search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karnataka CM"

    மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரைவாக அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கடிதம் எழுதியுள்ளார். #MekedatuDam #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.5,912 கோடியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து அனுமதி வழங்கக்கோரி மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. அதன் மீது மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை. இந்த திட்டத்திற்கு தமிழக விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    பெங்களூரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவது, 400 மெகாவாட் மின்உற்பத்தி செய்வது, காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீரை வழங்குவது ஆகியவை தான் புதிய அணையின் நோக்கம். இரு மாநிலங்களும் நீர் ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு இல்லாமல் காவிரி ஆற்றில் நீர்மின் உற்பத்தி திட்டங்களை அமல்படுத்திக்கொள்ள காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்திற்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய தண்ணீர் அளவில் எந்த பாதிப்பும் இருக்காது. மழை நன்றாக பெய்யும் ஆண்டுகளில் தமிழகத்திற்கு மாதந்தோறும் தண்ணீர் திறந்துவிடுவதில் எந்த பிரச்சினையும் இருக்காது. எனவே புதிய அணை கட்டுவதற்கான அனுமதியை விரைவாக வழங்க வேண்டும். இந்த பிரச்சினையை தீர்க்கும் நோக்கத்தில் இரு மாநில முதல்-மந்திரிகள் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.



    மத்திய மந்திரி நிதின் கட்காரியை முன்னாள் பிரதமர் தேவேகவுடா நேற்று முன்தினம் டெல்லியில் நேரில் சந்தித்து, மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கைவிடுத்தார்.

    அதற்கு நிதின் கட்காரி, தமிழக அரசுடன் பேசி இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.  #MekedatuDam #Kumaraswamy

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்திற்கு மத்திய அரசு ரூ.100 கோடி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். #KodaguRain #KarnatakaCM
    பெங்களூரு:

    கர்நாடக முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    கேரள மாநிலத்திற்கு நிவாரண உதவியாக ரூ.500 கோடி வழங்குவதாக பிரதமர் அறிவித்திருந்தார். அதே போல் கர்நாடக மாநிலத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்திற்கு குறைந்தது ரூ.100 கோடி வழங்குவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதற்காக நாங்கள் மத்திய அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். வெள்ளத்தால் பழுதடைந்த சாலைகளை சரி செய்ய வேண்டும். நாங்கள் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் உதவியை பெற்று வருகிறோம்.



    மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்தில் நான் 2 நாட்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டேன். பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழைக்கு இதுவரை 12 பேர் மரணம் அடைந்துள்ளனர். 845 வீடுகள் முழுவதுமாகவும், 773 வீடுகள் பாதி அளவும் சேதம் அடைந்துள்ளன. மொத்தம் 6620 பேர் வெள்ளத்தில் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிவாரண முகாம்களுக்கு பால், உணவு வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குடகு மாவட்டத்திற்கு தேவையான வெள்ள நிவாரணப் பணிகளுக்கு தேவையான நிதியை மத்தியில் ஆளும் பாஜக அரசு வழங்க வேண்டும் என கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வராவும் கூறியுள்ளார். #KodaguRain #KarnatakaCM
    குடகில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு தலா ரூ.3,800 நிதி உதவி வழங்கப்படும் என்று கர்நாடக முதல் அமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார். #KarnatakaRain #FloodHitKodagu
    பெங்களூரு:

    ‘கர்நாடகத்தின் ஸ்காட்லாந்து‘ என்று அழைக்கப்படும் குடகில் கடந்த ஒருவாரமாக மழை கோரதாண்டவமாடியது.

    இதனால் மடிகேரி, சோமவார்பேட்டை, விராஜ்பேட்டை ஆகிய தாலுகாக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மடிகேரி தாலுகா நாகபொக்லு, முக்கொட்லு, சுண்டிகொப்பா, மக்கந்தூர், பாடக்கேரி, தொட்டபெலகுந்தா, பாலூர், கல்லூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் சிக்கி நாசமாகியுள்ளன. இதன் காரணமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடுகள், உடைமைகளை இழந்து அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் பரிதவித்து வருகிறார்கள்.



