search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karnataka CM"

    • இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொன்றனர்.
    • தட்சிண கன்னடா பகுதியில் பாஜகவினர் போராட்டம்

    தட்சிண கன்னடா:

    கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த ஆளும் பாஜகவின் இளைஞரணி உறுப்பினர் பிரவீன் நெட்டாரு நேற்று மாலை பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரு சக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இந்த படுகொலையை செய்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து பெல்லாரே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பாஜக இளைஞரணி உறுப்பினர் படுகொலையை கண்டித்து தட்சிண கன்னடா பகுதி பாஜகவினர் சாலை மறியல் உள்ளிடட் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. இந்நிலையில்,பிரவீன் நெட்டாரு படுகொலைக்கு கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பிரவீன் நெட்டாரு படுகொலை காட்டுமிராண்டித்தனமானது என்றும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தமது டுவிட்டர் பதிவில் பொம்மை குறிப்பிட்டுள்ளார். கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள், விரைவில் நீதி கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

    கர்நாடக மாநிலத்தில் இன்று தனது வாக்கை பதிவு செய்த முதல்வர் குமாரசாமி, வாரிசு அரசியலால் பல்வேறு மாநிலங்களில் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக கூறினார். #LokSabhaElections2019 #Kumaraswamy
    பெங்களூர்:

    பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. தமிழகம், புதுவை, கர்நாடகம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வத்துடன் சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்கின்றனர். இதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

    அவ்வகையில், கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி ராமநகரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவருடன் அவரது மனைவி அனிதா குமாரசாமி, அவரது மகனும் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளருமான நிகில் ஆகியோரும் வாக்களித்தனர்.



    வாக்களித்த பின்னர் குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “வாரிசு அரசியல் இப்போது முக்கிய பிரச்சனை அல்ல. நாட்டின் பிரச்சனைகள்தான் பிரதானம். வாரிசு அரசியல் மற்றும் பிராந்திய அரசியலால் மட்டுமே பல்வேறு மாநிலங்களில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் பாஜகவின் விமர்சனங்களை கண்டுகொள்வதில்லை” என்றார்.

    முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடா ஹசன் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். கர்நாடக பொதுப்பணித்துறை மந்திரி ரேவண்ணா, படுவலகிப்பி கிராமத்தில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வாக்களித்தார். #LokSabhaElections2019 #Kumaraswamy 
    பா.ஜனதா கொள்ளையடிக்கும் கலாசாரம் கொண்டது என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறினார். #LokSabhaElections2019 #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாங்கள் ஜனநாயகத்தை சிதைக்கும் பணியை செய்யவில்லை. என்னால் ஜனநாயகம் சிதைந்துவிட்டது என்று சொல்ல எடியூரப்பாவுக்கு தகுதி இல்லை. எனக்கு எதிராக எடியூரப்பா போட்ட வழக்குகளை கடந்த 12 ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகிறேன்.

    தன் மீதான வழக்குகளை எடியூரப்பா எப்படி நீக்கிக் கொண்டார் என்பது எனக்கு தெரியும். அரசியலமைப்பு சட்டப்படி செயல்படும் அமைப்புகளை நாங்கள் தவறாக பயன்படுத்தவில்லை. சட்டப்படி போராட்டம் நடத்துகிறோம். நான் முன்பு முதல்-மந்திரி பதவியை விட்டு செல்லும்போது, பி.எம்.டி.சி.யில் ரூ.1,000 கோடி டெபாசிட் செய்து வைத்திருந்தேன். அதன் பிறகு அந்த துறைக்கு ஆர்.அசோக் மந்திரியாக வந்த பிறகு பி.எம்.டி.சி. நிறுவனத்தையே சீரழித்துவிட்டார்.



