search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "siva mla"

    • அதிகாரிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வரவழைத்து வெள்ளநீர் வடிவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்து கொடுத்தார்.
    • உதவி பொறியாளர் சத்திய நாராயணன் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

    புதுச்சேரி:

    புயல்மழை காரணமாக வில்லியனூர் பாண்டியன் நகர், ஓம்சக்தி நகர், மூர்த்தி நகர், பட்டானிக்களம் உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

    இதனை அறிந்த எதிர்க்கட்சி தலைவருமான. சிவா நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வரவழைத்து வெள்ளநீர் வடிவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்து கொடுத்தார்.

    ஆய்வின்போது வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், செயற்பொறி யாளர் திருநாவுக்கரசு, உதவி பொறியாளர் சத்திய நாராயணன் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

    தி.மு.க., பல்வேறு அணி நிர்வாகிகள், மாநில, தொகுதி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு ராமநாதனின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் சபாநாயகர் மற்றும் முன்னாள் எம்.பியுமான ராதாக்கிருஷ்ணன், பாகூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஆகியோரின் தந்தையான முன்னாள்

    எம்.எல்.ஏ. ராமநாதன் மறைவையொட்டி, 4-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாகூர் தொகுதியில் பல்வேறு கிராமங்களில் நடைபெற்றது.

    பாகூர் மாதாக்கோவில் சந்திப்பு அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். புதுவை சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் மற்றும் தி.மு.க. மாநில அமை ப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில், அவைத்தலைவர் எஸ்.பி., சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத் ஆகியோர் ராமநாதன் உருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

    மேலும் மாநில நிர்வாகிகள் பாஸ்கர், தவமுருகன், சிவபிரகாசம், தொகுதி செயலாளர் அரிக்கிருஷ்ணன், அவைத் தலைவர் மூர்த்தி, பொருளாளர் பாவாடை, பிரதிநிதி பிரகாசம், துணை செயலாளர் சத்தியா, ராம்குமார், முத்துகண்ணு, கோபாலக்கிருஷ்ணன், தி.மு.க., பல்வேறு அணி நிர்வாகிகள், மாநில, தொகுதி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு ராமநாதனின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

    தொடர்ந்து, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், தென்னை மரக்கன்றுகள், அன்னதானம் வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., ஆனந்தராமன், காங்., நிர்வாகிகள் மணவாளன், கோபு, கோவிந்தன், திராவிட கழகம் நிர்வாகிகள் தாமோதரன், சேகர், இந்திய கம்யூ., தேசிய குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மா.கம்யூ., சரவணன், தமிழக வாழ்வுரிமை கட்சி அருளொலி, மணப்பட்டு வக்கீல் சுப்ரமணி, மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை, பாகூர் பகுதியை சேர்ந்த தி.மு.க., மாநில பொறுப்பா ளர்கள்,நிர்வாகிகள் செய்திருந்தனர். 

    • தி.மு.க. குற்றச்சாட்டு
    • அரசு அதிகாரிகள் பயன்படுத்தப்படுவது ஏற்புடையதல்ல. இதனால் அரசு எந்திரம் ஸ்தம்பித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை எதிர்க்கட்சி தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநில பொறுப்பு கவர்னர் தமிழிசை பா.ஜனதாவின் முழுநேர அரசியல் வாதியாக செயல்படுகிறார். பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு தெரியப்படுத்து கிறோம் என்ற போர்வையில் அரசு அதிகாரிகளை மூலமாக தேர்தல் பிரச்சா ரத்தை தொடங்கி உள்ளார்.

    மாநில அரசின் திட்ட பயன்கள் மக்களை சென்றடைகிறதா.? என கவலைப்படாத கவர்னர் மத்திய அரசின் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதற்கு அரசு அதிகாரிகள் பயன்படுத்தப்படுவது ஏற்புடையதல்ல. இதனால் அரசு எந்திரம் ஸ்தம்பித்துள்ளது.

    மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற இந்த 10 ஆண்டுகால ஆட்சியில் புதுவைக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள் எத்தனை?. அதற்காக எத்தனை கோடி நிதி ஒதுக்கப்பட்டது என்பதை பட்டியலிட முடியுமா?.