    மொத்தத்தில் மழையின் கோரபசிக்கு குடகு மாவட்டம் உருக்குலைந்து போய் கிடக்கிறது. கனமழையின் கோரதாண்டவத்தில் சிக்கிய குடகு மாவட்டத்தில் மீட்பு பணிகளை கர்நாடக அரசு முடுக்கிவிட்டுள்ளது. மேலும் அரசு சார்பில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளும் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் குடகு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்கள் குறித்து முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்தில் நான் 2 நாட்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டேன். பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழைக்கு இதுவரை 12 பேர் மரணம் அடைந்துள்ளனர். 845 வீடுகள் முழுவதுமாகவும், 773 வீடுகள் பாதி அளவும் சேதம் அடைந்துள்ளன. 123 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் சேதம் அடைந்துள்ளன.

    58 பாலங்கள், 278 அரசு கட்டிடங்கள், 3,800 மின் கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. சில சாலைகள் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளன. அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களில் இன்று (அதாவது நேற்று) காலை 10 மணி வரை 4,320 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழையின் தீவிரம் சற்று குறைந்துள்ளதால் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    குடகு மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறை, கர்நாடக போலீஸ் ஆயுதப்படை, ராணுவம், விமானப்படை, கடற்படை, தேசிய இயற்கை பேரிடர் மீட்பு குழு, மாநில அரசின் வருவாய்த்துறை, ஊர்க்காவல் படையை சேர்ந்த 1,725 பேர் சிறப்பு பயிற்சி பெற்று போர்க்கால அடிப்படையில் 24 மணி நேரமும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் மக்களை மீட்கும் பணிக்காக வந்துள்ளன.

    கர்நாடக அரசின் தலைமை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் வெள்ள சேதங்கள் மற்றும் நிவாரண பணிகள் குறித்த தகவல்களை சேகரித்து வருகிறார்கள். ஜனாதிபதி, பிரதமர், மத்திய ராணுவ மந்திரி ஆகியோர் என்னிடம் பேசி விவரங்களை கேட்டு பெற்றனர். தலைமை செயலாளர் இன்று (அதாவது நேற்று) குடகு, தட்சிண கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் கூட்டம் நடத்தி விவரங்களை பெற்றார். நிவாரண பணிகள் குறித்து சில உத்தரவுகளை தலைமை செயலாளர் பிறப்பித்துள்ளார்.

    தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி ஆகிய மாவட்டங்களில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்புகிறது. குடகு மாவட்டத்தில் மழை சிறிதளவுக்கு குறைந்திருந்தபோதும், அங்கு நிவாரண பணிகளை மேற்கொள்வதில் சவாலாக உள்ளது. மாவட்ட பொறுப்பு மந்திரி, பொறுப்பு செயலாளர், தீயணைப்புத்துறை டி.ஜி.பி., கூடுதல் தலைமை செயலாளர்கள் 2 பேர் குடகு மாவட்டத்திலேயே தங்கி நிவாரண பணிகளை நிர்வகித்து வருகிறார்கள்.

    மைசூரு, தட்சிண கன்னடா மாவட்டங்களை சேர்ந்த சில அதிகாரிகளையும் குடகுக்கு அனுப்பி இருக்கிறோம். குடகு மாவட்டத்தில் 41 நிவாரண முகாம்கள், தட்சிண கன்னடா மாவட்டத்தில் 9 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது மொத்தம் 6,620 பேர் இந்த நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த நிவாரண முகாம்களுக்கு பால், உணவு வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளது.

    மாநிலம் முழுவதும் இருந்து வரும் நிவாரண பொருட்கள் குடகு மாவட்ட நிர்வாகம் சார்பில் பெறப்படுகிறது. அந்த நிவாரண பொருட்கள் கிராம பஞ்சாயத்து வாரியாக பிரித்து மக்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 5 மருத்துவ குழுக்கள், 10 வருவாய்த்துறை குழுக்களை குடகுக்கு அனுப்பி இருக்கிறோம். 60 பொக்லைன் எந்திரங்கள், 20 ஆழ்துளை கிணறு அமைக்கும் லாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு அடுத்த 10 நாட்களில் தற்காலிக அலுமினியம் கொட்டகைகள் அமைத்து கொடுக்க முடிவு செய்துள்ளோம். இதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குசால்நகரில் 3 லே-அவுட்டுகள் முழுவதுமாக நீரில் மூழ்கி இருக்கின்றன. அங்கிருந்து தண்ணீரை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இந்த வெள்ளம் வடிந்த பிறகு அடுத்து வரும் சவால் என்னவென்றால், மக்களின் உடல் ஆரோக்கியம். தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் குழுக்களை குடகுக்கு அனுப்பி இருக்கிறோம். மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மழையால் ஏற்பட்டுள்ள குப்பைகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

