search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bilingual Policy"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்காது .
    • 2035 ஆம் ஆண்டு 100 சதவீத மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு அரசு ஏட்டிவிடும்.

    தமிழ்நாடு அரசு இருமொழி கொள்கையை மட்டும் பின்பற்றும் என்றும் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் அறிவித்துள்ள மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்காது எனவும் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவை ஊட்டுவதற்காக மைக்ரோ சாப்ட் நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி கொண்டது. அதன்படி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவில் பயிற்சியளிப்பதற்காக, மைக்ரோசாப்ட் டீல்ஸ் திட்டம் என்னும் புதிய திட்டத்தை நாட்டிலே முதல் முறையாக கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இது தேசிய கல்வி கொள்கையில் சொல்லப்பட்ட திட்டம் எனக் கூறியிருந்தார். மேலும் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு விரைவில் கொண்டு வரும் எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு அரசு, ஒரு போதும் மும்மொழிக்கொள்கையே தமிழ்நாடு அரசு ஏற்காது. இரு மொழி கொள்கை மட்டுமே தொடரும் என தெரிவித்துள்ளது. அண்ணாமலை வரலாற்றை மாற்றவோ திணிக்கவோ கூடாது, தமிழ்நாடு அரசு அவரது கூற்றை முற்றிலும் நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    மேலும், தேசிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அதில் மாநிலங்கள் அடைய வேண்டிய இலக்குகள் என்று சொல்லப்பட்டிருக்கும் பலவற்றை தமிழ்நாடு ஏற்கனவே அடைந்துவிட்டது. உதாரணமாக தேசிய அளவில் மாணவர் சேர்க்கை விகிதத்தை 50 சதவீதம் ஆக ஆக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. ஆனால் அகில இந்திய மேல்நிலைக் கல்வி ஆய்வறிக்கையின் படி, தமிழ்நாட்டின் மாணவர் சேர்க்கை விகிதம் 51.4 சதவீதத்தை, 2019-20 ஆம் கல்வியாண்டிலேயே எட்டிவிட்டது. 2035 ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதத்தை எட்ட வேண்டும் என தேசிய கல்விக் கொள்கையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு 2035 ஆம் ஆண்டு 100 சதவீத மாணவர் சேர்க்கையை ஏட்டிவிடும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, தமிழ்நாடு அரசு செய்ததை, செய்துகொண்டிருப்பதை தேசிய கல்வி கொள்கையில் இணைத்துவிட்டு , தேசிய கல்விக்கொள்கையின் படி தமிழ்நாடு அரசு செயல்படுவது எனக் கூறுவது நகைப்புக்குரியது. குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்து தமிழ்நாட்டிற்கு யாரும் வகுப்பெடுக்க தேவையில்லை என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் மற்ற மாநிலங்களை விட தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு அரசு திகழ்ந்து வருகிறது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

     

    ×