search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sasikala Pushpa"

    • விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதீய ஜனதா கட்சி மாநில துணைத் தலைவரும், மீனவர் அணி பார்வையாளருமான சசிகலா புஷ்பா கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.
    • மீனவ மக்களுக்காக பாரதீய ஜனதா கட்சி எப்போதும் குரல் கொடுக்கும் என்றார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதிய துறைமுகம் பகுதி மீனவர் காலனியில் உள்ள ஸ்ரீதர்ம முனீஸ்வரர் ஆலயம் 17-ம் ஆண்டு கொடைவிழா நடை பெற்றது.

    விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், நையாண்டி மேளத்துடன் தீர்த்தக்கரை செல்லுதல், சிறப்பு அலங்கார பூஜைகள் மற்றும் நள்ளிரவு சாம வேட்டைக்கு செல்லுதல், அருள்வாக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    கொடை விழா ஏற்பாடு களை கோவில் தலைவர் அண்ணாதுரை, செயலாளர் மாரியப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதீய ஜனதா கட்சி மாநில துணைத் தலைவரும், மீனவர் அணி பார்வையாளருமான சசிகலா புஷ்பா கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில், மீனவ மக்களுக்காக பாரதீய ஜனதா கட்சி எப்போதும் குரல் கொடுக்கும். மேலும் மீனவ மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். இந்த ஆலயத்தை சீரமைக்க துறைமுக கழகத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என்றார். விழாவில் தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க. பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன், தெற்கு மண்டல தலைவர் மாதவன், மாவட்ட துணைத் தலைவர் தங்கம், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் விஜயன், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் பரமசிவம், செயற்குழு உறுப்பினர் முருகன், இளைஞர் அணி தலைவர் முனியசாமி, பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் மாசாணம், தெற்கு மண்டல செயலாளர் பாலகுமார், துணைத் தலைவர் பொய் சொல்லலான், வக்கீல் முருகன், மகளிர் அணி தலைவி செல்வி, துணைத்தலைவி சிலம்புலி, தொழில் பிரிவு மண்டல் தலைவர் சங்கர், கணேஷ் விக்கி, ராஜபாண்டி, அருள் முருகன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கொடை விழா மற்றும் அன்னதான நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • பா.ஜனதா மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சசிகலா புஷ்பாவின் வீடு தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் உள்ளது.
    • தாக்குதலின்போது சசிகலா புஷ்பா வீட்டில் இல்லை.

    தூத்துக்குடி:

    பா.ஜனதா மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சசிகலா புஷ்பாவின் வீடு தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் உள்ளது.

    நேற்று மதியம் இவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிள் மற்றும் 2 ஆட்டோக்களில் 15 பேர் கொண்ட கும்பல் வந்தது.

    திடீரென அந்த கும்பல் வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி தாக்கினர். இதில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.

    மேலும் ஜன்னல், பூந்தொட்டி, பிளாஸ்டிக் நாற்காலிகளையும் அந்த கும்பல் சூறையாடியது.

    தாக்குதலின்போது சசிகலா புஷ்பா வீட்டில் இல்லை. நேற்று முன்தினம் தூத்துக்குடியில் பா.ஜனதா சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற பின்னர் அவர் நாகர்கோவிலுக்கு சென்று விட்டார்.

    தாக்குதல் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பா.ஜனதா பேச்சாளர் பிரிவு தலைவர் ரத்தினராஜ் என்பவர் சிப்காட் போலீசில் புகார் செய்துள்ளார்.

    அதன்பேரில், சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல் நடத்தியதாக தி.மு.க. கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன், இசக்கிராஜா, பெண கவுன்சிலர் அதிர்ஷ்டமணி மற்றும் அவரது கணவர் பகுதி செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட 13 பேர் மீது சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி இந்திய தண்டனை சட்டம் 427, 506/2 உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் வக்கீல் சீனிவாசன் போலீசில் புகார் செய்தார்.
    • தூத்துக்குடி வடபாகம் போலீசார் முன்னாள் எம்.பி. சசிகலாபுஷ்பா மீது கொலை மிரட்டல், வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் பா.ஜனதா சார்பில் நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

    இதில் மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா, நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

    விழாவில் பேசிய முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை குறித்து அமைச்சர் கீதாஜீவன் பேசியதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் பேசினார்.

