என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தர்மேந்திர பிரதான்"

    • PM SHRI நிதி விடுவிப்பு தொடர்பாக கேரள எம்.பி ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பினார்.
    • சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மாநிலங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

    மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு முதல் பி.எம்.ஸ்ரீ கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தது. இதில் தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் இணைய தொடர்ந்து மறுத்தது. இதனால் மத்திய அரசு அந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை நிறுத்தி வைத்தது.

    இந்தத் திட்டத்தை ஏற்றால்தான் நிதி என்றால், அந்த நிதியே வேண்டாம் என தமிழக அரசு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளது. இதே நடைமுறையை கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் பின்பற்றியது.

    இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு கேரளாவில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை கொண்டு வர சம்மதம் தெரிவித்து பின்னர் எழுந்த எதிர்ப்பினால் பின்வாங்கியது.

    இந்நிலையில், மக்களவையில், PM SHRI நிதி விடுவிப்பு தொடர்பாக கேரள எம்.பி ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "மத்திய அரசின் கல்வி நிதியைப் பெற சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மாநிலங்கள் கடைப்பிடிக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான நிபந்தனைகளை ஏற்கும் பட்சத்தில், நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க நாங்கள் தயாராக உள்ளோம்" என்று தெரிவித்தார்.

    • காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து 1400 பேர் காசிக்கு அழைத்து செல்லப்படுவார்கள்
    • காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் kashitamil.iitm.ac.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

    புதுடெல்லி:

    மத்திய-மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு - காசி கலாச்சார தொடர்பை வலுப்படுத்த கொண்டாடப்படும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி டிசம்பர் 2-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து 1400 பேர் காசிக்கு அழைத்து செல்லப்படுவார்கள். மாணவர்கள், ஆசிரியர்கள், பெண்கள், எழுத்தாளர், தொழில் வல்லுனர்கள், கைவினைஞர்கள், ஆன்மீக அறிஞர்கள் உள்ளிட்டோரை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் kashitamil.iitm.ac.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

    • மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்துக்கு அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
    • இருமொழிக் கொள்கையில் படித்த தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர்.

    சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தமிழக அரசு முமொழிக் கொள்கையில் அரசியல் செய்ய வேண்டாம். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டும் கல்வி நிதி வழங்க முடியும்" என்று பேசினார்.

    அவரது கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில்," தமிழ்நாடு திறன் வாய்ந்த மாநிலமாக இருக்க இருமொழிக் கொள்கைதான் காரணம்.

    இந்த இருமொழிக் கொள்கையில் படித்த தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர்" என்றார்.

    • எழுத்தறிவு என்பது வாசிப்பு மற்றும் எழுதுதலைத் தாண்டிச் செல்கிறது.
    • இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் கடந்த 2011-ம் ஆண்டு 74 சதவீதமாக இருந்தது.

    புதுடெல்லி:

    சர்வதேச எழுத்தறிவு தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் காணொலி மூலம் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், 'எழுத்தறிவு என்பது வாசிப்பு மற்றும் எழுதுதலைத் தாண்டிச் செல்கிறது. இது கண்ணியம், அதிகாரமளித்தல் மற்றும் தன்னம்பிக்கைக்கான ஒரு வழியாகும். இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் கடந்த 2011-ம் ஆண்டு 74 சதவீதமாக இருந்த நிலையில், 2023-24-ம் ஆண்டில் 80.9 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. அந்தவகையில் கடந்த 13 ஆண்டுகளில் இந்த விகிதம் அதிகரித்து உள்ளது' என குறிப்பிட்டார்.

    அதேநேரம் ஒவ்வொரு குடிமகனுக்கும் எழுத்தறிவு ஒரு யதார்த்தமாக மாறும்போதுதான் உண்மையான முன்னேற்றம் வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மும்மொழி கொள்கையை விடவும் சிறப்பான இருமொழிக் கொள்கையை ஏன் உடைக்க பார்க்கிறீர்கள்.
    • இது மொழி பற்றியது மட்டுமல்ல - முடிவுகளை வழங்கும் கல்வி முறையைப் பாதுகாப்பது பற்றியது.

    தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    * தமிழகத்தில் 1.09 கோடி மாணவர்கள் மாநில வாரிய பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

    * மொத்தம் 1,635 சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர்.

    * மும்மொழி கொள்கையை விடவும் சிறப்பான இருமொழிக் கொள்கையை ஏன் உடைக்க பார்க்கிறீர்கள்.

    * மாணவர்களுக்கு எது சிறந்தது என்பதை முடிவு செய்வதில் தமிழ்நாடு அரசு ஒருபோதும் சமரசம் செய்யாது.

    * தமிழ்நாட்டில் கல்விமுறை சிறந்தது என பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் அதை ஏன் மாற்ற வேண்டும்?

    * தமிழ் என்பது வெறும் ஒரு மொழி மட்டுமல்ல - அது நமது வேர்கள், வரலாறு மற்றும் மதிப்புகளுடன் தொடர்புடையது.

    * நமது மாணவர்கள் ஏற்கனவே வலுவான இருமொழி அடித்தளத்துடன் சிறந்து விளங்கும்போது, தமிழ்நாட்டிற்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை.

    * இது மொழி பற்றியது மட்டுமல்ல - முடிவுகளை வழங்கும் கல்வி முறையைப் பாதுகாப்பது பற்றியது.

    * NEP-ஐ விட சிறப்பாக செயல்படும் ஒரு அமைப்பை ஏன் சீர்குலைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மத்திய அரசின் பரிந்துரை அடிப்படையில் ஏற்கமாட்டோம் என கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.
    • மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக்கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக கடிதத்தில் கூறவே இல்லை.

    சென்னை:

    தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி, இன்று மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள கடிதத்தை சுட்டிக்காட்டி கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் குழு பரிந்துரை அடிப்படையில் மட்டுமே PM SHRI பள்ளிகளை ஏற்போம் என கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் பரிந்துரை அடிப்படையில் ஏற்கமாட்டோம் என கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.

    மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக்கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக கடிதத்தில் கூறவே இல்லை.

    தமிழ்நாட்டிற்கு எது ஏற்றுக்கொள்ளத்தக்கதோ, அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் - அதிகமாகவோ, குறைவாகவோ எதுவும் இல்லை. உண்மைகளைத் திரிப்பதை நிறுத்துங்கள் என்று தெரிவித்துள்ளார். 



    • தர்மேந்திரா பிரதான் அவர்களே, தவறான தகவல்களைப் பரப்புவது உண்மைகளை மாற்றாது.
    • தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும் மரபையும் சிதைக்க முயற்சிப்பவர்கள்தான் அரசியல் செய்கிறார்கள்.

    நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கிய உடனேயே, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "பாஜக ஆளாத மாநிலங்களான கர்நாடகா, இமாச்சல பிரதேசத்திலும் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது. தமிழ்நாட்டு மாணவர்களை, திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது.

    தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது.

    பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யு-டர்ன் போட்டது. கடந்தாண்டு மார்ச் 15இல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது. திட்டத்தை ஏற்க ஒப்புக்கொண்டு சூப்பர் முதலமைச்சரின் ஆலோசனையில் அரசு பின்வாங்கியது. சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட மறுத்தனர்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் அவர்களே, தவறான தகவல்களைப் பரப்புவது உண்மைகளை மாற்றாது.

    தமிழ்நாடு தொடர்ந்து தேசிய கல்விக்கொள்கை 2020 ஐ எதிர்த்து வருகிறது, ஏனெனில் அது நமது வெற்றிகரமான கல்வி மாதிரியை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

    எங்களது நிலைப்பாட்டில் எந்த திடீர் மாற்றமும் இல்லை. 15/3/2024 தேதியிட்ட கடிதம் தேசிய கல்விக்கொள்கையை அங்கீகரிப்பதாக கூறவில்லை.

