search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ram Vilas Paswan"

    மோசமான தட்பவெப்பநிலை நிலவியதால் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் சென்ற ஹெலிகாப்டர் புத்த கயா பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #RamVilasPaswan #Helicopter
    கயா:

    பீகார் மாநிலம் பெலகஞ்ச் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக லோக் ஜனசக்தி கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான், பா.ஜனதா கட்சியை சேர்ந்த பீகார் துணை முதல்-மந்திரி சுஷில் மோடி ஆகியோர் ஹெலிகாப்டரில் நேற்று சென்றனர்.

    அப்போது மோசமான தட்பவெப்பநிலை நிலவியதால் அந்த ஹெலிகாப்டர் புத்த கயா பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் ராம்விலாஸ் பஸ்வான், சுஷில் மோடி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். #RamVilasPaswan #Helicopter 
    பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீடு, வருகிற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு 10 சதவீத கூடுதல் வாக்குகளை பெற்றுத்தரும் என மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறினார். #RamVilasPaswan #GeneralCategoryQuota
    புதுடெல்லி:

    பொதுப்பிரிவினருக்கு அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு அளித்து சமீபத்தில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்து உள்ளது. இந்த இடஒதுக்கீட்டை பொதுப்பிரிவினர் வரவேற்ற அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

    லோக் ஜனசக்தி தலைவரும் மத்திய மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-



    மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு நீண்டகால வளர்ச்சி திட்ட கொள்கை அடிப்படையில் நடவடிக்கை எடுத்து செயல்படுத்தி வருகிறது. நாட்டில் நிலையான ஆட்சிக்கு திறமையான பிரதமரையும் நாடாளுமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

    சமீபத்தில் நடந்த சத்தீஷ்கார், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 3 மாநில தேர்தல்களில் ஆட்சியை பாரதீய ஜனதா இழந்துள்ளது. இதன் மூலம் அக்கட்சி பாடம் கற்றுக்கொண்டு உள்ளது. இதன்அடிப்படையில் மக்கள் செல்வாக்கை பெறும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

    எதிர்க்கட்சிகள் பாரதீய ஜனதாவுக்கு எதிராக கூட்டணி அமைக்க முயற்சி எடுத்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் கூட்டணியில் பிரதமர் யார்? என்பதை அறிவிக்க முடியவில்லை. பிரதமர் பதவி கனவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாபானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் உள்ளனர்.

    அடுத்த தேர்தலில் நிரந்தரமான ஆட்சி மற்றும் திறமையான பிரதமரை தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். அதற்கு தகுதியானவர் பிரதமர் மோடி தான் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

    பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது.

    இந்த சட்டத்தின் மூலம் வருகிற தேர்தலில் நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பு உள்ளது. இந்த சட்டத்தினால் பாரதீய ஜனதாவுக்கு வருகிற தேர்தலில் 10 சதவீத ஓட்டுகள் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #RamVilasPaswan #GeneralCategoryQuota
    மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானுக்கு எதிராக அவருடைய மகள் ஆஷா தர்ணா போராட்டத்தில் குதித்துள்ளார். #RamVilasPaswan #AshaPaswan #Protest
    பாட்னா:

    மத்திய மந்திரியும், லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வானின் முதல் மனைவிக்கு பிறந்த பெண் ஆஷா பஸ்வான். இவருக்கும், பஸ்வானுகும் இடையே தற்போது நல்லுறவு கிடையாது. ஆஷா பஸ்வான், ராஷ்டிரீய ஜனதாதளத்தில் இருக்கிறார்.



    இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு ராம்விலாஸ் பஸ்வான் அளித்த பேட்டியில், “படிப்பறிவற்றவர் கூட இம்மாநில முதல்-மந்திரியாக இருந்துள்ளார்” என்று கூறினார். அவர் முன்னாள் முதல்-மந்திரி ராப்ரிதேவியை குறிப்பிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

    இதை சுட்டிக்காட்டி, ராம்விலாஸ் பஸ்வானுக்கு எதிராக அவருடைய மகள் ஆஷா தர்ணா போராட்டத்தில் குதித்துள்ளார். பஸ்வான் மன்னிப்பு கேட்கும்வரை எனது போராட்டத்தை கைவிட மாட்டேன் என்றும் அவர் கூறினார். #RamVilasPaswan #AshaPaswan #Protest 
    ராப்ரி தேவியின் கல்வியறிவு குறித்து விமர்சித்த மத்திய மந்திரி ராம் விலாஸ் பாஸ்வானுக்கு எதிராக அவரது மகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். #RamVilasPaswan #AshaPaswan
    பாட்னா:

    மத்திய மந்திரியும் லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான், பாட்னாவில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான அரசாங்கம் கொண்டு வந்த 10 சதவீத இடஒதுக்கீட்டு மசோதாவை எதிர்த்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை கடுமையாக சாடினார்.