    வருமானவரி சோதனை நடத்திய அதிகாரிகளுக்கு பணம் சிக்கியுள்ளதா?. 10 ரூபாயாவது கிடைத்ததா?. எதற்காக இந்த சோதனை நடத்த வேண்டும். உள்நோக்கத்துடன் வருமான வரித்துறையினர் இந்த சோதனையை நடத்தி இருக்கிறார்கள். பா.ஜனதா தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தாதது ஏன்?. பா.ஜனதா தலைவர்கள் அனைவரும் ஏழைகள். பணம் இல்லாமல் கைகூப்பி கும்பிட்டுக் கொண்டு ஓட்டு கேட்கிறார்கள். நாங்கள் அனைத்து வகையான போராட்டத்திற்கும் தயாராக உள்ளோம். துமகூரு தொகுதி பிரச்சினை முடிந்தது. போட்டி வேட்பாளர் முத்தஹனுமேகவுடா தனது மனுவை வாபஸ் பெற்றுள்ளார். பா.ஜனதா, கொள்ளையடிக்கும் கலாசாரம் கொண்டது. முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, ஆர்.அசோக் என்னென்ன செய்தனர் என்பது எனக்கு தெரியும்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #LokSabhaElections2019 #Kumaraswamy

    பா.ஜனதாவினர் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி கூறினார். #LSPolls #BJP #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. நல்லாட்சி நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

    பாராளுமன்ற தேர்தலையும் நாங்கள் கூட்டணி மூலமே எதிர்கொள்கிறோம். சில தொகுதிகளில் நிர்வாகிகளிடையே சிறிய அளவில் பிரச்சினைகள் உள்ளது. அதை சரிசெய்து கொள்வோம். கர்நாடகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே எங்களின் இலக்கு.



    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் பெங்களூருவில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் பா.ஜனதாவினர் கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்யவில்லை. அங்கிருந்து வெளியேற்றினர்.

    பிற கட்சிகளுக்கு மரியாதை கொடுக்க பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கற்றுக்கொள்ள வேண்டும். அதை விடுத்து ஒரு கட்சியின் தலைவருக்கு எதிராக பேசுவதை ஊக்குவிப்பதை அவர் நிறுத்த வேண்டும். பா.ஜனதாவினர் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #LSPolls #BJP #Kumaraswamy
    கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி ஆட்சியை கவிழ்ப்பதற்காக மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.வை இழுக்க எடியூரப்பா நடத்திய பேரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டது. #KarnatakaCM #Kumaraswamy #Yeddyurappa
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்-மந்திரியாக குமாரசாமி உள்ளார். பா.ஜனதாவுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அத்துடன் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் உள்ளது. இன்னும் 7 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் பா.ஜனதா ஆட்சி அமைத்துவிடும்.
     
    இதற்காக கூட்டணி ஆட்சியில் மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருந்து வரும் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

    இதற்காக ‘ஆபரேஷன் தாமரை’ திட்டத்தை பா.ஜனதா கையில் எடுத்துள்ளது. காங்கிரசின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, உமேஷ் ஜாதவ், மகேஷ் கமடள்ளி, நாகேந்திரா ஆகியோர் மும்பையில் பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த 8-ந் தேதி பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    ஆனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் கூட்டத்தை புறக்கணித்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் மனு கொடுப்பது என்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது.

    இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் கடந்த 8-ந் தேதி முதல்-மந்திரி குமாரசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக அவர் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த நாகன கவுடா எம்.எல்.ஏ.வை இழுக்க அவரது மகன் ஷரண் கவுடாவிடம் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பேரம் பேசிய உரையாடல் ஆடியோவை வெளியிட்டு பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

    அந்த உரையாடலில் இருப்பது தனது குரல் இல்லை என்று மறுத்த எடியூரப்பா, முதல்-மந்திரி குமாரசாமி தனது தோல்விகளை மறைக்க போலி ஆடியோவை வெளியிட்டு நாடகமாடுகிறார் எனவும் சாடியிருந்தார்.