    குடகு மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட பாடப்புத்தகங்கள் வெள்ளத்தில் சிக்கி சேதம் அடைந்துவிட்டதால், அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு புதிதாக பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்படும். குடகு மாவட்டத்தில் நிவாரண முகாம் களில் உள்ளவர்களுக்கு உடனடியாக ஒரு குடும்பத்திற்கு ரூ.3,800 வீதம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும் பாதிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் குடும்பங்களுக்கு தினசரி உணவு பொருட்களை வழங்க 10 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பாகமண்டலா- நாபொக்லு, அய்யங்கேரி, சுள்ளியா-மடிகேரி சாலையில் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அவற்றை சரிசெய்யும் பணியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குடகு மாவட்டத்தில் மின் வினியோகத்தை சரிசெய்ய கர்நாடக மின்சார கழகம் மற்றும் பெங்களூரு மின் வினியோக கழகங்கள் மூலம் மின் ஊழியர்கள் அடங்கிய குழுக்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றன.

    குடகு மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 20 நாட்கள் விடுமுறை விடப்பட்டன. இதனால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்த உத்தரவிட்டுள்ளேன். குடகு மாவட்டத்தில் அரசு துறைகளில் காலியாக பணியிடங்களை நிரப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டத்தில் அரசு அதிகாரிகளுக்கு பணி இடமாறுதல் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளோம்.

    அந்த மாவட்டத்தில் தாலுகா வாரியாக ஏற்பட்டுள்ள சேதம் குறித்த அறிக்கையை தயாரிக்கவும், வீடுகளை கட்டி கொடுக்கும் பணிகளை நிர்வகிக்கவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ விரும்புவோர் முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு பணத்தை அனுப்பலாம்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.  #KarnatakaRain #FloodHitKodagu
    மேகதாதுவில் புதிய அணை கட்ட தமிழக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து பேச முடிவு செய்துள்ளேன் என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறினார். #MegathathuDam #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக மந்திரிசபை கூட்டத்திற்கு பிறகு முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. அதனால் இப்போது கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 71 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நாளை(அதாவது இன்று) முதல் இன்னும் அதிகளவில் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு வரை திறக்க வேண்டிய நீரை இப்போது திறந்துவிடுகிறோம்.

    ஒரு நாளைக்கு சராசரியாக 10 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் தமிழகத்திற்கு செல்கிறது. இந்த நீர் வீணாக கடலில் கலக்கிறது. இது யாருக்கும் பயன் இல்லை. அதனால் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இதற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.

    நீர்ப்பாசனத்துறை மந்திரி, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் அனுமதியை கேட்டுள்ளோம். மந்திரி டி.கே.சிவக்குமார் சமீபத்தில் டெல்லியில் மத்திய மந்திரி நிதின்கட்காரியை நேரில் சந்தித்து இதுகுறித்து பேசினார். அப்போது இதுபற்றி ஒரு ஆலோசனை கூட்டத்தை கூட்டுமாறு அவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



    மேகதாதுவில் அணை கட்டுவதால் கர்நாடகத்தை விட தமிழகத்திற்கு தான் அதிக பயன் கிடைக்கும். அதனால் கர்நாடகம் தனது சொந்த செலவில் அணை கட்ட தயாராக உள்ளது. நமது விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்றால் மேகதாதுவில் அணை கட்டியே ஆக வேண்டும். வேறு வழி இல்லை.

    தமிழக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து இதுபற்றி பேசுவேன். அங்குள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து இதுபற்றி எடுத்துக்கூற நான் தயாராக உள்ளேன். இது தொடர்பாக அவர்களுக்கு கடிதம் எழுதுவேன்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.  #MegathathuDam  #Kumaraswamy
    காவிரி விவகாரம் தொடர்ந்து ஆலோசனை நடத்துவதற்காக, கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. #Kumaraswamy #Allpartymeet #CauveryIssue
    பெங்களூரு:

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு அமைப்புகளுக்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த ஆணையத்தின் தலைமையகம் டெல்லியில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்கள், பகுதி நேர உறுப்பினர்கள் 9 பேர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2-ந் தேதியன்று டெல்லியில் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும், மத்திய அரசு பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள். இதில், பல்வேறு அம்சங்கள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.



