search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cauvery Management Commission"

    • காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது.
    • இந்த ஆணையம் அமைக்கப்பட்டது முதல் இதுவரை 21 கூட்டம் நடந்துள்ளது.

    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை 21 கூட்டங்கள் நடந்துள்ளன.

    இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடக்கிறது. ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு முறைப்படி வழங்காததால், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று, மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்தார். தமிழ்நாடு முதலமைச்சரின் கடிதத்தையும் அளித்தார். இதனால் கர்நாடக அரசுக்கு அழுத்தம் தரப்பட்டது. அதன்பேரில் தண்ணீர் திறந்து விடுவதாக கர்நாடக துணை முதல் மந்திரி சிவகுமார் தெரிவித்தார். இதற்கிடையே மழையும் பெய்ததால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனாலும் முழுமையான அளவில் தண்ணீர் வரவில்லை.

    இன்று நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அதிகாரிகள் கோரிக்கையை வலியுறுத்த உள்ளனர்.

    • கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய தண்ணீரை முறைப்படி வழங்கவில்லை.
    • 22-வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 11-ம் தேதி டெல்லியில் நடக்கிறது.

    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை 21 கூட்டங்கள் நடந்துள்ளன.

    இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் வரும் 11-ம் தேதி டெல்லியில் நடக்கிறது. ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான அழைப்பு அவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு முறைப்படி வழங்காததால், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று, மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்தார். தமிழ்நாடு முதலமைச்சரின் கடிதத்தையும் அளித்தார்.

    இதனால் கர்நாடக அரசுக்கு அழுத்தம் தரப்பட்டது. அதன்பேரில் தண்ணீர் திறந்து விடுவதாக கர்நாடக துணை முதல் மந்திரி சிவகுமார் தெரிவித்தார். இதற்கிடையே மழையும் பெய்ததால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனாலும் முழுமையான அளவில் தண்ணீர் வரவில்லை.

    11-ம் தேதி நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அதிகாரிகள் கோரிக்கையை வலியுறுத்த உள்ளனர்.

    மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில், டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது. #CauveryManagementCommission
    புதுடெல்லி:

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்த கர்நாடக அரசு, அணை கட்டுவதற்கான அனுமதி கோரியது.

    இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய நீர்வள ஆணையம், இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கடந்த 22-ந் தேதி கர்நாடக நீர்பாசனத்துறைக்கு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து அதற்கான பணிகளை மாநில அரசு துரிதப்படுத்தி இருக்கிறது. புதிய அணை கட்டுவதில் உறுதியாக இருக்கும் முதல்-மந்திரி குமாரசாமி, இது தொடர்பான தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டு உள்ளார்.

    தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடக அரசு, திறக்கும் தண்ணீரையும் தடுப்பதற்காக புதிய அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கர்நாடக அரசுக்கு தமிழக கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.



    மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். மேலும் இந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது. அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

    இத்தகைய பரபரப்பான சூழலில் காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) கூடுகிறது. ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்குப்பின் காவிரியில் கர்நாடக அரசு திறந்துவிட்ட நீரின் அளவு, இரு மாநில அணைகளில் உள்ள நீர் இருப்பு விவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

    இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததற்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால், புதிய அணை பிரச்சினையை இன்றைய கூட்டத்தில் எழுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    இதை ஏற்கனவே தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் இன்றைய கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. #CauveryManagementCommission
    மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கீழ் கர்நாடக அணைகளை கொண்டு வர வேண்டும் என்று பிஆர் பாண்டியன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #CauveryManagementCommission #PRPandian

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், நிரூபர்களுக்கு பேட்டியளித்தார்.

    காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டத்திலேயே ஜூலை மாதத்திற்கு 31.24 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு கர்நாடக மாநிலம் திறந்து விட உத்தரவிட்டதை பாராட்டுகிறோம். இதனால் இந்த ஆண்டு ஒரு போக சம்பா சாகுபடியாவது மேற்கொள்ள முடியும் என நம்புகிறோம்.

