search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "puducherry government hospital"

    • சடலங்களை பாதுகாக்க முடியாமல் ஆஸ்பத்திரி ஊழியர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
    • குளிர் சாதன வசதி இல்லாததால் இந்த சடலங்கள் அழுகிப்போய் துர்நாற்றம் வீசுவது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிணவறை உள்ளது. இங்கு விபத்து, கொலை, தற்கொலை உள்ளிட்ட காரணங்களால் உயிரிழக்கும் உடல்களை பிணவறையில் உள்ள குளிரூட்டப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைத்திருந்து காவல் துறை விசாரணை முடிந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பது வழக்கம்.

    அதன்படி புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நேரத்தில் 24 சடலங்களை குளிரூட்டப்பட்ட அறைகளில் வைத்து பாதுகாக்க வசதி உள்ளது. இதுபோன்ற சூழல்களில் தற்போது அடிக்கும் வெயிலில் பிணவறையில் அமைக்கப்பட்ட குளிர்சாதன எந்திரங்கள் திணறுவதால், குளிரூட்டப்படுவது குறைகிறது.

    இதனால் சடலங்களை பாதுகாக்க முடியாமல் ஆஸ்பத்திரி ஊழியர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து சடலங்கள் அழுகுவது, துர்நாற்றம் வீசுவது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்குள்ள 3 குளிர்சாதன எந்திரங்களை சரி பார்க்குமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு குளிர்சாதன எந்திரங்கள் பழுது பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பிறகும் நிலைமை சீராக வில்லை. குறிப்பாக புதுச்சேரிக்கு வந்து ஆதரவற்றவர்களாக இறந்து கிடப்போரின் சடலங்களை உறவினர்கள் உரிமை கோருவதற்கு வசதியாக 15 நாட்கள் வரை வைத்திருக்க வேண்டியுள்ளது.

    தற்போது பிணவறையில் ஆதரவற்றவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு போதுமான குளிர் சாதன வசதி இல்லாததால் இந்த சடலங்கள் அழுகிப்போய் துர்நாற்றம் வீசுவது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி கூறியதாவது:-

    தற்போது கடும் வெயிலால் பிணவறையில் குளிர் சாதன எந்திரங்கள் திணறுகிறது. மேலும் வெளிப்புற வெப்பமும் பிணவறைகளில் உள்ள குளிரூட்டப்பட்ட அறைகளில் சீதோஷ்ண நிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    தொழில் நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு, எந்திரங்களை சர்வீஸ் செய்துள்ளோம். தற்போது ஓரளவு நிலைமை சீராகியுள்ளது. இருப்பினும் சடலங்கள் அழுகுவது என்பது, ஆதரவற்றவர்களின் சடலங்களால்தான் நிகழ்கிறது.

    இத்தகைய சடலங்கள் இறந்து, 10 நாட்கள் அல்லது அதற்கு மேல்தான் கண்டுபிடிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படுகிறது.

    ஏற்கனவே அழுகிய நிலையில், ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் இத்தகைய சடலங்களை உறவினர்கள் உரிமை கோருவதற்கு வசதியாக விதிப்படி 15 நாட்களுக்கு பாதுகாக்க வேண்டும்.

    அப்படி நீண்ட நாட்கள் பாதுகாக்கப்படும்போது சடலங்கள் மேலும் அழுகி விடுகிறது. இருப்பினும் வெளிப்புற சீதோஷ்ண நிலை உள்ளே பாதிக்காத வகையில் உள் கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்றார்.

    புதுவை அரசு பொது மருத்துவமனை சிறப்பான முறையில் இயங்கிய காலம்போய், தற்போது அதன் சிறப்பை இழந்து செயல்பட்டு வருகிறது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

    புதுச்சேரி:

    பாரதீய ஜனதா துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு பொது மருத்துவமனை சிறப்பான முறையில் இயங்கிய காலம்போய், தற்போது அதன் சிறப்பை இழந்து செயல்பட்டு வருகின்றது. மாநில வித்தியாசம் பார்க்காமல் மனிதநேயத்தை மட்டும் பார்த்து செயல்பட்டுவரும் அரசு பொதுமருத்துவமனை தற்போது நோயாளிகளுக்கு அத்தியாவசிய மருந்து மாத்திரைகளைக்கூட வழங்க இயலாத நிலையில் உள்ளது மிகவும் வருத்தத்திற்குரியது.