    மாணவர்களுக்கு நன்மை பயக்கும் போது மட்டுமே தமிழ்நாடு மத்திய திட்டங்களில் ஈடுபடுகிறது, ஆனால் அது எந்தவொரு திட்டத்தையும் அல்லது கட்டமைப்பையும் குருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்வதாக அர்த்தம் இல்லை. .

    ஒரு குழு அமைக்கப்படும் என்றும், குழுவின் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் செயல்படுத்துவது குறித்து நாங்கள் முடிவு செய்வோம் என்றும் அந்தக் கடிதம் தெளிவாகக் கூறுகிறது.

    அது தேசிய கல்விக்கொள்கையை திணித்து தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும் மரபையும் சிதைக்க முயற்சிப்பவர்கள்தான் அரசியல் செய்கிறார்கள்.

    தமிழ்நாட்டின் கல்வி மாதிரி முன்மாதிரியானது மற்றும் நமது மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் திறனை தொடர்ந்து நிரூபித்துள்ளது

    இந்தியாவின் பலமான அதன் பன்முகத்தன்மை பலவீனமானது இல்லை என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளவேண்டும் என்பதே நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது.

    தமிழ்நாட்டின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எது சிறந்தது என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அங்கீகரித்து ஆதரிப்பதன் மூலம், நீங்கள் உண்மையில் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும் அதன் மாணவர்களுக்கும் ஒரு சிறந்த சேவையைச் செய்கிறீர்கள்" என்று பதிவிட்டுள்ளார். 

    • குழந்தைகளின் கற்றல் இடைவெளியைக் குறைக்க உறுதியான அணுகுமுறை தேவை.
    • இந்தியாவுடன் அறிவுசார் துறையில் ஒத்துழைக்க பின்லாந்து ஆர்வம்.

    இந்தியா வந்துள்ள பின்லாந்து நாட்டின் கல்வி மந்திரி பெட்ரி ஹொன்கோனென், நேற்று முன்தினம் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங்கை டெல்லியில் சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானுடன் நேற்று அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்

    கொரோனாவுக்கு பிந்தைய கல்வித் துறைக்கான சவால்கள், முக்கிய பிரச்சனைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். குழந்தைகளின் கற்றல் இடைவெளியைக் குறைக்க உறுதியான அணுகுமுறை தேவை என்று அவர்கள் ஒப்புக் கொண்டனர். இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்தும் அப்போது ஆலோசிக்கப்பட்டது. 


    நிகழ்ச்சியில் பேசிய தர்மேந்திரப் பிரதான், இந்தியாவுடன் அறிவுசார் துறையில் ஒத்துழைக்க பின்லாந்து ஆர்வம் காட்டுவதாக கூறினார். ஆரம்ப கால குழந்தைகள் பராமரிப்பு, ஆசிரியர் பயிற்சி, டிஜிட்டல் கல்வி போன்றவற்றில் ஒருவருக்கொருவர் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டு பயனடையலாம் என்று அவர் தெரிவித்தார்.

    பின்லாந்து பல்கலைக்கழகங்கள் இந்திய உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட அவர் அழைப்பு விடுத்தார். வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு இந்தியாவில் அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு விரைவில் கொள்கை ரீதியான முடிவை அறிவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    • தமிழுக்கு மகாகவி பாரதியார் ஆற்றிய பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
    • வாரணாசியில் காசி–தமிழ் சங்கமம் நிகழ்ச்சி 16ந் தேதி முதல் நடைபெறுகிறது.

    காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே இருந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய உறவுகள் குறித்து இன்றைய இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ஒரு மாத காலம் காசி – தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி நாளை முறைப்படி தொடங்கி வைக்கிறார். மத்திய அரசின் கலாச்சாரத்துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்த விழாவில் பனாரஸ் பல்கலைக்கழகமும், சென்னை ஐஐடியும் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்துள்ளன.