    மோடி அரசு மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியை திசை திருப்பவும், பாராளுமன்ற தேர்தலில் புதுவையில் பா.ஜனதாவை போட்டியிட வைக்கும் பணியினை விக்சித் பாரத் சங்கல்ப யாத்ரா பிரசாரம் மூலம் முன்னின்று செய்து வருகிறார். இதற்காக அரசு எந்திரத்தை பயன்படுத்து வதும் சரியல்ல. கவர்னரின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.

    • அதிகாரிகளுக்கு எதிர்க்கட்சி தலைவர் சிவா அறிவுறுத்தல்
    • ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்டையில் அகற்றி தூர்வாரும் பணியினை துரிதமாக தொடங்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதி சுல்தான்பேட்டையில் உள்ள ராஜா நகர் விரிவாக்கம் முதல் 3 ஸ்டார் நகர் உள்பட 17 நகர் வழியாக தெப்லான் வாய்க்கால் ஜி.என்.பாளையம் செல்கிறது.

    தெப்லான் வாய்க்காலை தூர்வாரி மழை நீர் தேங்காமல் செல்வதற்கும், மழைநீர் தேங்கும் பகுதிகளில் மேடுதூக்கி சாலை அமைக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால் வாய்க்கால் அமைத்து தரவும் அந்த பகுதி பொதுமக்கள், ஜமாத்தார்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சம்மந்தம், உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் சத்ய நாராயணன் ஆகியோருடன் சென்று ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து மேற்கண்ட பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்கும் பொருட்டு தெப்லான் வாய்க்கால் மீது இருக்கும் ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்டையில் அகற்றி தூர்வாரும் பணியினை துரிதமாக தொடங்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

    ஆய்வின்போது தி.மு.க. தொகுதி செயலாளர் மணிகண்டன், முஜிபாய், ஹாஜி, ரபீக், ராஜா முகமது, சிராஜி, சுல்தான், மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் கலிமுள்ளா, அயலக அணி துணை அமைப்பாளர் பக்ரூதீன், ஹாலித், கார்த்திகேயன், முரளி உடன் இருந்தனர்.

    • எதிர்கட்சி தலைவர் சிவா வழங்கினார்
    • இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி ராஜா நகர் பெத்தாங் கிளப்பில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை நியூ பெத்தாங் அசோசியேஷனால் அங்கீகரிக்கப்பட்ட அமித்தே பெத்தாங் விளையாட்டு கிளப் சார்பில் மாநில அளவிலான பெத்தாங் விளையாட்டு போட்டி கடந்த 5-ந் தேதி உருளை யன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட ராஜா நகரில் தொடங்கி நடந்தது.

    இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி ராஜா நகர் பெத்தாங் கிளப்பில் நடைபெற்றது. கிளப் கவுரவத் தலைவர் முகிலன் தலைமை தாங்கினார். எதிர்க்கட்சித் தலைவர் சிவா பெத்தாங் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் பரிசு வழங்கினார்.

    நிகழ்ச்சியில், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபால், தொகுதி செயலாளர் சக்திவேல், வக்கீல் தாமோதரன், ஷண்முகா திரையரங்க உரிமையாளர் சுரேஷ், முத்தமிழ் நகர் ராஜா, இளங்கோ, சரவணன், மதனா, மாதவி கபாலன், கொல்மார் ரவிச்சந்திரன், சீனுவாசன், ரஜினீஷ் மற்றும் கிளப் நிர்வாகிகள் ரகு, பாஸ்கர் ஜான்சன், உதயசந்திரன், அருள், அரிவு டைநம்பி, அசோக்குமார், வேதக்குமார், வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • எதிர்கட்சித்தலைவர் சிவா குற்றச்சாட்டு
    • புதுவை கவர்னர் தமிழிசை அந்த இடங்களை கேட்டு பெற நடவடிக்கை எடுக்கவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை அம்பேத்கரிய, பெரியாரிய பொதுவுடமை இயக்கங்கள் சார்பில் சிறப்பு மாநாடு புதிய பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன், முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் முன்னிலை வகித்தனர். எதிர்கட்சித்தலைவர் சிவா சிறப்புரையாற்றினார்.