    “கோஷங்கள் எழுப்புவதிலும், படிப்பறிவில்லாதவரை முதலமைச்சர் ஆக்குவதிலும் மட்டுமே அவர்கள் (ராஷ்டிரிய ஜனதா தளம்) நம்பிக்கை வைத்துள்ளனர்” என யாருடைய பெயரையும்  குறிப்பிடாமல் பாஸ்வான் பேசினார்.

    1997ல் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ், கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் கைதாகும் நிலை ஏற்பட்டதால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கினார். இந்த சம்பவத்தை பாஸ்வான் குறிப்பிட்டு பேசியதாக சர்ச்சை எழுந்தது.


    பாஸ்வானின் இந்த கருத்துக்கு எதிராக, அவரது மகள் ஆஷா பஸ்வான், தனது ஆதரவாளர்களுடன் பாட்னாவில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். பதாகைகளை தாங்கி சாலையில் அமர்ந்து தர்ணா செய்தனர். அப்போது பேசிய ஆஷா, ‘ராப்ரி தேவியை என் தந்தை அவமதித்துள்ளார். என் தாய் கூட படிப்பறிவில்லாதவர். அதனால்தான் அவரை என் தந்தை கைவிட்டிருக்கிறார். எனவே, அவர் தனது கருத்தை திரும்ப பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவரது அலுவலகத்தின் முன்னால் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன்’ என்றார்.

    பாஸ்வானின் முதல் மனைவிக்கு பிறந்தவர் ஆஷா. ஆஷாவின் கணவர் அருண் சாது, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் கடந்த ஆண்டு இணைந்தார்.

    பாஸ்வான் தன் முதல் மனைவி ராஜ் குமாரி தேவியை பிரிந்து வாழ்கிறார். ராஜ குமாரி தேவி, சமஸ்திபூர் மாவட்டத்தில் வசிக்கிறார். பாஸ்வான் தன் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகன் சிரஜ் பாஸ்வானை அரசியல் வாரிசாக வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. #RamVilasPaswan #AshaPaswan
    ராம்விலாஸ் பஸ்வான் கூட்டணியை விட்டு வெளியேறி விடக்கூடாது என்பதற்காக அவரிடம் பாஜக தலைவர் அமித் ஷா பேச்சு வார்த்தை நடத்தினார். #AmitShah #RamVilasPaswan

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் வரஉள்ள நிலையில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சிகளாக வெளியேறி வருகின்றன.

    முதலாவதாக தெலுங்கு தேசம் வெளியேறியது. அடுத்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி வெளியேறியது. சிவசேனாவும் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் மற்றொரு முக்கிய கூட்டணி கட்சியான ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் வெளியேறும் நிலையில் இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

    ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் இதுசம்பந்தமாக கூறும் போது, 31-ந்தேதிக்குள் எங்களுக்கான சீட்டுகளை ஒதுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட முடிவுகளை எடுப்போம் என்று கூறியிருந்தார்.

    5 மாநில தேர்தலில் 3 மாநிலங்களை பாரதிய ஜனதாவிடம் காங்கிரஸ் காங்கிரஸ் கைப்பற்றியதால் காங்கிரசுக்கு செல்வாக்கு ஏற்பட்டு விட்டதாக கருதுகிறார்கள். இதனால் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்த பல கட்சிகளும் இப்போது காங்கிரஸ் பக்கம் தாவுவதற்கு தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.

    அந்த வகையில் ராம்விலாஸ் பஸ்வானுடைய கட்சியும் காங்கிரஸ் கூட்டணியில் சேரும் வகையில் தான் இந்த கெடுவை விதித்ததாக தெரிகிறது.