    பிரதமர் வருகையை முன்னிட்டு வாரணாசியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் கங்கை நதி அனுமன் படித்துறையை ஒட்டி அமைந்துள்ள மகாகவி பாரதியாரின் இல்லத்திற்கு சென்று அவர் பார்வையிட்டார். அங்குள்ள பாரதியாரின் சிலைக்கு மத்திய மந்திரி மரியாதை செலுத்தினார். 


    பின்னர் பாரதியாரின் 96 வயது மருமகன் கே.வி.கிருஷ்ணனை சந்தித்து பாரதியாரின் நினைவுகள் குறித்து அவர் கலந்துரையாடினார். அப்போது பாரதியாரின் உறவினர்கள் உடன் இருந்தனர். தமிழுக்கு மகாகவி பாரதியார் ஆற்றிய அரும்பெரும் பணிகள் குறித்து மத்திய மந்திரி கேட்டறிந்ததாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாணவர்களின் மனஅழுத்தத்தைப் போக்கி அவர்களை உற்சாகப்படுத்த மத்திய கல்வித்துறை ஏற்பாடு.
    • கடந்த 5 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.

    பள்ளி பொதுத் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஆண்டுதோறும் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை நடத்தி வருகிறது.

    தேர்வு பயம் காரணமாக மாணவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தைப் போக்கி தேர்வு நடைமுறையை உற்சாகமாகக் கொண்டாடுவதற்கு அவர்களை தயார் படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். கடந்த 5 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.

    நடப்பாண்டிற்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள்,ஆன்லைன் மூலம் நடத்தப்படும் போட்டி மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்களுடன் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்களும் இதில் பங்கேற்கின்றனர்.

    இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://innovateindia.mygov.in/ppc-2023/ என்ற இணைய தளம் மூலம் வரும் 30ந் தேதிவரை பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் பிரதமருடனான தேர்வு குறித்த உரையாடல் நிகழ்ச்சியில் அதிக அளவில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்ளுமாறு மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • 2024-ம் ஆண்டில் இருந்தே ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம்.
    • என்ஜினீயரிங் படிப்புக்கான ஜே.இ.இ. நுழைவுத்தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்துவதுபோல்தான் இதை நடத்த உள்ளோம்.

    புதுடெல்லி:

    மத்திய கல்வி அமைச்சகம் கடந்த ஆகஸ்டு மாதம் புதிய பாடத்திட்ட கட்டமைப்பை அறிவித்தது. அதன்படி, மாணவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை எழுதலாம் என்று கூறியது.

    மாணவர்கள் தேர்வுக்கு சிறப்பாக தயாராக போதிய கால அவகாசம் அளிக்கவும், இரு தேர்வுகளில் எது அதிக மதிப்பெண்ணோ, அதை தக்க வைத்துக்கொள்ளவும் இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு மாணவர்களை சந்தித்தேன். அவர்கள் அதை வரவேற்றனர். நல்ல யோசனை என்று கூறினர். 2024-ம் ஆண்டில் இருந்தே ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம்.

    மாணவர்கள் பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தால், தங்களுக்கு ஓராண்டு வீணாகி விட்டதாக கருதுகின்றனர். தங்கள் வாய்ப்பு பறிபோய் விட்டதாகவும், இன்னும் சிறப்பாக படித்து இருக்கலாமே என்றும் நினைக்கின்றனர்.

    எனவே, ஒருமுறை மட்டும் தேர்வு நடத்துவதால் ஏற்படும் மனஅழுத்தத்தை தவிர்க்கவே இருமுறை தேர்வு அறிமுகப்படுத்தப்படுகிறது.

    என்ஜினீயரிங் படிப்புக்கான ஜே.இ.இ. நுழைவுத்தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்துவதுபோல்தான் இதை நடத்த உள்ளோம்.

    மாணவர்கள், முதல் பொதுத்தேர்விலேயே தாங்கள் சிறந்த மதிப்பெண் எடுத்திருப்பதாக கருதினால், இரண்டாவது தேர்வை எழுத தேவையில்லை. இருமுறையும் தேர்வு எழுத வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. இது, அவர்களின் விருப்பத்தை பொறுத்தது.

    ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் இந்த ஆண்டு23 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. எந்த உயிரும் போகக்கூடாது. அவர்கள் நம் குழந்தைகள். மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைப்பது நமது கூட்டு பொறுப்பு.

    பள்ளிக்கூடம் போலவே பயிற்சி மையங்களை நடத்துகிறார்கள். மொத்த மாணவர்களுடன் ஒப்பிடுகையில், தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை குறைவுதான்.

    இருப்பினும், இதை அலட்சியப்படுத்த முடியாது. இந்த 'போலி பள்ளிகள்' குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. மாணவர்களுக்கு பயிற்சி மையமே செல்ல தேவையில்லாத கல்வியை அளிப்பதுதான் மத்திய அரசின் நோக்கம்.

    நவோதயா பள்ளி மாணவர்கள், எந்த பயிற்சி மையங்களுக்கும் செல்லாமல், போட்டி தேர்வுகளில் சிறப்பாக செயல்படுகின்றனர். பள்ளிக்கல்வியே போதுமானது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

    டெல்லி, சென்னை ஐ.ஐ.டி.கள், வெளிநாடுகளில் தங்கள் வளாகங்களை அமைக்க உள்ளன. எந்தெந்த நாடுகளுக்கு விருப்பம் உள்ளதோ, அந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    அதுபோல், இந்தியாவில் வளாகங்களை அமைக்க விரும்பும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.

    மேற்கு வங்காளம், கர்நாடகா போன்ற மாநிலங்கள், புதிய கல்வி கொள்கையை எதிர்ப்பது அரசியல்ரீதியானது. கல்விரீதியானது அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • சீதாராம் யெச்சூரி 22-ந்தேதி கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என அறிவிப்பு.

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு தயாராகியுள்ளது. வருகிற 22-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.

    அரசியல் கட்சி தலைவர்கள் முதல் சாதனைப் படைத்தவர்கள், விருது பெற்றவர்கள் என ஆயிரக்கணக்கானோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலர் தங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

    சில தலைவர்கள் தங்களுக்கு அழைப்பிதழ் வந்ததாகவும், தாங்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்த கொள்ளமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர். அதற்கு காரணம் ராமர் கோவிலை வைத்து பா.ஜனதா ஆதாயம் பார்க்க நினைக்கிறது என விமர்சனம் செய்வதுதான்.

    இந்த நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில் "பல வருட போராட்டங்களுக்குப் பிறகு ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெற இருக்கிறது. ராமர் பக்தர்கள் வீடு வீடாக சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்கள்.

    எல்லோரும் 22-ந்தேதி அயோத்தி சென்று கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள முடியாது. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு உத்தர பிரதேச மாநிலம் அரசு மற்றும் கோவில் கமிட்டி ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி மக்கள் செல்ல முடியும். சிலர் கலந்து கொள்ளமாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர். அவர்களை அனுமன் அழைத்து வருவார்.

    இவ்வாறு மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி கும்பாபிஷேக விழாவில் கலந்த கொள்ளமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும், பா.ஜனதா ராமர் கோவிலை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

    உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் தலைவரான சஞ்சய் ராவத், அவரது கட்சி தொண்டர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்த கொள்ளமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், இதெல்லாம் அரசியல். பா.ஜனதா நடத்தில் நிகழ்ச்சியில் யார் கலந்த கொள்வார்கள்? இது தேசிய நிகழ்ச்சி இல்லை. இது பா.ஜனதாவின் நிகழ்ச்சி. பா.ஜனதாவின் பேரணி. பா.ஜனதா நிகழ்ச்சி முடிந்த பின்னர் நாங்கள் அயோத்தி செல்வோம் என்றார்.

    இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, அழைப்பிதழ் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் அயோத்தி செல்வேன். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதைவிட, யோசிக்க ஒன்றுமில்லை என்றார்.

    ×