    மேலும், தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாகவும் எடியூரப்பா அறிவித்திருந்தார்.  பா.ஜனதாவினரும், குமாரசாமி வெளியிட்ட பேர ஆடியோ போலியானது எனவும் கூறி வந்தனர்.

    அந்த ஆடியோவை குரல் பரிசோதனைக்காக அனுப்ப உள்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



    இந்த நிலையில், பேரம் பேசியதாக குமாரசாமி வெளியிட்ட ஆடியோ பதிவில் இருப்பது தனது குரல்தான் என்று எடியூரப்பா நேற்று திடீரென்று ஒப்புக்கொண்டுள்ளார்.

    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைத்து முதல் மந்திரி குமாரசாமி உத்தரவிட வேண்டும். 15 நாட்களுக்குள் சட்டசபையில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என கர்நாடக சட்டசபை சபாநாயகர் ரமேஷ் குமார் வலியுறுத்தினார்.

    இதைதொடர்ந்து, மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.வை இழுக்க எடியூரப்பா நடத்திய பேரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழுவை அமைத்து முதல் மந்திரி குமாரசாமி இன்று உத்தரவிட்டுள்ளார். #KarnatakaCM #Kumaraswamy #Yeddyurappa
    5 வாரிய தலைவர்களின் நியமனத்திற்கு மறுப்பு தெரிவித்த கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி மீது காங்கிரஸ் மேலிடத்தில் சித்தராமையா புகார் தெரிவித்துள்ளார். #Siddaramaiah #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக மந்திரிசபை கடந்த மாதம் (டிசம்பர்) 22-ந்தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 8 மந்திரிகள் நியமிக்கப்பட்டனர். அதிருப்தியை சமாளிக்கும் விதமாக 19 எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டது. அந்த பட்டியல்படி உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி கர்நாடக முதல் மந்திரி குமாரசாமிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

    மந்திரிசபை விரிவாக்கம் நடந்து, 15 நாட்கள் ஆகியும் வாரிய தலைவர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில், 14 வாரியங்களுக்கு தலைவர்களை நியமனம் செய்து குமாரசாமி உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் பெங்களூரு வளர்ச்சி வாரியம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட 5 வாரிய தலைவர்களை நியமனம் செய்ய குமாரசாமி மறுத்து விட்டார். இதனால் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.



    இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபாலை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, வாரிய தலைவர்கள் நியமன விவகாரத்தில் குமாரசாமியின் நடவடிக்கை குறித்து புகார் செய்தார்.

    அதாவது காங்கிரஸ் மேலிடம் ஒப்புதல் வழங்கிய வாரிய தலைவர்கள் பட்டியலில் 5 பேரின் நியமனத்திற்கு குமாரசாமி ஒப்புதல் வழங்கவில்லை என்று கூறினார். இந்த பிரச்சினையை உடனே பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Siddaramaiah #Kumaraswamy

    கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதள தொண்டரை கொலை செய்த குற்றவாளிகளை சுட்டுக்கொல்லும் படி முதல்வர் குமாரசாமி ஆவேசமாக பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. #Kumaraswamy
    பெங்களூர்:

    கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    சமீபத்தில் மந்திரி சபையை மாற்றி அமைத்ததால் திடீர் சர்ச்சை எழுந்தது. அந்த சர்ச்சையை சமாளிப்பதற்குள் முதல்-மந்திரி குமாரசாமி மற்றொரு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

    கட்சி தொண்டர் ஒருவரை கொன்ற கொலையாளிகளை ஈவுஇரக்கமின்றி சுட்டுக் கொல்லுங்கள் என்று அவர் உத்தரவிடும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி இந்த சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

    கர்நாடகா மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தளத்தின் முக்கிய நிர்வாகியாக திகழ்ந்தவர் கொன்னலாஹரே பிரகாஷ். இவர் நேற்று மாலை 4.30 மணிக்கு தனது காரில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அவரது காரை 2 மோட்டார்சைக்கிளில் துரத்தியபடி 4 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் ஒரு இடத்தில் காரை மறித்து நிறுத்தி கொன்னலாஹரே பிரகாசை வலுக்கட்டாயமாக கீழே இறக்கினார்கள்.