    பஸ்வானின் கட்சி பீகார் மாநிலத்தில் தான் செல்வாக்கு பெற்றதாக உள்ளது. அங்கு கடந்த தேர்தலில் 7 தொகுதிகள் பா.ஜ.க. கூட்டணியில் ஒதுக்கப்பட் டது. அதில் 6 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் இப்போது பாராளுமன்ற தேர்தலில் அங்கு ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதா தளமும், பாரதிய ஜனதாவும் கூட்டணி வைக்கின்றன. இரு கட்சிகளும் சம அளவில் சீட்டுகளை பிரித்துக் கொள்வதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    அந்த மாநிலத்தில் மொத்தம் 40 எம்.பி. தொகுதிகள் உள்ளன. அதில் தலா 17 இடங்களில் போட்டியிட இரு கட்சிகளும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதி 6 இடங்கள் மட்டும் தான் உள்ளது. இதையோ அல்லது அதற்கும் குறைவான தொகுதியையோ பஸ்வானுக்கு ஒதுக்க பாரதிய ஜனதா திட்டமிட்டு இருக்கிறது.

    கடந்த தேர்தலில் 7 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் இப்போது 6 தொகுதி என்பதையே பஸ்வான் ஏற்றுக் கொள்ள வில்லை. இன்னும் தொகுதி குறையலாம் என கருதுவதால் அவர் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேற தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.

    பீகார் மாநிலத்தில் லல்லுபிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைமையில் வலுவான கூட்டணி அமைக்க உள்ளனர். இதில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி, முன்னாள் முதல்-மந்திரி ஜிதன்ராம் மாஞ்சி கட்சி ஆகியவை இடம்பெற உள்ளன.

    ஆளும் கட்சி கூட்டணியை விட இது வலுவாக இருப்பதாக கருத்து நிலவுகிறது. எனவே அந்த கூட்டணியில் இடம்பெறலாமா? என்ற எண்ணம் பஸ்வானுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தான் பாரதிய ஜனதா கூட்டணிக்கு தனது மகன் மூலம் கெடுவிதித்தார்.

    ராம்விலாஸ் பஸ்வான் கூட்டணியை விட்டு வெளியேறி விடக்கூடாது என்பதில் பாரதிய ஜனதா கவனமாக உள்ளது. எனவே பாரதிய ஜனதா பொதுச் செயலாளரும், பீகார் மாநில பா.ஜனதா மேலிட பொறுப்பாளருமான பூபேதிரா யாதவை ரம்விலாஸ் பஸ்வான் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

    அப்போது அங்கு ராம்விலாஸ் பஸ்வானும், அவரது மகன் சிராக் பஸ்வானும் இருந்தனர். அவர்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பஸ்வான் மற்றும் அவரது மகன் இருவரையும் அழைத்துக்கொண்டு பூபேந்திரா யாதவ், அமித் ஷா வீட்டுக்கு வந்தார். அங்கு 1 மணி நேரம் அவர்களுடன் அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஆனால் ராம்விலாஸ் பஸ்வான் தங்களுக்கு எத்தனை சீட் என்பதை உடனே அறிவிக்க வேண்டும், எந்த தொகுதி என்பதையும் தெரிவிக்க வேண்டும், எங்களுக்கும் கணிசமான இடங்களை தர வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அதுமட்டுமல்லாமல் பாரதிய ஜனதா ராமர்கோவில் விவகாரத்தை மீண்டும் எழுப்புவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனறும் ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.

    அவருடைய நிபந்தனைகளை அமித்ஷா ஏற்றுக் கொண்டாரா? என்று தெரியவில்லை. எனவே அடுத்த கட்டமாக ராம்விலாஸ் பஸ்வான் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது என்பது முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

    இதற்கிடையே ராம்விலாஸ் பஸ்வானை காங்கிரஸ் கூட்டணிக்கு இழுப்பதற்கு கடுமையான முயற்சிகள் நடந்து வருவதாக தெரிகிறது.

    ஆனால் இதுசம்பந்தமாக பா.ஜ.க. தலைவர் ஒருவர் கூறும்போது, ராம்விலாஸ் பஸ்வான் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்குவது என்று முடிவெடுக்கப்பட்டு விட்டது. அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டார். ஆனால் எந்த தொகுதி ஒதுக்கீடு என்பது குறித்து தான் இப்போது பேச்சு வார்த்தை நடந்து வருகிறது, கூட்டணிக்குள் குழப்பம் இல்லை என்று தெரிவித்தார்.

