search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP Party"

    • விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதீய ஜனதா கட்சி மாநில துணைத் தலைவரும், மீனவர் அணி பார்வையாளருமான சசிகலா புஷ்பா கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.
    • மீனவ மக்களுக்காக பாரதீய ஜனதா கட்சி எப்போதும் குரல் கொடுக்கும் என்றார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதிய துறைமுகம் பகுதி மீனவர் காலனியில் உள்ள ஸ்ரீதர்ம முனீஸ்வரர் ஆலயம் 17-ம் ஆண்டு கொடைவிழா நடை பெற்றது.

    விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், நையாண்டி மேளத்துடன் தீர்த்தக்கரை செல்லுதல், சிறப்பு அலங்கார பூஜைகள் மற்றும் நள்ளிரவு சாம வேட்டைக்கு செல்லுதல், அருள்வாக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    கொடை விழா ஏற்பாடு களை கோவில் தலைவர் அண்ணாதுரை, செயலாளர் மாரியப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதீய ஜனதா கட்சி மாநில துணைத் தலைவரும், மீனவர் அணி பார்வையாளருமான சசிகலா புஷ்பா கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில், மீனவ மக்களுக்காக பாரதீய ஜனதா கட்சி எப்போதும் குரல் கொடுக்கும். மேலும் மீனவ மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். இந்த ஆலயத்தை சீரமைக்க துறைமுக கழகத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என்றார். விழாவில் தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க. பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன், தெற்கு மண்டல தலைவர் மாதவன், மாவட்ட துணைத் தலைவர் தங்கம், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் விஜயன், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் பரமசிவம், செயற்குழு உறுப்பினர் முருகன், இளைஞர் அணி தலைவர் முனியசாமி, பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் மாசாணம், தெற்கு மண்டல செயலாளர் பாலகுமார், துணைத் தலைவர் பொய் சொல்லலான், வக்கீல் முருகன், மகளிர் அணி தலைவி செல்வி, துணைத்தலைவி சிலம்புலி, தொழில் பிரிவு மண்டல் தலைவர் சங்கர், கணேஷ் விக்கி, ராஜபாண்டி, அருள் முருகன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கொடை விழா மற்றும் அன்னதான நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • பாரதீய ஜனதா கட்சி ஆலோசனைக்கூட்டம் கொடைரோடு அருகேயுள்ள பள்ளபட்டியில் நடைபெற்றது.
    • பாரதீய ஜனதா கட்சி மேலிட பார்வையாளர் டாக்டர் சுதாகர ரெட்டி கலந்து கொண்டு பேசினார்.

    கொடைரோடு:

    நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி ஆலோசனைக்கூட்டம் கொடைரோடு அருகேயுள்ள பள்ளபட்டியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமை தாங்கினார்.

    நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பள்ளபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் நாகேந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சி மேலிட பார்வையாளர் டாக்டர் சுதாகர ரெட்டி கலந்து கொண்டு பேசினார்.

    மேலும் பள்ளபட்டி ஊராட்சி பகுதியில் மத்திய அரசு திட்டப்பணிகள், விவசாயிகளுக்கு மானியம், பிரதமர் வீடு கட்டும் திட்டம், ரேஷன் கடைகளில் மத்திய அரசு நலத்திட்டங்கள் முறையாக கிடைக்கிறதா? என மக்களிடம் கேட்டறிந்தார். தூய்மை பணியாளர்களிடம் குறைகேட்டு அவர்களுக்கு சால்வை, இனிப்புகள் வழங்கினார்.

    பா.ஜனதா கொள்ளையடிக்கும் கலாசாரம் கொண்டது என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறினார். #LokSabhaElections2019 #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாங்கள் ஜனநாயகத்தை சிதைக்கும் பணியை செய்யவில்லை. என்னால் ஜனநாயகம் சிதைந்துவிட்டது என்று சொல்ல எடியூரப்பாவுக்கு தகுதி இல்லை. எனக்கு எதிராக எடியூரப்பா போட்ட வழக்குகளை கடந்த 12 ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகிறேன்.

    தன் மீதான வழக்குகளை எடியூரப்பா எப்படி நீக்கிக் கொண்டார் என்பது எனக்கு தெரியும். அரசியலமைப்பு சட்டப்படி செயல்படும் அமைப்புகளை நாங்கள் தவறாக பயன்படுத்தவில்லை. சட்டப்படி போராட்டம் நடத்துகிறோம். நான் முன்பு முதல்-மந்திரி பதவியை விட்டு செல்லும்போது, பி.எம்.டி.சி.யில் ரூ.1,000 கோடி டெபாசிட் செய்து வைத்திருந்தேன். அதன் பிறகு அந்த துறைக்கு ஆர்.அசோக் மந்திரியாக வந்த பிறகு பி.எம்.டி.சி. நிறுவனத்தையே சீரழித்துவிட்டார்.



