search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்தி திணிப்பை கண்டித்து நெல்லை, வள்ளியூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    • இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக கூறி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    நெல்லை:

    இந்தியாவில் அனைத்து பாடத்துறைகளுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக கூறி தி.மு.க. இளைஞர்- மாணவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மத்திய மாவட்டம்

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    இதில் மேயர் சர வணன், துணைமேயர் ராஜு, தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டியன், மாவட்ட துணைச்செயலா ளர்கள் எஸ்.வி. சுரேஷ், விஜிலா சத்தியானந்த், தர்மர், மாவட்ட பொரு ளாளர் வண்ணை சேகர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலைராஜா, ஏ.எல்.எஸ். லெட்சுமணன், டி.பி.எம். மைதீன்கான்,

    தி.மு.க. மூத்த முன்னோடி பத்தமடை பரமசிவன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், நமச்சிவாயம், மாநகர துணைச்செயலாளர்கள் அப்துல் கயூம், சுதாமூர்த்தி, மூளிகுளம் பிரபு, மாநகர பொருளாளர் பூக்கடை அண்ணாதுரை, நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, கவுன்சிலர்கள் கந்தன், உலகநாதன், பவுல்ராஜ், கோகுலவாணி, இளைஞர் அணி ஆறுமுகராஜா மற்றும் இலக்கிய அணி அமைப்பாளர் கொம்பையா பாண்டியன், நிர்வாகிகள் எல்.ஐ.சி பேச்சிமுத்து, மேகை செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை கிழக்கு

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வள்ளியூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார்.

    இதில் தலைமை கழக செய்தி தொடர்பு செயலாளர் அரசகுமார், மாவட்ட அவைத்தலைவர் கிராகாம்பெல், ஞானதிரவியம் எம்.பி., மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம், பொரு ளாளர் கோசல், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், ஒன்றிய செயலாளர்கள் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், இசக்கி பாண்டியன், கே.எஸ்.தங்க பாண்டியன், பரணி சேகர், போர்வெல் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், கணேஷ்குமார் ஆதித்தன், வக்கீல் சூடாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×