    மாநாட்டில், பட்டியலின மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். புதிய கல்விகொள்கை, விஷ்வ கர்மயோஜனா திட்டங்களை திரும்ப பெற வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி ரூ.600 சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    மேலும், கோரிக்கைகளை டிசம்பர் 4-ந் தேதி பாராளுமன்றம் எதிரே பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஜனாதிபதிக்கு ஒரு கோடி கையெழுத்துடன் மனு சமர்பிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    மாநாட்டில் எதிர்கட்சித்தலைவர் சிவா பேசியதாவது:-

    தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அரசுக்கு 50 சதவீத மருத்துவ இடங்களை மாநில அரசுக்கு அளிக்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. புதுவை கவர்னர் தமிழிசை அந்த இடங்களை கேட்டு பெற நடவடிக்கை எடுக்கவில்லை.

    தனியார் மருத்துவ கல்லூரிகள், அரசுக்கு அறித்த இடஒதுக்கீட்டில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. மாணவர் சேர்க்கையில் வெளிப் படைத் தன்மை இல்லை. மோசமான ஆட்சி புதுவையில் நடக்கிறது. ஆதிதிராவிட மக்களுக்கு ஆளும் அரசு எந்த திட்டங்களையும் செயல் படுத்தாமல் மிகப்பெரும் அநீதி இழைத்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநாட்டில் தலித், பழங்குடி யின இயக்கங் களின் கூட்டமைப்பு, தலித் அமைப்புகளின் கூட்ட மைப்பு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உப்பளம், உருளையன்பேட்டை, ராஜ்பவன், முத்தியால் பேட்டை, லாஸ்பேட்டை, தட்டாஞ்சாவடி, கதிர்காமம், கோரிமேடு வழியாக திண்டிவனம் சென்றது.
    • இளைஞரணி துணை அமைப்பாளர் உத்தமன் ஆகியோர் தலைமையிலும், கோரிமேடு எல்லையில் தொகுதி செயலாளர் ஆறுமுகம் தலைமையிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    மாநில உரிமை மீட்போம் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 15-ந் தேதி கன்னியாகுமரியில் தி.மு.க இளைஞர் அணி இருசக்கர வாகன பிரச்சார பேரணியை தொடங்கியது.

    பேரணி புதுவை மாநில எல்லையான மதகடிப்பட்டுக்கு வந்தது. அங்கு எதிர்கட்சித் தலைவரும், தி.மு.க மாநில அமைப்பாளருமான சிவா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி யில் அவைத்தலைவர்

    எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, செந்தில்குமார், சம்பத், பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், செந்தில்வேலன், பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் புதுவையில் வாகன பேரணி வில்லியனூர், மங்கலம், அரியாங்குப்பம், முதலியார் பேட்டை, உழவர்கரை, நெல்லித்தோப்பு, உப்பளம், உருளையன்பேட்டை, ராஜ்பவன், முத்தியால் பேட்டை, லாஸ்பேட்டை, தட்டாஞ்சாவடி, கதிர்காமம், கோரிமேடு வழியாக திண்டிவனம் சென்றது.

    பேரணியில் இளைஞரணி அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ., துணை அமைப்பாளர்கள் டாக்டர் நித்திஷ், தமிழ்பிரியன் ஆகியோர் தலைமையில் மரப்பாலம் சந்திப்பிலும், முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், தொகுதி செயலாளர்கள் சவுரிராஜன், சிவக்குமார், இளைஞரணி துணை அமைப்பாளர் உத்தமன் ஆகியோர் தலைமையிலும், கோரிமேடு எல்லையில் தொகுதி செயலாளர் ஆறுமுகம் தலைமையிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்
    • எதிர்க்கட்சித் தலைவர் சிவா 110 பால் உற்பத்தியாளர்களுக்கு இன்டக்சன் அடுப்பு மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் பால் உற்பத்தியாளர்களுக்கு தீபாவளியையொட்டி பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா 110 பால் உற்பத்தியாளர்களுக்கு இன்டக்சன் அடுப்பு மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வில்லியனூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் காளிதாஸ், நிர்வாகிகள் வேலு பாலமுருகன் மற்றும் தி.மு.க தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, மாநில விவசாய அணி அமைப்பாளர் குலசேகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

    • எதிர்க்கட்சி தலைவர் சிவா திறந்து வைத்தார்
    • தீபாவளி சிறப்பு அங்காடி மற்றும் கிராம சந்தை வில்லியனூர் ஆனந்த ராஜா திருமண நிலையத்தில் அமைக்கப் பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் மூலம் கிராமப்புற மகளிர் மேம்பாட்டிற்காக, புதுவை மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்பட்டு வருகிறது.