    வருமானவரி சோதனை நடத்திய அதிகாரிகளுக்கு பணம் சிக்கியுள்ளதா?. 10 ரூபாயாவது கிடைத்ததா?. எதற்காக இந்த சோதனை நடத்த வேண்டும். உள்நோக்கத்துடன் வருமான வரித்துறையினர் இந்த சோதனையை நடத்தி இருக்கிறார்கள். பா.ஜனதா தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தாதது ஏன்?. பா.ஜனதா தலைவர்கள் அனைவரும் ஏழைகள். பணம் இல்லாமல் கைகூப்பி கும்பிட்டுக் கொண்டு ஓட்டு கேட்கிறார்கள். நாங்கள் அனைத்து வகையான போராட்டத்திற்கும் தயாராக உள்ளோம். துமகூரு தொகுதி பிரச்சினை முடிந்தது. போட்டி வேட்பாளர் முத்தஹனுமேகவுடா தனது மனுவை வாபஸ் பெற்றுள்ளார். பா.ஜனதா, கொள்ளையடிக்கும் கலாசாரம் கொண்டது. முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, ஆர்.அசோக் என்னென்ன செய்தனர் என்பது எனக்கு தெரியும்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #LokSabhaElections2019 #Kumaraswamy

    அசாம் மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த எம்பி சர்மாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், கட்சியில் இருந்து விலகி உள்ளார். #AssamBJPMP #RPSharma
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் ஆளும் பாஜக சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. வெற்றி வாய்ப்பு உள்ள தகுதிவாய்ந்த வேட்பாளர்களை தேர்வு செய்து கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில், கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய தேஜ்பூர் எம்பியுமான ஆர்.பி.சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை.

    இதனால் கடும் அதிருப்தி அடைந்த சர்மா, கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி உள்ளார். இத்தகவலை பேஸ்புக் மூலம் வெளியிட்டுள்ளார்.

    அதில், ‘ஆர்எஸ்எஸ், விஎச்பி அமைப்பில் 15 ஆண்டுகளும், பாஜகவில் 29 ஆண்டுகளும் பணியாற்றிய நான் இப்போது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன். மாநில பாஜக குழு அனுப்பிய வேட்பாளர் பரிந்துரை பட்டியலில் என் பெயரை சேர்க்காமல் என்னை அவமதித்துவிட்டார்கள்’ என சர்மா குறிப்பிட்டுள்ளார்.

    பாஜகவில் இருந்து விலகிய அசாம் எம்பி சர்மா - டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மா

    செல்வாக்கு மிக்க மாநில அமைச்சரான டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் பெயர் வேட்பாளர் பரிந்துரை பட்டியலில் உள்ளது. அவர் தேஜ்பூர் தொகுதியில் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே பாஜகவில் இருந்து விலகிய சர்மா, தேசிய கட்சியில் சேர உள்ளதாக கூறி உள்ளார். அவர் காங்கிரசில் சேர்ந்து தேஜ்பூர் தொகுதியில் போட்டியிடலாம் என தெரிகிறது. #AssamBJPMP #RPSharma

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.-அ.தி.மு.க. இடையே எவ்வித கூட்டணியும் இல்லை என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார். #thambidurai #bjp #admk #parliamentelection

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறை பகுதியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை குறை கேட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி கடனை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். மக்களை எப்படியாவது திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கிலேயே கல்வி கடன் ரத்து என்ற வாக்குறுதியை அவர் அளித்துள்ளார். ஆட்சிக்கு வர முடியாது என்ற காரணத்தினாலேயே இது போன்ற நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.

    ஊராட்சி சபைக் கூட்டங்களில் பொய்யான வாக்குறுதிகளை ஸ்டாலின் அளித்துச் சென்றாலும், தமிழகத்தில் தி.மு.க.வால் ஆட்சியை பிடிக்க முடியாது. அதே போல் மத்திய ஆட்சியில் அங்கம் வகிப்பதற்கான பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற முடியாது.