     


    ஆணையத்தின் இந்த உத்தரவை காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்று குழு உடன் நிறைவேற்ற வேண்டும். கர்நாடகாவில் உள்ள அணைகளின் தண்ணீரை அன்றாடம் கணக்கிட்டு பகிர்ந்தளிக்கும் நிர்வாக அதிகாரத்தை ஆணையம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.

    சுப்ரீம் கோர்ட்டுக்கு இணையான ஆணைய உத்தரவை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும். இதை யார் மீறினாலும் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பின் கீழ் கர்நாடக அணைகளை கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தை மீண்டும் பாராளுமன்றத்தில் விவாதிக்க கூடாது என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். #MKStalin #DMK
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- கர்நாடக அரசு காவிரி நதிநீர் பிரச்சினைக்காக அனைத்து கட்சிக் கூட்டம் கூட்டியிருக்கிறதே?

    பதில்:- அதிகமான அளவிற்கு பவர் இல்லாத ஒரு ஆணையத்தை உச்சநீதிமன்றத்தின் மூலமாக அமைத்திருந்தாலும் அதுவும் தவறு என்று சொல்லி வாதாடுகிற கர்நாடக மாநிலத்தினுடைய முதல்-அமைச்சர், அங்கிருக்கக்கூடிய அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி இதுபற்றி பாராளுமன்றத்திலே விவாதிக்க வேண்டும். பேசிட வேண்டும் என்று குரல் எழுப்பிக்கொண்டிருக்கிறார். இதற்கு மத்திய அரசு அடிபணிந்து விடக்கூடாது, இதுபற்றி பாராளுமன்றத்தில் எந்த காரணத்தைக் கொண்டும் விவாதிக்க வேண்டிய அவசியமே கிடையாது.

    காலத்தைக் கடத்துவதற்காக கர்நாடக மாநிலம் இன்றைக்கு ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. எனவே, உடனடியாக தமிழகத்தினுடைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இதற்கு ஒரு நல்ல முடிவை எடுத்து மத்திய அரசுக்கு ஒரு அழுத்தத்தை நாம் தரவேண்டும் என்று நான் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருக்கிறேன்.

    அது தொடர்பாக எங்கள் கட்சியினுடைய எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் சட்டசபையில் பேசியிருக்கிறார். அதற்கு பதிலளித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி ஆணையத்தினுடைய கூட்டம் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது. எனவே, இந்தக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்று பொறுத்திருந்து கூட்டத்தைக் கூட்டலாம் என்று ஒரு பதிலை தந்திருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.

    கேள்வி:- சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு மக்களாக விரும்பித்தான் தங்களுடைய இடங்களை அளிக்கிறார்கள் என்று முதல்-அமைச்சர் தெரிவித்திருக்கிறாரே?

    பதில்:- இவருடைய வார்த்தையை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதை, மக்கள் அவதிக்கு ஆளாகி எங்கே போராடிக் கொண்டிருக்கிறார்களோ? அந்த விவசாயப் பெருங்குடி மக்களை, பொதுமக்களை சந்தித்து இந்த வார்த்தையை சொன்னார் என்றால் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

    கேள்வி:- சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் என்பது மத்திய அரசின் திட்டம் தான், மாநில அரசின் திட்டம் அல்ல, மற்றக் கட்சிகள்தான் இதை பெரியதாக்கி மக்களை திசை திருப்புவதாக வரும் கருத்துக்கு உங்கள் பதில்?

