் மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் செந்தில்நாதன் ஒவ்வொரு பள்ளியாக சென்று பள்ளி மாணவர்களுக்கு தொழுநோய் சம்பந்தமான அறிகுறிகள் குறித்து பரிசோதனை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
    • பள்ளி குழந்தைகளுக்கு முறையான கை கழுவும் முறை, வெந்நீர் அருந்துவதால் தடுக்கப்படும் நோய்கள் உள்ளிட்ட தன் சுகாதாரம் மற்றும் பொது சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட வள்ளுவக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சீர்காழி அருகே உள்ள கொண்டல், தேனூர், ஆதமங்கலம், ஆகிய ஊர்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் செந்தில்நாதன் ஒவ்வொரு பள்ளியாக சென்று பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தொழுநோய் சம்பந்தமான அறிகுறிகள் குறித்து பரிசோதனை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    மேலும் பள்ளி குழந்தைகளுக்கு முறையான கை கழுவும் முறை, வெந்நீர் அருந்துவதால் தடுக்கப்படும் நோய்கள், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், மரம் வளர்ப்பதன் அவசியம், உணவு பழக்க வழக்கம் உள்ளிட்ட தன் சுகாதாரம் மற்றும் பொது சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் அந்தந்த பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

    இந்தியாவின் தனிநபர் சட்டத்தின்கீழ் விவாகரத்து கோரும் சட்டவிதியில் இருந்து தொழுநோய் பாதிப்பை நீக்கும் சட்டத்திருத்த மசோதா இன்று பாராளுமன்ற மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. #RajyaSabha #leprosyground #groundfordivorce
    புதுடெல்லி:

    மலட்டுத்தன்மை மற்றும் தீராத நோய் பாதிப்புகள் ஆகியவற்றை காரணம்காட்டி கணவனோ, மனைவியோ விவாகரத்து கோரும் முறை நமது நாட்டில் நடைமுறையில் உள்ளது.

    இந்த தீராத நோய்கள் பட்டியலில் இருந்து தொழுநோய் பாதிப்பை நீக்க இந்திய தனிநபர் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய மந்திரிசபை கடந்த ஆண்டு தீர்மானித்தது.

    அவ்வகையில், தனிநபர் சட்டத்தின்கீழ் விவாகரத்து கோரும் சட்டவிதியில் இருந்து தொழுநோய் பாதிப்பை நீக்கும் சட்டத்திருத்தம் பாராளுமன்ற மக்களவையில் 1-7-2018 அன்று  நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று இந்த மசோதா மாநிலங்களவையில் விவாதம் ஏதுமின்றி ஒருமனதாகநிறைவேறியது. எனவே, இனி தொழுநோயாளி என்று காரணம் காட்டி கணவனோ, மனைவியோ விவாகரத்து வழக்கு தொடர முடியாது.

    எனினும், ஏற்கனவே பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையில் முடங்கிக் கிடக்கும் முத்தலாக் முறை ஒழிப்பு மசோதா, இந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட சில மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் 16-வது பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்து விட்டது குறிப்பிடத்தக்கது. #PersonalLawsAmendmentBill #RajyaSabha #leprosyground #groundfordivorce
    காரமடை அருகே தொழுநோயால் அவதிப்பட்டு வந்த புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    காரமடை அருகே உள்ள ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் பாலன். இவரது மகன் கோவிந்தராஜ் (வயது 33). தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.

    இவர் கடந்த 1 மாதங்களுக்கு முன்பு தமிழரசி என்ற பெண்ணை காதலித்து திருணம் செய்து கொண்டார். கோவிந்தராஜ் தொழுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    நோய் பாதிப்பு ஏற்பட்டதால் கோவிந்தராஜ் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த இவர் தற்கொலை செய்வது என முடிவு செய்தார்.

    அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட கோவிந்தராஜின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவண்ணாமலையை சேர்ந்த கை, கால் இழந்த பிச்சைக்காரரும், தொழு நோயாளிகளும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரணம் வழங்கினர். #KeralaFloods #KeralaFloodRelief
    திருவண்ணாமலை:

    கேரளா பலத்த மழையால் வெள்ளக்காடாக மாறியதால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து உணவு, உடைகளின்றி தவிக்கின்றனர். அம்மாநில மக்களின் துயர் துடைக்க, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில், கேரள மக்கள் படும்பாட்டை அறிந்த திருவண்ணாமலையை சேர்ந்த தொழுநோயாளிகள் சிலரும் மற்றும் பிச்சைக்காரர் ஒருவரும் நிவாரண தொகை அனுப்பியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருவண்ணாமலை மல்லவாடியில் தொழுநோய் இல்லம் உள்ளது. இங்கு 70 முதல் 80 வயதுடையவர்கள் 36 பேரும், 15 வயது மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்களும் உள்ளனர்.