    பிறகு 4 வாலிபர்களும் சேர்ந்து பிரகாசை உருட்டு கட்டைகளால் அடித்தனர். ரத்த வெள்ளத்தில் பிரகாஷ் அதே இடத்தில் சரிந்து விழுந்தார்.


    அவரை மாண்டியா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார்கள்.

    பிரகாஷ் கொல்லப்பட்ட தகவல் முதல்-மந்திரி குமாரசாமிக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டதும் அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் யாருடனோ தனது செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது அவர், “பிரகாஷ் நல்ல மனிதர். அவரை ஏன் இப்படி கொலை செய்தார்கள் என்று தெரியவில்லை. கொலையாளிகள் மீது கொஞ்சமும் ஈவுஇரக்கம் காட்டாதீர்கள். கண்ட இடத்திலேயே சுட்டுக்கொன்று விடுங்கள். இதனால் எந்த பிரச்சனையும் இல்லை” என்று கூறினார்.

    குமாரசாமி இவ்வாறு போனில் பேசிய தகவலை உள்ளூர் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் தனது கேமிராவில் பதிவு செய்து இருந்தார். அந்த காட்சிகள் பெங்களூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதையடுத்து சமூக வலைதளங்களிலும் குமாரசாமி பேசுவது பரவியது.

    இதனால் குமாரசாமியின் பேச்சு வைரலாக உருவெடுத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதை அறிந்ததும் முதல்-மந்திரி குமாரசாமி மீண்டும் அதிர்ச்சி அடைந்தார்.

    அவர் மீண்டும் நிருபர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், “குற்றவாளிகளை சுட்டுக்கொல்லும்படி நான் உத்தரவிடவில்லை. கட்சி தொண்டர் படுகொலை செய்யப்பட்டதால் உணர்ச்சி வசப்பட்டு பேசினேன்” என்று கூறி உள்ளார்.

    அவர் மேலும் கூறுகையில், “குற்றவாளிகள் ஜாமீனில் வந்து இந்த கொலையை செய்து உள்ளனர். அதற்கு நடவடிக்கை எடுக்கும்படி கூறி உள்ளேன்” என்றார்.  #Kumaraswamy #JDS
    ரூ.2 ஆயிரம் கோடி செலவில் பெங்களூரு முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட இருப்பதாக கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்தார். #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்று 5 மாதங்கள் ஆகிறது. கடந்த 5 மாதங்களில் பல்வேறு பணிகளை செய்துள்ளேன். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன. இந்த தேர்தலுக்கு பிறகு யாருமே எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.

    காங்கிரஸ்- ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்து, எனது தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டன. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 460 திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கூட்டணி ஆட்சியை நடத்துவது என்பது சவாலானது. தேர்தலுக்கு முன்பு, எங்கள் கட்சி தனிப்பெரும்பான்மையில் ஆட்சி அமைத்தால் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தோம்.

    நான் ஆட்சிக்கு வந்தவுடன், வாக்குறுதிப்படி 24 மணி நேரத்திற்குள் விவசாய கடனை தள்ளுபடி செய்யவில்லை என்று பா.ஜனதா குறை கூறியது. சுமார் ரூ.43 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளேன். கூட்டுறவு வங்கிகளில் உள்ள ரூ.10 ஆயிரத்து 300 கோடியை தள்ளுபடி செய்து அதற்கான நிதியை ஒதுக்கிவிட்டோம்.