    பதில்:- மத்திய அரசு என்னதான் திட்டம் கொண்டு வந்தாலும், அதற்குரிய ஒப்புதலை அதற்குரிய ஆதரவை, பணியை நிறைவேற்றுவது மாநில அரசினுடைய கடமை. அதனால் தான் மாநில அரசு அடிமையாக இல்லாமல் மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் அதற்குரிய வகையிலே, உரிய முறையிலே குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார். #MKStalin #DMK
    காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான கர்நாடக மாநில உறுப்பினர்களின் பெயர்கள் இன்னும் 3 நாட்களில் பரிந்துரை செய்யப்படும் என அம்மாநில முதல்மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார். #cauverymanagementcommission #cauverywater
    பெங்களூரு:

    காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது. இதையடுத்து கர்நாடக மாநில தேர்தல் முடிவடைந்த உடன் மேலாண்மை ஆணையம் குறித்த ஆவணங்களை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

    இதில் மாநில அரசுகளின் சில கோரிக்கைகளின் அடிப்படையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, மேலாண்மை ஆணையம் என அறிவிக்கப்பட்டு, அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

    இந்த மேலாண்மை ஆணையத்தில் மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் இடம் பெறுவார்கள் என்பதன் அடிப்படையில் 4 மாநில உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வழங்க வேண்டும் என மத்திய நீர்வளத்துறை 4 மாநிலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. 

    அதன் அடிப்படையில் தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய 3 மாநில உறுப்பினர் பெயர் பட்டியல் குறித்த நேரத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கர்நாடகா மட்டும் உறுப்பினர் பட்டியலை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது.



    இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக நேற்று மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்கரியை கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி நேரில் சந்தித்து பேசினார். அதில் காவிரி மேலாண்மை ஆணையத்தில் சில குறைபாடுகள் இருப்பதாகவும் அதனை சரி செய்தால் ஏற்றுக்கொள்ள தயார் எனவும் தெரிவித்திருந்தார். 

    மேலும், உரிய நேரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான உறுப்பினர் பட்டியலை அறிவிப்போம் எனவும் தெரிவித்திருந்தார். 

    அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான உறுப்பினர்களின் பெயர் பட்டியல் இன்னும் 3 நாட்களில் பரிந்துரை செய்யப்படும் என இன்று குமாரசாமி அறிவித்துள்ளார். #Cauverymanagementcommission #Cauverywater #karnatakaCM, #Kumaraswami
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகளில் முட்டுக்கட்டை போடும் விதமாக கர்நாடக முதல்வர் குமாரசாமி கருத்து தெரிவித்துள்ளார். #Kumaraswamy #Karnataka #CauveryIssue
    புதுடெல்லி:

    காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதை உறுதி செய்வதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் காவிரி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் உறுப்பினர்களாக இடம் பெறுபவர்களின் விவரங்களை தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களும் அறிவித்து விட்டன. ஆனால் கர்நாடகா இன்னமும் உறுப்பினர் பெயரை அறிவிக்கவில்லை.

    ஜூன் 12-ந்தேதிக்குள் உறுப்பினர் பெயரை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அதை கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கண்டு கொள்ளவில்லை.



    இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள குமாரசாமி இன்று பிற்பகல் பிரதமர் மோடியை சந்தித்து காவிரி ஆணையம் பற்றி பேச திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக இன்று மதியம் அவர் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    காவிரி ஆணையம் அமைக்க வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் முறைப்படி ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் அப்படி ஒப்புதல் பெறாமல் காவிரி ஆணையத்திற்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது சட்ட விரோதமாகும்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.

    குமாரசாமியின் இந்த கருத்தால் காவிரி ஆணைய விவகாரத்தில் மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. #Kumaraswamy #Karnataka #CauveryIssue

    காவிரி டெல்டா விவசாயிகளின் நீர்ப்பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #MetturDam #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் பல்வேறு சாக்குபோக்குகளைச் சொல்லி, வேண்டுமென்றே தாமதப்படுத்தி, 104 நாட்கள் கடந்த நிலையில், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைக்கும் அரசிதழினை மத்திய அரசு அரை குறை மனதோடு வெளியிட்டிருப்பது, ஓரளவு ஆறுதலை தருவதாக உள்ளது.