    அப்போது அமைச்சர் கீதாஜீவனுக்கு மிரட்டும் விடுக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் வக்கீல் சீனிவாசன் போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் முன்னாள் எம்.பி. சசிகலாபுஷ்பா மீது கொலை மிரட்டல், வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிகலா புஷ்பா உள்ளிட்டோரை கைது செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை அந்த வழக்குகள் முடிவடையும் வரை தொடரும் என நீதிபதிகள் தெரிவித்தனர். #SasikalaPushpa #SupremeCourt
    புதுடெல்லி:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட டெல்லி மேல்-சபை எம்.பி. சசிகலா புஷ்பா, அவருடைய முன்னாள் கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா, தாயார் கவுரி ஆகியோர் மீது அவர்கள் வீட்டில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணும், அவருடைய சகோதரியும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பாலியல் வன்முறை வழக்கை 2016-ம் ஆண்டு பதிவு செய்தனர்.

    இவ்வழக்கு தொடர்பாக சசிகலா புஷ்பாவை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இது தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

    சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் மீது கையெழுத்து மோசடி வழக்கு பதிய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இது தொடர்பாக மதுரை கே.புதூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட கிரிமினல் வழக்கு ரத்து செய்யப்படுகிறது.

    புதுக்கோட்டை மற்றும் திசையன்விளை காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகளில் சசிகலா புஷ்பா உள்ளிட்டோரை கைது செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை அந்த வழக்குகள் முடிவடையும் வரை தொடரும். இந்த வழக்கு களுக்கு எதிராக மனுதாரர் ஐகோர்ட்டை அணுகலாம்.

    இவ்வாறு இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.  #SasikalaPushpa #SupremeCourt 
    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சசிகலா புஷ்பா எம்.பி. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #SasikalaPushpa
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த குழுவிற்கு தலைவராக ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. உள்ளார்.

    இதில் கலந்து கொள்வதற்காக சசிகலா புஷ்பா எம்.பி. இன்று தூத்துக்குடிக்கு வந்தார். அவருடன் அவரது கணவர் ராமசாமியும் வந்திருந்தார். இந்நிலையில் நட்டர்ஜி எம்.பி.க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இதையறிந்த சசிகலா புஷ்பா எம்.பி., தனக்கு இது பற்றி முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என கூறி அங்கிருந்த வருவாய்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் அங்கு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து அவர் வருவாய் துறை அதிகாரி அலுவலகத்துக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

    கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடைபெறுவதாக கடந்த 12-ந் தேதி எனக்கு கடிதம் வந்தது. ஆனால் இங்கு வந்தபிறகு கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக கூறினார்கள். இந்த தகவல் எனக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை.

    தூத்துக்குடியில் வேகமாக பரவி வரும் டெங்கு மற்றும் ஸ்டெர்லைட் ஆலை குறித்து பேசுவேன் என்பதால் இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்டபோது வருவாய்த்துறை அதிகாரிகளை வைத்து ஒரு பெண் என்றும் பாராமல் என்னை மிரட்டுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சசிகலா புஷ்பா எம்.பி.யை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களை படத்தில் காணலாம்.

    இந்நிலையில் சசிகலா புஷ்பா எம்.பி.யின் கணவர் ராமசாமி, ஊரக வளர்ச்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக கூறி அதிகாரிகள் இன்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறும்போது, திட்ட இயக்குனர் தளபதி குறித்து அவதூறு பேச்சுக்கு மன்னிப்பு கேட்கும்வரை எங்களது போராட்டம் தொடரும் என்று கூறினார். #SasikalaPushpa

    ×