    இவர்கள், கேரள மக்கள் வெள்ளப்பாதிப்பால் தவிப்பதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தனர். மேலும், அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதையும் கேள்விப்பட்டனர்.

    இதையடுத்து, தொழு நோயாளிகள் 38 பேரும் சேமித்து வைத்திருந்த 1035 ரூபாயை, கேரள நிவாரண உதவியாக கொடுத்தனர்.

    அதேபோல், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் செங்கம் ரோட்டில் 2 கைகள், ஒரு காலை இழந்து பிச்சை எடுக்கும் ஏழுமலை (45) என்பவரும் தன்னுடைய ஒருநாள் வசூல் தொகையான 100 ரூபாயை கேரள நிவாரணத்திற்காக கொடுத்துள்ளார்.

    திருவண்ணாமலையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கேரளாவுக்கு நிவாரண தொகை வழங்கிய காட்சி.

    தொழுநோயாளிகள் மற்றும் ஒரு பிச்சைக்காரர் கொடுத்த மொத்த தொகை ரூ.1135-ஐ திருவண்ணாமலை சமூக சேவகர் மணிமாறன் பெற்று, கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார்.

    அத்தோடு, சமூக சேவகர் மணிமாறன் தனது பைக்கை அடகு வைத்து ரூ.10 ஆயிரம் தொகையை நிவாரணமாக கொடுத்துள்ளார். இதுப்பற்றி அந்த சமூக சேவகர் கூறியதாவது:-

    பிச்சைக்காரர் ஏழுமலை ஆரம்பத்தில் கட்டுமான வேலை செய்தார். சென்டரிங் பணியின்போது மின்சாரம் தாக்கியதில் ஏழுமலைக்கு 2 கைககள் மற்றும் ஒரு கால் முழுவதும் துண்டானது.

    கை, கால் இல்லாமல் அவதிப்படும் அவர், வாழ வேறு வழியின்றி பிச்சை எடுத்து வருகிறார். அவருக்கு மனைவியும் உள்ளார். ஒரு நாள் பிச்சை எடுத்தால் 100 ரூபாய் கிடைப்பதே அரிது.

    அந்த சிறு தொகையில் தான் அவரும், அவருடைய மனைவியும் சாப்பிட வேண்டும். இந்த ஒரு சூழ்நிலையில் கேரள மக்கள் படும்பாட்டை எண்ணி வருத்தமடைந்தார். தன் பங்களிப்பாக ஒரு நாள் பிச்சையெடுத்ததில் வசூலான 100 ரூபாயை கொடுத்துள்ளார் என்றார்.

    சமூக சேவகர் மணிமாறன், கடந்த 16 ஆண்டுகளாக சுயமாக இயங்க முடியாத கை, கால்களை இழந்தவர்கள், தொழு நோயாளிகளுக்கு உதவி செய்து வருகிறார். இதுவரை 700-க்கும் மேற்பட்ட அனாதை உடல்களை அடக்கம் செய்துள்ளார்.

    இதற்காக மத்திய-மாநில அரசுகளிடம் இருந்தும் அவர் விருது பெற்றுள்ளார். கை, கால்களை இழந்த பிச்சைக்காரரும், தொழு நோயாளிகளும் கேரள நிவாரணம் வழங்கியிருப்பது உதவியே செய்யும் குணமே இல்லாத கல் நெஞ்சம் படைத்தவர்களையும் கரைய செய்துள்ளது.  #KeralaRain #KeralaFloods
    இந்தியா இந்த வருடத்திற்குள் தொழுநோய் இல்லாத நாடாகி விடும் என மத்திய சுகாதார துறை மந்திரி ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.
    பல்லியா:

    உத்தர பிரதேசத்தில் மருத்துவமனை தொடக்க நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சுகாதார துறை மந்திரி ஜே.பி. நட்டா கலந்து கொண்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, இந்தியாவில் இருந்து இவ்வருடத்திற்குள் தொழுநோய் ஒழிக்கப்பட்டு விடும். அடுத்த ஆண்டிற்குள் கலா ஆசார் (கருப்பு காய்ச்சல்) இல்லாத நாடாகி விடும் என கூறினார்.

    அவர் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்து பேசும்பொழுது, இந்தியாவில் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. குழந்தைகளுக்கு வரும் டெட்டனஸ் மற்றும் வேறு சில நோய்களும் கட்டுக்குள் உள்ளன என உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையை குறிப்பிட்டு அவர் கூறியுள்ளார்.
    ×