search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதிய பாலம் அமைக்கும் பணி-எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்
    X

    பாலம் அமைக்கும் பணியை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்த காட்சி.

    புதிய பாலம் அமைக்கும் பணி-எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்

    • ஏரியின் போக்கு வாய்க்கால் பகுதி பழைய பாலத்தை புதியதாக கட்டவும், போக்குவாய்க்காலை பலப்படுத்தி பாதுகாப்புச் சுவர் அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • பாலம் கட்டுமானப் பணியை தரமாகவும், விரைவாகவும் கட்டி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதி கொம்பாக்கம் ஏரியின் போக்கு வாய்க்கால் பகுதி பழைய பாலத்தை புதியதாக கட்டவும், போக்குவாய்க்காலை பலப்படுத்தி பாதுகாப்புச் சுவர் அமைக்கவும் பொதுப்பணித்துறை நீர்பாசனக் கோட்டம் மூலம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    முதல்கட்ட பணியை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார். அப்போது, பாலம் கட்டுமானப் பணியை தரமாகவும், விரைவாகவும் கட்டி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    பொதுப்பணித்துறை நீர்பாசனக் கோட்ட உதவிப் பொறியாளர் மதிவாணன், இளநிலைப் பொறியாளர் சங்கர் மற்றும் தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×