    விவசாய கடன் தள்ளுபடி திட்டத்திற்கு தேசிய வங்கிகள் ஒத்துழைக்க மறுக்கின்றன. இதில் அரசியல் இருக்கிறது என்பது எனக்கு தெரியும். அதுபற்றி நான் கவலைப்படவில்லை. கடன் தள்ளுபடி திட்டத்தால் 44 லட்சம் விவசாயிகள் பயன் அடைகிறார்கள். நிதி பற்றாக்குறை இல்லை. கஜானா காலியாகிவிட்டதாக பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். அரசு கஜானா நல்ல நிலையில் உள்ளது.

    கடன் தள்ளுபடி திட்டத்தால், மாநில அரசின் பொருளாதார நிலைக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கர்நாடகத்தின் பொருளாதார நிலை நல்ல நிலையில் உள்ளது. தேசிய வங்கி கடன் தள்ளுபடி திட்டத்திற்கு ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கி வைத்துள்ளேன். வருகிற 1-ந் தேதி முதல் தேசிய வங்கி விவசாய கடன் தள்ளுபடிக்கு பணத்தை செலுத்தும் பணி தொடங்கப்படும்.

    சமூக நலத்துறையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக ரூ.29 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த திட்டங்களை குறித்த காலத்தில் செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் கடந்த செப்டம்பர் மாதம் வரை 38 சதவீத நிதி பயன்படுத்தப்பட்டு, பணிகள் செய்யப்பட்டுள்ளன.

    அன்னபாக்ய திட்டத்தின் கீழ் 2 கிலோ அரிசியை குறைத்தேன். ஆனால் காங்கிரசார், 7 கிலோ அரிசி வழங்குவதில் மாற்றம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். இதனால் அரசுக்கு கூடுதலாக ரூ.2,000 கோடி நிதி தேவைப்படுகிறது. அதையும் வழங்க தயாராக இருக்கிறேன். அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்.

    பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.6,500 கோடி செலவில் வெளிவட்டச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு மாதத்தில் டெண்டர் விடப்படும். இந்த திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும். 3 ஆண்டுகளில் இந்த பணிகள் நிறைவடையும். 60 மீட்டர் அகலம் அளவுக்கு இந்த சாலை அமைக்கப்படுகிறது.

    மேலும் நகரில் 102 கிலோ மீட்டர் நீளத்திற்கு உயர்த்தப்பட்ட சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டால் ரூ.9,000 கோடி அளவுக்கு எரிபொருள் செலவு மிச்சமாகும் என்று கணக்கிடப்படுகிறது. காற்று மாசுபாடு குறையும். மக்கள் நோய் தாக்குதலுக்கு ஆளாவதும் தடுக்கப்படும். இந்த திட்டமும் அடுத்த ஒரு மாதத்தில் தொடங்கப்படும்.

    பெங்களூருவில் தெரு விளக்குகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சார கட்டணமாக ஆண்டுக்கு ரூ.100 கோடி செலுத்தப்படுகிறது. தெருக் களில் எல்.இ.டி. விளக்குகளை பொருத்தினால் இந்த கட்டணம் ஆண்டுக்கு ரூ.15 கோடியாக குறையும். இந்த எல்.இ.டி. விளக்குகளை பொருத்தும் பணியை ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நகரில் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

    தகுதி அடிப்படையில் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரவுடிகளை அடக்கவும், சூதாட்டத்தை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கேற்றவாறு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். போலீஸ் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளேன்.



    பெங்களூருவில் ஆயுதபூஜை அன்று ஆயுதங்களை வைத்து பூஜை செய்ததாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னட அமைப்பின் தலைவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். ரூ.2,000 கோடி செலவில் பெங்களூரு மாநகர் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். குடகு மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு வசதிகளை அரசு செய்து கொடுக்கிறது.

    வீடுகளை இழந்த மக்களுக்கு தலா ரூ.10 லட்சம் செலவில் ஆயிரம் வீடுகளை கட்டி கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு வந்த உதவித்தொகை குடகு மழை வெள்ள பாதிப்புகளுக்கு மட்டுமே செலவிடப்படும். கர்நாடகத்தில் சில மாவட்டங்களில் உதான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் கட்டப்படும்.