    உச்சநீதிமன்றம் 16.2.2018ல் அளித்த இறுதித்தீர்ப்பின்படி வரைவுத் திட்டத்தை அளிக்க, தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும், விவசாயிகளின் அமைப்புகளும், பொது மக்களும், வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்களுக்குக் கிடைத்த முதல் கட்ட வெற்றியாகவே, கடந்த 18.5.2018 அன்று உச்ச நீதிமன்றத்தால் இறுதி செய்யப்பட்ட வரைவுத் திட்டம் அமைந்தது.

    ஜூன் 1 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே கூறியிருந்த நிலையில், இந்த இடைப்பட்ட 13 நாட்களில் மாநிலங்களில் இருந்து ஆணையத்தில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டிய பெயர்களையும் பெற்று, தலைவர், உறுப்பினர்கள் யார் யார் என்ற விவரத்துடன் முழுமையாக காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்திருக்க வேண்டும்.

    ஆனால், அப்படி செய்யாமல் இறுதி வரைவுத் திட்டத்தின் அடிப்படையில் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என்பது மட்டுமே அரசிதழில் வெளியாகியிருக்கிறது.

    இதுதவிர, ஏற்கனவே 19.2.2013 அன்று அரசிதழில் வெளியிடப்பட்ட காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் திருத்தப்பட்டுள்ளது. இப்படி திருத்தப்பட்ட காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பில், மாநிலங்களுக்கு இடையிலான நீர் ஒதுக்கீடு விவரங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த திருத்தப்பட்ட இறுதித்தீர்ப்பின் நீர் பங்கீட்டு அளவுகள், மத்திய அரசின் இந்த அரசிதழிலும் இடம்பெறவில்லை. தனியாகவும் திருத்தப்பட்ட காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பிற்கு அரசிதழ் வெளியாகவில்லை.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 உறுப்பினர்களில் 5 பேர், அதாவது பெரும்பான்மை உறுப்பினர்கள் மத்திய அரசை சார்ந்தவர்கள் என்பதால், ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாடு உறுதி செய்யப்படுவதற்கு எந்தவித உத்தரவாதமும் வரைவுத் திட்டத்திலோ, ஆணையம் அமைக்கும் அரசிதழிலோ இடம்பெறவில்லை. அவர்கள் மத்திய பாஜக அரசின் எண்ணத்தைத்தான் செயல்படுத்துவார்கள் என்ற கருத்தை ஒதுக்கிவிட முடியாது.

    ஆகவே, மத்திய பா.ஜ.க. அரசு ஏதோ உள்நோக்கத்துடன் இன்னும் தெளிவின்மையையும், குழப்பத்தையும், தாமதத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் தமிழக மக்களின் மனதில் எழுகிறது.


    இந்த ஆணையம் அமைக்கும் அரசிதழ் தமிழக மக்களுக்கு கிடைத்த முதல்நிலை வெற்றி என்றாலும், வருகின்ற ஜூன் 12 ஆம் தேதியன்று குறுவைப் பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டால்தான் அது ஓரளவுக்கேனும் மனநிறைவை ஏற்படுத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இல்லாவிட்டால் “பெருவெற்றி” என்று கொண்டாடுவதில் பொருளில்லை. கொண்டாடினால், “சர்க்கரை” என்று காகிதத்தில் எழுதிவைத்துக் கொண்டு, “ஆகா! இனிக்கிறது, இனிக்கிறது”, என்று தானும் ஏமாந்து, மற்றவர்களையும் ஏமாற்றுவதற்குச் சமமாகிவிடும்.