    இந்த நிலையில், கர்நாடகாவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார்.  குமாரசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகம் சார்பில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. #Kumaraswamy #Allpartymeet #CauveryIssue
    காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான கர்நாடக மாநில உறுப்பினர்களின் பெயர்கள் இன்னும் 3 நாட்களில் பரிந்துரை செய்யப்படும் என அம்மாநில முதல்மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார். #cauverymanagementcommission #cauverywater
    பெங்களூரு:

    காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது. இதையடுத்து கர்நாடக மாநில தேர்தல் முடிவடைந்த உடன் மேலாண்மை ஆணையம் குறித்த ஆவணங்களை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

    இதில் மாநில அரசுகளின் சில கோரிக்கைகளின் அடிப்படையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, மேலாண்மை ஆணையம் என அறிவிக்கப்பட்டு, அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

    இந்த மேலாண்மை ஆணையத்தில் மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் இடம் பெறுவார்கள் என்பதன் அடிப்படையில் 4 மாநில உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வழங்க வேண்டும் என மத்திய நீர்வளத்துறை 4 மாநிலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. 

    அதன் அடிப்படையில் தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய 3 மாநில உறுப்பினர் பெயர் பட்டியல் குறித்த நேரத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கர்நாடகா மட்டும் உறுப்பினர் பட்டியலை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது.



    இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக நேற்று மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்கரியை கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி நேரில் சந்தித்து பேசினார். அதில் காவிரி மேலாண்மை ஆணையத்தில் சில குறைபாடுகள் இருப்பதாகவும் அதனை சரி செய்தால் ஏற்றுக்கொள்ள தயார் எனவும் தெரிவித்திருந்தார். 

    மேலும், உரிய நேரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான உறுப்பினர் பட்டியலை அறிவிப்போம் எனவும் தெரிவித்திருந்தார். 

    அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான உறுப்பினர்களின் பெயர் பட்டியல் இன்னும் 3 நாட்களில் பரிந்துரை செய்யப்படும் என இன்று குமாரசாமி அறிவித்துள்ளார். #Cauverymanagementcommission #Cauverywater #karnatakaCM, #Kumaraswami
    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியை இன்று சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களும் சுமுகமாக செயல்படுவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். #Kamalhaasan #Kumaraswamy
    பெங்களூர்:

    தமிழகம்-கர்நாடகம் இடையே 40 ஆண்டுகளாக காவிரி பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்ததால் இருமாநில நல்லுறவு பாதிக்கப்பட்டது.

    காவிரி பிரச்சினை எழும் போதெல்லாம் பெங்களூரில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதற்கு இரு மாநிலங்கள் இடையே நல்லிணக்கம் மற்றும் சுமூக நிலை இல்லாததே காரணம். இதற்கான முயற்சிகளில் எந்த அரசியல் தலைவர்களும் ஈடுபடவில்லை.



    இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியதும் நடிகர் கமல்ஹாசன் காவிரி பிரச்சினையில் இரு மாநிலங்களுக்கு இடையே கசப்புணர்வை தீர்க்க பாடுபடுவேன், கர்நாடக முதல்-மந்திரியை சந்தித்து பேசுவேன் என்று அறிவித்தார்.

    கர்நாடக முதல்-மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றபோது அந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

    சோனியா, ராகுல், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை அந்த நிகழ்ச்சியில் சந்தித்துப் பேசினார். முதல்-மந்திரி குமாரசாமியையும் தனியாக சந்தித்து பேசினார்.

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கமல்ஹாசனை வரவேற்று அவர் தோள் மீது கைபோட்டு பேசும் அளவுக்கு சகஜமாக பழகினார். கமல்ஹாசனின் இந்த சந்திப்பு தமிழர்-கன்னடர் உறவை மேம்படுத்துவதாக இருந்தது.

    இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியை மீண்டும் சந்திக்க கமல்ஹாசன் முடிவு செய்தார். சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கும்படி கடிதம் எழுதினார். அதை ஏற்று குமாரசாமி இன்று கமல்ஹாசனை சந்திப்பதாக பதில் அனுப்பினார்.

    இதை ஏற்று கமல்ஹாசன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் சென்றார். இரவு ஓட்டலில் தங்கினார்.

    இன்று அவர் பெங்களூரில் முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வமான கிருஷ்ணா இல்லம் சென்றார். அவரை குமாரசாமி வரவேற்று அழைத்துச் சென்றார். குமாரசாமிக்கு கமல்ஹாசன் பூங்கொத்து வழங்கினார். பதிலுக்கு குமாரசாமியும் பூங்கொத்து வழங்கினார்.

    குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்து இருப்பதை கர்நாடகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் வரவேற்றுள்ளன. #Kamalhaasan #Kumaraswamy


    காவிரி நீர் மேலாண்மை ஆணையம் குறித்து நிபுணர்களின் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார். #CauveryManagementAuthority #Kumaraswamy
    பெங்களூரு:

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து அதை அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்களின் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்படி தமிழக அரசு தனது பிரதிநிதிகளை நேற்று நியமித்தது.

    இந்த நிலையில் இதுகுறித்து முதல்-மந்திரி குமாரசாமியிடம் பெங்களூருவில் நேற்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. இதுகுறித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதனால் கர்நாடகத்திற்கு ஏற்படும் சாதகங்கள் மற்றும் பாதகங்கள் குறித்து ஆராய வேண்டும். இதுகுறித்து நிபுணர்களின் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும். கர்நாடகத்தின் நலனை காக்க மாநில அரசு தயாராக உள்ளது.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #CauveryManagementAuthority #Kumaraswamy
    கர்நாடக சட்டசபையில் முதல் மந்திரி குமாரசாமி ஆட்சி மீதான நம்பிக்கை தீர்மானித்தின் மீது இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 117 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். #Kumaraswamy #floortest #KarnatakaAssembly #KarnatakaCM

    பெங்களூரு:

    சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளன.

    இதற்கிடையே, விதான் சவுதாவில் மஜத தலைவர் குமாரசாமி முதல் மந்திரியாக பதவியேற்றார். அவருடன் துணை முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவும் பதவியேற்றார்.

    இவர்கள் இருவரை தவிர மேலும் 32 பேர் மந்திரிகளாக பதவியேற்க உள்ளனர். இதில் காங்கிரசுக்கு 22 மந்திரி பதவிகளும், மஜதவுக்கு 12 மந்திரி பதவிகளும் அடக்கம். சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பாஜகவின் எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், முதல் மந்திரி குமாரசாமி ஆட்சி மீதான நம்பிக்கை தீர்மானித்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. முன்னதாக தனது அரசின் சார்பில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் பற்றி சட்டசபையில் குமாரசாமி பேசினார். அப்போது, காங்கிரஸ் - மஜத கூட்டணி ஐந்து ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும். நாங்கள் மக்களுக்காக உழைப்போம். எங்கள் தனிப்பட்ட தேவைகளை நிறைவு செய்வதற்காக நாங்கள் இங்கு வரவில்லை, என்றார்.

    அவரைத்தொடர்ந்து எடியூரப்பா பேசினார். எடியூரப்பா பேச்சின் இடையிடையே காங்கிரஸ் உறுப்பினர்கள் சப்தமாக சிரித்தனர். முதல்-மந்திரி குமாரசாமியும் இடையில் எழுந்து பேசினார். பின்னர் பா.ஜ.க. உறுப்பினர்களை அனைவரும் ஒட்டு மொத்தமாக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

    இதைத்தொடர்ந்து அவையில் இருந்த 117 எம்.எல்.ஏ.க்கள் குரல் வாக்கெடுப்பின் மூலம்,  ஆதரவளித்ததை தொடர்ந்து குமாரசாமி தாக்கல் செய்த நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்தார். #Kumaraswamy #floortest #KarnatakaAssembly #KarnatakaCM
    கர்நாடக சட்டசபையில் குமாரசாமி ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். #Karnatakafloortest #BJPWalkOut

    பெங்களூரு:

    சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளன.

    இதற்கிடையே, விதான் சவுதாவில் மஜத தலைவர் குமாரசாமி முதல் மந்திரியாக பதவியேற்றார். அவருடன் துணை முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவும் பதவியேற்றார்.

    இவர்கள் இருவரை தவிர மேலும் 32 பேர் மந்திரிகளாக பதவியேற்க உள்ளனர். இதில் காங்கிரசுக்கு 22 மந்திரி பதவிகளும், மஜதவுக்கு 12 மந்திரி பதவிகளும் அடக்கம். சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பாஜகவின் எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், முதல் மந்திரி குமாரசாமி ஆட்சி மீதான நம்பிக்கை தீர்மானித்தின் மீது இன்று நடைபெற்றது. அதற்கு முன் தனது அரசின் சார்பில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் பற்றி சட்டசபையில் குமாரசாமி பேசினார். 