    மாநிலத்தில் பொதுப்பணித்துறையில் ரூ.36 ஆயிரம் கோடிக்கு பல்வேறு சாலை திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. பெங்களூரு-மைசூரு 10 வழிச்சாலை திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும். கர்நாடகத்தில் மாணவ -மாணவிகள் குளங்கள் மற்றும் ஆறுகளை கடக்க வசதியாக 470 சிறு நடை பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்படும். எனது தலைமையிலான கூட்டணி அரசு 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும். இது கடவுள் கொடுத்த அதிகாரம். கர்நாடகத்தை காப்பாற்றவே நாங்கள் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளோம்.

    இடைத்தேர்தல் நடை பெறும் 5 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். இந்த வெற்றி, அடுத்து நடைபெற உள்ள 3 மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு(2019) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். 100 தாலுகாக்கள் வறட்சி பகுதிகள் என்று அறிவித்துள்ளோம். அந்த பகுதிகளில் குடிநீர் உள்ளிட்ட பணிகளுக்கு தலா ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    சபரிமலை விவகாரத்தில் நான் எந்த கருத்தும் கூற முடியாது. கர்நாடகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு கர்நாடக அரசால் பாதுகாப்பு வழங்க இயலாது. இது கேரளா மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம். அடுத்த மாநில விவகாரங்களில் தலையிட முடியாது. ‘மீ டூ‘ இயக்கம் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. கல்வி கடனை தள்ளுபடி செய்வது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த விஷயத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிடுவதில் அரசின் நிலையை விரைவில் தெரிவிப்போம்.

    ஜனதா தரிசனம் மூலம் 17 ஆயிரத்து 723 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 50 சதவீத மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக திறன் அடிப்படையில் 3 பல்கலைக்கழகங்களை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ.9 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு பள்ளி-கல்லூரி கட்டிடங் களை சீரமைக்க ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மைசூரு தசரா விழாவை காண 50 லட்சம் பேர் மைசூருவுக்கு வந்தனர். தசரா ஊர்வலத்தை மட்டும் 12 லட்சம் பேர் கண்டுகளித்தனர்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #Kumaraswamy

    கர்நாடகத்தில் 5 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும். ராமநகர் தொகுதியில் போட்டியிட அனிதா குமாரசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். #AnithaKumaraswamy
    பெங்களூரு:

    சிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம்(நவம்பர்) 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கியமான அரசியல் கட்சிகள் இதுவரை மனு தாக்கல் செய்யவில்லை.

    இந்த நிலையில் மனு தாக்கல் செய்ய நாளை(செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும். காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று(திங்கட்கிழமை) மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளன.

    அதன்படி ராமநகர், மண்டியா, சிவமொக்கா ஆகிய 3 இடங்களில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும், ஜமகண்டி, பல்லாரி ஆகிய 2 இடங்களில் காங்கிரசும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜனதா 5 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகின்றன.

    இடைத்தேர்தல் பணிகளை கவனிக்க காங்கிரஸ் சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மண்டியா தொகுதிக்கு மந்திரி கே.ஜே.ஜார்ஜ், சிவமொக்கா தொகுதிக்கு மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே, ராமநகர் தொகுதிக்கு டி.கே.சுரேஷ் எம்.பி. ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    மண்டியா, ராமநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு வழங்கும் முடிவை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். 50 ஆண்டுகாலமாக தேவேகவுடா குடும்பத்தை எதிர்த்து அரசியல் செய்துவிட்டு, இப்போது திடீரென அக்கட்சிக்கு ஓட்டுப்போடுங்கள் என்று சொன்னால் எப்படி என்று நிர்வாகிகள் கேட்கிறார்கள். அதற்கு காங்கிரஸ் தலைவர்கள், இது கட்சி மேலிடத்தின் முடிவு, அதை ஏற்று அனைவரும் ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஆதரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

    இதற்கிடையே ராமநகர் சட்டமன்ற தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிடும் முதல்-மந்திரியின் மனைவி அனிதா குமாரசாமி இன்று(திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்கிறார்.