    ராம்விலாஸ் பஸ்வான் அதிரடி முடிவுகளை எடுப்பாரா? என்பது இனிமேல் தான் தெரியவரும். #AmitShah #RamVilasPaswan

    சட்டசபை தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார். #AssemblyPoll #LokSabhaPoll #RamVilasPaswan
    புதுடெல்லி:

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டது. அங்கு 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கு அந்தந்த மாநிலங்களில் இருந்த ஆளுங்கட்சி மீது மக்களுக்கு இருந்த எதிர்ப்பே காரணம் என பா.ஜனதாவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இந்த மாநிலங்களில் ஆளுங்கட்சி மீது மக்களுக்கு கோபம் இருந்த போதும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் பெற்றுள்ள வாக்கு சதவீதத்துக்கு சமமாக பா.ஜனதாவும் ஏறக்குறைய பெற்று இருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது’ என்று குறிப்பிட்டார்.

    2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறிய பஸ்வான், ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பு எப்போதும் வரவேற்கப்படும் என்றும் தெரிவித்தார்.  #AssemblyPoll #LokSabhaPoll #RamVilasPaswan
    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு 89 ஆயிரத்து 540 டன் உணவு தானியங்களும், 100 டன் பருப்புவகைகளும் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளதாக மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார். #KeralaFlood #RamVilasPaswan
    புதுடெல்லி:

    மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம், 1 லட்சத்து 18 ஆயிரம் டன் உணவு தானியங்கள் வழங்குமாறு கேட்டுக்கொண்டது. மத்திய அரசு, 89 ஆயிரத்து 540 டன் உணவு தானியங்களும், 100 டன் பருப்புவகைகளும் கேரளாவுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. கேரளாவில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வராத மக்களுக்கு இப்பொருட்களை வினியோகம் செய்ய கேரள அரசு பயன்படுத்திக்கொள்ளலாம். இவை முதல் கட்ட உதவிதான். தேவைப்பட்டால், இன்னும் உதவ தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #KeralaFlood #RamVilasPaswan 
    எஸ்.சி, எஸ்.டி சட்டத்தை திருத்தம் செய்ய வலியுறுத்தி ராம்விலாஸ் பஸ்வான் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளதால் பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. #RamVilasPaswan #BJP #Modi
    புதுடெல்லி:

    பா.ஜனதா கூட்டணியில் ராம்விலாஸ் பஸ்வானின் ராஷ்டிரிய லோக்தளம் கட்சி இடம்பெற்றுள்ளது. பிரதமர் மோடி மந்திரி சபையில் ராம் விலாஸ் பஸ்வான் உணவு மந்திரியாக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் அவர் மோடி அரசுக்கு எதிராக மிரட்டல் விடுத்துள்ளார்.

    சமீபத்தில் எஸ்.சி, எஸ்.டி சட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. தீண்டாமை சட்டத்தின் கீழ் யாரையும் விசாரணை இன்றி கைது செய்ய முடியாது என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.

    இது எஸ்.சி.,எஸ்.டி., சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் என்றும் இதை கண்டித்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. தலீத்சேனா அமைப்பு சார்பில் எஸ்.சி., எஸ்.டி., சட்டத்தில் திருத்தம் செய்யக் கோரி தொடர் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

    இந்தநிலையில் இந்த சட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற 9-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி ராம்விலாஸ் பஸ்வானின் மகனும், ராஷ்டிரிய லோக்தளம் கட்சியின் தலைவருமான சிராக் பஸ்வான் கூறுகையில், எஸ்.சி., எஸ்.டி., சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அமைந்துள்ளது. மத்திய அரசு இதில் திருத்தம் செய்து சட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த ஏப்ரல் 2-ந்தேதி தலித் அமைப்புகள் போராட்டம் நடத்தின. தற்போது நாங்கள் இதுதொடர்பான பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்.


    பிரதமர் மோடி இதில் தலையிட்டு உரிய தீர்வு காண்பார் என்று எதிர்பார்க்கிறோம். இந்தப் பிரச்சனையில் நாங்கள் தெலுங்கு தேசம் கட்சியைப்போல் நடந்து கொள்ளமாட்டோம். நாங்கள் ஆட்சியில் பங்கெடுத்து இருப்பதால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏற்கனவே பா.ஜனதா கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறிவிட்டது. சிவசேனா, பிஜி ஜனதாதளம் கட்சிகளும் மிரட்டல் விடுத்து வருகின்றன. தற்போது ராம் விலாஸ் பஸ்வான் கட்சியும் மிரட்டல் விடுத்து இருப்பது கூட்டணியில் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. #RamVilasPaswan #BJP #Modi
    ×