    அவரைத்தொடர்ந்து எடியூரப்பா பேசினார். எடியூரப்பா பேச்சின் இடையிடையே காங்கிரஸ் உறுப்பினர்கள் சப்தமாக சிரித்தனர். முதல்-மந்திரி குமாரசாமியும் இடையில் எழுந்து பேசினார். பின்னர் பா.ஜ.க. உறுப்பினர்களை அனைவரும் ஒட்டுமொத்தமாக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
    பெங்களூருவில் இன்று நடைபெற்ற கோலாகல விழாவில், கர்நாடகத்தின் 24-வது முதல்-மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றார். #KarnatakaCM #HDKumaraswamy

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 78 இடங்களையும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதனால் தொங்கு சட்டசபை அமைந்தது. இந்த நிலையில் ஜனதா தளம் (எஸ்) ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. ஆனால் கவர்னர் பா.ஜனதாவை ஆட்சி அமைக்க அழைத்தார். அதோடு பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமும் கொடுத்தார்.

    ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு கடந்த 19-ந் தேதி கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. பெரும்பான்மை இல்லாததால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜனதா தளம் (எஸ்) தலைவர் குமாரசாமியை, ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

    இதைத்தொடர்ந்து, மந்திரி பதவி பங்கீடு தொடர்பாக காங்கிரசுக்கும், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. அதன்படி ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு முதல்-மந்திரி பதவி உள்பட 12 மந்திரி பதவியும் மற்றும் துணை சபாநாயகர் பதவியும், காங்கிரசுக்கு துணை முதல்-மந்திரி உள்பட 22 மந்திரி பதவியும் மற்றும் சபாநாயகர் பதவியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. காங்கிரசை சேர்ந்த ரமேஷ்குமார் சபாநாயகராக பதவி ஏற்பார்.



    கவர்னரின் அழைப்பை ஏற்று கர்நாடகத்தின் 24-வது முதல்-மந்திரியாக குமாரசாமி இன்று (புதன்கிழமை) பதவி ஏற்றார். பெங்களூரு விதான சவுதா கட்டிடத்தின் முன்பகுதியில் பதவி ஏற்பு விழா இன்று மாலை 4:30 மணியளவில் கோலாகலமாக நடைபெற்றது. 

    குமாரசாமியுடன் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். பதவி ஏற்றவர்களுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. அதன் பிறகு மற்ற மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    பதவி ஏற்பு விழாவுக்காக சுமார் 80 அடி நீளம், 60 அடி அகலம் கொண்ட பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. 20-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. அகன்ற திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. விதான சவுதாவை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பதவி ஏற்பு விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கம்யூனிஸ்டு தலைவர் சீதாராம் யெச்சூரி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, வீரப்பமொய்லி, உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரிகள் மாயாவதி, அகிலேஷ் யாதவ், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



    விழா அரங்கில் உத்தரபிரதேசம் மாநில முன்னாள் முதல்-மந்திரிகள் மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் அருகருகே அமர்ந்திருந்ததை காண முடிந்தது. மகன் குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்ற காட்சியை தேவகவுடாவும், அவரது மனைவியும் நெகிழ்ச்சியுடன் கண்டு மகிழ்ந்தனர். #KarnatakaCM #HDKumaraswamy
    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் முக ஸ்டாலின் அரசியல் நாகரீகம் கருதி கலந்து கொள்கிறார் என வைகோ கூறியுள்ளார்.#KarnatakaElections2018 #Kumaraswamy #MKStalin #Vaiko
    ஆலந்தூர்:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி இனி நாடாளுமன்ற தேர்தலில் எந்த வெற்றியும் பெற முடியாது.

    அரசியல் நாகரீகம் கருதி முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கர்நாடக முதல்- மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு மு.க. ஸ்டாலினை அழைத்து இருக்கிறார். அவர் பங்கேற்பார் என்று நினைக்கிறேன்.



    கர்நாடகாவில் யார் ஆட்சி அமைத்தாலும் தமிழ கத்துக்கான காவிரி நீர் பிரச்சினையில் நியாயமாக நடந்து கொள்ள மாட்டார்கள்.

    ஒரு திருமண நிகழ்ச்சி, பதவி ஏற்பு நிகழ்ச்சி போன்றவற்றில் கலந்து கொள்வதையும் காவிரி நீர் பிரச்சினையையும் சம்பந்தப்படுத்தக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.#KarnatakaElections2018 #Kumaraswamy #MKStalin #vaiko
    ×