    மதியம் 1 மணியில் இருந்து 3 மணிக்குள் மனு தாக்கல் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொள்கிறார். இந்த நிலையில் நேற்று தேவேகவுடாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் அனிதா குமாரசாமி நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

    இதேபோல், ஜமகண்டி சட்டமன்ற தொகுதியில், சாலை விபத்தில் மரணம் அடைந்த சித்துநியாமகவுடா எம்.எல்.ஏ. வின் மகன் ஆனந்த் நியாமகவுடா காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சித்தராமையா 3 நாட்கள் ஜமகண்டியில் தங்கி பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக அவர் இன்று(திங்கட்கிழமை) ஜமகண்டிக்கு செல்கிறார். ஜமகண்டியில் பா.ஜனதா சார்பில் ஸ்ரீகாந்த் குல்கர்னி நிறுத்தப்படுகிறார். இவர் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவமொக்கா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முன்னாள் முதல்-மந்திரி பங்காரப்பாவின் மகன் மது பங்காரப்பா போட்டியிடுகிறார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். அவருக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா களம் காண்கிறார். மண்டியா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் சிவராமேகவுடா களம் இறங்குகிறார். அந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி டாக்டர் சித்தராமையா போட்டியிடுகிறார்.

    ராமநகர் தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் போட்டியிடும் அனிதா குமாரசாமியை எதிர்த்து, பா.ஜனதா சார்பில் சந்திர சேகர் களம் காண்கிறார். இவர் கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்லாரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் முன்னாள் எம்.பி. சாந்தா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்கிறார்கள். பல்லாரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. வேட்புமனு தாக்கலுக்கு பிறகு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AnithaKumaraswamy


    திப்பு ஜெயந்தி கொண்டாடுவது குறித்து அரசு முடிவு எடுக்கும் என்றும், அனைத்து மக்களையும் ஒற்றுமையாக அரவணைத்து செல்வதே என்னுடைய நோக்கம் என்றும் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #Kumaraswamy
    மைசூரு:

    உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா நேற்று தொடங்கியது. சாமுண்டி மலையில் நடந்த தசரா விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்துகொண்டார். இந்த விழாவில் பா.ஜனதாவை சேர்ந்த எம்.பி. பிரதாப் சிம்ஹாவும் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், மகிஷாசூரன் தசரா விழாவுக்கு மாநில அரசு அனுமதி கொடுத்திருக்க கூடாது என்றும், திப்பு ஜெயந்தி விழாவுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என்றும் பேசினார்.



    இதையடுத்து முதல்-மந்திரி குமாரசாமி நேற்று காலை, கலாமந்திராவில் நடந்த திரைப்பட விழாவை தொடங்கி வைத்தார்.

    இந்த விழாவை முடித்துவிட்டு வெளியே வந்த குமாரசாமியிடம், பிரதாப் சிம்ஹா எம்.பி. பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து குமாரசாமி கூறியதாவது:-

    ஒரு விழாவை கொண்டாடுவது அந்த அமைப்புகளின் சொந்த விஷயம். இதில் அரசு தலையிடாது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தால் தான் அரசு தலையிடும். சாதி, மதம் மற்றும் மொழியை ஆன்மிக விஷயத்தோடு தொடர்புப்படுத்த கூடாது. எந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்க வேண்டும், எந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என்பது மாநில அரசுக்கு நன்றாக தெரியும்.