    சுயஉதவி குழுவினரின் பொருளாதார மேம் பாட்டுக்கும், சுயதொழில் முயற்சியை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் நுகர்வோரிடம் நேரடியாக விற்கப்பட்டு வருகிறது. வில்லியனூர் வட்டார வளர்ச்சி முகமை மூலம் கடந்த ஆண்டு தீபாவளி அங்காடி மற்றும் கிராம சந்தை 3 நாட்கள் நடத்தப்பட்டு ரூ.9.5 லட்சம் வசூல் ஈட்டியது.

    இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பு அங்காடி மற்றும் கிராம சந்தை வில்லியனூர் ஆனந்த ராஜா திருமண நிலையத்தில் அமைக்கப் பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தீபாவளி சிறப்பு அங்காடி மற்றும் கிராம சந்தையை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.63 லட்சம் கடன் உதவிக்கான காசோலையை வழங்கினார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயலர் நெடுஞ்செழியன், திட்ட இயக்குநர் சத்தியமூர்த்தி, திட்ட அதிகாரி ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அதிகாரி வைசாக், இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கலைமதி மற்றும் விரிவாக்க அதிகாரிகள், கிராம சேவக்குக்கள், சேவக்குகள்,

    வில்லியனூர் வட்டார அளவிலான கூட்டமைப்பின் பொறுப்பா ளர்கள், பொதுமக்கள் மற்றும் தி.மு.க. தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, விவசாய அணி அமைப்பாளர் குலசேகரன், வர்த்தகர் அணி அமைப்பாளர் ரமணன், அயலக அணி துணை அமைப்பாளர் பக்ருதீன், முன்னாள் தொகுதி துணைச் செயலாளர் அங்காளன், ராஜி, திலகர், சரவணன், சுரேஷ், பரதன், நடராஜன், யோகானந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தல்
    • பெரிய விபத்து நடந்தும் அரசும், அதிகாரிகளும் அலட்சியமாக இருப்பது வேதனை அளிக்கிறது. இது கண்டனத்திற்குரியது.

    புதுச்சேரி:

    காலாப்பட்டு தொழிற்சாலையில் நேற்றிரவு பாய்லர் வெடித்த விபத்தில் காயமடைந்து தொழிலாளர்கள் 14 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் தொழிற்சாலை வாயில் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டம் நடந்த இடத்திற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில்

    எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் ஆகியோர் இன்று காலை நேரில் சென்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.

    பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சிவா நிருப ர்களிடம் கூறியதாவது:-

    காலாப்பட்டில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. 40 பாய்லர்கள் செயல்படும் அந்த தொழிற்சாலையில் 2 பாய்லர்கள் வெடித்ததற்கே இவ்வளவு சேதாரம் ஏற்பட்டு இருக்கிறதை பார்த்தால் மனம் பதறுகிறது.

    ஆனால் இவ்வளவு பெரிய விபத்து நடந்தும் அரசும், அதிகாரிகளும் அலட்சியமாக இருப்பது வேதனை அளிக்கிறது. இது கண்டனத்திற்குரியது.

    இதுகுறித்து கலெக்டர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதை தெரிவிக்க வேண்டும். இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கெமிக்கல் கழிவுகள் எல்லாம் கடலில் கலந்து நீர் ஆதாரம் பாதிப்பதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. தொடர்ந்து விபத்துக்கள் நடப்பதாலும், ரசாயன கழிவு வெளியேறுவதாக தகவல் வருவதாலும் மக்கள் அங்கு அச்சத்துடன் வசிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. அரசு கண்காணிப்பில் இருந்தும் இதுபோன்ற தவறுகள் நடப்பதை இனியும் அனுமதிக்க கூடாது.

    தொழிற்சாலையை சுற்றி 10 மீனவ கிராம மக்கள் வசிக்கின்றனர். பல்கலைக் கழகம், நவோதயா பள்ளி, சிறைச்சாலை, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. இதை யெல்லாம் அரசு கவனத்தில் கொண்டு, தொழி ற்சாலையை முழு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

    ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவிட வேண்டும். இந்த கோர விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலா ளர்களுக்கு அவர்கள் வேலை செய்த மற்றும் செய்ய வேண்டிய நாட்களை கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும்.