    எனவே, தலைவர், உறுப்பினர்கள் கொண்ட காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைத்து உடனடியாகச் செயல்பாட்டுக்கு வருமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அணைகளை அதன் கட்டுப்பாட்டின்கீழ்க் கொண்டுவந்து, சுதந்திரமான தன்னாட்சி அதிகாரங்கள் இருக்கும் அளவிற்கு விரிவான விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும், உச்சநீதிமன்றத்தால் திருத்தப்பட்ட காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பின் அடிப்படையிலான நீர்ப்பங்கீடுகள் குறித்து ஓர் அரசிதழ் வெளியிட வேண்டும் என்றும் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

    இப்போதாவது, அதற்கான முழுமூச்சிலான நடவடிக்கைகளில், பாஜக அரசிடம் கைகட்டிச் சேவகம் செய்வதை மறந்து, தன்மானத்தோடு தலைநிமிர்ந்து, அதிமுக அரசு உடனடியாக ஈடுபட்டு, ஜூன் 12 ஆம் தேதி காவிரி டெல்டா விவசாயிகளின் நீர்ப்பாசனத்திற்கு மேட்டூர் அணையைத் திறப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #MetturDam #DMK #MKStalin
    காவிரி மேலாண்மை ஆணையம் அரசிதழில் வெளியானது விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalanisamy #CaveryManagement
    சென்னை:

    காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு அமைத்து அரசிதழில் வெளியிட்டது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய நீர்வள ஆதாரம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை அமைத்து, அதை மத்திய அரசின் அரசிதழில் இன்று (நேற்று) வெளியிட்டுள்ளது. இது மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு வரும் அவருடைய அரசிற்கும், தமிழ்நாட்டு விவசாய பெருங்குடி மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

    தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்வது பல ஆண்டுகளாகவும், குறிப்பாக 1970-ம் ஆண்டிலிருந்தும் தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையேயுள்ள நீண்ட நாள் பிரச்சினை ஆகும்.

    ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளாலும், சட்டப் போராட்டத்தினாலும் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டாலும், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மத்திய அரசிதழில் 19.2.2013 அன்று வெளியிடப்பட்டு செயலாக்கத்திற்கு வந்தது.

    காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் கொண்டு வந்ததுதான் தன்னுடைய 30 ஆண்டுகால அரசியல் வாழ்வில், தான் செய்த சாதனைகளில் முதன்மையானதாக கருதுவதாகவும், தான் பல ஆண்டுகள் பொது வாழ்வில் இருந்து கஷ்டப்பட்டதற்கு இந்த வெற்றிதான் தனக்கு முழு நிறைவைத் தந்திருக்கிறது என்றும் ஜெயலலிதா ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மனம் நெகிழ்ந்து பேசினார் என்பதைக் கொண்டு காவிரி நதிநீர் பிரச்சினையில் அவருக்கு இருந்த உள்ளார்ந்த அக்கறையும், ஈடுபாடும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக புரிந்தது.

    விவசாயிகளின் உரிமையை நிலைநாட்ட மெரினா கடற்கரையில் தொடர்ந்து 80 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து போராடிய ஜெயலலிதாவின் தியாகம் இத்தருணத்தில் நினைவு கூறத்தக்கதாகும்.

    உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த சிவில் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டு 16.2.2018 அன்று இறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில், காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த இறுதி ஆணை மற்றும் அதனை மாற்றியமைத்த உச்சநீதிமன்றத்தின் 16.2.2018 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி ஒரு செயலாக்க திட்டத்தை மத்திய அரசு 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டுமெனவும், காலக்கெடு ஏதும் நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனைத் தொடர்ந்து நான் பிரதமரிடம் நேரிலும் மற்றும் கடிதங்கள் வாயிலாகவும் இவ்வமைப்புகளை உடனே அமைக்க வலியுறுத்தினேன். பாராளுமன்ற கூட்டத்தொடர் 5.3.2018 அன்று தொடங்கி 6.4.2018 வரை நடைபெற்றது. இக்கூட்டத்தொடரில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அ.தி.மு.க. எம்.பி.க்கள் செயலாக்க திட்டத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்கக் கோரி தொடர்ந்து வலியுறுத்தியதால் பாராளுமன்ற நடவடிக்கைகள் 22 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    உச்சநீதிமன்றம் பிறப்பித்த காலக்கெடு முடிவடையும் நிலை இருந்தபோது, 29.3.2018 அன்று மூத்த அமைச்சர்கள், தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோருடன் தமிழ்நாட்டின் சார்பில் எடுக்கப்பட வேண்டிய மேல்நடவடிக்கை குறித்து நான் விரிவாக விவாதித்தேன்.

