என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "John Brittas"

    • PM SHRI நிதி விடுவிப்பு தொடர்பாக கேரள எம்.பி ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பினார்.
    • சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மாநிலங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

    மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு முதல் பி.எம்.ஸ்ரீ கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தது. இதில் தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் இணைய தொடர்ந்து மறுத்தது. இதனால் மத்திய அரசு அந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை நிறுத்தி வைத்தது.

    இந்தத் திட்டத்தை ஏற்றால்தான் நிதி என்றால், அந்த நிதியே வேண்டாம் என தமிழக அரசு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளது. இதே நடைமுறையை கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் பின்பற்றியது.

    இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு கேரளாவில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை கொண்டு வர சம்மதம் தெரிவித்து பின்னர் எழுந்த எதிர்ப்பினால் பின்வாங்கியது.

    இந்நிலையில், மக்களவையில், PM SHRI நிதி விடுவிப்பு தொடர்பாக கேரள எம்.பி ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "மத்திய அரசின் கல்வி நிதியைப் பெற சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மாநிலங்கள் கடைப்பிடிக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான நிபந்தனைகளை ஏற்கும் பட்சத்தில், நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க நாங்கள் தயாராக உள்ளோம்" என்று தெரிவித்தார்.

    • ரெயில்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் தொடர்பாக ஜான் பிரிட்டாஸ் கடிதம்.
    • மத்திய இணை மந்திரி ரவ்நீத் சிங் இந்தியில் பதில் கடிதம்.

    பாராளுமன்றத்தில் உள்ள தென்இந்திய எம்.பி.க்கள் கேள்விகள் கேட்டு மத்திய மந்திரிகளுக்கு கடிதம் எழுதினால் அதற்கு ஆங்கிலத்தில் பதில் கடிதம் அனுப்புவது வழக்கமாகவும், முன்னுதாரணமாகவும் இருந்து வருகிறது. ஆனால் சமீப காலமாக தென்இந்திய எம்.பி.க்கள் மத்திய மந்திரிகளுக்கு கடிதம் எழுதினால் அதற்கு இந்தியில் பதில் கடிதம் அனுப்புவது அதிகரித்து வருகிறது.

    கேரள எம்.பி.க்.கு இந்தியில் பதில் கடிதம்

    அந்த வகையில்தான் கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களவை எம்.பி. ஜான் பிரிட்டாஸ்க்கு நடந்துள்ளது. ரெயில்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் தொடர்பாக ஜான் பிரிட்டாஸ் மத்திய இணை மந்திரி ரவ்நீத் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதற்கு ரவ்நீத் சிங் இந்தியில் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

    இணை மந்திரி இந்தியில் கடிதம் அனுப்பியதை கண்டிக்கும் வகையில் ஜான் பிரிட்டாஸ் மலையாளத்தில் கடிதம் எழுதி பதிலடி கொடுத்துள்ளார்.

    தமிழக எம்.பி.-க்கும் இதுபோல் நடந்த சம்பவம்

    கடந்த மாதம் இதேபோல் இந்தியில் கடிதம் எழுதிய ரெயிலவே இணை அமைச்சருக்கு தி.மு.க.எம்.பி. அப்துல்லா தமிழில் பதில் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×