    மேலும் அத்தொழிற்சா லையை திறப்பதாக இருந்தால் அப்பகுதி மக்களின் எண்ணங்களை அறிந்து அதற்கு தகுந்தா ர்போல் அரசு முடிவு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு சிவா கூறினார்.

    • மாணவர்களுக்கு எதிர்கட்சித்தலைவர் சிவா அழைப்பு
    • மாணவர்களுக்கு முதல் பரிசு கேடயத்துடன் ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ. 5 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா புதுவை மாநில தி.மு.க. சார்பில் ஆண்டுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    புதுவை மாநில தி.மு.க. பொறியாளர் அணி சார்பில் பொறியியல் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரியில் நடக்கிறது.

    மாநில பொறியாளர் அணி அமைப்பாளர் அருண்குமார் வரவேற்கிறார். திருபுவனை தொகுதி செயலாளர் செல்வபார்த்திபன், பொறியாளர் அணி நிர்வாகிகள் மணிகண்டன், உமாபதி, முகுந்தன், சுவர்ணராஜ், எழிலரசன், அர்ஜூன், பிரகாஷ், ரமேஷ், பிரபாகரன், வீரமணிகண்டன், சுவாதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    போட்டியை, மாநில பொறியாளர் அணி தலைவர் துரை சரவணன், அணி செயலாளர் கருணாநிதி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். அவைத் தலைவர்

    எஸ்.பி.சிவக்குமார், மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. மாநில இளைஞரணி அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ. உட்பட கட்சியினர் பலர் பங்கேற்கின்றனர்.

    தொழில்நுட்ப கல்விக்கு தோள் கொடுத்தவர் கலைஞர், தொழில் துறையை உயர்த்தியவர் தமிழின தலைவர், திராவிட மாடலும் திறன்மிக்க கல்வியும், தெற்கு சூரியன், கலைஞரும் தமிழும் என்ற தலைப்புகளில் நடைபெறும் பேச்சுப் போட்டியில் புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த இளங்கலை, முதுகலை பொறியியல் மாணவர்கள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. மாணவர்கள் பதிவு செய்தவர்கள், பதிவு செய்யாதவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம்.

    மாநில அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு கேடயத்துடன் ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ. 5 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

    இதில் வெற்றி பெறுபவர்கள் மண்டல அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெறலாம். இறுதிச் சுற்றில் வெல்பவர்க்கு ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்படும்.

    இந்த போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும்படி புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

    • எதிர்க்கட்சித் தலைவர் சிவா இயக்கி வைத்தார்
    • வில்லியனூர் மின்துறையின் மூலம் ரூ.60 லட்சம் செலவில் தேவையான இடங்களில் புதிய மின்கம்பங்கள் அமை த்து 200 எல்.இ.டி. மின் விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அரும்பார்த்தபுரம் பாலம் முதல் சுல்தான்பேட்டை வழியாக கோபால்சாமி நாயக்கர் மண்டபம் வரை உள்ள புறவழிச்சாலையில் போடப்பட்டிருந்த சோடியம் மின்விளக்குகளை பொதுப்பணித்துறை மற்றும் வில்லியனூர் மின்துறையின் மூலம் ரூ.60 லட்சம் செலவில் தேவையான இடங்களில் புதிய மின்கம்பங்கள் அமை த்து 200 எல்.இ.டி. மின் விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளது.

    இதை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் துவக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா கலந்து கொண்டு புதிய எல்.இ.டி. விளக்குகளை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் வில்லியனூர் மின்துறை உதவிப் பொறியாளர் முருகேசன், இளநிலைப் பொறியாளர் பாலமுருகன், தொகுதி செயலாளர் மணிகண்டன், அவைத் தலைவர் ஜலால் ஹனீப், வர்த்தகர் அணி அமைப்பாளர் ரமணன், அயலக அணி அமைப்பாளர் ஷாஜகான், வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் சரவணன்அ, அயலக அணி துணை அமைப்பாளர் முகம்மது தாஹா, ஜனா, கிளைச் செயலாளர்கள் திலகர், மிலிட்டரி முருகன், சுப்ரமணி, வீரக்கண்ணு, முருகேசன், தட்சிணாமூர்த்தி, ஏழுமலை, ராஜ், மின்துறை கார்த்தி, பாலா, முத்து, அன்பு, கோதண்டபாணி, லட்சுமணன், ராஜ்முகம்மது, ஹாலிது, சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×