    அக்கூட்டத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை மத்திய அரசின் மீது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டு, 31.3.2018 அன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மத்திய அரசின் மீது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    மத்திய அரசும் கால அவகாசம் கேட்டு ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் 14.5.2018 அன்று, மத்திய நீர்வள ஆதாரம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சக செயலாளர் ஒரு வரைவுத் திட்டத்துடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, 14.5.2018 அன்று, மத்திய அரசின் நீர்வள ஆதாரம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சக செயலாளர், உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, மத்திய அரசு தயாரித்துள்ள வரைவு திட்டத்தினை தாக்கல் செய்தார். எனது அறிவுரையின் பேரில், 16.5.2018 அன்று தமிழ்நாடு அரசு சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில், குறிப்பிட்டபடி அனைத்து அதிகாரங்களும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு உடனடியாக அமைத்து செயல்படுத்த வேண்டும் என தகுந்த ஆதாரங்களுடன் கடுமையாக வாதிட்டனர்.

    இதனை அடுத்து, 18.5.2018 அன்று மத்திய அரசு தாக்கல் செய்த திருத்திய வரைவு திட்டத்தின் மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பில், மத்திய அரசு தாக்கல் செய்த திருத்திய வரைவு திட்டம், நடுவர் மன்ற இறுதி ஆணை / கட்டளைகள்படியும், அதனை திருத்தியமைத்து வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும் உள்ளது எனவும், 1956-ம் ஆண்டைய பன்மாநில நதிநீர்த் தாவா சட்டப்பிரிவு 6 ஏ 4 ஒத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்று, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைமையிடம் டெல்லியிலும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் தலைமையிடம் பெங்களுரூவிலும் செயல்படும் எனவும் இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைபடுத்தும் குழு ஆகிய அமைப்புகளை அமைத்து, மத்திய அரசிதழில் வெளியிட்டு பருவ மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர் செயலாக்கத்திற்கு கொண்டுவர வேண்டி, பிரதமருக்கும், மத்திய நீர்வளத்துறை மந்திரிக்கும் 26.5.2018 அன்று என்னால் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

    இவ்வாறு ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு வரும் அவருடைய அரசு பல தொடர் நடவடிக்கைகள் எடுத்ததன் வாயிலாக இன்று (நேற்று) காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகள் மத்திய அரசால் அமைக்கப்பட்டு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை 19.2.2013 அன்று மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, அதனை சிறப்பாக செயல்படுத்துவதற்கு ஜெயலலிதா மற்றும் அவர் வழியில் அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளாலும் மற்றும் சட்ட போராட்டங்களாலும், உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை சற்று மாற்றியமைத்து 16.2.2018 அன்று பிறப்பித்த தீர்ப்பினை செயல்படுத்துவதற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு அமைத்து அதனை மத்திய அரசிதழில் 1.6.2018 அன்று வெளியிட்டது, ஜெயலலிதா வழியில் நடைபெறும் தமிழ்நாடு அரசிற்கும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

    இந்த உத்தரவுகளினால், தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரம் மீட்டு எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
    ஜூன் 1-ந் தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என தி.மு.க. கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #DMK #CauveryManagement
    சென்னை:

    ஜூன் 1-ந் தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து, அரசிதழில் அறிவிக்கை செய்து, குறுவை சாகுபடிக்கு காவிரி நீரை திறந்து விட மத்திய அரசு அவசர கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத்தலைவர் காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * காவிரி பிரச்சினைக்காக தன்னெழுச்சியாக போராடிய தமிழக மக்களுக்கு இந்த கூட்டம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

    * தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தான் காவரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு. அணைகளை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து கட்டுப்படுத்தும் தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாமல் கோட்டைவிட்ட அ.தி.மு.க. அரசுக்கும், தமிழ்நாட்டை வஞ்சித்த மத்திய பா.ஜ.க. அரசுக்கும் இந்த கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

    * ஜூன் 1-ந் தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து, அரசிதழில் அறிவிக்கை செய்து, குறுவை சாகுபடிக்கு காவிரி நீரை திறந்துவிட மத்திய அரசு அவசர கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த கூட்டம் வலியுறுத்துகிறது. ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறப்பது மட்டுமின்றி, விவசாயிகளுக்கு உரிய நீரை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக எடுக்க இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.

    * குருகுலக்கல்வி என்ற போர்வையில் குலக்கல்வி திட்டத்தை கொண்டுவர முயற்சிக்கும் மத்திய அரசின் முயற்சியை அதன் தொடக்கத்திலேயே முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். மத்திய பா.ஜ.க. அரசு இந்த பிற்போக்கு கல்வி திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இல்லையெனில் நாடு தழுவிய அளவில் பிரசார மற்றும் போராட்ட நடவடிக்கையில் ஈடுபட இந்த கூட்டம் தீர்மானிக்கிறது.

    * ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறையே நீடிக்க வேண்டும். தவறினால் சமூக நீதி கொள்கையை சீர்குலைக்கும் மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்து இளைஞர்களை திரட்டி போராட்டம் நடத்த இந்த கூட்டம் முடிவு செய்கிறது.

    போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தை தொடர்ந்து, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வரும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறந்து நீர் விட வேண்டுமென்று எல்லா கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். தமிழக அரசு உடனடியாக அதற்குரிய முயற்சியில் ஈடுபட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்படும். காவிரி மேலாண்மை வாரியத்துக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களை ஆணையத்துக்கு முழுமையாக வழங்க வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். மத்திய அரசு இந்த விலை உயர்வை திரும்பப்பெற வேண்டுமென்று தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 800 அரசு பள்ளிகளை மூடப்போவதாக அரசு தெரிவித்து இருக்கிறதே? என்று கேட்டதற்கு, ‘தமிழக அரசு எந்தளவுக்கு செயலிழந்து போய் கொண்டிருக்கிறது என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக்காட்டாக உள்ளன’ என்றார். 
    காவிரி மேலாண்மை ஆணையத்தை இந்த மாத இறுதிக்குள் அமைக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கூறினார்.
    திருவாரூர்:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று திருவாரூர் வந்தார். அப்போது அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காவிரி பிரச்சினையில் கிடைத்த வெற்றி தமிழக விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாகும். சுப்ரீம் கோர்ட்டு அளித்த காவிரி தீர்ப்பை 48 மணி நேரத்தில் மத்திய அரசு, அரசிதழில் வெளியிட வேண்டும்.

    காவிரி மேலாண்மை ஆணையத்தினை உடனடியாக இந்த மாத இறுதிக்குள் அமைக்க வேண்டும். அதற்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

    காவிரியில் இருந்து 2 வாரங்களில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர்் திறக்க முடியும்.

    காவிரி நீர் பிரச்சினையால் 4 மாநிலங்களில் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழகம் தான். இதில் காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய இரு தேசிய கட்சிகளும் கண்டு கொள்ளாமல் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கவே கவனம் செலுத்தி வந்தனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்வு ஏற்பட்டு பொதுமக்களை கடுமையாக பாதிக்கிறது.

    எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். தமிழக மக்கள் மீது மத்திய அரசு வலுக்கட்டாயமாக ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை திணிக்கிறது. அதனை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். கவர்னர் என்பவர் மரியாதைக்குரியவர். அவர் நடுநிலை தவறாமல் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார், மாவட்ட தலைவர் குடவாசல் தினகரன், துணைத்தலைவர் செல்லதுரை, செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், நகர தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர். 
    ×