search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoothukudi collector office"

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சசிகலா புஷ்பா எம்.பி. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #SasikalaPushpa
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த குழுவிற்கு தலைவராக ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. உள்ளார்.

    இதில் கலந்து கொள்வதற்காக சசிகலா புஷ்பா எம்.பி. இன்று தூத்துக்குடிக்கு வந்தார். அவருடன் அவரது கணவர் ராமசாமியும் வந்திருந்தார். இந்நிலையில் நட்டர்ஜி எம்.பி.க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இதையறிந்த சசிகலா புஷ்பா எம்.பி., தனக்கு இது பற்றி முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என கூறி அங்கிருந்த வருவாய்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் அங்கு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து அவர் வருவாய் துறை அதிகாரி அலுவலகத்துக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

    கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடைபெறுவதாக கடந்த 12-ந் தேதி எனக்கு கடிதம் வந்தது. ஆனால் இங்கு வந்தபிறகு கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக கூறினார்கள். இந்த தகவல் எனக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை.

    தூத்துக்குடியில் வேகமாக பரவி வரும் டெங்கு மற்றும் ஸ்டெர்லைட் ஆலை குறித்து பேசுவேன் என்பதால் இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்டபோது வருவாய்த்துறை அதிகாரிகளை வைத்து ஒரு பெண் என்றும் பாராமல் என்னை மிரட்டுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சசிகலா புஷ்பா எம்.பி.யை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களை படத்தில் காணலாம்.

    இந்நிலையில் சசிகலா புஷ்பா எம்.பி.யின் கணவர் ராமசாமி, ஊரக வளர்ச்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக கூறி அதிகாரிகள் இன்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறும்போது, திட்ட இயக்குனர் தளபதி குறித்து அவதூறு பேச்சுக்கு மன்னிப்பு கேட்கும்வரை எங்களது போராட்டம் தொடரும் என்று கூறினார். #SasikalaPushpa

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்த கலெக்டர் அலுவலகத்தை நடிகர் ரஜினிகாந்த் காரில் இருந்தவாறு பார்வையிட்டார். #ThoothukudiFiring #Rajinikanth
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை பார்பதற்காக நடிகர் ரஜினி இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். செல்லும் வழியில் கலெக்டர் அலுவலகம் வரும் போது அருகில் இருந்தவர்கள் ரஜினியிடம் தெரிவித்தனர். அப்போது காரில் இருந்தவாறே துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.

    புதுக்கோட்டை, வாகைகுளம், கோரம்பள்ளம், உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானவர்கள் நின்று அவரை வரவேற்றனர். இதை தொடர்ந்து வ.உ.சி.கல்லூரி முதல் வி.வி.டி.சிக்னல் வரை சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ரசிகர் கூட்டத்தை பார்த்ததும் ரஜினி எழுந்து நின்று ரசிகர்களை பார்த்து கும்பிட்டவாறே சென்றார்.

    பின்னர் வி.வி.டி.சிக்னலை தாண்டி பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கு போலீசார் அனுமதியளிக்கவில்லை. பின்னர் காலை 11.30 மணிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள் சென்ற ரஜினி சிகிச்சை பெற்று வரும் ஓவ்வொருவரிடமும் தனித்தனியாக சென்று நலம் விசாரித்தார்.  #ThoothukudiFiring #Rajinikanth
    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின்போது கலெக்டர் அலுவலகம் மற்றும் வெளியே சேதம் அடைந்த பொருட்கள், வாகனங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. #sterliteprotest
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் போராட்டம் நடந்தது. பின்னர் அது கலவரமாக மாறியது. கலவரத்தின்போது கலெக்டர் அலுவலகம் மற்றும் ரோட்டோரம் நிறுத்தி இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

    50-க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ‘ஏ.டி.எம்.’ சூறையாடப்பட்டது.

    இந்த நிலையில் போராட்டத்தின்போது கலெக்டர் அலுவலகம் மற்றும் வெளியே சேதம் அடைந்த பொருட்கள் மற்றும் வாகனங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.



    சுகுமார் தலைமையிலான பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழு கலெக்டர் அலுவலகம் மற்றும் சேதம் அடைந்த வாகனங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ளனர். அதே போன்று மற்றொரு குழு மாவட்ட தொழில் மையம் அருகே ஏற்பட்ட சேதம் குறித்தும் கணக்கெடுப்பு பணி நடத்தி வருகின்றனர்.

    இக்குழுவில் வருவாய் மற்றும் போலீஸ் துறைகளை சேர்ந்தவர்களும் இடம் பெற்றுள்ளனர். கணக்கெடுப்பு நடத்தி சேத விவரங்களை இன்று அரசிடம் தாக்கல் செய்ய உள்ளனர். இந்த தகவலை அதிகாரி சுகுமார் தெரிவித்தார்.

    வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தலைமையிலான குழு போராட்டத்தின்போது தீவைத்து எடுக்கப்பட்ட வாகனங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்துகின்றனர். எரிக்கப்பட்ட வாகனங்களின் மாதிரிகள் தடயவியல் நிபுணர்கள் சேகரித்து வழங்கியுள்ளனர். அதன் அடிப்படையில் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. #sterliteprotest
    ×