search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கழிவுநீர் கால்வாய் மீது  நடைபாதை அமைக்கும் பணி-எதிர்கட்சி தலைவர் சிவா ஆய்வு
    X

    நடைப்பாைத அமைக்கும் பணியை சிவா எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி.

    கழிவுநீர் கால்வாய் மீது நடைபாதை அமைக்கும் பணி-எதிர்கட்சி தலைவர் சிவா ஆய்வு

    • வில்லியனூர் கொம் பாக்கம் வார்டுக்கு உட்பட்ட பாப்பாஞ்சாவடி பகுதியில் ஓட்டாம்பாளையம் சாலையில் கழிவு நீர் செல்லும் கால்வாய் மீது அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப் சேதமடைந்தது.
    • தகவல் அறிந்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ. அந்த பகுதியில் சேதமடைந்த சிமெண்ட் சிலாப்புகளை அகற்றிவிட்டு, புதிதாக நடைப்பாதை அமைக்க நடவடிக்கை எடுத்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் கொம் பாக்கம் வார்டுக்கு உட்பட்ட பாப்பாஞ்சாவடி பகுதியில் ஓட்டாம்பாளையம் சாலையில் கழிவு நீர் செல்லும் கால்வாய் மீது அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப் சேதமடைந்தது.

    இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். தகவல் அறிந்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ. அந்த பகுதியில் சேதமடைந்த சிமெண்ட் சிலாப்புகளை அகற்றிவிட்டு, புதிதாக நடைப்பாதை அமைக்க நடவடிக்கை எடுத்தார்.

    இந்த பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆய்வு செய்து, பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். நிகழ்சியில் தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் கலியமூர்த்தி, துணை செயலாளர் அங்காளன் தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×