    இன்றைய சூழலில் உள்ளாட்சித் தேர்தலில் கூட தி.மு.க.வினால் வெற்றி பெற முடியாது. அதனாலேயே உள்ளாட்சிகளில் தி.மு.க.வை பலப்படுத்துவதற்காக ஊராட்சி சபைக் கூட்டங்களை ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

    தற்போதைய நிலையில் பா.ஜ.க.-அ.தி.மு.க. இடையே எவ்வித கூட்டணியும் இல்லை. எதிர்கட்சிகளுக்கு வழங்கக்கூடிய மக்களவை துணை தலைவர் பதவியை நான் வகித்து வருகிறேன். எங்களுக்குள் கூட்டணி இருந்தால் இந்த பதவியை எனக்கு தர முடியாது. இதுவரை அது போன்ற ஒரு நிலை ஏற்படவில்லை. மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தாலும், தமிழகத்துக்கு பலன் கிடைக்காமல் போய் விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #bjp #admk #parliamentelection

    பா.ஜனதா கட்சி என்றைக்கும் நடிகர்கள் பின்னால் சென்றது இல்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan
    தஞ்சாவூர்:

    தஞ்சையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. செயல் தலைவரான ஸ்டாலின், அக்கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். 40 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க. வளர்ச்சிக்கு சிறப்பாக பணியாற்றிய ஸ்டாலின், தலைவராக வருவது தி.மு.க.வின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருக்கும். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.



    பா.ஜனதா கட்சி என்றைக்கும் நடிகர்கள் பின்னால் சென்றதில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தின் பணி என்ன என்றால் கர்நாடகத்திடம் இருந்து முறைப்படி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை பெற்றுத் தருவது மட்டும் தான்.

    அந்த தண்ணீரை சேமிப்பதா? அல்லது கடலில் கலக்க விடுவதா? பாசனத்துக்கு விடுவதா? என்பதை தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையில் வலுவான கூட்டணியாக. முதல்நிலை கூட்டணியாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan

    புதுவை அரசு பொது மருத்துவமனை சிறப்பான முறையில் இயங்கிய காலம்போய், தற்போது அதன் சிறப்பை இழந்து செயல்பட்டு வருகிறது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

    புதுச்சேரி:

    பாரதீய ஜனதா துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு பொது மருத்துவமனை சிறப்பான முறையில் இயங்கிய காலம்போய், தற்போது அதன் சிறப்பை இழந்து செயல்பட்டு வருகின்றது. மாநில வித்தியாசம் பார்க்காமல் மனிதநேயத்தை மட்டும் பார்த்து செயல்பட்டுவரும் அரசு பொதுமருத்துவமனை தற்போது நோயாளிகளுக்கு அத்தியாவசிய மருந்து மாத்திரைகளைக்கூட வழங்க இயலாத நிலையில் உள்ளது மிகவும் வருத்தத்திற்குரியது.

    குறிப்பாக அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் இருதய நோய் சிகிச்சை பிரிவில் புதுவை அரசு மற்றும் டாக்டர் செரியன் மருத்துவமனையும் இணைந்து ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி டாக்டர் செரியன் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் நமது பொது மருத்துவ மனையில் பணிபுரியும் இருதய நோய் சிகிச்சை நிபுனர்களான டாக்டர்.ஆனந்தராஜ், டாக்டர் மணிமாறன் ஆகியோர் இணைந்து இதுவரை 184 இருதய நோயாளிகளுக்கு நமது மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கின்றது.

    ஆனால், கடந்த 6 மாதமாக இந்த இருதய அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ள தாக தெரிகிறது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைகளுக்கு ஒப்பந்தத்தின்படி புதுவை அரசு டாக்டர் செரியன் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தொகை செலுத்தப்படாமல் உள்ளதாக தெரிகிறது.

    புதுவை நிதி நெருக்கடியில் இருந்தாலும் மனித உயிர்கள் சம்மந்தப்பட்ட இதுபோன்ற வி‌ஷயங்களில் அரசு மெத்தனமாக செயல்படாமல் சம்மந்தப்பட்ட மருத்துவ மனைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்தி மீண்டும் நமது மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

    பொது மருத்துவமனை யில் செயல்பட்டு வந்த எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பழுதடைந்த காலம் முதல் அரசு பொது மருத்துவ மனைக்கு வரும் நோயாளி களுக்கு அவுட்சோர்சிங் முறையில் அதுவும் மிகவும் குறைந்தபட்ச அளவிலான நோயாளிகளுக்கு தனியாரிடம் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏழ்மை நிலையில் உள்ள நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    உலகில் இந்த துறையில் சிறந்து விளங்குகின்ற பல்வேறு தனியார் நிறுவனங்கள் நமது அரசுடன் இணைந்து குறைந்த கட்டணத்தில் இந்த சேவையை செய்ய முன்வருகின்றன. அவற்றில் சிறந்த நிறுவனத்தை தேர்ந்தெடுத்து இதனை விரைந்து நிறுவுவதற்கு அரசு போர்க்கால் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொதுமக்களின் அடிப்படை வசதிகளில் ஒன்றான மக்களின் உயிர்க்காக்கும் சுகாதாரத்துறையே தற்போது சுகவீனமாக உள்ளது. கவர்னர் இந்த வி‌ஷயத்தில் தலையிட்டு ஏழை எளிய மக்களின் உயிர்காக்கும் சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட புதுவை அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×