என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hindi imposition"

    • நகர்மன்ற உறுப்பினா்கள் தங்களது வார்டு பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய பணிகள் குறித்து விவாதித்தனர்.
    • முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைதானதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினா்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகர்மன்ற கூட்ட அரங்கில் நகர்மன்ற சாதாரண கூட்டம் தலைவா் ராமலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், ஆணையாளா் பார்கவி, பொறியாளா் ஜெயபிரியா, சுகாதார அலுவலா் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

    கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினா்கள் தங்களது வார்டு பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய பணிகள் குறித்து விவாதித்தனர். பின்னா் அ.தி.மு.க. உறுப்பினா்கள் ஜெகன், முத்துப்பாண்டி, தி.மு.க. உறுப்பினா்கள் ரஹீம், இசக்கித்துரைபாண்டியன் ஆகியோர் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாரச்சந்தை கட்டிடத்தில் நிரந்தர காங்கிரீட் மேற்கூரை அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் பணிகளை நிறுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தனா்.

    அதனைத்தொடா்ந்து தி.மு.க. உறுப்பினா் ரஹீம் தலைமையில் அக்கட்சியின் கவுன்சிலர்கள் இந்தியை திணிக்க முயல்வதாக கூறி மத்திய அரசை கண்டித்து வெளிநடப்பு செய்தனா். பின்னா் கூட்டம் முடிந்து வெளியே வந்த அ.தி.மு.க. உறுப்பினா்கள் நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமையில் நகராட்சி அலுவலக வளாகம் முன்பு முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைதானதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினா்.



    • இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக கூறி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    நெல்லை:

    இந்தியாவில் அனைத்து பாடத்துறைகளுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக கூறி தி.மு.க. இளைஞர்- மாணவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மத்திய மாவட்டம்

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    இதில் மேயர் சர வணன், துணைமேயர் ராஜு, தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டியன், மாவட்ட துணைச்செயலா ளர்கள் எஸ்.வி. சுரேஷ், விஜிலா சத்தியானந்த், தர்மர், மாவட்ட பொரு ளாளர் வண்ணை சேகர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலைராஜா, ஏ.எல்.எஸ். லெட்சுமணன், டி.பி.எம். மைதீன்கான்,

    தி.மு.க. மூத்த முன்னோடி பத்தமடை பரமசிவன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், நமச்சிவாயம், மாநகர துணைச்செயலாளர்கள் அப்துல் கயூம், சுதாமூர்த்தி, மூளிகுளம் பிரபு, மாநகர பொருளாளர் பூக்கடை அண்ணாதுரை, நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, கவுன்சிலர்கள் கந்தன், உலகநாதன், பவுல்ராஜ், கோகுலவாணி, இளைஞர் அணி ஆறுமுகராஜா மற்றும் இலக்கிய அணி அமைப்பாளர் கொம்பையா பாண்டியன், நிர்வாகிகள் எல்.ஐ.சி பேச்சிமுத்து, மேகை செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை கிழக்கு

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வள்ளியூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார்.

    இதில் தலைமை கழக செய்தி தொடர்பு செயலாளர் அரசகுமார், மாவட்ட அவைத்தலைவர் கிராகாம்பெல், ஞானதிரவியம் எம்.பி., மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம், பொரு ளாளர் கோசல், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், ஒன்றிய செயலாளர்கள் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், இசக்கி பாண்டியன், கே.எஸ்.தங்க பாண்டியன், பரணி சேகர், போர்வெல் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், கணேஷ்குமார் ஆதித்தன், வக்கீல் சூடாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மத்திய அரசு இந்தி திணிப்பை கைவிட வேண்டும், பொது நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

    மதுரை

    தமிழகத்தில் மத்திய அரசு இந்தி மொழியை திணிக்க முயற்சி செய்து வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

    இந்த நிலையில் தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று (15-ந் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. மேலிடம் அறிவித்தது.

    அதன்படி மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் இன்று தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு இந்தி திணிப்பை கைவிட வேண்டும், பொது நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    மதுரை மாநகர் மாவட்டம் மற்றும் மதுரை (புறநகர்) தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி - மாணவரணி சார்பில் நடந்தஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கோ.தளபதி, மணிமாறன் மற்றும் இளைஞரணி மாணவரணி அமைப்பா ளர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×