search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் மந்திரி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லாரி வெளியே செல்லும் பாதையில் செல்லாமல் எதிர் திசையில் முகாம் அலுவலகத்தை விட்டு மர்மமான முறையில் வெளியேறியது.
    • கண்டெய்னர் லாரி வந்து சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் தாடே பள்ளியில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் முகாம் அலுவலகம் உள்ளது.

    இந்த அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது. வழக்கமாக முகாம் அலுவலகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகு உள்ளே அனுப்பபடுகின்றன.

    ஆனால் இந்த லாரி சோதனை எதுவும் செய்யப்படவில்லை. சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் அங்கு நின்ற லாரி வெளியே செல்லும் பாதையில் செல்லாமல் எதிர் திசையில் முகாம் அலுவலகத்தை விட்டு மர்மமான முறையில் வெளியேறியது.

    கண்டெய்னர் லாரி வந்து சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் நாரா லோகேஷ் இதுகுறித்து தேர்தல் அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்:-

    ஜெகன்மோகன் ரெட்டி முகாம் அலுவலகத்திற்கு வந்த லாரியில் கட்டு கட்டாக பணம் இருந்திருக்கலாம். அதனை எந்திரங்கள் மூலம் எண்ணி அனுப்பி வைத்துள்ளனர் அல்லது ஆந்திர பிரதேச தலைமை செயலகத்தில் மறைத்து வைக்கப்பட்ட கோப்புகள் கடத்தி வரப்பட்டு இருக்கலாம். ஒருவேளை லாரியில் போதைப்பொருட்கள் கூட இருந்திருக்கலாம் என கூறினார்.

    ஆந்திர மாநிலத்தில் உள்ள மற்ற எதிர்க்க ட்சிகளும் இது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர்.

    இது தொடர்பாக ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூறுகையில்:- தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் தேவையற்ற ஒரு நாடகத்தை உருவாக்குகிறார்கள்.

    பல அரசு துறைகள் முதல்வரின் முகாம் அலுவலகத்தில் இயங்குகிறது. சம்பந்தப்பட்ட வாகனம் அலுவலகங்களுக்கு பொருட்களை எடுத்துச் சென்றிருக்கலாம்.

    அவர்கள் சொல்வது போல பணம் எதுவும் கொண்டு வரப்படவில்லை. விசாகப்பட்டினத்தில் பிடிபட்ட போதை பொருள் நிரப்பப்பட்ட கண்டெய்னர் லோகேஷின் உறவினர்களுக்கு சொந்தமானது என்பது மக்களுக்கே தெரியும் என்றார்.

    • குஜராத்தைப் போல முன்னேற வேண்டுமானால், பிரதமர் உதவி தேவை.
    • காங்கிரஸ் ஆளும் மாநிலமான தெலுங்கானா, மத்திய அரசுடன் மோதலை விரும்பவில்லை. சுமுகமான உறவை விரும்புகிறது.

    தெலுங்கானா மாநிலம் அடிலாபாத்தில் நடைபெற்ற பல வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி வரவேற்றார்.

    "எங்களைப் பொறுத்தவரை, வளர்ச்சி என்பது ஏழைகளின் மேம்பாடு, தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் மேம்பாடு.

    பிரதமர் மோடி தெலுங்கானாவின் மூத்த சகோதரர். அவரது உதவியால் மட்டுமே முதல்வர்கள் தங்கள் மாநிலங்களை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.

    தெலுங்கானா முன்னேற வேண்டுமானால் குஜராத் மாதிரியை பின்பற்ற வேண்டும். குஜராத்தைப் போல முன்னேற வேண்டுமானால், பிரதமர் உதவி தேவை.

    "காங்கிரஸ் ஆளும் மாநிலமான தெலுங்கானா, மத்திய அரசுடன் மோதலை விரும்பவில்லை. சுமுகமான உறவை விரும்புகிறது.

    5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தின் லட்சிய இலக்குக்கு நாங்கள் பங்களிக்க விரும்புகிறோம். தெலுங்கானா மாநிலத்தின் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான நிதியையும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தெலுங்கானா முதல் மந்திரியாக சந்திரசேகர ராவ் பதவி வகித்தபோது மத்திய அரசுடன் கடுமையான மோதல் போக்கை கடைபிடித்தார். தற்போது தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

    காங்கிரஸ் முதல் மந்திரியான ரேவந்த் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றார். மேலும் அவரை மூத்த சகோதரர் என அழைத்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைபடுத்தி உள்ளது.

    தெலுங்கானா தேர்தலுக்கு முன்பாக ஆரம்ப காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பின்புலத்தில் இருந்து வந்த ரேவந்த் ரெட்டிக்கு அந்த கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

    • எப்போதும் தெலுங்கானாவை ஆதரிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
    • ராகுல் காந்தியால் தன்னைப் பற்றியே எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது.