    குறிப்பாக அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் இருதய நோய் சிகிச்சை பிரிவில் புதுவை அரசு மற்றும் டாக்டர் செரியன் மருத்துவமனையும் இணைந்து ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி டாக்டர் செரியன் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் நமது பொது மருத்துவ மனையில் பணிபுரியும் இருதய நோய் சிகிச்சை நிபுனர்களான டாக்டர்.ஆனந்தராஜ், டாக்டர் மணிமாறன் ஆகியோர் இணைந்து இதுவரை 184 இருதய நோயாளிகளுக்கு நமது மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கின்றது.

    ஆனால், கடந்த 6 மாதமாக இந்த இருதய அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ள தாக தெரிகிறது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைகளுக்கு ஒப்பந்தத்தின்படி புதுவை அரசு டாக்டர் செரியன் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தொகை செலுத்தப்படாமல் உள்ளதாக தெரிகிறது.

    புதுவை நிதி நெருக்கடியில் இருந்தாலும் மனித உயிர்கள் சம்மந்தப்பட்ட இதுபோன்ற வி‌ஷயங்களில் அரசு மெத்தனமாக செயல்படாமல் சம்மந்தப்பட்ட மருத்துவ மனைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்தி மீண்டும் நமது மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

    பொது மருத்துவமனை யில் செயல்பட்டு வந்த எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பழுதடைந்த காலம் முதல் அரசு பொது மருத்துவ மனைக்கு வரும் நோயாளி களுக்கு அவுட்சோர்சிங் முறையில் அதுவும் மிகவும் குறைந்தபட்ச அளவிலான நோயாளிகளுக்கு தனியாரிடம் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏழ்மை நிலையில் உள்ள நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    உலகில் இந்த துறையில் சிறந்து விளங்குகின்ற பல்வேறு தனியார் நிறுவனங்கள் நமது அரசுடன் இணைந்து குறைந்த கட்டணத்தில் இந்த சேவையை செய்ய முன்வருகின்றன. அவற்றில் சிறந்த நிறுவனத்தை தேர்ந்தெடுத்து இதனை விரைந்து நிறுவுவதற்கு அரசு போர்க்கால் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொதுமக்களின் அடிப்படை வசதிகளில் ஒன்றான மக்களின் உயிர்க்காக்கும் சுகாதாரத்துறையே தற்போது சுகவீனமாக உள்ளது. கவர்னர் இந்த வி‌ஷயத்தில் தலையிட்டு ஏழை எளிய மக்களின் உயிர்காக்கும் சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட புதுவை அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுவை அரசு பொது மருத்துவமனை தன் தகுதிகளையும், பெருமைகளையும் ஒவ்வொன்றாக இழந்து வருகிறது என்று சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர் சிவா வேதனையாக கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் சிவா பேசியதாவது:-

    புதுவை அரசு பொது மருத்துவமனைக்கு மிகப் பெரிய வரவேற்பும், புண்ணியமும் கடந்த காலங்களில் இருந்தது. இன்று கொஞ்சம், கொஞ்சமாக பொது மருத்துவமனை தன் தகுதிகளையும், பெருமைகளையும் ஒவ்வொன்றாக இழந்து வருகிறது. அங்கிருந்த பிரேத பரிசோதனை கூடம் உள்ளிட்ட முக்கிய பிரிவுகள் அரசு மருத்துவ கல்லூரிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

    இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை பிரிவை கொண்டு வர வேண்டும். அரசு மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்தவர்களில் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பதை தெரிவிக்க வேண்டும்.

    சுகாதாரத்துறை அமைச்சர் வாரம் ஒருமுறை மருத்துவமனைகளுக்கு சென்று நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிய வேண்டும். ஒரு மாதத்துக்கு தேவையான மருந்துகள் கூட கையிருப்பு இல்லை. அந்த அளவிற்கு புதுவை மருத்துவமனை உள்ளது.

    இதே நிலைதான் மற்ற மருத்துவமனைகளிலும் நிலவுகிறது. 2001-ல் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி வாங்கப்பட்டது. அது, 16 ஆண்டுகள் இயங்கியது. பிறகு அக்கருவி பழுதானதும் தனியாரிடம் ஒப்பந்தம் போடப்பட்டு நோயாளிகள் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து வருகின்றனர். இதற்காக அரசு இதுவரை எவ்வளவு செலவு செய்துள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×