search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர் பங்கேற்றனர்.

    மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    • மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மத்திய அரசு இந்தி திணிப்பை கைவிட வேண்டும், பொது நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

    மதுரை

    தமிழகத்தில் மத்திய அரசு இந்தி மொழியை திணிக்க முயற்சி செய்து வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

    இந்த நிலையில் தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று (15-ந் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. மேலிடம் அறிவித்தது.

    அதன்படி மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் இன்று தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு இந்தி திணிப்பை கைவிட வேண்டும், பொது நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    மதுரை மாநகர் மாவட்டம் மற்றும் மதுரை (புறநகர்) தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி - மாணவரணி சார்பில் நடந்தஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கோ.தளபதி, மணிமாறன் மற்றும் இளைஞரணி மாணவரணி அமைப்பா ளர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×