    திப்பு ஜெயந்தி கொண்டாடுவது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கும். அனைத்து மக்களையும் ஒற்றுமையாக அரவணைத்து செல்வதே என்னுடைய நோக்கம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy
    சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் மைசூரு தசரா விழா இன்று தொடங்கியது. கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் சுதா மூர்த்தி ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர். #MysuruDasara #Karnataka #Kumaraswamy #SudhaMurthy
    மைசூரு:

    கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு 10 நாட்கள் அரசு சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தசரா விழா இன்று தொடங்கி 19-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இது 408-வது ஆண்டு தசரா விழாவாகும். இந்த ஆண்டு மழையால் குடகு, தட்சிணகன்னடா ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டதால், தசரா விழாவை எளிமையாக நடத்த அரசு முடிவு செய்தது.

    அதன்படி மைசூரு அருகே சாமுண்டி மலையில் குடிக்கொண்டிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் இன்று காலை மைசூரு தசரா விழா தொடங்கியது. சிறப்பு பூஜை செய்து தசரா விழாவை கர்நாடக முதல்வர் குமாரசாமி, இன்போசிஸ் அறக்கட்டளை தலைவியும், எழுத்தாளருமான சுதாமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



    தசரா விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. மைசூரு அரண்மனையில் தர்பார் நடக்கிறது. இதில் தங்க சிம்மாசனத்தில் இளவரசர் யதுவீர் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்கிறார். இந்த தர்பார் விழா நிறைவடையும் 19-ந்தேதி வரை நடக்கிறது.

    வரலாற்று சிறப்பு மிக்க தசரா விழாவையொட்டி மைசூரு நகர் முழுவதும் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இரவில் மைசூரு நகர் மின்னொளி அலங்காரத்தில் ஜொலிக்கிறது. மைசூருவுக்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. இதனால் மைசூரு நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. #MysuruDasara #Karnataka #Kumaraswamy #SudhaMurthy 
    கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள இரு சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் முதல் மந்திரி குமாரசாமியின் முதல் மனைவி அனிதா ராமநகரா தொகுதியில் போட்டியிடுகிறார். #Anitakumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள இரு சட்டசபை தொகுதிகளில்  நடைபெறும் இடைத்தேர்தலில் முதல் மந்திரி குமாரசாமியின் முதல் மனைவி அனிதா ராமநகரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான எடியூரப்பா, பல்லாரி தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான ஸ்ரீராமுலு, மண்டியா தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.பி.யான புட்டராஜு ஆகியோர் கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதைதொடர்ந்து, தங்களது எம்.பி. பதவிகளை அவர்கள் மூவரும் ராஜினாமா செய்தனர். இந்த மூன்று தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

    கடந்த சட்டசபை தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முதல் மந்திரி குமாரசாமி சன்னப்பட்னா தொகுதி எம்.எல்.ஏ.வாக நீடிக்கப் போவதாக அறிவித்தார். இதனால், அவர் வெற்றிபெற்ற மற்றொரு தொகுதியான ராமநகரா சட்டசபை உறுப்பினருக்கான இருக்கை காலியாக உள்ளது. மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ. நியமகவுடா இறந்ததால் ஜம்கன்டி சட்டசபை உறுப்பினருக்கான இருக்கையும் காலியாக உள்ளது.

    பாராளுமன்ற இடைத்தேர்தலுடன் இந்த 3 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர்  3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 6-ம் தேதி எண்ணப்பட்டு அன்று முடிவுகள் வெளியாகும்.


    இந்நிலையில், ராமநகரா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளராக போட்டியிடப் போவதாக முதல் மந்திரி குமாரசாமியின் முதல் மனைவியும், சினிமா நடிகையுமான அனிதா இன்று அறிவித்துள்ளார்.

    ராமநகராவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அனிதா இந்த தொகுதியில் என்னை வேட்பாளராக நிறுத்த கட்சி தலைமை தீர்மானித்துள்ளது என குறிப்பிட்டார். #KarnatakaCMwife #Ramanagaraassemblysegment #Anitakumaraswamy
    ×