    தெலுங்கானாவில் பா.ஜனதா விஜய சங்கல்ப யாத்திரை நடந்து வருகிறது. இதில் அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கலந்து கொண்டு பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி எப்போதும், தெலுங்கு மொழியை நேசிக்கிறார். தெலுங்கானா வளர்ச்சிக்கு எப்போதும் ஆதரவளித்து வருகிறார். தெலுங்கு, தெலுங்கானா மீது அவருக்கு இருக்கும் பாசம் அது. அவர் எப்போதும் தெலுங்கானாவை ஆதரிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

    ராகுல் காந்தியால் தன்னைப் பற்றியே எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது. அதனால் காங்கிரஸ் கட்சியின் அனைத்து உத்தரவாதங்களும் நிறைவேற்றப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.-சந்திரசேகர ராவ்( பி.ஆர்.எஸ்) கட்சி கூட்டணி அமையாது. இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும் அவர் தெலுங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதிகளை அவர் கிண்டல் செய்தார்.

    • மாநில கவர்னர் ஹரி பாபுவை நேற்று சந்தித்த லால்டுஹோமா, ஆட்சியமைக்க உரிமை கோரினாா்.
    • முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பாதுகாப்புப் பொறுப்பு அதிகாரியாக இவா் பணியாற்றியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜஸால்:

    வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 7-ந் தேதி ஒரே கட்டமாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. மொத்தம் 8.57 லட்சம் வாக்காளா்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் 82 சத வீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகின. கடந்த 4-ந் தேதி (திங்கட் கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    மாநிலத்தில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்த மிசோ தேசிய முன்னணியை வீழ்த்தி, மற்றொரு பிராந்திய கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியது.

    இக்கட்சி 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மிசோ தேசிய முன்னணிக்கு 10 இடங்கள் கிடைத்தன. பா.ஜ.க. 2 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், காங்கிரசுக்கு ஓரிடம்தான் கிடைத்தது.

    இந்நிலையில், ஜோரம் மக்கள் இயக்கம் கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் முதல்-மந்திரியாக கட்சித் தலைவா் லால்டுஹோமா தோ்வு செய்யப்பட்டாா்.

    இதைத் தொடா்ந்து, மாநில கவர்னர் ஹரி பாபுவை நேற்று சந்தித்த லால்டுஹோமா, ஆட்சியமைக்க உரிமை கோரினாா்.

    மாநில முதல்-மந்திரியாக லால்ஹோமா நாளை (வெள்ளிக்கிழமை) பதவியேற்க உள்ளதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

    74 வயதாகும் லால்டு ஹோமா, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவாா். முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பாதுகாப்புப் பொறுப்பு அதிகாரியாக இவா் பணியாற்றியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.
    • மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் முதல்-மந்திரியாக இருக்கிறார்.

    புதுடெல்லி:

    5 மாநில சட்டசபை தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது.

    மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.

    3 மாநிலத்தில் பெற்ற வெற்றியால் பா.ஜனதா மிகுந்த உற்சாகம் அடைந்து உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்ற ஆர்வத்தில் உள்ளது.

    இந்த நிலையில் 3 மாநிலத்துக்கும் புதுமுக முதல்-மந்திரிகள் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்-மந்திரி தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அவரது வீட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மாநில தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். 4½ மணி நேரத்துக்கு மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நீடித்தது. கட்சி தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்வதற்காக புதுமுகம் அவசியம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதனால் புதுமுக முதல்-மந்திரிகள் தேர்வு செய்யப் படலாம் என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

    மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் முதல்-மந்திரியாக இருக்கிறார். அவருக்கு 5-வது முறையாக முதல்-மந்திரி பதவி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் மேலிடம் அவருக்கு மீண்டும் பதவி கொடுக்க தயக்கம் காட்டி வருகிறது.

    • அசிம்தாஸ் என்ற இடைத்தரகா், ராய்பூரில் ரூ.5.39 கோடி ரொக்கப் பணத்துடன் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
    • சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பாகேல் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகளுக்கு வழி வகுத்துள்ளன.

    புதுடெல்லி:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

    சத்தீஸ்கரில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

    இந்நிலையில் அங்கு மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு வரும் 7-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    மகாதேவ் சூதாட்டச் செயலி உரிமையாளர்களிடம் இருந்து முதல்-மந்திரி பூபேஷ் பாகேலுக்கு இதுவரை ரூ.508 கோடி கைமாறி இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

    இதுகுறித்து அமலாக்கத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    'அசிம்தாஸ் என்ற இடைத்தரகா், ராய்பூரில் ரூ.5.39 கோடி ரொக்கப் பணத்துடன் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இது, தோ்தல் செலவுகளுக்காக காங்கிரஸ் கட்சிக்கு மகாதேவ் சூதாட்டச் செயலி உரிமையாளா்களால் அனுப்பப்பட்ட பணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    தாஸிடம் நடத்தப்பட்ட விசாரணையும் அவரது கைப்பேசியில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் பகுப்பாய்வும் சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பாகேல் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகளுக்கு வழி வகுத்துள்ளன. அவருக்கு இதுவரை ரூ.508 கோடி கைமாறியிருப்பதாக தெரியவருகிறது. இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அமலாக்கத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மகாதேவ் சூதாட்டச் செயலியால் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணம், பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சமாக பகிரப்பட்டதாக அமலாக்கத் துறை ஏற்கனவே விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இந்த விவகாரத்தில், செயலியின் உரிமையாளர்கள் சவுரவ் சந்திராகா், ரவி உப்பால் உள்பட 14 பேருக்கு எதிராக சமீபத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    மகாதேவ் செயலியின் சில பினாமி வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.15.59 கோடியை சட்டவிரோத பரிவா்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    ×